Tuesday 8 September 2015

தேவ்பந்திகளின் முர்ஷித் ஏ குல் அவர்களின் நம்பிக்கை !

அஷ்ஷைகு ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி (ரஹ்மதுல்லாஹி ) ஒரு காமிலான ஸூபியாகவும் ,வலியாகவும் இருந்தவர்கள் . அன்னார் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் எல்லா அகீதா,கொள்கைகள் ,நடைமுறைகள் மீது நம்பிக்கை கொண்டு இருந்தனர் என்பது ,அவரது பல்வேறு நூல்களின் மூலமாக திண்ணமாக விளங்கும் . தேவ்பந்தி முன்னோடிகளான மவ்லவி அஷ்ரப் அலி தானவி ,மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி ஆகியோரும் அவரிடம் தமது வஹாபிய கொள்கைகளை மறைத்து முனாபிக்தனமாக பைஅத் ,கிலாபத் பெற்றனர் . இதன் மூலம் பாமர மக்களை தாங்களும் தஸவ்வுப் உடைய மக்கள் என்று ஏமாற்றுவதற்காக !

 தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் உலமாக்கள் யா நபி ,முஷ்கில் குஷா,நூரே குதா என்றழைப்பது ஷிர்க் ,குப்ர் என்கின்றனர் . இனி அவர்களின் முர்ஷிதே குல் ,பீரோ முர்ஷித் ஷைகு இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி (ரஹ்மதுல்லாஹி ) அவர்களின் நம்பிக்கை என்னவென்பதை அவரது நூற்களில் காணலாம் !







 இனி தேவ்பந்தியாக்கள் தங்களது முர்ஷித் ஆகிய ஷைகு இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்களின் மீதும் இதே ஷிர்க் ,குப்ர் உடைய பத்வாவை வெளியிடுவார்களா ??? அதை மக்களிடையே பகிரங்கப்படுதுவார்களா ??? 

அதே போன்று அவரிடம் கிலாபத் பெற்றவர்களான அஷ்ரப் அலி தானவி ,ரஷீத் அஹமத் கங்கோஹி நம்பிக்கை அவர்களின் முர்ஷிதுக்கு மாற்றமாக இருப்பதால் ,அவர்களின் பை அத் ,கிலாபத் அந்த சில்சிலாவில் எவ்வாறு தொடர முடியும் ???

பதில் தருவார்களா தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத் வஹாபிகள் ????

Related Posts Plugin for WordPress, Blogger...

Wednesday 26 August 2015

தேவ்பந்தும் பித்அத்தும் !

இன்னல்களின் போது சங்கையான கத்முல் புஹாரி ஷரீப் நடத்துவது !

கேள்வி  :  
           இன்னல்களின் போது கத்முல்( முழுமையாக ஓதுவது )  புஹாரி ஷரீப் ஓதுவது பித் அத்தா ,இல்லையா ?  ஸலபுஸ் ஸாலிஹீன்களின் (முதல் மூன்று நூற்றாண்டுகளில்  வாழ்ந்த ) உலமாக்களின் காலத்தில் இது நிகழ்ந்ததாக ஆதாரம் உள்ளதா ?

பதில் :  ( தேவ்பந்த் மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் பதில் )
     
        புஹாரி ஷரீப் முதல் மூன்று நூற்றாண்டுகளில் தொகுக்கப்படவில்லை ,எனினும் அதை இன்னல்களின் பொழுது முழுமையாக ஓதுவது (ஆரம்பம் முதல் இறுதி வரை) ஓர் நல் அமல் ,ஏனெனில் திக்ரின் பின் ஓதும் துஆ அங்கீகரிக்கப்படும் .இந்த செயலின் அடிப்படை ஷரியத்தின் மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது ,இது பித் அத் அல்ல .

Fathawa Rasheedhiya,Rashid Ahmad Gangohi


வாழ்த்துக்கள் எனது தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்துக்கு வக்காலத்து வாங்கும் எனது நண்பர்களுக்கு !

இதை தான் ' மாமியார் உடைத்தால் மண்குடம் ,மருமகள் உடைத்தால் பொன்குடம் ' என்று சொல்வர் .

இவர்கள் இந்த செயலை நடத்த ஒரே காரணம் பணம் பறிக்கவே அன்றி வேறில்லை . நடைமுறையில் பாமர இஸ்லாமியர் அனைவரும் புஹாரி ஷரீப் முழுமையாக ஓது இயலாதவர்களாக இருக்கின்றனர் . எனவே இதை நடைமுறைப் படுத்த இவர்கள் இதை ஆமோதிக்கும் தேவ்பந்தி உலமாக்களை நாட வேண்டிய சூழ்நிலையே உருவாகும் . நாம் இதுகாறும் தேவ்பந்திய தப்லீக் ஜமாஅத் உலமாக்கள் மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் சொற்களை பின்பற்றுகின்றனரா என்று வியப்பில் தான் உள்ளோம் !

இனி நாணயத்தின் மறுபக்கத்தைக் காண்போம் !

கேள்வி :

     சரியான அறிவிப்புகளோடும் ,சம்பவங்களோடும் நடைபெறும் மவ்லித் மஜ்லிஸ்களில் கலந்து கொள்வது அனுமதிக்கப்பட்டதா ?

பதில் : ( தேவ்பந்த் மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் பதில் )
 
     அது  வேறு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்ட( நா ஜாயிஸ் ) செயல் .

Fathawa Rasheedhiya,Rashid Ahmad Gangohi

தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினர் செய்யும் செயல் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க இயலாத ஒன்று என்றாலும் அவர்கள் செய்வதால் அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று ???

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் செய்யும் மவ்லித் மஜ்லிஸ் நாம் குரான் ,ஹதீஸ் ,ஸலபுஸ் ஸாலிஹீன்களின் நடைமுறை ,புகஹாக்களின் நூல்கள் , இமாம்களின் நூற்கலின் மூலம் ஆதாரம் காட்டினாலும் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரின் வஹாபிய விசுவாசத்தால் அங்கீகரிக்க மறுப்பர் !





      
Related Posts Plugin for WordPress, Blogger...

Thursday 13 August 2015

தக்வியத்துல் ஈமான் மீது தேவ்பந்திகளின் கேள்வி



அல்லாமா அமீன் ஒகார்வி (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் தமது நூலில், இஸ்மாயில் தெஹ்லவி எழுதிய தக்வியத்துல் ஈமான் நூலில் உள்ள வாக்கியத்தை குறிப்புகளுடன் எழுதியுள்ளார்கள் ,

"எல்லா படைப்புகளும் ,அது மிக உயர்ந்த (நபிமார்கள்) அல்லது மிக சிறிய (நபி அல்லாதவை ) படைப்பாயினும், அல்லாஹ்வின் திருமுன் அவை செருப்பு தைக்கும் செம்மானை விட தரம் தாழ்ந்தவை " .

தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரின் கேள்வி :

நீங்கள் அடைப்புக்குறியில் உள்ள சொற்றொடர் மூல நூலில் எங்கு உள்ளது என்று தெரிவிக்க இயலுமா ?

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினரின் பதில் :

பக்கம் 20,தக்வியத்துல் ஈமான்

Taqwiyathul Iman,Pg 20
"ஹர் மக்லூக் படா ஹோ யா சோடா வோ அல்லாஹ் கீ ஷான் கே ஆகே சமர் ஸே பீ ஜலீல் ஹை "

மொழிபெயர்ப்பு :
 "எல்லா படைப்புகளும் ,அது மிக உயர்ந்த அல்லது மிக சிறிய  படைப்பாயினும், அல்லாஹ்வின் திருமுன் அவை செருப்பு தைக்கும் செம்மானை விட தரம் தாழ்ந்தவை " .

இனி தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் கேள்வி யாதெனில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் உயரிய படைப்பு என்பதற்கு நபிமார்கள் என்று அடைப்புக்குறிக்குள் எவ்வாறு விளக்கம் அளிக்கின்றார்கள் ???

தக்வியத்துல் ஈமானின் நூலின் ஆசிரியர் இஸ்மாயில் தெஹ்லவி வஹ்ஹாபி
தமது அதே நூலில் சில பக்கங்கள் கழித்து தாமே 'உயரிய படைப்பு '  என்பதற்கு விளக்கம் அளிக்கின்றார் .

Taqwiyathul Iman,Pg 80


" யானி இன்சான் ஆபஸ் மே சப் பாய் ஹை . ஜோ படா புஜுர்க் ஹை வொஹ் படா பாய் ஹை ,தோ உஸ்கி படே பாய் கே ஹி தசீம் கீஜியே அவ்ர் மாலிக் சப் கா அல்லாஹ் ஹை பண்தகீ உஸ்கோ சாகியே .இஸ் ஹதீஸ் சே மாலும் குஆ கி அவ்லியா வ அன்பியா ,இமாம் வ இமாம் சாடே, பீர் வ ஷஹீத் யானி ஜிதானே அல்லாஹ் கே முகர்ரிப் பந்தே ஹை ,வ சப் இன்சான் ஹி ஹை அவ்ர் பந்தே ஆஜிஷ் அவ்ர் ஹமாரே பாய் ஹை . மகர் அல்லாஹ் நே இன்கோ பதாயி தி ,வோ படே பாய் ஹுயே . ஹம் கோ இன்கீ பர்மபர்தாரீ கா ஹுக்ம் கியா ஹை . ஹம் இன்சே சோடே ஹை ,தோ இன்கே தஜ்நீம் இன்சானோன் கி சீ கர்னீ ஹை ". 

மொழிபெயர்ப்பு : 
         அதன் பொருள் எல்லா மனிதர்களும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் . அவர்களில் உயர்ந்த அந்தஸ்து உள்ளவர் மூத்த சகோதரனைப் போன்றவர் .
அதனால் அவருக்கு மூத்த சகோதரர் அளவுக்கே மரியாதை செய்ய வேண்டும் ,அல்லாஹ் தான் எல்லா படைப்புகளின் உரிமையாளன் ,இன்னும் அவனையே நாம் வணங்க வேண்டும் . இந்த ஹதீதின் மூலம் நாம் அறிகின்றோம் அவ்லியாக்களும் ,நபிமார்களும் ,இமாம்களும் அவர்களின் மக்களும் ,ஷைகுமார்களும் ஷுஹதாக்களும் ,அதாவது அல்லாஹ்வின் புறம் நெருக்கமானவர்கள் எல்லோரும் மனிதர்கள் ,சக்தியற்றவர்கள் இன்னும் நமது சகோதரர்கள் .ஆனால் அல்லாஹ் அவர்களை உயர்ந்த படைப்பாக படைத்துள்ளான் /அவர்களின் அந்தஸ்தை உயர்த்தியுள்ளான் ,அவர்கள் நமது மூத்த சகோதரரைப் போன்றவர்கள் . நாம் அவர்களுக்கு கீழ்படியுமாறு கட்டளை இடப்படுள்ளோம் . நாம் அவர்களை விட குறைவான அந்தஸ்த்தில் உள்ளோம் , எனவே இவர்களுக்கு  மனிதர்களைப் போன்றே மரியாதை செலுத்த வேண்டும் .

இதன் மூலம் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்துடைய உலமாக்கள் 'உயரிய படைப்பு ' என்பதற்கு நபிமார்கள் என்று பொருள் கொள்வது தக்வியத்துல் ஈமான் ஆசிரியரின் சொந்த வார்ததைகளில் இருந்தே எடுத்துக் கொண்டுள்ளனர் என்பது தெளிவாக விளங்கும் .

நமது சத்திய உலமாக்கள் எந்த மோசடியும் செய்யவில்லை .தவறான மொழிபெயர்ப்பும் செய்யவில்லை .அவர்கள் அதே புத்தகத்தில் இருந்த விளக்கத்தை இங்கு தெளிவுபடுத்தியுள்ளனர் .

நாம் இங்கு ஒரு ஆதாரம் தான் காட்டியுள்ளோம் . தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தின் முன்னோடி இஸ்மாயில் தெஹ்லவி தமது நூலான தக்வியதுல் ஈமானின் பல இடங்களில் உயரிய படைப்பு என்பதற்கு நபிமார்கள் ,வலிமார்கள் என்று விளக்கம் தருகின்றார் .

மேலும் இங்கு 'சமார் '  என்ற வார்த்தையின் அர்த்தம் செருப்பு தைப்பவரைக் குறிக்கும் . எனினும் உர்து மொழியை அறிந்த மக்கள் ஒரு சொல்லை எங்கு ,எவ்வாறு பயன்படுத்துகின்றோமோ அதைப் பொறுத்து பொருள் வேறுபடும் என்று அறிவர் . பொதுவாக சமார் என்ற வார்த்தை ஒருவரை அவமரியாதை /இழிவுபடுத்த மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது . நீங்கள் உங்கள் நண்பரை நோக்கி ஏன் இவ்வாறு செருப்பு தைக்கும் செம்மானைப் போல் அழுக்காக உள்ளாய் என்று வினவினால் ? உங்கள் பகுதியில் உள்ள செருப்பு தைப்பவர் எவ்வளவு செல்வந்தராய் இருந்தாலும் உங்கள் நண்பர் நீங்கள் அவரை இழிவுபடுத்தவே இவ்வாறு சொன்னீர்கள் என்பார் .

"எல்லா படைப்புகளும் ,அது மிக உயர்ந்த (நபிமார்கள்) அல்லது மிக சிறிய (நபி அல்லாதவை ) படைப்பாயினும், அல்லாஹ்வின் திருமுன் அவை செருப்பு தைக்கும் செம்மானை விட தரம் தாழ்ந்தவை " .

தக்வியத்துல் ஈமான் நூலை வாசித்தறியாத தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத் வஹாபிகள் வேண்டுமானால் இப்படி கேள்விகள் கேட்கலாம் ;
ஆனால் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் தக்வியத்துல் ஈமானை வாசித்து உள்ளார்கள் என்பதோடு ,எங்கே எப்படி சொற்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் அறிந்தே வைத்துள்ளனர் .






Related Posts Plugin for WordPress, Blogger...

Wednesday 12 August 2015

தக்தீருன்னாஸ் நூலில் தேவ்பந்திகளின் மோசடிகள்



தேவ்பந்திகள் மீண்டும் நூலில் மோசடி செய்துள்ளனர் . 'தக்தீருன்னாஸ் ' என்னும் நூல் அவர்களின் அறிஞரான மவ்லவி காசிம் நாநோத்வியால் எழுதப்பட்டது .அதை தேவ்பதிகளே திரித்து மோசடி செய்துள்ளனர் .

இந்த நூலின் மீது தான் இந்தியாவைச் சார்ந்த 260 உலமாக்களும் ,மக்கா முகர்ரமா ,மதீனா முனவ்வராவைச் சார்ந்த 33 உலமாக்களும் குப்ருடைய பத்வாவை சாற்றினார்கள் .

அசல் மொழிபெயர்ப்பு :

         " நபிமார்கள் தங்களின் உம்மத்துகளை விட உயர்ந்தவர்களாகவும் / தேர்ந்தெடுக்கபட்டவர்களாகவும் இருப்பது ஞானத்தில்  தான் . நல்ல அமல்கள் என்று வரும் பொழுது உம்மத்துகள் நபிமார்களுக்கு சமமாகவும் ,சில சமயம் நபிமார்களையும் முந்தி விடுகின்றனர் ".

Taqdeerun Naas,Qasim Nanothvee

Taqdeerun Naas,Qasim Nanothvee
இனி தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளால் திரித்து மோசடி செய்த பதிப்பு பின்வருமாறு :

  " நபிமார்கள் தங்களின் உம்மத்துகளை விட உயர்ந்தவர்களாகவும் / தேர்ந்தெடுக்கபட்டவர்களாகவும் இருக்கின்றனர்  . நல்ல அமல்கள் என்று வரும் பொழுது உம்மத்துகள் நபிமார்களுக்கு சமமாகவும் ,சில சமயம் நபிமார்களையும் முந்தி விடுகின்றனர் ".

தேவ்பந்திகள் ' இருப்பது ஞானத்தில்  தான்' என்னும் வாசகத்தை நீக்கி விட்டனர் .


Taqdeerun Naas Fabricated ,Qasim Nanaothvi Deoband

Taqdeerun Naas Fabricated ,Qasim Nanaothvi Deoband








Related Posts Plugin for WordPress, Blogger...

Monday 10 August 2015

இஸ்லாமியரைக் கொல்லுவது ?



கைர் முகல்லிது வஹாபிய அறிஞர் சுலைமான் பின் சஹ்மான் அந் நஜ்தி எழுதிய நூலை உர்துவில்  சுதந்திரம் பெறுவதற்கு முன் உள்ள  இந்தியாவில்   பிரசித்தி பெற்ற வஹாபிய அறிஞர் இஸ்மாயில் கஜ்னவி மொழிபெயர்த்துள்ளார் . (தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத் வஹாபிகளும் அவர் மீது பெருமதிப்பு வைத்து உள்ளனர் .)




அவர் எழுதுகிறார்


" அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் உதவி தேடுபவர் முஷ்ரிக் . அவர்கள் செய்வது ஷிர்க் ஏ அக்பர் .அவ்வாறு உதவி கோருபவர்கள் ,தாங்கள் உதவி தேடும் நபர் நேரடியாக உதவி அளிப்பதில்லை , அல்லாஹ் தான் அவர்களது கோரிக்கையை கேட்கின்றான் (அல்லது அல்லாஹ் அவர்களுக்கு உதவ சக்தி அளித்துள்ளான் ) என்று எண்ணினாலும் ,அது ஷிர்க் தான் .

இத்தகைய கொள்கையுடையவர்களைக் கொல்வது ஆகும் ( ஐசே லோகோன் கே கூன் பஹானா ஜாயிஸ் ஹை ) ,இன்னும் அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதும் கூடும் ( அவ்ர் உன்கே அம்வல் கோ லூட் லேனா ஜாயிஸ் ஹை ) "


[ நூல் - தொஹ்பா ஏ வஹாபியா ,பக்கம் 59] 









குறிப்பு : வஹ்ஹாபிகள் இந்த நூலைப் பதிப்பிப்பதை நிறுத்தி  விட்டனர் . வஹ்ஹாபிகள் தங்களின் அறிஞர்களே தங்களை 'வஹ்ஹாபி '  என்று அழைப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் .


இது ஏதோ இந்த வஹ்ஹாபி உலமா அறியாமல் சொல்லி விட்டார் என்று வாசகர்கள் கருதி விட வேண்டாம் . வஹ்ஹாபிய கொள்கைகளின் மூல கர்த்தாவான முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அந் நஜ்தி அல் தமீமி இதே கொள்கையுடையவன் என்பதையும் அதையே தமது காலத்தில் செயலாற்றினான் என்பதையும் அன்றைய மக்கா முப்தி அஷ்ஷைகு அஹ்மத் ஜைனி தஹ்லான் மக்கி அல் ஷாபியி (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் எழுதிய 'பித்னத்துல் வஹ்ஹாபியா ' என்ற நூலிலும் காணலாம் . இந்த அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் வம்சா வழியினர் தான் இன்றைய நவீன சவூதி அரேபியாவின் தலைமை மார்க்க முப்திகளாக தொடர்கின்றனர் !


தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் இஸ்மாயில் திஹ்லவி இதே கொள்கையை எழுதுகிறார் ,

 "கருமங்களை பூர்த்தியாக்குவது ,சிரமங்களை நீக்குவது, ஆபத்து நேரங்களில் உதவி வழங்குவது,இவை  அனைத்தும் அல்லாஹ்வுக்கே மட்டுமே உரியன, மேலும் எந்த நபியும்,வலியும் ,ஷைகுமார்களும்,ஷஹீதும்,ஜின்னும்,மலக்கும் எந்தவிதமான உதவியும் செய்ய இயலாது. யாரேனும் ஒருவர் அவர்களின் மீது சபதம் செய்தாலோ அல்லது ஆபத்து நேரங்களிலும் அவர்களை  நினைவில் கொண்டாலோ, அவர் ஒரு முஷ்ரிக் ஆவார்.அவர்களது நம்பிக்கை எதுவாக இருந்தாலும்,இவர்கள் சூயமாக சக்தியுடையவர்கள் என்றாலும் சரி,அல்லது இவர்கள் அல்லாஹ்வினால் சக்தி வழங்கப்பட்டு உதவுகிறார்கள் என்றாலும் ,எந்த நிலையிலும் இது ஷிர்க் "
[நூல் - தக்வியதுல் ஈமான்,பக்கம் 10 ,தில்லி பதிப்பு ] 




இஸ்மாயில் திஹ்லவியின் உஸ்தாதான சையத் அஹமத் ரேபரேலியும் இதே கொள்கையுடையவர் தான் . அவர் தனது காலத்தில் தமது படையுடன் வடக்கு மாகாணத்தில் சென்ற பொழுது , கட்டிடம் எழுப்பப்பட்ட கப்ருகளை இடித்தார் என்றும் ,அங்குள்ள பெண்களை பலவந்தப் படுத்தி திருமணம் செய்தார்கள் என்றும் வரலாற்றில் பதிவாகி உள்ளது .


இது பற்றிய விபரங்ககளை இங்கு காண்க !  















Related Posts Plugin for WordPress, Blogger...

Monday 1 June 2015

மரணித்த பின் மீண்டு வந்து உதவும் தேவ்பந்தி மவ்லவி !

அர்வாஹே ஸலாசா ,பக்கம் 242 நூலில் (தேவ்பந்த் அறிஞர்களின் வாழ்க்கையை விவரிக்கும் நூல் ) உள்ள ஒரு சிறு சம்பவம் !

Arwahe Salasa,Page 242


மவ்லவி காஸிம் நானோத்வி அல் தேவ்பந்தி மரணித்த பின்பு தமது பூத உடலுடன் மீண்டு வந்து தமது அபிப்பிராயத்தைத் தெரிவிக்கிறார் .

" ஒரு நாள் பஜ்ர் தொழுகைக்கு பின் மவ்லவி ரபியுத்தீன் சாஹிப் தமது அறைக்கு (தேவபந்த் மதரசாவிற்கு உள் ) மவ்லவி மஹ்மூதுல் ஹசன்  சாஹிப் அவர்களை வருமாறு அழைப்பு விடுத்தார் . மவ்லானா  மஹ்மூதுல் ஹசன் சாஹிப் அவ்வழைப்பை ஏற்று ,கதவை திறந்து உள்ளே நுழைந்தார் . அது ஒரு கடுமையான பனிக் காலம் .

மவ்லானா ரபீயுத்தீன் சாஹிப் தமது மேலங்கியை ஆய்வு செய்யுமாறு கூறினார் . மஹ்மூதுல் ஹசன் சாஹிப் அதை ஆராய்ந்த பொழுது அவரது மேலங்கி நனைந்திருக்க கண்டார் . மவ்லவி ரபியூத்தீன் சாஹிப் தற்பொழுது தான் மவ்லானா காசிம் நானோத்வி தமது பூத உடலுடன் (ஜசதே உன்சரீ ) தம்மை வந்து சந்தித்ததாகவும் ,அதைக் கண்டு தாம் பயந்து நடுங்கியதால் தமது மேலங்கி நனைந்து விட்டதாகவும் கூறினார் . மவ்லவி காசிம் நானோத்வி ,மவ்லானா மஹ்மூதுல் ஹசன் அவர்களுக்கு தாருல் உலூம் தேவ்பந்தின் ஆசிரியர்களுக்கு இடையில் நடைபெறும் உட் பூசல்களில் தலையிட வேண்டாம் என்று கட்டளையிட்டார்கள் . மவ்லவி மக்மூதுல் ஹசன் கூறினார் ,'ஹசரத் நான் உங்கள் கரம் பற்றி தவ்பா செய்கின்றேன் ,இனி இது விஷயத்தில் நான் எதுவும் பேச மாட்டேன் '. "

மேற்கூறிய சம்பவத்தில் தேவ்பந்த் தப்லீக் ஜமாஅத் வஹாபிகளின் உஸ்தாதான மவ்லவி காஸிம் நானோத்வி மரணித்து விட்ட பின்பும் மீண்டு வர இயலும் ,அதுவும் தனது பூத உடலுடன் ,தேவ்பந்தின் ஓர் உட்பூசலைத் தீர்க்க வேண்டி !!!!


எனினும் அகிலத்தாருக்கு அருட்கொடையான நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது புனித ரவ்ழா ஷரீபை விட்டு அகல இயலாது என்று பத்வா கொடுத்துள்ளனர் இந்த தப்லீக் ஜமாஅத் வஹாபிகள் !

குறிப்பாக மவ்லித் மஜ்லிஸ்களில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பை குறிக்கும்  பைத் ஓதும் பொழுது எழுந்து நின்று (கியாமில்  ) சங்கை செய்வது அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தின் நடைமுறை ,ஏனெனில் உயிரினும் மேலான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த சபையில்  ஹாழிர் ஆகின்றார்கள் என்பதினால் . இது அநேக வலிமார்களின் அனுபவத்தில் நிகழ்ந்துள்ளதாக வரலாற்று நூல்களில் பதிவாகி உள்ளது .

ஆனால் இந்த தேவ்பந்தி தப்லீக் ஜமாத் வஹாபிகள் இவையெல்லாம் இயலாது என்று மறுக்கின்றனர் .

இது பற்றிய தேவ்பந்தின் பத்வா பின்வருமாறு ,

Darul Uloom Deoband Fatwa



கோடிட்ட பகுதியில் பின்வருமாறு உள்ளது ,

' பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மண்ணறை வாழ்வானது ,ஹயாதே பர்ஜக் , இந்த வாழ்க்கையில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் பயணிக்க இயலாது (ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ) '




Related Posts Plugin for WordPress, Blogger...

Saturday 16 May 2015

தேவ்பந்திகளின் கெளஸ் !

மஹ்மூத் அல் ஹசன் சாஹிப் , மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியை 'கெளஸ் ஏ ஆசம் ' என்று அழைக்கின்றார் .


' அவர்தான் இரண்டாம் ஜுனைத் ,ஷிப்லி மற்றும் அபூ மஸூத் அன்சாரி ,
அவர்தான் ரஷீத் ஏ மில்லத் ஏ தீன் ,கெளஸ் ஏ ஆசம் ,குத்பே ரப்பானி  '


அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்த இஸ்லாமியர் கெளதுள் அஃலம் முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹூல் அஜீஸ் அவர்களை கெளது என்று அழைத்தால் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் உதவியாளர்கள் கிடையாது ,அவ்வாறு அழைப்பது ஷிர்க் ,பித் அத் என்று வஹாபிய கூச்சல் போடும் இந்த தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் தங்களுக்கு மட்டும் ஒரு நியாயம் என்று கொள்கை கொண்டு தங்கள் முனாபிக் தனத்தை வெளிப்படுத்துகின்றனர் .


எந்த முஸ்லிமும் நபிமார்களையும் ,வலிமார்களையும் அல்லாஹ்வின் படைப்புகளாகவும்,அடியாராகவும் ஏற்று பின்னர் அவர்களை வசீலாவாக்கி (இடைப்பொருள்) உதவி கோரி,நேர்ச்சை,காணிக்கை செலுத்தினால்  குப்ரில் அபுஜஹலுக்கு ஒப்பாவார் . 
[தக்வீயதுல் ஈமான்,பக்கம் 7 மற்றும் 27]


யாருடைய பெயர் முஹம்மது ,அலி என்று உள்ளதோ அவர்களுக்கு எதன் மீதும் அதிகாரம் இல்லை.ஒரு நபியோ அல்லது வலியோ அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது.
[ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 41 ]

இந்த ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் வஹாபிய கொள்கைகளை இங்கு காணலாம் !!!


Marsiya Praising Rasheed Ahmad As Gauth


Related Posts Plugin for WordPress, Blogger...

Thursday 14 May 2015

கண்மணி நாயகம் அவர்களின் நூர் தான் முதல் படைப்பு என்று ஏற்றுக் கொள்ளும் தேவ்பந்திகளின் 'ஹக்கீமுல் உம்மத் '

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் நம்பிக்கையாகிறது அண்ணலெம் பெருமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நூராகவும் ,பஷராகவும் இருக்கின்றார்கள் என்பது . இந்த நம்பிக்கை அல் குரான்,ஹதீஸ் மற்றும் சத்திய இமாம்களின் இஜ்மாவின் அடிப்படையில் அமைந்த ஒன்று .


எனினும் இவ்விஷயத்தில் தேவ்பந்தி தப்லீக் வஹாபிகள், கைர்  முகல்லிது வஹாபிகளைப் போன்று தம் மனோ இச்சையைப் பின்பற்றி கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நூர் என்பதை ஏற்க மறுக்கினர் .


இனி அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் இந்நம்பிக்கைக்கான ஆதாரங்களைப் பார்ப்போம் .


குரான் பறை சாற்றுகின்றது ,


   يَا أَهْلَ الْكِتَابِ قَدْ جَاءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ كَثِيرًا مِّمَّا كُنتُمْ تُخْفُونَ مِنَ الْكِتَابِ وَيَعْفُو عَن كَثِيرٍ ۚ قَدْ جَاءَكُم مِّنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُّبِينٌ


வேதத்தையுடையவர்களே! உங்களிடம் நிச்சயமாக நம்முடைய ஒரு தூதர் வந்திருக்கிறார். வேதத்தில் நீங்கள் மறைத்துக் கொண்ட பல விஷயங்களை அவர் உங்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிக்கின்றார். மற்றும் பல விஷயங்களை (அவர் அறிந்திருந்தும் உங்களுக்கு கேவலம் உண்டாகக்கூடாது என்பதற்காக அவைகளைக் கூறாது) விட்டுவிடுகின்றார். நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒளியும் தெளிவுமுள்ள ஒரு வேதம் (இப்போது) உங்களிடம் வந்திருக்கின்றது.  


 [ குர் ஆன் - 5:15 ]


மிகப் பெரும் முபஸ்ஸிரான அல்லாமா அலூஸி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) இந்த ஆயத்திற்கு தப்ஸீர் எழுதுகின்றார்கள்  ,


عظيم وهو نور الأنوار والنبـي المختار صلى الله عليه وسلم


அன்னார் ஒளிகளின் பேரொளியாக உள்ளார்கள் (நூருல் அன்வார் ) மேலும் நபியுல் முக்தார் ஆகவும் உள்ளார்கள் 


[நூல் - ரூஹல் மாஃனி ,அல்லாமா அலூஸி ]


இதே போன்று இமாம் ஜலாலுத்தீன் அல் மஹல்லி ,இமாம் ஜலாலுத்தீன் அல் சுயூத்தி ஆகியோர் தமது தப்ஸீர் அல் ஜலாலைனிலும் , இமாம் இப்னு ஜவ்சீ தமது ஜாத் அல் மசீர் பில் இல்ம் அத் தப்ஸீர் நூலிலும் , இமாம் அல் ஷிர்பினி தமது தப்ஸீர் சிராஜுல் முனீரிலும் ,இமாம் பக்ரூத்தீன் ராஸி தமது தப்ஸீர் அல் கபீரிலும் இதே கருத்தை முன் மொழிந்துள்ளனர் .


மேலும் அஹ்காம் அல் குர்ஆன் (6.118) நூலில் இமாம் குர்தூபி மற்றும் மவர்தி ஆகியோர் அரபு இலக்கணத்தின் இமாம் இப்ராஹீம் இப்னு முஹம்மது அல் ஸஜ்ஜாஜ் அவர்கள் இதே கருத்தை உடைய நிலையவர்களாக இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது .


இனி இது விஷயமாக மிகவும் பிரபலமான ஓர் ஹதீத் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களைக் கொண்டு அறிவிக்கப்படுகின்ற அல்லாஹ் முதன் முதலில் எதைப் படைத்தான் என்னும் ஹதீஸ்  . இந்த ஹதீஸ் பின்வரும் ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது ,
  • முசன்னஃப்  அப்துர் ரஸ்ஸாக் ,பக்கம் 99,ஹதீத் எண் 18 .
  • அல்லாமா  கஸ்தலானி தமது மவாகிபுல் லதுனியா ,பாகம் 1,பக்கம் 71.
  • அல்லாமா முஹம்மது அல் ஸுர்கானி தமது ஷரஹ் மவாகிபுல் லதுனியா ,பாகம் 1,பக்கம் 89-91.
  • அல்லாமா அஜ்லுனி தமது கஷ்ப் அல் கபா ,பாகம் 1,பக்கம் 311,ஹதீத் எண் 827.
விரிவஞ்சி இத்துடன் நமது அதாரங்களை இத்துடன் முடிவு செய்கின்றோம் .


இனி இவ்விஷயத்தில் தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத் வஹாபிகளின் 'ஹக்கீமுல் உம்மத் ' என்று கூப்பாடு போடும் அஷ்ரப் அலி தானவி தமது நூலான 'நஷறுத் தீப்' ல்   இதே கருத்தை பதிவு செய்துள்ளார் .
  
Nashar ut-Tib Volume 001, Page No. 13 ,Ashraf Ali Thanvi .










தற்கால தேவ்பந்தி தப்லீக் வஹாபிகள் இனியாவது தமது இரட்டை நிலைப்பாட்டை மாற்றுவார்களா ????



Related Posts Plugin for WordPress, Blogger...

Saturday 9 May 2015

தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் ரஹ்மத்துல் ஆலமீன் !

அல்லாஹ் ஹுதஆலா தன் ஹபீபான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை எண்ணற்ற சிறப்பு பெயர்களைக்  கொண்டு திருமறை குரான் ஷரீபிலே அழைக்கின்றான் .
அவற்றுள் ஒன்று ரஹ்மத்துல் ஆலமீன் என்பது .


وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ


(நபியே!) உங்களை உலகத்தாருக்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை."
[அல் குரான் : 21:107]


கண்மணி நாயகம் அவர்கள் இவ்வுலகிற்கு மட்டுமல்ல எல்லா ஆலம்களுக்கும் ரஹ்மத் ஆக இருக்கின்றார்கள் . இது அவர்களின் தனிச் சிறப்பு .அவர்களே நூரே முகம்மதியா என்னும் முதல் சிருஷ்டி .


எனினும் இந்த தேவ்பந்திய தப்லீக் ஜமாஅத் வஹாபிகளின் கொள்கையாகிறது ,


ரஹ்மத்துல் ஆலமீன் என்பது நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட தனித்துவமான பண்பு அல்ல,பிற நல்லடியார்களையும் ரஹ்மத்துல் ஆலமீன் என்று அழைக்கலாம்.


[ நூல் - ஃபதாவா ரஷீதியா,வால்யூம் 2,பக்கம் 12 ,மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி ]


ஃபதாவா ரஷீதியா


உம்மத்துகள் தங்களது நபியை அமல்களில் முந்திவிடுவர் .


[நூல் - தக்தீருன்னாஸ் ,பக்கம் 5 ]


இந்த கேடுகெட்ட கொள்கையுடைய தப்லீக் வஹாபிகள் தங்கள் நூற்களில் ரஷீத் அஹமத் கண்கோஹியை ரஹ்மத்துல் ஆலமீன் என்று எழுதி வைத்துள்ளனர் .










இதன் மூலம் என்ன கருத்தை இந்த தப்லீக் தேவ்பந்திகள் நிலை நாட்டுகின்றனர் . அல்லாஹ் தன் ஹபீபுக்கு வழங்கிய தனித்துவமான இந்த பெயரை இந்த குழப்பவாதிகள் ஏன் திருடி ரஷீத் அஹ்மத் கங்கோஹிக்கு கொடுக்கின்றனர் . அவர் என்ன ரஹ்மத்தா ???? எல்லா படைப்புகளுக்கும் அவர் எந்த வகையில் ரஹ்மத்  ???? அவரைக் கொண்டு ரஹ்மத் அடைந்த படைப்புகள் எவை ??? இஸ்லாமிய வரலாற்றில் எந்த ஸுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த உலமாக்கள் ,இமாம்கள் ,வலிமார்கள் இவ்வாறு கூறியுல்லனரா ????


நாங்களும் ஸுன்னத் ஜமாஅத் தான்,மத்ஹபை பின்பற்றுகிறோம் ,தரீகாவில் உள்ளோம்  என்று பொய் பேசி ,மோசடி செய்து ஸுன்னத் வல் ஜமாத்தின் அடையாளத்தை திருடும் இந்த முனாபிக்குகளிடம் இருந்து உங்கள் ஈமானைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் !!!



Related Posts Plugin for WordPress, Blogger...

மரணித்த பின் கபுரில் இருந்து மீண்டு வந்த தேவ்பந்தி தப்லீக் மவ்லவி !

தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் கொள்கையாகிறது எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்து மண்ணோடு மண்ணாகி விட்டார்கள் (மஆதல்லாஹ் !!!) .


இது அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாகும் .


 "பெருமானார் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறைந்த பிறகு மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள்." (அஸ்தக்பிருல்லாஹ் )



[நூல் - தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 59, இஸ்மாயில் தெஹ்லவி ]


தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 59


இதே  தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் தங்களது நூலில் மரணித்த பின் ஓர் தேவ்பந்தி  மவ்லவி கபுரில் இருந்து வெளிவருகிறார் என்றும் ,அவர் தேவ்பந்த் தாருல் உலூம் மதரசாவிற்கு வருகை தருகிறார் என்றும் எழுதி வைத்துள்ளனர் . என்னே ! இந்த வஹாபிகளின் ஈனத்தனம் !


ஒரு ஸுன்னி முஸ்லிம் குரான் ,ஹதீஸ் கூறியபடி எம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹயாத்துன் நபியாக உள்ளார்கள் என்று கூறினால் அவர் மீது ஷிர்க் ,குப்ர் பட்டம் கட்டி அவரை இஸ்லாத்தை விட்டும் நீக்கி விடுகின்றனர் .


 
وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا ۚ بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ


(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்து) வெட்டப்பட்டோரை இறந்துவிட்டவர்களென நீங்கள் ஒருபோதும் எண்ண வேண்டாம். அவர்கள் தம் இறைவனிடத்தில் நிச்சயமாக உயிரோடு இருக்கின்றார்கள். (அன்றி) அவர்களுக்கு உணவும் அளிக்கப்படுகிறது.


[அல் குரான் - 3:169.]


‏عن ‏ ‏أبي الدرداء‏ ‏قال ‏قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏أكثروا الصلاة علي يوم الجمعة فإنه مشهود تشهده الملائكة وإن أحدا لن يصلي علي إلا عرضت علي صلاته حتى يفرغ منها قال قلت وبعد الموت قال وبعد الموت إن الله حرم على الأرض
أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق


[அறிவிப்பாளர் : அபூதர்தா ரலியல்லாஹு அன்ஹு ,இப்னு மாஜா ,பாகம் 1,எண் 1626]



இனி இவர்களின் தேவ்பந்தி மவ்லவி அதே குரான் ,ஹதீஸுக்கு மாற்றமான வஹாபிய கொள்கையின் அடிப்படையில் ஷிர்க் செய்து முஷ்ரிக்காகி போய் விட்டாரா இல்லையா என்று தெளிவுபடுத்துவார்களா  ?????














இத்தகைய வழிகேடர்களை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பானாக !!!
Related Posts Plugin for WordPress, Blogger...

Friday 8 May 2015

தேவ்பந்தின் ஷிர்க்கை உண்டாக்கும் பெயர்கள் :

   
பக்ஷ் என்றால் பரிசு என்று அர்த்தம் . தமது குழந்தைகளுக்கு   நபியின் பரிசு என்றோ வலிமார்களின் பரிசு என்றோ பெயரிடுவது முஸ்லிம்களின் வழக்கம் .அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் உலமாக்களும் இது ஷரியத்திற்க்கு மாற்றமில்லா செயல் என்றே சொல்கின்றனர் . ஆனால் வஹாபிகள் இதையும் ஷிர்க் என்றே உளறுகின்றனர் .
         
கேள்வி :
              நீங்கள் குழந்தைகளுக்கு நபி பக்ஷ்,பீர் பக்ஷ்,சலார் பக்ஷ்,மதார் பக்ஷ் என்று பெயர் சூட்டுவதைப் பற்றி என்ன சொல்கின்றீர்கள் ?



பதில் :   
           இவ்வாறு பெயரிடுவது ஷிர்க் .இவ்வாறு பெயர் சூட்டுவது கூடாது ,இவற்றை மாற்ற வேண்டும் .


[ நூல்- பதாவா ரஷீதியா ,பக்கம் 69,மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கொஹி ]






'அலி பக்ஷ்,ஹுசைன் பக்ஷ் அல்லது அப்துன் நபி என்று பெயரிடுவதோ அல்லது அல்லாஹ்வும் அவனது ரசூலும்  ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் நாடினால் நிறைவேறும் என்று கூறுவது ஷிர்க் "


[ நூல் - பிஹிஷ்தீ ஜேவர் ,மவ்லவி அஷ்ரப் அலி தானவி ,பக்கம் 46 , நூலில் மோசடி செய்யும் முன் ]

ஆக தேவ்பந்த் தப்லீக் ஜமாத்தின் வஹாபிய கொள்கைகளைப் பார்த்தீர்கள் .


இப்போது மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கொஹியின் சுயசரிதையான தச்கிரதுர் ரஷீத் என்னும் நூலைக் காண்போம் .


 "மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் தந்தை வழி வம்சா வழியைப் பார்ப்போம் .
மவ்லானா ரஷீத் அஹ்மத் (மகன் ) மவ்லானா ஹிதாயத் அஹ்மத் (மகன் )காழி பீர் பக்ஷ் (மகன் ) காழி குலாம் ஹசன் (மகன் ) காழி குலாம் அலி .


மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் தாய்  வழி வம்சா வழியைப் பார்ப்போம் .
மவ்லானா ரஷீத் அஹ்மத் (மகன் )கரீமுன்னிசா (மகள் ) பரீத் பக்ஷ் (மகன் ) குலாம் காதிர் (மகன் ) முஹம்மது ச்வாலிஹ் (மகன் ) குலாம் முஹம்மது ."


[ நூல் - தச்கிரதுர் ரஷீத் ,பாகம் 1,பக்கம் 32 ]


கேள்வி : ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் முதல் ஆசிரியர் யார் ?
பதில் : மியான் குதுப் பக்ஷ் .


[ நூல் - தச்கிரதுர் ரஷீத் ,பாகம் 1,பக்கம் 39 ]


கேள்வி : ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் முதல் அரபி  ஆசிரியர் யார் ?
பதில்  : மவ்லவி முஹம்மது பக்ஷ் .


[ நூல் - தச்கிரதுர் ரஷீத் ,பாகம் 1,பக்கம் 48 ]


மதிப்பிற்குரிய வாசகர்களே ,இதன் விளைவு என்ன ? ரஷீத் அஹ்மத் கங்கொஹியின் வாழ்க்கையில் எத்துணை பக்ஷ் கள் சூழ்ந்து உள்ளனர் .இவையாவும் ஷிர்க் என்று ரஷீத் அஹமத் பத்வா கொடுத்துள்ளதையும் மறவாதீர் .


மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கொஹி தமது பிறப்பின் ஆரம்பம் முதல் ஷிர்க்கால் சூழப் பட்டுள்ளார் என்று எடுத்துக் கொள்வதா ????











குறிப்பு :



தமிழகத்தில் அஷ்ரப் அலி தானவியின் வஹாபிய கொள்கைகளைக் கொண்ட நூலான பிஹிஷ்தீ ஜேவர் சுவர்க்க நகைகள் என்னும் பெயரில் மொழிபெயர்த்து திருச்சி டி.எஸ்.ஏ.ரஸூல்    என்பவர் 
தப்லீக் ஜமாஅத்தை தமிழகத்தில் காலுன்றச் செய்து ஆதரவளித்த உலமாக்களான அமானி ஹஜ்ரத்,கலீலுர் ரஹ்மான் ரியாஜி ஹஜ்ரத் ஆகியோரின் மதிப்புரை ,சிறப்புரையுடன் வெளிவந்தது .


அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தின் கொள்கைகளுக்கு மாற்றமான இந்த  நூலுக்கு மறுப்பு தெரிவித்து காயல்பட்டிணம் தந்த காமில் வலி அல் ஆரிபுபில்லாஹ் அல் முஹிப்பிர்ரஸூல் அஷ்ஷைகு   அப்துல் காதிர் ஸூபி  பாஜிலே நூரி ஸித்திகி காதிரி காஹிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் 'சுவர்க்க நகைகளா ! அல்ல நரக விலங்குகள்' என்ற நூலை எழுதினார்கள் .


நூலை பதிவிறக்கம் செய்ய 



குப்ர் -ஷிர்க் பற்றிய விளக்கம் :


'43. அலி பக்ஷ்,ஹுசைன் பக்ஷ் அல்லது அப்துன் நபி போன்ற பெயர்களை வைப்பது  "


[ நூல் - சுவர்க்க நகைகள் , பக்கம் 77,பிஹிஷ்தீ ஜேவர் தமிழ் மொழிபெயர்ப்பு , மூல நூல் ஆசிரியர் மவ்லவி அஷ்ரப் அலி தானவி]


அதில் மேற்படி பத்வாவைச் சூட்டிக் காட்டி நூலின் மொழிபெயர்ப்பாளர் டி.எஸ்.ஏ.ரசூல் என்ற செய்யத் அப்துர் ரசூல் அவர்களிடம் இந்த பெயரைச் சூட்டியதால் நீங்களும் ஷிர்க்குடைய பெயர் தானே வைத்துள்ளீர் என்று சுட்டிக் காட்டியதும் ,தனது வஹாபிய கொள்கை விட்டு வெளிவராமல் தனது பெயரை குலாம் ரசூல் என்று மாற்றிக் கொண்டு, தமிழக தப்லீக்வாலாக்களின்  பல நூல்களை எழுதிய திருச்சி குலாம் ரஸூல் தான் அவர் .

இத்தகைய வஹாபிய கொள்கை கொண்ட தப்லீக் தேவ்பந்திகளை விட்டும் நம் ஈமானைக் காப்பாற்றிக் கொள்வோமாக ! ஆமீன் !



Related Posts Plugin for WordPress, Blogger...

Thursday 16 April 2015

அல் முஹன்னத்- 2

தேவ்பந்திகள் தங்களது சொந்த அகீதா நூலான 'அல் முஹன்னத்' க்கு எதிராக முரண்படுகின்றனர் :

         தேவ்பந்திகளின் முன்னோடிகளில் ஒருவரான ரஷீத் அஹ்மத் கங்கோஹி இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி சரியான அகீதா உடையவர் என்கின்றார் .
மவ்லவி ரஷீத் அஹமத் கங்கோஹி எழுதுகிறார் , ' முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபைப் பின்பற்றுபவர்களுக்கு வஹாபிகள் என்று சொல்லப்படும் ,அவர்களது கொள்கைகள் மிகச் சிறந்தவை '
[நூல் - பத்வா ரஷீதியா ,பாகம் 1,பக்கம் 111]

     தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினர் 'அல் முஹன்னத்' எழுதிய பொழுது ( ஸுன்னி அரபுலக உலமாக்களிடம் ஒப்புதல் பெற) அவர்கள் அந்த புத்தகத்தில் இந்த விஷயத்தைக் குறிப்பிடவில்லை.

இப்பொழுது தாருல் உலூம் தேவ்பந்தின் அதிகாரப்பூர்வ பத்வா இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் அகீதாவும் அணுகுமுறையும் சரியானது என்று வந்துள்ளது .இங்கு தேவ்பந்திகள் அவர்களின் சொந்த நூலான 'அல் முஹன்னத்' துடன் முரண்படுகின்றனர் .

இது தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் ஸுன்னி அரபுலக உலமாக்களிடம் ஒப்புதல்  கையொப்பம் பெற வேண்டி செய்த கபட நாடகமே 'அல் முஹன்னத் ' என்பது தெளிவு !!!

தேவ்பந்தி உலமாக்களின் பார்வையில் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி அல் தமீமீ :

அல் முஹன்னத் ,தேவ்பந்தி தப்லீக் உலமாக்களின் கொள்கை நூலில் பக்கம் 12,பின்வரும் கேள்வி பதில் உள்ளது :

" கேள்வி எண் 12 : முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் முஸ்லிம்களின் இரத்தம் சிந்துவதையும்,அவர்களின் உடமைகளை அபகரிப்பதையும் ,அவர்களின் கண்ணியத்தை சிதைப்பதையும் ஆகுமெனக் கருதினார் .அவர் அவர்களை விக்கிரக வணங்கிகள் என்றும் கருதினார் . தமது முன்னோடிகளிடம் ஆணவம் நிறைந்தவராகக் காணப்பட்டார் . அவரைப் பற்றிய உங்களின் அபிப்பிராயம் என்ன ? இன்னும் அஹ்லே கிப்லா உடையோரை இறை நம்பிக்கையற்றவர் என்று அழைப்பது ஆகுமாக்கப்பட்ட செயலா ?இவ்வாறு செய்யும் நபர் இஸ்லாத்தில் முறையான பிரிவைச் சார்ந்தவரா ?


பதில் : இது விஷயத்தில் எங்களின் பார்வையானது துர்ருல்   முக்தார் எழுதியவர்  வழங்கிய தீர்ப்பே  பொருந்தும்.க்வாரிஜியாக்கள் என்னும் குழுவினர் இமாமுக்கு எதிராக போர் தொடுத்தனர் ,ஏனெனில் அவர்கள் இமாம் குப்ரின் மீது இருக்கின்றார் என்று நினைத்தனர் ,அதாவது உருவ வழிபாட்டில்,எனவே போர் தொடுப்பதை நியாயப்படுத்தினர். இதன் காரணமாக அவர்கள் நம் உயிரையும்,உடைமையையும் எடுப்பதையும் நம் பெண்களை சிறைப்பிடிப்பதையும் இஸ்லாமியச் சட்டரீதியாக ஆகுமெனக் கருதினர் .இன்னும் அவர் க்வாரிஜியாக்களைக் கலகக்காரர்கள் எனக் கருதினார்.மேலும் இமாம் க்வாரிஜியாக்கள் அவர்களை நிராகரிப்பாளர்கள் என விவரிக்கவில்லை ஏனெனில் இது புரிந்து கொள்ளுவதில் உள்ள விஷயம் எனக் கூறினார்,அது தவறான கருத்து .

  இன்னும் அல்லாமா ஷாமி புத்தகத்தின் ஓரக் குறிப்பில்,கூறியுள்ளார்கள்,
" நமது காலத்தில் நடைபெற்றது போல் அப்துல் வஹ்ஹாப் நஜ்தியைப் பின்பற்றுபவர்கள் நஜ்தில் இருந்து வெளிப்பட்டு ஹரமைன் ஷரீபை கைப்பற்றினார்கள். அவர்கள் தங்களை ஹன்பலி மத்ஹபை பின்பற்றுபவர்கள் எனக் கூறினார்கள் ,எனினும் அவர்களின் நம்பிக்கை தாங்கள் மட்டுமே முஸ்லிம்கள் எனவும் தங்களுக்கு எதிரான கருத்துகள் கொண்டு தங்களைப் பின்பற்றாதோர் காபிர்கள் எனவும் கருதினர் .  எனவே அவர்கள் அஹ்லே சுன்னத் வல் ஜமாத்தினரையும் ,ஸுன்னி உலமாக்களையும் கொல்வதை நியாயப்படுத்தி கொன்றும் வந்தனர் ,எனினும் எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்கள் மேற்கொண்டு முன்னேறிச் செல்வதைத் தடுத்து நிறுத்தும் வரை ".

தேவ்பந்தி மவ்லவி ஹுசைன்  அஹ்மத் சாஹிப் தாண்ட்வி மதனீ கூறுகிறார் :
' பண்பாளர்களே !  முஹம்மத் இப்னு  அப்துல்  வஹ்ஹாப் நஜ்தில் 13ஆம் நூற்றாண்டில் தோன்றினார் , இன்னும் அவர் தவறான எண்ணங்களில் பிடிபட்டிருந்ததாலும் ,தவறான கொள்கையின் காரணமாகவும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினர் மீது போர் தொடுத்தார் , அவர் அவர்கள் மீது தனது தீய எண்ணங்கள் கட்டாயப்படுத்த முயன்றார் ,அவர் அவர்களின் உடைமைகளைக் கைப்பற்றுவது ஷரீயத்தின் படி ஆகுமான செயலனக் கருதினார் ,அவர்களைக் கொல்வது ஆகுமெனக் கருதினார் ,இன்னும் இம்மாதிரியான செயல்கள் இறைஅன்பைப் பெற்றுத் தரும் செயலாகக் கருதினார் .அவர் ஹரம் ஷரீபைச்  சார்ந்தவர்கள் (மக்கா மற்றும் மதீனா ) மீது மிகக் குறிப்பாகவும் ஹிஜாஸ் மாகாணத்தைச் சார்ந்தவர்கள் மீது பொதுவாகவும்  கடுமையாக நடந்து கொண்டார் .அவர் முன்னோர்களில் நல்லடியார்கள் மீது மிகத் தரக் குறைவான சொற்களைப் பயன்படுத்தினார் . அவர்கள் மீது அவர் செய்த அட்டுழியங்கள் காரணமாக ,எண்ணிலடங்கா மக்கள் புனித மக்கா மதீனாவை விட்டும் விரண்டோடினர் ,இன்னும் பலர் அவரது படையினரால் ஷஹீதாக்கப்பட்டனர் .சுருக்கமாகக் கூறுவதானால் ,அவன் ஒரு கொடுங்கோலன், ஒருகிளர்ச்சியாளன்  மற்றும் ஒரு முற்றிலும் தீய நபர்.'
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 42]

' முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் உலகம் முழுவதும் உள்ள மக்களும் முஸ்லிம்களும் இறை மறுப்பளார்கலாகவும் காபிர்களெனவும் கருதினார் '
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 44]


'அந்த நஜ்தியாக்கள்   நம்பினார்கள் ,இன்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் நம்புகிறார்கள் , நபிமார்களின் வாழ்க்கை இவ்வுலகில் அவர்கள் வாழ்ந்த காலம் மட்டுமே . அவர்களின் மறைவுக்கு பின் அவர்களும் ஏனைய நம்பிக்கையாளர்களும் சரிசமம் என்று.'
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 45]

' இந்த கூட்டம் பெருமானார் ஸல்லலாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களைக் கனவில்/நினைவில் பார்ப்பதையும் அவர்களின் புனித ரவ்ழாவிற்கு ஜியாரத் செய்வதையும் கெட்ட பித்அத் என்றும் ஷரீயத்திற்கு முரணானது என்றும் கூறுகின்றனர் .இன்னும் அவர் அந்த திசையை நோக்கி பிரயாணம் செய்வதைக் கூட ஷரீயத்திற்கு முரணானது என்று கூறுகின்றார்.இன்னும் அவர்களில் சிலரின் கூற்றுப்படி,பெருமானாரின் புனித ஜியாரத் செய்யும் எண்ணம் கொண்டு பிரயாணம் செய்வது ஜினா செய்வதற்கு சமம் என்கின்றனர் .அல்லாஹ் இத்தகைய கெட்ட எண்ணங்களை விட்டும் நம்மைக் காப்பானாக ! '.
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 45]

'வஹ்ஹாபிகள் நபிமார்களுக்கு எதிராக மிகவும் ஆணவம் பிடித்த மொழிப் பிரயோகங்களைப் பயன்படுத்திகின்றனர் .இன்னும் இதை பெருமானாரிடமும் பயன் படுத்துகின்றனர் எந்த
அளவிற்கு அவர்களின் ஆணவம் சென்றுள்ளது என்றால் பெருமானாரின் அந்தஸ்து நமக்கு சரிசமமானது,அவர்களின் மூலம் சிறிதளவு நன்மை அல்லாஹ்வின் தூதை எத்தி வைக்கும் காலத்தில் கிட்டியது,அவர்களின் மறைவிற்கு பின் அவர்களைக் கொண்டு எந்த நன்மையும் இல்லை   என்கின்றனர் .
இவர்கள் இவ்வாறு எண்ணுவதால் ஷபாஅத்தைக் கொண்டு அல்லாஹ்விடம் பாவங்கள் மன்னிக்கப்பட இறைஞ்சுவது ஷரீயத்திற்கு முரணானது என்கின்றனர் .அவர்களின் முன்னோர்களும் இவ்வாறு பெருமானார் அவர்களின்  ஷபாஅத்தைக் கொண்டு அல்லாஹ்விடம் பாவங்கள் மன்னிக்கப்பட இறைஞ்சுவது ஷரீயத்திற்கு முரணானது என்கின்றனர் .(அல்லாஹ் இத்தகைய எண்ணங்களை விட்டும் நம்மைக் காப்பானாக !). எனினும் இத்தகைய எண்ணங்களை மீள்பதிவு செய்வது அனுமதிக்கப்பட்டதே , வெறுமனே குப்ரை உண்டாக்கக் கூடிய சொற்களை மீள்பதிவு செய்வது குப்ரை உண்டாக்காது .இன்னும் அவர்கள் ஒரு மனிதனின் கைத்தடி உண்டாக்கும் பயன் ஒப்பற்ற ஆளுமை பிரபஞ்சத்தின் அரசரான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ  ஸல்லம் அவர்களை விட அதிக நன்மை பயக்கும் ,ஏனெனில் ஒரு மனிதனின் கைத்தடியைக் கொண்டு ஒரு நாயிடம் இருந்து பாதுகாப்பு பெற முடியும் எனினும் பிரபஞ்சத்தின் பெருமையான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ  ஸல்லம் அவர்களால் இதைக் கூட செய்ய இயலாது '
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 47]

'வஹாபிகள் மறைபொருளான சடங்குகள் மற்றும் நயமான நடைமுறைகளுக்கு எதிராக உள்ளார்கள் - தியானிப்பது ,திக்ருல்லாஹ் ,ஷைகுமார்களுக்கு பைஅத் கொடுப்பது மற்றும் மஷாயிகுமார்களுக்கு எதிராகவும் ,ஷைகுமார்களுடன் தொடர்பில் இருப்பது ,இன்னும் பனா மற்றும் நித்திய சாசுவத நிலை அடைதல் போன்ற கொள்கைகளுக்கு எதிராக உள்ளனர் .அவர்களின் கண்ணோட்டத்தில் இவை எல்லாம் எந்த விளைவும் இல்லை ,கெட்ட பித் அத் ,மற்றும் அர்த்தமற்றவை '
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 59]

' வஹாபிய கொள்கையின்படி இமாம்களை தக்லீத் செய்வது பெருமானாரை நிந்தனை செய்வது ,இன்னும் அவர்கள் நான்கு இமாம்களையும் அவர்களை பின்பற்றுபவர்களையும் கேடுகெட்ட மற்றும் துன்மார்க்க வார்த்தைகளால் நிந்தனை செய்கின்றனர் .எனவே இவர்கள் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தை விட்டும் வெளியேறியவர்கள், இன்னும் இந்தியாவில் இவர்களை பிரதிபலிப்பவர்களும் இந்த துஷ்ட கூட்டத்தைச் சார்ந்தவர்களே . இவர்கள் முதலில் வரும் பொழுது தங்களை ஹன்பலி மத்ஹபைச் சார்ந்தவர்கள் என்று கூறினாலும் இவர்கள் பெரும்பாலான விஷயங்களில் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களைப் பின் தொடர்பவர்கள் அல்ல '
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 62]

'அர்  ரஹ்மானு அலல் அர்ஷிஸ் தவா என்ற குரான் வசனத்தின் மூலம் வஹாபிகள் அல்லாஹ் சிம்மாசனத்தில் அமர்ந்து உள்ளான் என்றும் அல்லாஹ் விற்கு பரிமாணங்கள் உண்டென்றும் நிரூபிக்க முயன்று  அல்லாஹ்விற்கு உருவம் உண்டென்று கூறுகின்றனர் '.
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 24]

'அரபுலகின் வஹாபிகள் அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரசூலல்லாஹ் ! என்று கூறுவதை கடுமையாக கண்டனம் செய்கின்றனர் , இன்னும் அதன் பயன்பாட்டை மிகவும் கடுமையாக கண்டிக்கவும்  மற்றும் பரிகாசம் செய்யவும் செய்கின்றனர் ,இன்னும் இதைக் கூறும் ஹரம் ஷரீபின் மக்கள் மீது வசைமாறிப் பொழியவும் செய்கின்றனர் .'
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 65]

'இந்த கேடுகெட்ட வஹாபிகள் பெருமானார் அவர்கள் மீது தொடர்ச்சியாக ஸலவாத் சொல்வதைப்  பகிரங்கமாகக் கண்டனம் செய்கின்றனர் ,இன்னும் தலாயிலுல் கைராத் ,கஸீதா புர்தா ,கஸீதா ஹம்சியா ஓதுவதை வெறுத்தொதுக்கப்பட்ட மற்றும் தேவையற்ற செயல் என்று கருதுகின்றனர் '.இன்னும் அவர்கள் கஸீதா புர்தாவின் சில வரிகளை குப்ர் என்றே கருதுகின்றனர் .உதாரணமாக ;
யா அஷ்ரபுல் ஹல்கி மாலி மன் அலூஸு பிஹி சிவாக இந்த ஹுலூலில் ஹாதிசில் அமமி
(படைபினங்களில் சிறந்தவரே ! எனக்கு தங்களைத் தவிர வேறு யாருமில்லை இந்த அபாய காலங்களில் )

[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 66]

'வஹாபிகள் அல்லாஹ்வின் கட்டளைகளைக் கொண்டு பெற்ற அறிவைத் தவிர ,பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ,அனைத்துவிதமான மறைவான மற்றும் உண்மையான அறிவை விட்டும் அற்றவர்கள் எனக் கருதுகின்றனர் '
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 62]

'வஹாபிகள் பிரபஞ்சத்தின் அரசரான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்  பிறப்பைக் கூறுவதை மிகவும் கண்டனத்திற்குரிய மற்றும் மிக மோசமான பித் அத் எனக் கூறுகின்றனர் '
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 67]

அன்வர் ஷாஹ் கஷ்மீரி பைத் அல் பாரி நூலில் ,பாகம் 1ல் எழுதுகிறார் 'முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி ஒரு மிகக் குறைந்த அளவே இல்முடைய ஒரு முட்டாள் '.

தேவ்பந்தி தப்லீக் உலமாக்களின் நூலில் வஹாபிகளைப்  பற்றி உள்ள மேற்கூறியவற்றைப் படித்த பின் தேவ்பந்த் வஹாபிகளின் அரபி மதரஸாவான தாருல் உலூம் தேவ்பந்த் ,இந்தியாவின் பத்வா வழங்கும் பிரிவில் வஹாபிகளைப் பற்றிய பத்வாவைக் கீழே காணுங்கள் !

இது மிகவும் மோசமான முனாபிக் தனம் இல்லையா என்பதை வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளோம்   .

வஹாபிகளின்  மீதுள்ள தங்களின் முஹப்பைத்தை இன்னும் எவ்வாறெல்லாம் இந்த தேவபந்தி தப்லீக் வஹாபிகள் வெளிப்படுத்துகிறார்கள் என்பதைக் பின்வரும் ஆதாரங்களில் காணலாம் :

எனினும் வாசகர்கள் தேவ்பந்தி தப்லீக் வஹாபிகள் அரபுலக ஸுன்னி உலமாக்களிடம் 'அல் முஹன்னதில் ' என்ன கூறினார்கள் என்பதை நினைவில் கொள்க ,

' நாங்கள் வஹாபிகளை வெறுக்கின்றோம் ,இன்னும் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தியையும் ,அவரைப் பின்பற்றுபவர்களையும் க்வாரிஜியாக்கள் எனக் கருதுகின்றோம் '.


1. இந்த பெயர் (வஹாபி) ஒருவர் இப்னு அப்துல் வஹ்ஹாபின் கொள்கையைப் பின்பற்றுவோருக்கு அல்லது அடிபணிந்து நடப்பவருக்கு சொல்லப்படும் .
[நூல் - இம்தாதுல் பத்வா ,பக்கம் 233]


2. மத்ரஸா ஜாமியுல் உலூம்,கான்பூரில் அஷரப் அலி தானவி சாஹிப் ஆசிரியராக இருந்த காலத்தில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது .அந்த மதரஸாவின் பகுதியில் வாழ்ந்த சில பெண்கள் சில இனிப்புகளைப்  புனித குரான் ஷரீப் ஓதி அதன் மூலம் கிடைக்கும் நன்மை எத்தி வைக்கப்படும் என்ற எண்ணத்துடன் கொண்டு வந்தனர்.எனினும் மத்ரஸா மாணவர்கள் குரான் ஓதாமல் இனிப்புகளை மட்டும் உண்டனர் . அது ஒரு சர்ச்சையைக்  கிளப்பியது .இது பற்றிய விவரம் தெரிவிக்கப்பட்ட பொழுது ,தானவி சாஹிப் வந்து உரத்த குரலில் சொன்னார்கள் ' சகோதரர்களே ! இந்த இடம் வஹாபிகளால் நிரம்பியுள்ளது . இங்கு பாத்திஹா அல்லது நியாஜ் ஓதவோ எதையும் கொண்டு வராதீர்கள் '
[நூல்- அஷ்ரபுஸ் ஸவானிஹ் ,பக்கம் 45]

3.யூசப் காந்தல்வியின் சரிதை ,பக்கம் 192ல் நாங்கள்  தீவிரமான வஹ்ஹாபிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

4.தேவ்பந்தி வஹாபிகளின் மூன்னோடிகளில் ஒருவரான ஷைகுல் ஹதீஸ் ஜக்கரியா சாஹிப் அறிவிக்கின்றார் 'நான் உங்கள் அனைவரையும் விட தீவிரமான வஹ்ஹாபி ' .
[ மவ்லானா முஹம்மத் யூசுப் காந்தலவியின் சரிதை ,பக்கம் 193,எழுதியோர் முஹம்மத் சானி ஹசனி மற்றும் மன்சூர் நுஃமானி ].

5.என்னிடம் 10000 ருபாய் இருந்தால், நான் பகிருந்திருப்பேன் மக்கள் அனைவரும் அவர்களாக முன்வந்து வஹாபியாயிருப்பர் .[நூல் - அல் இபாததுல் யௌமியா ,அஷ்ரப் அலி தானவி ]
Ashraf Ali Thanavi on Wahhabis


குறிப்பு : ஹுசைன் அஹ்மத் தாந்த்வி மதனீ சாஹிப் வஹாபிகளைப் பற்றி என்னவெல்லாம் குறிப்பிட்டார் என்று சீர்தூக்கி பாருங்கள் .

இப்பொழுது ,
தற்காலத்தில் வாழ்ந்து வரும் தேவ்பந்தி முப்தி ஒருவரின் கருத்து அப்துல் வஹ்ஹாப் நஜ்தியைப் பற்றியும் ,வஹ்ஹாபிகளைப் பற்றியும் .
Deobandi Mufti Desai Fatwa on Wahhabis


நிற்க !!!

இதே முப்தி பின்னர் அப்துல் வஹ்ஹாப் நஜ்தியைப் புகழ்ந்து பின்னர் பத்வா வெளியிட்டார் .இது பற்றிய சர்ச்சை வந்ததும் தனது இணையதளத்தில் இருந்து பின்னர் அதை நீக்கி விட்டார் .
இது தொடர்பான விவாதம் நடந்ததின் பதிவு கீழே முப்தியின் பத்வாவுடன் .
Mufti Desai Fatwa Praising Wahabis -Removed


என்ன இந்த தவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் திடீர் மாற்றம் ???

தேவ்பந்திகளின் அதிகாரப்பூர்வ நூலான அல் முஹன்னத் இவர்கள் வஹாபிகளைப் பற்றி துர்ருல் முக்தார் நூலில் என்ன சொல்லப்படுள்ளதோ அதுவே தமது நிலைப்பாடு என்கின்றனர் .

இவ்வாறு பொய் உரைத்ததன் மூலம் மட்டுமே தப்லீக் தேவ்பந்திகள் அரபுலக ஸுன்னி உலமாக்களிடம் பத்வா பெற முடிந்தது எனபது இதன் மூலம் நிரூபணம் ஆகின்றது .

ஆனால் தேவ்பந்தின் பத்வா வழங்கும் தாருல் இப்தாக்களோ அப்துல் வஹ்ஹாப் நஜ்தியை புகழ்ந்து தள்ளுகின்றன !!!

இதுதான் தேவ்பந்திகளின் வஹாபிய முனாபிக் கொள்கை !!!

இது தேவ்பந்தி தப்லீக் வஹ்ஹாபிகள் அல் முஹன்னதை அரபுலக ஸுன்னி உலமாக்களை ஏமாற்றம் அளிக்கவே எழுதியது என்பது திண்ணம் !

தேவ்பந்திகள் வஹ்ஹாபிகளை சந்திக்கும் பொழுது இப்போது உள்ள பத்வாக்களையும் ,துணைக்கண்டத்திற்கு வெளியே உள்ள உலமாக்களை சந்திக்கும் பொழுது அல் முஹன்னதையும் காட்டுவர் .

இதுவே இந்த முனாபிக்கீன்களின் சுயரூபம் !
      
Related Posts Plugin for WordPress, Blogger...