Thursday 16 November 2017

முதன்முதலாக தக்பீர் (تكفير‎‎ ) செய்தது யார் ?

நவீன கால தேவ்பந்தி வஹாபிகளின் மற்றோரு மோசடிப் பிரச்சாரம் , இமாம் அஹ்மத் ரிழா கான் காதிரி பரேலி   رضي الله عنه அவர்கள் தான் பரேலி உலமாக்கள் ,தேவ்பந்தி உலமாக்களிடையே பிரிவினை உண்டாக முதல் காரணம் என்று கூறி பொய் பிரச்சாரம் செய்வது .  அறியாமையை தனது குணமாகக் கொண்ட முட்டாளை அன்றி வேறு யாரும் இவ்வாறு பிதற்றித் திரிவதில்லை .

இந்த பொய் பிரச்சாரத்தின் உண்மை தன்மை என்னவென்று ஆய்வு செய்வோம் :

இஸ்மாயில் திஹ்லவி முஸ்லிகளால் பால்கோட்டில் , கொல்லப்பட்டது 1831 ஆம் ஆண்டு . மாறாக இமாம் அஹ்மத் ரிழா கான் பரேலி  رضي الله عنه  அவர்கள்  பிறந்தது 1856 ஆம் ஆண்டு , சுமார் 25 ஆண்டுகள் கழித்து .

இனி 'பிரிவினையின் மூல காரணம் யார் ? ' என்ற கேள்விக்கு விடை அளிக்கும் விதமாக , இஸ்மாயில் திஹ்லவி தனது நூலான 'தக்வியத்துள் ஈமான் ' பற்றி அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தை காண்போம் . இன்றளவும் தேவ்பந்தி வஹாபிகளால் அச்சிடப்படும் நூல் . அவர்களால் ஐனுல் இஸ்லாம் என்று கொண்டாடப்படும் நூல் 'தக்வியத்துள் ஈமான் '.
தக்வியத்துள் ஈமான்

இந்த வாக்குமூலத்தை  தேவ்பந்தி வஹாபி பிர்காவின் ஹக்கீமுல் உம்மத் அஷ்ரப் அலி தானவி தமது நூலான 'ஹிகாயத்துள் அவ்லியா ' வில் பதிவு செய்துள்ளார் .
ஹிகாயத்துள் அவ்லியா 
பக்கம் 83

பக்கம்  84

" உபகதை  59 :   கான் ஸாஹிப் கூறினார்கள் மவ்லவி இஸ்மாயில் திஹ்லவி , தக்வியத்துள் ஈமான் நூலை அரபியில் எழுதினார்கள் . அதனால் அதன் ஒரு பிரதி என்னிடமும் ,மற்றோரு பிரதி மவ்லவி ரஷீத் அஹமத் கங்கோஹியிடமும் ,மற்றுமொன்று பிரதி மவ்லவி நஸ்ருல்லாஹ் கான் குஜருவியின் நூலகத்திலும் இருந்தது . எனவே மவ்லனா அதை உர்துவில் மொழிபெயர்த்து , புகழ்பெற்ற ஆளுமைகளான செய்யத் மவ்லவி அப்துல் ஹை சாஹிப் , ஷாஹ் இஷ்ஹாக் சாஹிப் , மவ்லானா முஹம்மது யாகூப் சாஹிப் ,மவ்லவி பரீதுத்தீன் சாஹிப் முராதாபாதி ,முஃமீன் கான் மற்றும் அப்துல்லாஹ் கான் அலவி ஆகியோரை   ஒன்று திரட்டினார் .

அவர்கள் முன் தக்வியத்துள் ஈமான் சமர்ப்பிக்கப்பட்டது . அவர் கூறினார்  ,' நான் இந்த நூலை எழுதியுள்ளேன் . இன்னும் இதில் சில இடங்களில் சிந்தனையற்ற வார்த்தைகள் சேர்த்துள்ளதை அறிவேன் . சில இடங்கள் கொடுமையானவை ,உதாரணமாக ,ஷிர்க் ஏ காஃபி என்று சொல்லப்படுபவை ஷிர்க் ஏ ஜலீல் என்று பெயரிடப்பட்டுள்ளது . இதன் காரணமாக எனக்கு உண்டாகும் பயம் என்னவென்றால் இந்த நூல் பதிப்பிக்கப்பட்டால் நிச்சயமாக குழப்பமும் ,அமளிகளும் உண்டாகும் .

நான் இங்கு தங்கினேன் என்றால் ,இதைபற்றி எட்டுஅல்லது பத்து வருடங்களுக்கு விளக்கம் அளிப்பேன் , எனினும்  நான் இப்பொழுது ஹஜ் செய்ய நாடியுள்ளேன் , திரும்பிய பின்னர் ஜிஹாத் செய்வதே எனது நோக்கம் . எனவே என்னை இந்த வேலையை விட்டும் தவிர்க்கின்றேன் , என்னும் என்னைத் தவிர வேறு யாரும் இந்த முயற்சியை செய்ய முன் வரமாட்டார்கள் . எனவே தான் இந்த நூலை எழுதியுள்ளேன் , பிரச்சனைகள் உண்டாகும் எனினும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்ட பின் சில காலத்தில் அமைதியாகி விடுவார்கள் என்று நம்புகிறேன் .

இதுவே எனது கவலை . நீங்கள் விரும்பினால் இதை பதிப்பித்து வெளியிடுவோம் அல்லது அளித்து விடுவோம் . அப்பொழுது கூடி இருந்தவர்களில் ஒருவர் சில இடங்களில் திருத்தம் செய்து வெளியிடுவோம் என்றார் . மவ்லவி அப்துல் ஹை சாஹிப் , ஷாஹ் இஷ்ஹாக் சாஹிப் ,முஃமீன் கான் மற்றும் அப்துல்லாஹ் கான் அலவி ஆகியோர் திருத்தம் செய்து தொகுத்து வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் .

அதன் பின்னர் அனைவரும் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தி , திருத்தம் செய்வது தேவை இல்லை , நூல் அதன் மூல வடிவிலேயே வெளியிட வேண்டும் என்று முடிவு செய்து , அதன் பின்னர்  அது இவ்வாறு பதிப்பிக்கப்பட்டது . நூல் வெளியான பின் மவ்லவி இஸ்மாயில் ஹஜ்ஜுக்கு சென்று , திரும்பி வந்ததும் தில்லியில் தங்கினார் . இந்த காலத்தில் தில்லியின் தெருக்களிலும் ,சந்துகளில் மவ்லவி இஸ்மாயில் பிரச்சாரம் செய்தார் . மவ்லவி அப்துல் ஹை சாஹிப் பள்ளியில் ஆறு மாத காலம் தங்கிய பின் ஜிஹாதுக்கு கிளம்பினார் . இந்த செய்தியை நான் மவ்லவி அப்துல் கைய்யும் சாஹிப் மற்றும் எனது ஆசிரியர் மியாஜி முகம்மதி சாஹிப் அவர்களிடமும் இருந்து கேட்டறிந்தேன் "

[ நூல்- ஹிகாயத்துள் அவ்லியா (அர்வாஹே தலாதா  ) , உபகதை எண் 59, அஷ்ரப் அலி தானவி , ஜக்கரிய்யா புத்தக நிலையம் , தேவ்பந்த் , ஸஹரான்பூர் , உ .பி ,இந்தியா , பக்கம் 83-84 ]   

   எந்த அறிவார்ந்த முஸ்லிம் இஸ்லாமியரிடையே குழப்பத்தை உண்டாக்கும் புத்தகத்தை முன்னரே கணித்து எழுதுவார் ?

இது எந்த மாதிரியான ஒரு இதயம் , இஸ்லாமியரிடையே சகோதரத்துவத்தையும் ,நலனையும் காட்டிலும்  குழப்பமும் ,அமளிகளும் உண்டாக விரும்புவது ?

பளிங்கு கண்ணாடி போல் விளங்கும் விஷயம் இஸ்லாமியரிடையே முதன் முதலில் உண்டான பிரிவினையின் மூல கர்த்தா ,வேண்டுமென்றே கடுமையான சொற்களும் ,வழிகெட்ட கொள்கைகளும் கொண்ட இஸ்மாயில் திஹ்லவியின்  'தக்வியத்துள் ஈமான் ' என்னும் நூல் .

நாற்பெரும் பிக்ஹ் உடைய இமாம்களான இமாமுல் அஃலம்  இமாம் அபூ ஹனீபா رضي الله عنه , இமாம் ஷாபிஈ رضي الله عنه , இமாம் மாலிக்  رضي الله عنه , இமாம் ஹன்பல் رضي الله عنه      ஆகியோரை தக்லீத் செய்வதை மறுக்கும் கூட்டமான அஹ்லே ஹதீத் வஹாபிகளும்  தம்முடைய  முன்னோடிகளில் ஒருவராக ஏற்றுக் கொண்டுள்ளது இஸ்மாயில் திஹ்லவியை தான் .

இமாம் அஹ்மத் ரிழா கான் பரேலி காதிரி رضي الله عنه  அவர்கள் தமது காலத்தில்   இஸ்மாயில் திஹ்லவியின் நூற்களை வாசித்து ,அதில் எழுபது குப்ரியத்தான விஷயங்களை பட்டியலிட்டு , அதற்கு மாற்றமான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கைகளை விளக்கினார்கள் . 

எனினும் இஸ்மாயில் திஹ்லவியின் மீது குப்ர் பத்வா வெளியிடாததின் காரணம் , இஸ்மாயில் திஹ்லவி தமது இறுதி காலத்தில் தவ்பா செய்தார் என்று ஒரு கூற்று காரணமாக , இஸ்மாயில் திஹ்லவிக்கு சந்தேகத்தின் பலனை அளித்தார் . 

ஒரு சாதாரண சொல் , இமாம் அஹ்மத் ரிழா கான் பரேலி  رضي الله عنه  அவர்கள் எவ்வளவு விசாலமான பார்வை கொண்டவர்களாக இருந்தார்கள் என்று விளக்கும் பொழுது , யார் தான் அன்னார்  மார்க்கத் தீர்ப்பு அளிக்கும் போது  தயங்கினார்கள் என்று கூற முடியும் ? 
Related Posts Plugin for WordPress, Blogger...

Tuesday 14 November 2017

இந்திய வஹாபியிசத்தின் தந்தை


இந்திய துணைக்கண்டத்தில் வஹாபியிசத்தின் நிறுவனர் இஸ்மாயில் திஹ்லவி(1193-1246 ஹிஜ்ரி / 1779-1831 ) . இவர் துரதிருஷ்டவசமாக அக்காலத்தில் புகழும் ,பேறும் பெற்று விளங்கிய இமாமுல் ஹிந்த் ஷாஹ்  வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி رضي الله عنها அவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர் .

இஸ்மாயில் திஹ்லவி(1193-1246 ஹிஜ்ரி / 1779-1831 ) ==> அவரது தந்தை ஷாஹ் அப்துல் கனி திஹ்லவி (மறைவு 1203 ஹிஜ்ரி / 1788) அவர்கள்  ==> அன்னாரது தந்தை இமாமுல் ஹிந்த் ஷாஹ்  வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி رضي الله عنها  அவர்கள் 


பால்கோட் நகரிலுள்ள இஸ்மாயில் திஹ்லவியின் சபிக்கப்பட்ட கபர் 

இவர் தமது காலத்தில் அரபகத்திற்குச் சென்று ,இப்னு அப்துல்  வஹாப் நஜ்தியின் நூலான 'கிதாபுத் தவ்ஹீத் ' நூலை வாசித்து ,அதன் பால் ஈர்க்கப்பட்டு அதை உர்துவில் மொழிபெயர்த்து , தமது எண்ணங்களையும் உள்ளடக்கி 'தக்வியத்துள் ஈமான் ' என்று வெளியிட்டார் .

Kitab ut Tawheed and Taqwiyathul Iman - Urdu
சவூதி தாருஸ் ஸலாம் பதிப்பகம் வெளியிட்ட கிதாபுத் தவ்ஹீத் - தக்வியத்துள் ஈமான் உர்து பதிப்பு ,வஹாபிய சகோதர பாசம் ! 

இந்த புத்தகம் இந்திய -பாக் துணைக்கண்டத்தில் இதற்கு முன்னர் எந்தவொரு வழிகெட்ட இயக்கமும் செய்ய இயலாத வண்ணம் இஸ்லாத்திற்கும் ,அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கும் பெரும் கேட்டை விளைவித்தது .

  நாடெங்கிலும்  நடத்தப்பட்ட   கண்மணி நாயகம் அவர்களின் புகழ் பாடும் மவ்லிதுன் நபி மஜ்லிஸ்கள் , பித்அத் என்று அழைக்ப்பட்டன . வலிமார்களின் உரூஸ் நிகழ்வுகள் இஸ்லாத்திற்கு முரணானது என்று கூறப்பட்டன . வலிமார்களை நாடி ஜியாரத் செய்வதும் ,அவர்களிடம் உதவி தேடுவதும் குப்ர்  என்று கூறினர் ,இன்னும் அப்துல் முஸ்தபா என்று பெயரிடுவதே ஷிர்க் என்றனர் .  இந்த புத்தகம் தான் இந்திய -பாக் துணைக்கண்டத்தில்  அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினர் இடையே பிரிவினையை உண்டாக்கிய முதல் மற்றும் முன்னோடி நூல் .

பாமர இஸ்லாமியர் குழப்பத்தில் ஆழ்ந்தனர் . ஏனெனில் இந்த புத்தகம் மேற்கூறப்பட்ட அமல்களில் ஈடுபட்ட அவர்களையும் ,அவர்களின் முன்னோர்களையும் காபிர் என்றும் முஷ்ரிக் என்றும் கூறியது . ஒவ்வொரு வீட்டிலும் சண்டை,சச்சரவுகள் உண்டாயின . உறவினர்கள் ,குடும்பத்தினர் இடையே பிரச்சினைகள் வெடித்தன .

  அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள் இஸ்மாயில் திஹ்லவியை தில்லி ஜும்மா மஸ்ஜிதில் விவாதத்திற்கு அழைத்தனர் . அங்கு இஸ்மாயில் திஹ்லவி வெட்கி தலைகுனியும்படியான தோல்வியை தழுவினான் .

இன்னும் பெஷாவர் நகரத்திற்கு அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள் இஸ்மாயில் திஹ்லவியை விவாதத்திற்கு அழைத்து ,அங்கும் தோல்வியை சந்தித்தான் .

இஸ்மாயில் திஹ்லவியின் சமகால உலமாக்களில் அவனின் வழிகெட்ட கொள்கையை எதிர்த்து விவாதித்தும்  , நூற்கள் எழுதியும் ,பத்வாக்கள் வெளியிட்ட உலமாக்கள் சிலர்.இவர்களில் அவரது குடும்பத்தாரும் ,அவரது சிறிய தந்தை ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவியின் மாணவர்களும் அடங்குவர் .


  • அல்லாமா பஜ்லே ஹக் கைராபாதி  (ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவியின் மாணவர் ) 
  • மவ்லானா ரஷீதுதீன் கான் திஹ்லவி 
  • ஷாஹ் மக்ஸுசுல்லாஹ் திஹ்லவி (இஸ்மாயில் திஹ்லவியின் உடன்பிறவா சகோதரர் )
  • ஷெய்கு முஹம்மது மூஸா திஹ்லவி (இஸ்மாயில் திஹ்லவியின் உடன்பிறவா சகோதரர் )
  • ஷெய்கு முஹம்மது ஷரீப் திஹ்லவி 
  • முப்தி ஷுஜாவுத்தீன் அலி  கான்   
  • அல்லாமா பஜ்லே ரஸூல் பதாயுனீ 
  • முப்தி ஸத்ருத்தீன் திஹ்லவி 
  • ஷெய்கு அஹ்மத் ஸயீத் முஜத்திதி ராம்பூரி 
  • ஷெய்கு ஹைதர் அலி பைஜாபதி 
  • மவ்லனா அப்துல் மஜீத் பதாயுனீ 
  • ஷெய்கு அப்துல் கபூர் ஸ்வாதி 
  • ஷெய்கு முஹம்மது சுலைமான் தஉன்ஸ்வி 
  • ஷெய்கு ஆலே ரஸூல் மறெர்ஹவி (ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவியின் மாணவர் ) 
  •  மவ்லானா துராப் அலி லக்னவி  
1835ல் ,தக்வியத்துள் ஈமான் முழு புத்தகமும் ஆதி முதல் அந்தம் வரை மதராஸ் உலமாக்கள் முன் வாசிக்கப்பட்டு , முப்பது உலமாக்களும் பின்வரும் பத்வா வெளியிட்டனர் : " யாராகிலும் ஒரு நபர் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளது போல் கொள்கை உடையவனாய் இருந்தால் அவன் காபிர் ,இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவன்  ."

மதராஸ் உலமாக்களின் பத்வாவுக்கு ஒப்புதல் அளித்து தில்லி உலமாக்களும் 'தக்வியத்துள் ஈமான் ' என்ற வழிகெட்ட நூலுக்கு எதிராக பத்வா வெளியிட்டனர் .

தில்லியின் வீதியெங்கும் , ' இந்த நூல் கண்மணி நாயகம் ﷺ அவர்களை கண்ணியக் குறைவுபடுத்துவதாலும்  , வலிமார்களை கண்ணியக் குறைவுபடுத்துவதாலும்   இந்த நூலை யாரும் வாசிக்க கூடாது என்றும் . இத்தகைய நூற்களை வாசிப்பது தடை செய்யப்பட்ட ஒன்றென ' அறிவிப்பு செய்யப்பட்டது .

உஸ்தாதுல் உலமா மவ்லானா முஹம்மது வஜ்ஹீ சாஹிப் அவர்கள் 'தக்வியத்துள் ஈமான் ' நூலுக்கு மறுப்பு தெரிவித்து 'நிஜாமுல் இஸ்லாம் ' என்று நூலை எழுதினார்கள் . இந்த நூலுக்கு கல்கத்தாவைச் சார்ந்த 22 உலமாக்கள் ஒப்புதல் அளித்தனர் .

வழிகெட்ட 'தக்வியத்துள் ஈமான்'  நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்ட சில நூற்கள்  :- 

  • குல்ஜார் ஏ ஹிதாயத்  - மதராஸ் முப்தி ,அல்லாமா முஹம்மது ஸிப்ஹதுல்லாஹ் 
  • தஹ்கீக் உல் பத்வா பி இப்தலில் தக்வா  - அல்லாமா பஜ்லே ஹக் கைராபாதி 
  •  ஹயாத்துன் நபி  - ஷெய்கு முஹம்மது ஆபித் சிந்தி 
  • தஹ்கீக் உஷ் ஷிர்க் வத் தவ்ஹீத் - ஹாபிஸ் முஹம்மது ஹசன்
  • ஸலாஹுல் முஃமினீன் பி காதில் காரிஜீன்  -மவ்லானா லுப் உல்ஹக் காதிரி 
  • ஹுஜ்ஜதுல் அமல் பி இஃப்த்தால் இல் ஹைல்  - மவ்லானா மூஸா திஹ்லவி 
  • ரஸ்முல் கைராத் - மவ்லானா கலீலுர் ரஹ்மான் முஸ்தபாபாதி 
  • துஹ்பத் அல் முஸ்லிமீன் பி ஜஸ்சாபி செய்யதில் முர்சலீன் - மவ்லானா அப்துல்லாஹ் சஹ்ரான்புரி 
  • தஹ்லீல் மா அஹல்லாஹு பி தபஸீர் வ மா அஹ்ல் பிஹி லி கைரில்லாஹ் - மவ்லானா கலீலுர் ரஹ்மான் 
  • சபீப்ளுள் நிஜாஹ் இலா தஹஸீல் இல் பலாஹ்  -மவ்லானா துராப் அலி லக்கனவி 
  • சபீனத் உல் நிஜாத்  - மவ்லானா முஹம்மது அஸ்லமீ மதராஸி 
  • நிஜாமே இஸ்லாம்  -மவ்லானா முஹம்மது வஹீதுதீன்  கல்கத்தா 
  • குவத் உல் ஈமான்  -  மவ்லானா கறாமத் அலி ஜஉன்புரி 
  • அஹ்காக் உல் ஹக்  - மவ்லானா செய்யத் பத்ருத்தீன் ரிஸ்வி ஹைதராபாதி 
  • கைர் உஸ் ஸாத் லி யவ்ம் மில் மியாத் - மவ்லானா கைருத்தீன் மதராஸி 
  • நேம் முள் இன்திபாஹ் லி ரப் இல் லிஸ்த்திபாஹ் - மவ்லானா முஅல்லிம் இப்ராஹீம் ,பாம்பே 
  • ஹிதாயத்துள் முஸ்லிமீன் இலா தரீக் கில் ஹக் கில் யகீன் - காழி முஹம்மது ஹுசைன் கூபி 
  • துஹ்பா ஏ முஹம்மதியா தர் ரத்தே வஹாபியா - மவ்லானா செய்யத் அப்துல் பத்தாஹ் முப்தி காதிரி குல்ஷனபாதி 
  • சிராஜுல் ஹிதாயத்  - மவ்லானா குல்ஷனாபாதி 
இந்த உலமாக்களைத் தவிர மவ்லானா இனாயத் கான் , மவ்லானா ஷாஹ் ரவூப் அஹ்மத் , மவ்லானா ஷாஹ் அஹ்மத் ஸயீத் முஜத்திதி ஆகியோர் கடுமையாக எதிர்த்து ,அதன் பித்னாவை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்தனர் .

இறுதியாக இஸ்மாயில் திஹ்லவி,அவனது உஸ்தாத் செய்யித் அஹ்மத் ரேபரேலியுடன்  ,அவர்கள் இருவரும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கு மாற்றமான கொள்கை உடையவர்கள் என்று தெரிந்ததும் , அல்லாஹ்வையும்,கண்மணி நாயகம் ﷺ அவர்களை கண்ணியக் குறைவுபடுத்துபவர்கள் என்று  தெரிந்ததாலும்  , பால்கோட் நகர பதான் முஸ்லிம்களால்கொல்லப்பட்டனர் .
தேவபந்திகளும் , கைர் முகல்லித் வஹாபிகளும் அவர்கள் இருவரும் சீக்கியருக்கு எதிராக போரிட்டு மடிந்தனர் என்று கூறி வந்தாலும் , அதற்கு சரித்திர சான்றுகள் இல்லை .


கண்மணி நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள் , 'பித்னா கொலையை விட கொடியது ' . இஸ்மாயில் திஹ்லவி மடிந்தாலும் , அவனின் மரபு தொடர்ந்தது . அவனின் தவறிய , வழிகெட்ட கொள்கைகள் பரவின .

இஸ்மாயில் திஹ்லவியின் மறைவுக்குப் பின் அவனது ஆதரவாளர்கள் இரு பிரிவாகப் பிரிந்தனர் . அவர்களில் ஒரு கூட்டத்தார் தாம் இமாம் அபூஹனீஃபா அவர்களை பின்பற்றுவோர் என்று கூறினார்கள் . இவர்கள் பின்னாட்களில் தேவ்பந்திகள் என்று அழைக்ப்பட்டனர் .

மற்றோரு கூட்டத்தார் இமாம்களின் தக்லீதை ஏற்க மறுத்து தம்மை அஹ்லே ஹதீத் என்று அழைத்துக் கொண்டனர் . 

   
  



Related Posts Plugin for WordPress, Blogger...