Friday 10 June 2016

பைஸ்லா ஹப்த் மஸ்அலா - 3

ஷைகு இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்கள் காலத்தில் உண்டான மவ்லித் பற்றிய சர்ச்சை ! 

                        பைஸ்லா ஹப்த் மஸ்அலா - 1



ஹிஜ்ரி 1324ல், சங்கைமிகு ஹரமைன் ஷரீஃபில் வசித்து வந்த இந்திய துணைக்கண்டத்தின் உலமாக்களில் 'அல் தவ்லா அல் மக்கியா ' நூலுக்கு ஒப்புதல் அளித்தவர்கள், செய்யத் அலி அஹ்மத் ஹிந்தி ராம்பூரி முஹாஜிர் மதனி,ஷைகு கரீமுல்லாஹ் முஹாஜிர் மதனி,(இவர்கள் இருவரும் ஷாஹ் அப்துல் ஹஃக் முஹாஜிர் மதனி ,மறைவு 1333 ஹிஜ்ரி அவர்களின் மாணாக்கர்) ,செய்யத் முஹம்மது உதுமான் காதிரி ஹைதராபாதி,மற்றும் ஷாஹ் அப்துல் ஹஃக் இலாஹாபாதி .[19]


மேலும் இங்கு நினைவு கூறத்தக்கது,ஷைகு செய்யத் கலீல் பின் இஸ்மாயில் மக்கி,மக்கா நூலகத்தின் நூலகர்,ஹாஜி இம்தாதுல்லாஹ் ஃபாரூக்கி அவர்களின் மாணவராவார். செய்யத் கலீல் அவர்கள் தான் இமாம் அஹ்மத் ரிழா கான் அவர்களை அன்னார் பராஹீனே காத்தியாவின் ஃபித்னாவை எதிர்கொண்ட பொழுது ஆதரித்த மக்காவின் உலமாக்களில் முன்னோடி ஆவார்கள். [20]

பராஹீனே காத்தியாவிற்கு எதிராக தக்தீஸ் அல் வகீல் நூலுக்கு ஒப்புதல் நல்கிய அரபுலக உலமாக்கள் :

·         முஹம்மத் ஸாலிஹ் அல் கமால் மக்கி,ஹனஃபி முஃப்தி (ஹிஜ்ரி 1307,துல் ஹஜ் 3) .அன்னார் அல் தவ்லா அல் மக்கியா நூலுக்கும் ஒப்புதல் அளித்தார்கள்,பக்கம் 147.

·         முஹம்மது சயீத் பாபுசயில் மக்கி,ஷாஃபி முஃப்தி மற்றும் ஷைகுல் உலமா , அன்னார் அல் தவ்லா அல் மக்கியா நூலுக்கும் ஒப்புதல் அளித்தார்கள்,பக்கம் 142.

·         முஹம்மது ஆபித் ஹுஸைன் மக்கி,மாலிகி முஃப்தி, அன்னார் அல் தவ்லா அல் மக்கியா நூலுக்கும் ஒப்புதல் அளித்தார்கள்,பக்கம் 145.

·         முஃப்தி கல்ஃப் பின் இப்ராஹீம் மக்கி,ஹன்பலி முஃப்தி.

·         உத்மான் பின் அப்துஸ்ஸலாம் தாகிஸ்தானி மதனி,ஹனஃபி முஃப்தி, அன்னார் அல் தவ்லா அல் மக்கியா நூலுக்கும் ஒப்புதல் அளித்தார்கள்,பக்கம் 168.

·         முஹம்மது அலி பின் ஜாகிர் அல் வதரி(ஹிஜ்ரி 1309,முஹர்ரம் 5).

ஆக மொத்ததில், தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அன் ரஷீத் கலீல்’  19 ஒப்புதல்களைப் பெற்றது, 'அல் தவ்லா அல் மக்கியா ' அரபுலகைச் சார்ந்த 77  உலமா பெருமக்களால் பராஹீனே காத்தியா’ வின் ஃபித்னாவிற்கு எதிராக ஒப்புத்ல் பெற்றது. அதனை காலம் கழித்து ஒப்புதல் நல்கியவர்கள் பட்டியல் கீழெ கொடுக்கப்பட்டுள்ளது. (அல் தவ்லா அல் மக்கியா நூல் எழுதப்பட்டது ஹிஜ்ரி 1324 துல் ஹஜ் மாதம்).

செய்யத் முஹம்மத் தாஜுத்தீன் ஹசனி (மறைவு ஹிஜ்ரி 1362/1943) ,ஷைகு பத்ருத்தீன் ஹசனி அவர்களின் மகனார், ஹிஜ்ரி 1331/ 1913 அல் தவ்லா அல் மக்கியா நூலுக்கு மதீனா ஷரீஃப்வில் வைத்து ஒப்புதல் வழங்கினார்.

ஷைகு மஹ்மூத் ரஷீத் அல் அத்தர்(மறைவு 1364) , ஷைகு பத்ருத்தீன் ஹசனி அவர்களுடன் 40 ஆண்டுகள் அண்மித்து இருந்து  மிகவும் பிரபலமான மாணவர்களில் ஒருவர்,மேலும் ஷைகு அப்துர் ரஹ்மான் பஹ்ராவி,ஷைகு அல் அஸ்கர் ஸலீம்,ஷைகு அஹ்மது அபு குத்வாஹ்,ஷைகு முஹம்மது அஷ்மவ்னி போன்றோர்களின் மாணவர்.

அன்னாரின் மாணாக்கர்களில் ஷைகு அபு அல் கைர் அல் மீத்னாய்(மறைவு 1380 ஹிஜ்ரி/1961),ஷைகு தாஜுத்தீன் ஷைகு பத்ருத்தீன் ஹசனி அவர்களின் மகனார்(மறைவு 1362 ஹிஜ்ரி/1943), ஷைகு அப்துல் வஹ்ஹாப் தப்ஸ் ஜைத் (மறைவு 1969) ,ஷைகு முஹம்மது சயீத் புர்ஹானி(பல நூற்களின் ஆசிரியர்,அவற்றுள் ஹனஃபி ஃபிக்ஹ் நூலான அல் ஹதியத் அல் அலய்யாஹ்நூலின் விளக்கவுரை),ஷைகு அப்துல் ஃப்த்தாஹ் அபு குத்தாஹ்(மறைவு ஹிஜ்ரி1417 / 1997). அன்னார் மவ்லவி ரஷீத் அஹ்மத் ,மவ்லவி கலீல் ஆகியோரின் மவ்லித் ஃபத்வாவுக்கு எதிராக ஓர் மறுப்புரையாக  இஸ்திஹ்பாப் அல் கியாம் இந்த திக்ரி விலாததிஹி அலைஹி வஸலாத்து வஸலாம் என்ற நூலை எழுதினார்கள்

ஷைகு யஹ்யா மக்தபி ஜும்மைதா அல் திமிஷ்கி(மறைவு ஹிஜ்ரி 1378/1958),ஷைகு பத்ரூத்தீன் அல் ஹசனி அவர்களுடன் அறுபது ஆண்டுகள் விடாமுயற்கியுடன் கல்வி கற்ற மிகவும் தலைசிறந்த மாணவர்களில் ஒருவர்,’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது மக்தபா தாருல் ஹதீத் வைத்து,22 ஸபர்,ஹிஜ்ரி 1337ல் ஒப்புதல் வழங்கினார்கள்.

ஷைகு முஹம்மத் பின் எஃப்பெந்தி அல் ஹக்கீம் திமிஷ்கி ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது ஒப்புதல் வழங்கினார்கள். அன்னார் இஸ்லாமிய பாரம்பரிய கல்வி முறைகளை தமது ஆசிரியர்களான பத்ரூத்தீன் அல் ஹசனி(மறைவு ஹிஜ்ரி 1354/1925),ஷைகு தாஹிர் அல் ஜசாயிரி மற்றும் ஷைகு முஹம்மத் தய்யிப் (மறைவு ஹிஜ்ரி1345 /1924) .

ஷைகு முஹம்மது ஆரிஃப் பின் முஹைய்யித்தீன் பின் அஹ்மது , அல் மஹ்மல்ஜி(மறைவு ஹிஜ்ரி 1335/1916) என்ற அறியப்பட்டவர்கள், ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது ஒப்புதலை ஹிஜ்ரி 1329 ரமழான்/1910 வழங்கினார்கள். அன்னாரும் ஷைகு பத்ரூத்தீன் அல் ஹசனி அவர்களின் மாணவர்.

புனித மக்கா ஷரீபின் ஒப்பற்ற செய்யித் மற்றும் ஆலிமுமான ,ஹரம் ஷரீபின் ஆசிரியருமான,முஹம்மத் பின் செய்யித் வாஸி அல் ஹுஸைனி அல் இத்ரீஸி, ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது ஒப்புதலை மதீனா ஷரீபில் வைத்து ஹிஜ்ரி 1330ல் வழங்கினார்கள்.

ஷைகு அப்துல்லாஹ் பின் ஸதக்காஹ் பின் ஜைனி தஹ்லான் ஷாஃபி மக்கி , ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது ஒப்புதலை  ரஜப் 10,திங்கட்கிழமை ஹிஜ்ரி1328ல் வழங்கினார்கள்.
ஸைய்யித் இஸ்மாயில் பின் கஹ்லீல்,மக்கா ஷரீபின் நூலகத்தின் நூலகர், ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது ஒப்புதலை  ஹிஜ்ரி1328ல் வழங்கினார்கள்.

ஷைகு அலி பின் அலி அல்ரஹ்மானி,புனித மஸ்ஜிதுன் நபவியின் ஆசிரியர்,  ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது ஒப்புதலை  ஹிஜ்ரி1331ல் வழங்கினார்கள்.

ஷைகு யாஸீன் பின் ஸயீத், புனித மஸ்ஜிதுன் நபவியின் இஸ்லாமிய பாரம்பரிய கல்விமுறையின் ஆசிரியர், ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது ஒப்புதலை  ரமழான் இறுதியில் ஹிஜ்ரி1329ல் வழங்கினார்கள்.

ஷைகு முஹம்மத் யாகூப் பின் ரஜப் , புனித மஸ்ஜிதுன் நபவியின் ஆசிரியர்,  ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது ஒப்புதலை  ஹிஜ்ரி1329ல் துல்கஹ்தா 5 அன்று வழங்கினார்கள்.

முஃப்தி அதா அல் காசிம் ஹனஃபி திமிஷ்கி,தனது காலத்தின் மிகப் பிரசித்தி பெற்ற உலமாக்களான ஷைகு அப்துல் கனி மீதானி ஹனஃபி(ஷரஹ் அகீதா தஹவிய்யா மற்றும் குதுரி அல் லுபாப் நூலுக்கு விளக்கவுரை எழுதியவர் ),ஷைகு அப்துல்லாஹ் சுக்கரி,ஷைகு அஹ்மது ஹலபி,ஷைகு அஹ்மது தந்தாவி,ஷைகு ஸலீம் அத்தார் திமிஷ்கி போன்றோரின் மாணவர், ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது ஒப்புதலை   ஹிஜ்ரி1333ல் ரபீயுத்தானில்  மதீனாவில் வழங்கினார்கள்.

அன்னாரின் பிரசித்தி பெற்ற மாணவர்களில் ஷைகு அப்துல் வஹ்ஹாப் தப்ஸ் வஜைத் திமிஷ்கி(மறைவு 1969),ஷைகு அபூ அல் கைர் மீதானி,ஷைகு ஸயீத் அல் புர்கானி(அல் தாலீகத் அல் மர்தியா அலா அல் ஹதியாத் அல் அலாயிய்யா நூலின் ஆசிரியர்) மற்றும் அக்காலத்தின் மதிப்புமிக்க உலமாக்கள் பலரும் அடங்குவர்.

ஷைகு முஹம்மது பின் அஹ்மது ரமதான் ஷாமி அல் மதனி ஷாதிலி(மறைவு ஹிஜ்ரி 1340/1921) மதீனா ஷரீஃபில் தமது அரபு இலக்கண புலமைக்காக  பிரசித்தி பெற்றவரும்,’ஸஃப்வாத அல் அதப்,முஸாமராத் அல் அதீப்,முனாஜாத் அல் ஹபீப்,ஷேரி திவான்’ போன்ற பல்வேறு நூற்களின் ஆசிரியருமானவரும், ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது ஒப்புதலை   ஹிஜ்ரி1331ல் வழங்கினார்கள்.

ஷைகு முஹம்மது ஸயீத் அல் காஸிமி அல் திமிஷ்கி (மறைவு ஹிஜ்ரி 1335 அல்லது 1337) , ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது ஒப்புதலை   ஹிஜ்ரி1329ல் ரமழான் 2ல் வழங்கினார்கள்.

ஷைகு ஹுசைன் பின் முஹம்மது பின் அலி , ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது ஒப்புதலை   ஹிஜ்ரி1332ல் ஸபர் மாதம் வழங்கினார்கள்.

ஷைகு முஹம்மது ஸிப்கதுல்லாஹ் அல் மதராஸி,  ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது ஒப்புதலை   ஹிஜ்ரி1331ல் ரபீயுல் அவ்வல் மாதம் 15ம் தேதி வழங்கினார்கள்.

ஷைகு முஹம்மது கரீமுல்லாஹ் முஹாஜிர் மதனி, ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது ஒப்புதலை   ஹிஜ்ரி1329ல் ஜமாதுல் ஆகிர் மாதம் 22ம் தேதி வழங்கினார்கள்.

ஷைகு அஹ்மது பின் முஹம்மது பின் முஹம்மது கைர் அல் ஸினாரி அல் அப்பாஸி அல் மதனி, ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது ஒப்புதலை   ஹிஜ்ரி1330ல் ஜமாதுல் வலா மாதம் 25ம் தேதி வழங்கினார்கள்.

ஷைகு முஸ்தபா அல் தாஸி பின் கஜூஜ் அல் தூனிஸி அல் கல்வதி அல் மாலிகி,மஸ்ஜிதுன் நபவியின் ஆசிரியர், ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது ஒப்புதலை   ஹிஜ்ரி1330ல் ஷஃபான் மாதம் 15ம் தேதி வழங்கினார்கள்.

ஷைகு அப்துல் காதிர் பின் முஹம்மது பின் அப்துல் காதிர் அல் தூனிஸி அல் ஹுஸைனி, ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது ஒப்புதலை   ஹிஜ்ரி1329ல் ரபீயுல் ஆகிர் மாதம் 29ம் தேதி வழங்கினார்கள்.

ஷைகு குலாம் புர்ஹானுத்தீன் இப்னு அல் ஸைய்யித் நூர் அல் ஹசன் அல் மதனி, ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது ஒப்புதலை   ஹிஜ்ரி1329ல் ஜமாதுல் உலா மாதம் 3ம் தேதி வழங்கினார்கள்.

ஷைகு ஸெய்யித் யூசுப் அதா,மஸ்ஜிதுன் நபவியின் ஆசிரியர், ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது ஒப்புதலை   ஹிஜ்ரி1332ல் ரஜப் மாதம் 17ம் தேதி வழங்கினார்கள்.

ஷாஹ் அப்துல் ஹக் இலாஹாபாதி மக்கி :


ஷாஹ் அப்துல் ஹஃக் இலாஹாபாத் முஹாஜிர் மதனி(மறைவு ஹிஜ்ரி 1333) ஹரம் ஷரீபில் வசித்து வந்தவர்,ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி(ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் நெருங்கிய நண்பர்,’அல் துர் அல் முனாஸம் ஃபீ மவ்லித் அல் நபி அல் ஆஸம்’ என்னும் நூலை ‘அல் அன்வார் அல் ஸாதியா’ நூலுக்கு ஆதரவாக மவ்லித் ஷரீஃப் கொண்டாடுவதன் அனுமதி பற்றியும்,கியாமில் நிற்பது பற்றியும் எழுதினார்.

பின்வரும் உலமாக்கள் ‘அல் துர் அல் முனாஸம்’ நூலுக்கு ஒப்புதல் வழங்கினார்கள்,
·       மவ்லானா ஹாஜி ரஹ்மதுல்லாஹ் கீரான்வி.
·       ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்களின் முரீது,செய்யத் ஹம்ஸா நகவி  திஹல்வி,மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியிடம் சில காலம் கல்வி பயின்றவர்.
·       மவ்லானா அப்துல் ஸமீ,ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்களின் கலீஃபா மற்றும் ‘அல் அன்வார் அல் ஸாதியா’ நூலின் ஆசிரியர்.
·       மவ்லவி அப்துல்லாஹ்,மவ்லானா காஸிம் நானூத்வியின் மருமகன்.

மவ்லானா ரஹ்மதுல்லாஹ் கீரான்வி மக்கி :

ஷைகு ரஹ்மதுல்லாஹ் கீரான்வி அவர்கள்,முஜப்பர்நகர் மாவட்டம்,கீரானா என்னும் டவுணில் 1817 ஆம் ஆண்டு பிறந்தார்கள்.அன்னார் தமது 75ம் வயதில் ரமழான் மாதம் 24ம் தேதி ஹிஜ்ரி 1308ல்/ மே மாதம் 2ம் தேதி 1891ல் மறைந்தார்கள்.அன்னார் இஸ்லாமிய பாரம்பரிய கல்விமுறையை இந்திய துணைக்கண்டத்தின் அக்காலத்திய பிரபல உலமாக்களிடம் கற்று,பின்னர் தமது மார்க்க வாழ்க்கையை கிருஸ்துவ மிஷனரிக்களை உர்துவிலும்,அரபியிலும் விவாதிப்பதைக் கொண்டு துவக்கினார்கள்.அவரது மிகப்பிரபல்யமான விவாதங்களில் முக்கியமானது பிஷப் சி.ஜி.ஃபெண்டெர் என்பவருடன் இஸ்தான்புல்லில் நடைபெற்ற விவாதம்.


பிஷப் ஃபெண்டெர் அரபி மற்றும் ஃபார்ஸி மொழியில் பாண்டித்தியம் பெற்றதோடு உலகம் முழுவதும் சுற்றி இஸ்லாமிய உலமாக்களை தன்னுடன் விவாதிக்க வருமாறும் அல்லது கிருஸ்தவ மார்க்கத்தை ஏற்குமாறும் சவால்கள் விடுத்த  முக்கியமான கிருஸ்துவ அறிஞர்.அவர் பின்னாளில் மவ்லானா ரஹ்மதுல்லாஹ் கீரான்வி அவர்களிடம் மிகக் கொடூரமான முறையில் தோல்வியைத் தழுவி,இனி எப்பொழுதும் இம்மாதிரியான விஷயங்களில் ஈடுபட போவது இல்லை என்று எழுத்துப்பூர்வமான பிரமாணமும் செய்தார்.இதனைத் தொடர்ந்து மவ்லானா ரஹமதுல்லாஹ் கீரான்வி மிகவும் பாராட்டப்பெற்ற நூலான ‘இள் ஹாருல் ஹக்’ என்னும் நூலை அரபியில் எழுதினார்கள்.

ஷைகு ரஹம்துல்லாஹ் கீரான்வி அவர்கள் தான் இந்திய உலமாக்களில் முதன் முதலில் மக்கா ஷரீஃபில்  ‘வ்லாதியாஎன்னும் பெயரில் மதரஸா ஸ்தாபிதம் செய்தவர்கள்.அன்னாரின் மீது இமாம் அஹ்மது பின் ஜைனி தஹ்லான் ஷாஃபியி அவர்கள் பெரும் மதிப்பு வைத்திருந்தார்கள்,மேலும் ஹன்ஃபி ஃபிக்ஹின் பிரகாரம் ஹதீத் கலை சம்பந்தமான பாடம் நடத்துவதற்கு மக்காவில் பணி அமர்த்தப்பட்டார்கள்.

அப்துல்லாஹ் அல் ஸிந்தி அல் மக்கி ,ஷாஹ் அப்துல் ஹஃக் முஹாஜிர் இலாஹாபாதி அவர்களின் மாணவர் கூறினார் , “ ரோம் அரசின் சுல்தான் ,அல்லாஹுதஆலா அவரையும் நம்மையும் அவன் விரும்புவதைக் கொண்டு நேர்வழிப்படுத்துவானாக,எங்களின் இமாம் ஹழ்ரத் மவ்லானா ஷைகு ரஹ்மதுல்லாஹ் கீரான்வி அவர்களை அழைத்து, அல்லாஹ் அவர்களின் ஆயுளைக் கொண்டு முஸ்லிம்களை ஆசீர்வதிப்பானாக,ஷைகுல் இஸ்லாம் மற்றும் எல்லா மனிதர்களின் முஃப்தி அவர்களின் ஆலோசனையின் பேரில், மார்க்கத்தின் அடிப்படைகள் மற்றும் அதன் கிளைகளில் தங்கள் அறிவை ஆழப்படுத்திய   மார்க்க அறிஞர்கள் மத்தியில் மிகவும் கற்றுத் தேர்ந்தவரும்,அல்லாஹ்வின் பால் மிகவும் எச்சரிக்கைக் கொண்ட உலமாக்களில் மிகவும் உன்னதமானவரும்,நேர்மையும் மெய்யுறுதியின் மூலமும் ஆகிய,ஷைகு உர்ஜைனி ஜாதா அஹ்மது அஸ் அது எஃப்பெந்தி,அல்லாஹ் அவர்களின் கீர்த்தியை அதிகப்படுத்துவானாக,’ஹரமைன் ஷரீஃபின் தூண்கள்’ இன்னும் சுல்தான் அவர்களை அழைத்து பின்வரும் பட்டங்கள் அளித்தார்,’இஸ்லாமிய நீதிபதிகளில் மாபெரும் காஜி,தவ்ஹீதுடைய மக்களின் மிகப்பெரும் பாதுகாவலர்,யகீன் மற்றும் கீர்த்திகளின் மூலவர்,ஷரீயத் மற்றும் தீன் கொடியைப் உயரே பறக்க விட்டவர்,மற்றும் நபியின் இல்முடைய வாரிசு’. [21]

ஷைகு அபூ முஅஸ்ஸம் செய்யித் ஆஸம் ஹுஸைன்,ஷைகு அஸ்மத் அலி மற்றும் முஹம்மது ஸயீத் மூதீ(மதரஸா ஸவ்லாதியாவின் ஆசிரியர்கள்) ,தங்களின் ஒப்புதலை வழங்கும் பொழுது மவ்லானா ரஹ்மதுல்லாஹ் கீரான்வி அவர்களை ’ஹரமைன் ஷரீஃபின் தூண்கள்’ என்று விளித்தார்கள்.(பயா ஏ ஹரமைன் ஷரீஃபைன்) [22].

மவ்லவி கலீல் அஹமது அம்பேத்வி மற்றும் மவ்லவி ரஷீத் அஹ்மது கங்கோஹி தமது  ‘பராஹீனே காத்தியா’ நூலில் மவ்லானா ரஹ்மதுல்லாஹ் கீரான்வி அவர்களைப் புகழ்ந்துள்ளனர்.


=================================================================

[1] ஃபைஸலா ஏ ஹஃப்த் மஸாலா ,பக்கம் 5.

[2] பவாதிர் அல் நவாதிர்,மக்தபா தேவ்பந்த்,பக்கம்  201.

[3] தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத் வ கலீல்,பக்கம் 5 -7.

[4] தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத் வ கலீல்,பக்கம் 8.

[5] தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத் வ கலீல்,பக்கம் 314,308.

[6] தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத் வ கலீல்,பக்கம் 9.

[7] தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத் வ கலீல்,பக்கம் 13.

[8] தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத் வ கலீல்,பக்கம் 20.

[9] தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத் வ கலீல்,பக்கம் 415 -422.

[10] தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத் வ கலீல்,பக்கம் 423-428.

[11] தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத் வ கலீல்,பக்கம் 428-430.

[12] தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத் வ கலீல்,பக்கம் 443.

[13] தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத் வ கலீல்,பக்கம் 444.

[14] ஜாமியா நிஜாமியா,ஹைதராபாத்-ன் ஸ்தாபகர் மற்றும் ‘அன்வார் ஏ அஹ்மதி ஃபீ மவ்லிதுன் நபவி’ நூலின் ஆசிரியர். அன்னாரின் மாணவர்களில் ஒருவர் தான் தமது நூற்றாண்டின் முஜத்தித் மற்றும் தெக்கானின் முஹத்தித் என்று அழைக்கப்பட்ட ஷாஹ் அப்துல்லாஹ் ஹைதராபாதி,’மிஷ்காத் அல் மஸாபீஹ்’ நூலுக்கு ஐந்து பாகங்களில் விளக்கவுரை எழுதியவர்,அது ஹனஃபி ஆதாரங்களின் மூலமாகவும் இன்று வரை சிறந்ததாகவும் விளங்குகிறது.ஷைகு அப்துல் ஃபத்தாஹ் அபூ குத்தாஹ் அதற்கு ஒப்புதல் அளித்து உள்ளார்கள்.

[15] தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத் வ கலீல்,பக்கம் 444.

[16] தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத் வ கலீல்,பக்கம் 445.

[17]அல் தவ்லா அல் மக்கியா ,பக்கம் 86 -88.

[18] அல் தவ்லா அல் மக்கியா ,பக்கம் 87.

[19] அல் தவ்லா அல் மக்கியா ,பக்கம் 179,201,231.

[20] அவரின் ஒப்புதல் அல் தவ்லா அல் மக்கியா ,பக்கம் 38 – 142,ஹுஸாமல் ஹரமைன் ,பக்கம் 30-31,மல்ஃபூஜாத் இமாம் அஹ்மத் ரிழா வால்யூம் 2.

[21] ஷைகு அவர்களின் சரிதையையும் அவரின் மார்க்க சேவைகளையும் காண http://www.alsawlatiyah.com/


[22] தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத் வ கலீல்,பக்கம் 423.


================================================================


Related Posts Plugin for WordPress, Blogger...

பைஸ்லா ஹப்த் மஸ்அலா - 2

ஷைகு இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்கள் காலத்தில் உண்டான மவ்லித் பற்றிய சர்ச்சை ! 

                        பைஸ்லா ஹப்த் மஸ்அலா - 1


மத்ரஸா வ்லாதியாவின் முதல் ஆசிரியர் ,ஷைகு நூர்  'தக்தீஸ் அல் வகீல் 'லின் அரபு பிரதியை வாசிக்க ,மத்ரஸா வ்லாதியாவின் இரண்டாவது  ஆசிரியர் ஷைகு அப்துல் சுப்ஹான் அவர்கள் 'தக்தீஸ் அல் வகீல்'லின் முழுமையான உர்து பிரதியை ஷைகு ரஹ்மத்துல்லாஹ் கீரான்வி அவர்களின் முன் வாசிக்க ,ஷைகு ரஹ்மதுலாஹ் கீரான்வி அவர்கள் தமது ஒப்புதலை வாய் மொழி சொல்லி ,தமது தனிப்பட்ட முத்திரையைப் பதித்தார்கள் .பின்னர் ஷைகு நூர் அவர்களும் ,ஷைகு அப்துல் சுப்ஹான் அவர்களும் தங்களுடைய ஒப்புதலை வழங்கினார்கள் .

மவ்லானா ரஹ்மத்துல்லாஹ் கீரான்வி ,மத்ரஸா வ்லாதியாவின்  ஸதாபகர் அவர்கள் ,தமது ஒப்புதலை இவ்வாறு தொடங்குகின்றார்கள் ,

"அல்லாஹ்வைப் புகழ்ந்து ,பின்னர் நாயகம் ஸல்லல்லஹு அலைஹி ஸல்லம் அவர்களையும் புகழ்ந்து , ரஹ்மதுல்லாஹ் கலீல் ரஹ்மான்  அவர்களின் மகனார்,எம் இருவருக்கும் அல்லாஹ்வின் கருணையையும் ,மன்னிப்பையும் யாசித்தவனாக ,நான் கடந்த சில காலமாக மவ்லவி ரஷீத் அஹமத் கங்கொஹியைப் பற்றி பல எதிர்மறையான விஷயங்களைக் கேள்விப்பட்டு வருகின்றேன் .நான் கேள்வியுற்றதை   மிகவும் வெறுத்தேன் ,இன்னும் அவர் அவ்வாறு கூறமாட்டார் என்று நல் அபிப்பிராயம் கொண்டு அத்தகைய பேச்சுக்கு மதிப்பு கொடுக்கவில்லை .எதுவரை எனில் எமது மாணவராக எம்முடன் தொடர்புடைய மவ்லவி அப்து அல் சமீ சாஹிப் ,மக்கா வரும் வரை நான் அவரை கடிதம் மூலம் தொடர்பு கொண்டு எச்சரித்தேன் ,இன்னும் அவர் மக்கா வந்து சேர்ந்த பின்பு நான் அவரிடம் பலமுறை அழுத்தம் கொடுத்து விவாதத்தில் ஈடுபடுவதை விட்டும் விலகி இருக்குமாறு எச்சரித்தேன், மேலும் தேவ்பந்த் மத்ரஸாவின் உலமாக்களை அவரது மூத்த சகோதரர்களை போலவும் கருதச் சொன்னேன் .

எனினும் பரிதாபத்திற்குரிய அந்த மனிதர் பொறுமை இழந்தார் ,நான் சொல்வதைக் கேட்கவும் இல்லை .இன்னும் அவர் எவ்வாறு வாய் மூடி அமைதியாக இருக்க முடியும் ?நான் தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் (முதவாதிர் ) கூற்றுகள் தேவ்பந்த் உலமாக்கள் பற்றி வாய்மொழியாகவும் ,எழுத்தின் மூலமாகவும் கேட்டு வந்ததால் ,நான் ஆழ்ந்த துக்கத்துடன்,அமைதி காப்பது நியாயமற்றது என்பதாலும் கூறுகின்றேன் ,நான் மவ்லவி ரஷீத் அஹ்மத் நெர்வழிபெற்றவர் என்று நினைத்தேன் ,எனினும் அவர் அதற்கு மாற்றமான ஒருவராக மாறியுள்ளார் .அவர் எத்தகைய மதிப்பீட்டின் பிரகாரம் வந்திருந்தாலும் ,அவர் தமது சொற்களிலும் ,எழுத்துகளிலும் விளக்கிக் காட்டிய பிரிவினைவாதம் ,வாசிப்போரை அதிர்ச்சியடைய செய்கின்றது "

ஷைகு கலீல் அஹ்மத் தனது 'பராஹீனே காத்தியா ' நூலில் எழுதுகிறார் ,[8]

' இந்த தேவையுள்ளவன் மக்காவின் மஸ்ஜிதில் பயான் நிகழ்த்தும் ஒரு கண் பார்வை அற்ற மார்க்க அரிஞரிடம்   மவ்லூத் பற்றி கேட்டேன்,அவர் கூறினார் : அது ஒரு பித்அத் மற்றும் ஷரியத்திற்கு புறம்பானது .ஆகவே மக்காவின் உண்மையான உலமாக்களும் அதைக் கண்டிக்கத்தக்கது என்றே கருதுகின்றனர் '

உர்து மூலம் :
' இஸ் பந்தா ஆஜிஸ் நே ஏக் நபினா ஆலிம் சே மஸ்ஜித் மக்கா மேன் பாத் நிமாஜ் அஸர் கே வாஜ் கர்தே ஹேன் ,ஹால் மவ்லூத் பூச்சா ,தோ உன்ஹோனே பார்மாயா : பித் அத் ஹராம் .பஸ் ,வஹான் கே உலமாயே ஹக்கானி இஸ் அமல் கோ மாதும் ஜான்தே ஹென் '.

மவ்லானா ரஹ்மத்துல்லாஹ் கீரான்வி ,கலீல் அஹ்மத் அம்பேதேவியின் மேற்குறிபிட்ட ஆதாரம் கொள்ளும் முறையைப் பற்றி குறிப்பிடுகின்றார்கள் ,

'அவர் தாம் ஒரு கண் பார்வை அற்ற மார்க்க அரிஞரிடம்   மவ்லூத் பற்றி கேட்டதாகச் சொல்லுகின்றார் ,அந்த அறிஞர் அது பித்அத், ஹராம் என்றாராம் .நிச்சயமாக அந்த அறிஞர் மவ்லவி முகமது அன்சாரி சஹரான்பூரி,அவரின் பெயரை தகிய்யாவின் காரணமாக சொல்ல மறுக்கின்றார் ,ஏனெனில் மக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் ,பெரியவர்களும் அவரை ஒரு கெட்ட மனிதராகவே கருதுகின்றனர் ! இல்லையெனில் அனேகமாக அறிவும் ,கண்களும் குருடாகியுள்ள ஒருவரிடம் தான் இதைக் கேட்டிருக்க வேண்டும் .சுப்ஹானல்லாஹ் ! அவர் (கலீல் அஹ்மத் ) கண் பார்வை அற்ற மார்க்க அரிஞரின் பேச்சை மார்க்கத்தின் ஆதரமாக எடுத்துள்ளார் ,ஆனால் அவரோ யதார்த்தத்தில் அறிவுக் குருடராக உள்ளார் '.[9]


மவ்லானா ரஹ்மத்துல்லாஹ் கீரான்வி அவர்களின் ஒப்புதல் 15 துல் காயிதா ,ஹிஜ்ரி 1307 ல் பெறப்பட்டுள்ளது ,மேலும் அவரது தனிப்பட்ட முத்திரையுடன் முத்திரை இடப்பட்டுள்ளது .

ஷைகு ஷாஹ் அப்துல் ஹக் முஹாஜிர் மதனி ,அவர்களின் முரீதான அல் ஹாபிழ் அப்துல்லாஹ் சிந்தி அல் முத்தாரி ,அவர்களும் 6 பக்கத்திற்கு 'அல் தக்தீஸ் அல் வகீல் ' லுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்கள் ,என்பதோடு மவ்லவி கலீல் அஹ்மத் அம்பேத்வி அவர்களை தமது 'பராஹீனே காத்தியா' வின் நிலைப்பாட்டை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு பணித்தார்கள் .[10]

ஷைகு ,இமாம் அல் தீன் அஹ்மத் ,ஷைகு ஷாஹ் அப்துல் ஹக் முஹாஜிர் மதனி அவர்களின் மாணவரும் ,கலீபாவும் ஆனவர்கள்  'அல் தக்தீஸ் அல் வகீல் ' லுக்கு  அரபியில் 2 பக்கத்திற்கு ஒப்புதல்அளித்துள்ளார்கள்.[11]

அவர் தேவ்பந்தின் உலமாக்களை தங்களின் 'பராஹீனே காத்தியா' வின் தவறான நிலைப்பாட்டை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு பணித்தார்கள் என்பதோடு ,அரபு உலமாக்களிடம் வழங்கப்பட்ட அரபு மொழிபெயர்ப்பின் உண்மைக்கும் சாட்சியமும் அளித்தார்கள் .

ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி ,மவ்லானா குலாம் தஸ்தகீர் குசுரி அவர்களை மக்காவில் உள்ள தமது இல்லத்திற்கு இருமுறை விருந்துண்ண அழைத்தார்கள் .அவர்கள் தற்பொழுது நடைபெறும் சச்சரவு சம்பந்தமாக பல்வேறு பிரச்சனைகளை விவாதித்த பின்னர் ,ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்கள் மவ்லானா குலாம் தஸ்தகீர் அவர்களிடம் 'பராஹீனே காத்தியா' வில் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுடன் முரண்படும் ஏழு மஸ்அலாக்களை யாருடைய பெயரும் குறிப்பிடாமல் எழுதுமாறு பணித்தார்கள் .அவ்வாறே மவ்லானா குலாம் தஸ்தகீர் மூன்று பக்கத்திற்கு ஆய்வுக் கட்டுரை எழுதவும் செய்தார்கள் .

 மவ்லித் பற்றிய பிரச்சனையில் ,மவ்லானா குலாம் அஹ்மத் குசுரி பின்வருமாறு எழுதினார்கள் ,

' அரபகத்திலும் ஏனைய மற்ற பகுதிகளிலும் கொண்டாடப்படும் வழக்கமான  மவ்லித் மஜ்லிஸ்களை ,கிருஷ்ண ஜெயந்தியுடன் ஒப்பிடுவது ,அதை பித்அத் ,ஹராம் என்பது ,இன்னும் கியாமில் நின்று  சங்கை செலுத்தவும் ,மரியாதை செய்யும் பொருட்டு நிற்பதையும் ,சங்கையான உலமாக்களிடம் போற்றுதலுக்குரிய ஒன்று என்றும் உள்ள ஓர் நிகழ்வை ,ஷரீயத்திற்கு முரணானது என்றும் இன்னும் மேற்கொண்டு அதை ஷிர்க் ,குப்ர் என்று அழைப்பது மிகவும் அருவருக்கத்தக்க  சொற் பிரயோகம்  . இஸ்லாமிய மார்க்கத்தின் மேன்மைமிகு மக்களால் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள பழக்கவழக்கங்களைகண்டிக்கத்தக்க செயல்களை விட்டும் தூய்மையான செயலை ,இஸ்லாமியர் அல்லாதவரோடு(தஷபுஹ் ) ஒப்பீடு செய்யும் நோக்கம் இல்லாத நிலையில் மேலும் சட்டரீதியலானதை இத்தகைய அருவருப்பான சொற்களைக் கொண்டு பேசுவது மிகவும் பொருத்தமற்ற செயல்,மிக்க மேலான அல்லாஹ் ஜல்லாஜலாலஹு கண்ணியம் அளிக்கும் தகுதியைத் தருவானாக . '[12]

ஹாஜி இம்தாதுல்லாஹ் இந்த ஆவணத்தை ஷாஹ் அப்துல் ஹக் இலாஹாபாதி முஹாஜிர் மக்கி அவர்களிடம் அனுப்பினார்கள் .அதை ஷாஹ் அப்துல் ஹக் அவர்கள் ஆமோதித்து ஒப்புதல் வழங்கினார்கள் .அத்துடன் ஹாஜி இம்தாதுல்லாஹ் பாரூக்கி மக்கி அவர்கள் பின்வரும் வாக்கியத்தை எழுதி ,உலமாக்களும் முரீதுகளும் கூடியிருந்த சபையில் தமது முத்திரையை இட்டார்கள் .இது நடந்தது ரபீயுல் அவ்வல் மாதம் ஹிஜ்ரி 1308ல் .

"மேற்குறிபிட்ட ஆவணம் சரியானதும் எனது கொள்கையின்படியும் உள்ளது "[13].

தென் இந்தியாவின் பழமையான மதரசாவான ஜாமியா நிஜாமியா ,ஹைதராபாத்தின் முதர்ரிஸ் ஷைகுல் இஸ்லாம் ஹாஜி அன்வாருல்லாஹ் பாரூக்கி அவர்களும் இதனை ஆமோதித்து ஒப்புதல் வழங்கினார்கள்.அன்னார் ஹாஜி இம்தாதுல்லாஹ் அவர்களின் முரீதும் ,கலீபாவும் ஆவார் .[14]


ஹாஜி இம்தாதுல்லாஹ் அவர்களின் கலீபாவும்,மவ்லானா ரஷீத் அஹ்மத் அவர்களின் ஆரம்ப கால மாணவருமான சைய்யத் ஹம்ஸா நகவி மக்கி அவர்களும் இதனை ஆமோதித்து ஒப்புதல் வழங்கி ,பின்வருமாறு கூறினார்கள் ,
" இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள கொள்கைகள் யாவும் அஹ்லுஸ் ஸுன்னா கொள்கை நூற்களில் உள்ளவை .இன்னும் அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் " .[15]

மதரஸா வ்லாதியாவைச் சார்ந்த பின்வரும் உலமாக்களான ,ஷைகு அபூ முஅஸ்ஸம் செய்யித் ஆசம் ஹுசைன் ,ஷைகு அஸ்மத் அலி மற்றும் ஷைகு முஹம்மத் சயீத் முத்தீ ,தேவ்பந்த் உலமாக்களை விளித்து அவர்களது உஸ்தாதுமார்களான ஷைகு இம்தாதுல்லாஹ் மக்கி ,மவ்லானா ஹாஜி ரஹ்மத்துல்லாஹ் கீரான்வி ஆகியோருக்காகஅவர்களின் நிலைப்பாட்டைத்  திரும்ப பெற்றுக் கொள்ளுமாறும் ,தவ்பா செய்யவும்  வலியுறுத்தினார்கள் .[16]

'பராஹீனே காத்தியா' நூலுக்கு இரு புண்ணிய தலங்களில் மீண்டும் மறுப்புரை  ஹிஜ்ரி 1324ல்  இமாம் அஹமது ரிழா கான் அவர்களின் ஹஜ்ஜூக்கான  மக்கா விஜயத்தின் பொழுது ஹிஜ்ரி 1324ல் /1905ஆம் ஆண்டு நிகழ்ந்தது ,இமாம் அஹ்மத் ரிழா கான் அவர்கள் பராஹீனே காத்தியா கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைமுக ஞானம் பற்றிய நிலைப்பட்டை மறுத்து ,'தக்தீஸ் அல் வகீல் ' நூலின் ஒப்புதலை மீண்டும் 16 வருடங்கள் கழித்து ஆமோதித்து ஒப்புதல் வழங்கி தமது 'அத் தவ்லா அல் மக்கியா ' என்னும் நூலில் குறிப்பிட்டார்கள் .[17]


இமாம் அஹ்மத் ரிழா கான் பரேலி அவர்கள் பராஹீனே காத்தியா நூலின் ஆசிரியர் ஷைகு கலீல் அஹ்மதையும் அவரின் ஆசிரியர் ஷைகு ரஷீத் அஹ்மத் கங்கோஹியையும் மவ்லித் மஜ்லிஸ்களை இவ்வாறு ஹிந்துக்களின் கிருஷ்ண ஜெயந்தியுடன் ஒப்பிடுவதை தமது 'அல் தவ்லா அல் மக்கியா' பாகம் 5ல் கண்டித்ததோடு ,'தக்தீஸ் அல் வகீல்' நூலில் உள்ள ஹரமைன் ஷரீஃபின் உலமாக்களின் கூற்றுகளை மேற்கோள் காட்டினார்.[18]

                   பைஸ்லா ஹப்த் மஸ்அலா - 3
Related Posts Plugin for WordPress, Blogger...