Friday 30 May 2014

இஸ்மாயில் திஹ்லவியின் போலி ஜிஹாத்


  தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் சுயமான கூற்றின்படி இந்திய சுதந்திர போராட்டத்திற்கான பங்களிப்பு அவர்களின் வஹாபிய நிறுவனர் ஷாஹ் இஸ்மாயில் திஹ்லவி மற்றும் அவரது ஆசிரியர் சய்யத் அஹ்மத் பரேலி மூலம் தொடங்குகிறது.ஆகவே தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினர் தமது முன்னோடிகளின் பாரம்பரியத்தை நிலைநிறுத்த எந்த வரலாற்று நூல்களை சார்ந்து உள்ளனர் என்று அறிவது அவசியம் .

1) சவானாஹ் அஹ்மதி வா தவ்ரீக் அஜீபா -   சய்யத் அஹ்மத் பரேலி மற்றும் ஷாஹ் இஸ்மாயில் திஹ்லவியின் வாழ்க்கை வரலாறு. ஆசிரியர் : முன்ஷி முஹம்மது ஜாபர் தானேஸ்வரி.

2) ஹயாதே தய்யிபா - சய்யத் அஹ்மத் பரேலி மற்றும் ஷாஹ் இஸ்மாயில் திஹ்லவியின் வாழ்க்கை வரலாறு . ஆசிரியர் : மிர்சா ஹைராத் திஹ்லவி .

மௌலானா மன்சூர் நுஃமானி அல்  தேவ்பந்தி எழுதுகிறார் ,

" மிர்சா ஹைராத் திஹ்லவிவின் நூலான  ஹயாதே தய்யிபா ஷாஹ் இஸ்மாயில் திஹ்லவியின் உண்மையான,நம்பகமான சுயசரிதை "    
[ அல் புர்கான் ,பக்கம் 51,ஹிஜ்ரி 1355]

மவ்லானா ஹசன் அலி நத்வி எழுதுகிறார் ,

" தவ்ரீக் அஜீபா சய்யத் அஹ்மத் பரேலி அவர்களின் வரலாற்றைக்  கூறும் முதன்மையான நூல் , அதன் சய்யத் சாஹிபின் வாழ்க்கையின் பெரும்பான்மையான பகுதிகளைத் தெரிந்து கொள்ளலாம் "
[ சீறத் சய்யத் அஹமத் , பக்கம் 8]

முன்ஷி முஹம்மது ஜாபர் தானேஸ்வரி எழுதுகிறார் ,

" சில வரலாற்று  ஆசிரியர்கள் சய்யத் சாஹிபின் சரிதத்தை மோசமாக படம்பிடித்து காட்டியுள்ளனர்.அவர்கள் அவரை பிரிட்டிஷ் அரசாங்கத்தின் எதிரி போல் சித்தரித்துள்ளனர்.இந்த சந்தேகத்தையும்,மோசடியையும்  நீக்கவும்,மக்கள் உண்மையை உணர வேண்டும் என்று  நான் சய்யத் சாஹிபின் வாழ்க்கையில் இருந்து உண்மைகளை முன்வைக்க முடிவு செய்தேன்.அவரது வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்ததில், குறைந்த பட்சம் 20 இடங்களில் ஷரியத் ஆதாரம் மூலம், ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ச்சி செய்ய முடியாது தன்னைப் பின்பற்றுவோருக்கு அறிவுறுத்தினார் என்பதை தெளிவாக காணலாம் "
[சவானாஹ் அஹ்மதி , பக்கம் 226,ஸ்டீம் பிரஸ் ,லாகூர் ]

இங்கோ சய்யத் அஹ்மத் பரேலியின் வரலாற்றாசிரியர் பிரிட்டிஷாருக்கு எதிராக கிளர்ச்சி செய்யவில்லை என்கிறார் ,தேவ்பந்தின் உலமாக்களோ சய்யத் அஹ்மத் பரெலியை சுதந்திர போராட்ட வீரர் என்கிறார்கள். தங்கள் கூற்றை நிரூபிக்க கேட்டால், அவர்களிடம் வழக்கம் போல் ஒன்றுமே இல்லை ! 


தானேஸ்வரி மேலும் எழுதுகிறார் ,

" இது சய்யத் சாஹிப்  பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஒருபோதும் ஜிகாத்துக்கு ஆதரவாக இல்லை என்று தெளிவாகிறது. அவர் இந்த அரசை தம்முடைய சொந்த அரசை போல் நினைத்தார். பிரிட்டிஷ் அரசாங்கம் சய்யத் சாஹிப்புக்கு  எதிராக இருந்திருந்தால், பின்னர் சய்யத் சாஹிப்  சீக்கியருக்கு  எதிரான தனது போராட்டத்தில் இந்த அளவுக்கு ஆதரவை பெற்றிருக்க மாட்டார் என்பதில்
எந்த சந்தேகமும் இல்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் சீக்கியர்களின் செல்வாக்கை  சையத் சாஹிப் குறைக்க  வேண்டும் என்று விரும்பியது. "
[ சவானாஹ் அஹ்மதி , பக்கம் 139 ]

இதோ உங்களை வியப்பில் ஆழ்த்தும் ஒரு செய்தி !

மௌலானா மன்சூர் நுஃமானி அல்  தேவ்பந்தி எழுதுகிறார் ,

" அவர் பிரிட்டிஷ் அரசுக்கு  எதிராக எந்த ஜிஹாத் பிரகடனமும்  செய்யவில்லை என்பது மிகவும் பிரபலமானது, மாறாக தமது கல்கத்தா அல்லது பாட்னா கூட்டத்தில் அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு  ஆதரவாக தனது ஒப்புதலை வழங்கினார் மேலும் இதனால் பிரிட்டிஷ் அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் அவரை ஆதரித்தது  என்று அறியப்படுகிறது  "
 [ அல் புர்கான் ,பக்கம் 78,ஹிஜ்ரி 1355]

"மேலும் அவர் கல்கத்தாவில் தங்கிய பொது இதுவும் நடந்ததும் உண்மை, ஒரு நாள் மௌலானா இஸ்மாயில் திஹ்லவி விரிவுரை கொடுத்து கொண்டிருக்கும் போது, ஒரு மனிதர் மவ்லானவிடம் ஒரு பத்வா கேட்டார் , அது பிரிட்டிஷ் அரசு எதிராக ஜிகாத் அறிவிக்க அனுமதிக்கப்படுமா? மவ்லானா பதில் கூறினார்கள் இந்த முறையான மற்றும் பாரபட்சமற்ற அரசாங்கத்திற்கு எதிராக ஜிகாத் அறிவிப்பது  எந்த வழியிலும் சரியில்லை "
[சவானாஹ் அஹ்மதி , பக்கம் 57 ]

இதே சம்பவம் ஹயாதே தய்யிபாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

"ஒரு நாள் மௌலானா இஸ்மாயில் திஹ்லவி கல்கத்தாவில் வைத்து ஜிகாத் பற்றியும் சீக்கியர்களின் கொடுமைகளைப் பற்றியும் விரிவுரை கொடுத்து கொண்டிருக்கும் போது, குழுமியிருந்தவர்களில் யாரோ ஒருவர் எழுந்து , ' நீங்கள் ஏன் பிரிட்டிஷ் அரசு எதிராக ஜிகாத் அறிவிக்க பத்வா கொடுக்ககூடாது ' என்று கேட்டார் . அவர் கூறினார் , 'அவர்களுக்கு எதிராக ஜிஹாத் எந்த விதத்திலும் வாஜிப் இல்லை.முதலில் நாம் அவர்களின் பாதுகாப்பின்  கீழ் உள்ளோம், இரண்டாவதாக அவர்கள் நமது  மார்க்க  கடமைகளுக்கு எந்த தொந்தரவும்  செய்யவில்லை. நாம் இந்த அரசாங்கத்தின் கீழ் முழு சுதந்திரத்துடன் உள்ளோம்.உண்மையில் இந்த அரசாங்கம் மீதான தாக்குதல் இருந்தால் முஸ்லீம்கள் அந்த எதிரியை போராடுவது பர்ழ்  மேலும் எந்த வகையான துன்பங்களை விட்டும் நமது பிரிட்டிஷ் அரசைக்   காப்பாற்ற வேண்டும்"
[ ஹயாதே தய்யிபா ,பக்கம் 29 , பாரூகி பிரஸ் ,தில்லி ]

"எந்த அடிப்படையில் நாம் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக ஜிகாத் செய்து, நமது ஷரியத் சட்டத்தை  கொன்றுவிட  முடியும்"[சவானாஹ் அஹ்மதி , பக்கம் 57 ]

" லார்ட் ஹாஸ்டிங்க்ஸ் சயீத் அகமது செயல்களை / சாதனைகள் மீது  மிகவும் சந்தோஷமாக இருந்தார்.இரண்டு இராணுவங்களுக்கு இடையே ஒரு கூடாரம் எழுப்பப்பட்டு மூன்று ஆண்கள் மத்தியில் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது :அமீர் கான்,லார்ட் ஹாஸ்டிங்க்ஸ்,சயீத் அகமது.சயீத் அகமது சாஹிபிற்கு அமீர் கானை சரியான வழியில் கொண்டு வருவது மிகவும் சிரமமாக இருந்தது "
[ஹயாதே தய்யிபா ,பக்கம் 294  ]  

மௌலானா அபுல் ஹசன் அலி நத்வி எழுதுகிறார்,

" ஒருமுறை சய்யத் சாஹிபும் அவரது ஆதரவாளர்களும் ஒரு படகில் கடந்து சென்று கொண்டிருந்தனர்.அவர்கள் ஒரு பிரிட்டிஷ் வீரர் பெரிய கொள்கலன்களில் நிறைய உணவுகளுடன் காத்துக் கொண்டிருந்ததைக் கண்டனர்.அந்த வீரன் கப்பல் அருகில் வந்து 'பாதிரி சாஹிப்' எங்கிருக்கிறார் என்றான்.ஹஜ்ரத் அவர்கள் படகில் இருந்து பதில் அளித்தார்கள் 'நான் இங்கு இருக்கிறேன்' என்று.அந்த பிரிட்டிஷ் வீரன் தனது குதிரையில் இருந்து இறங்கி, தனது தொப்பியை கழற்றி கையில் வைத்துக் கொண்டு படகை நோக்கி வந்தான்.நலம் விசாரித்த பின்னர் அந்த பிரிட்டிஷ் வீரன் கூறினான் ,'நான் கடந்த மூன்று நாட்களாக உங்களுக்காக காத்துக் கொண்டிருந்தேன், எனது ஆட்களையும் உங்கள் கூட்டத்தினரை கண்டுபிடிக்க நியமித்திருந்தேன். அவர்கள் இன்று தாங்கள் இங்கு வருவதாக கூறினர்,எனவே காலை முதல் உங்களுக்காக உணவு தயாரித்துக் கொண்டிருந்தேன்.சைய்யத் சாஹிப் உணவினைப் பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள கட்டளையிட்டார்கள்.உணவு அங்கிருந்தவர்களிடையே பரிமாரப்பட்டது,அந்த பிரிட்டிஷ் வீரன் அங்கு இரண்டு மூன்று மணி நேரம் இருந்து விட்டு பின்னர் விடைபெற்றான்'  " .

[ நூல் - சீறத் சைய்யத் அஹமத் ஷஹீத் ,பக்கம் 190, மௌலானா அபுல் ஹசன் அலி நத்வி ]

புதிரான சில கேள்விகள் ,யாராகிலும் அந்த பிரிட்டிஷ் வீரன் சைய்யத் சாஹிபிற்காக மூன்று நாட்கள் காத்துக் கொண்டிருந்தான் .பிரிட்டிஷ் வீரன் பாதிரியார் எங்கே என்கிறான் .உடன் பதில் வந்தது நான் இங்கு உள்ளேன் என்று ! .ஒரு மௌலானாவை பாதிரி என்று கூப்பிட்டதில் எந்த வித்தியாசமான உணர்வும் இல்லை .

            இதை எல்லாம் மீறி தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினர் ஷாஹ் இஸ்மாயில் திஹ்லவி பிரிட்டிஷாருக்கு எதிராக ஜிஹாத் புரிந்தார் என்று பொய் பரப்பிவருகின்றனர்.

சைய்யத் அஹ்மத் பரேலி தனது பணி என்னவென்று கூறுகிறார் ,
" நான் சீக்கியரை எதிர்த்து போராடவும் அவர்களை முடிவுக்கு கொண்டு வரவும் இல்ஹாம் மூலம் ஆசீர்வாதிகப்பட்டுள்ளேன் " 

[ நூல் - சவானெஹ் அஹமதி , பக்கம் 180 ]

மேலும் அவர் கூறுகிறார் ,
" எனது போராட்டம் முஸ்லிம்களுக்கோ ,காபிர்களுக்கோ எதிராக அல்ல. எனது போராட்டம் சீக்கியர்களுக்கு எதிராக .எனக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் எந்த விரோதமும் இல்லை "

"மௌலானா ரஷீத் அஹமத் கங்கோஹீ கூறுகிறார் ஹாபிழ் ஜானி என்னிடம் தான் அந்தக் கூட்டத்தில் ஒருவர் அன்று கூறினார்.சய்யத் சாஹிப் பல அதிசயங்களை நிகழ்த்தினார்கள்.மௌலவி அப்துல் ஹை  லக்னவி,  மௌலவி இஸ்மாயில் திஹ்லவி,மௌலவி ஹுசைன் ராம்பூரி போன்றோரும் அந்தக் கப்பலில் இருந்தனர் . சைய்யத் சாஹிப் தனது முதல் ஜிஹாதை யாகிஸ்தானின் அரசன் முசம்மா யார் முஹம்மது கானுக்கு எதிராக நடத்தினார்கள் . "

[ நூல் - தச்கிரத்தூர் ரஷீத் ,வால்யூம் 2, பக்கம் 270 ]

யார் முஹம்மத் கான் என்ற பெயர் இஸ்லாமிய பெயரா இல்லையா  என்பதை இந்த பதிவைப்  படிப்பவர்களின் கவனத்திற்கே விட்டு விடுகிறேன் .
மேலும் அவரது வரலாறில் சைய்யத் அஹ்மத் யுத்த களத்தை விட்டு ஒரு குகையில் சென்று உட்கார்ந்து கொள்கிறார் .அவரது சகாக்கள் அவரைக் கண்டுபிடித்து ஏன் இவ்வாறு யுத்தகளத்தை விட்டு வெளியேறினார் என்று கேட்ட பொழுது ,தாம் இவ்வாறு செய்யுமாறு கட்டளை
இடப்பட்டதாகக் கூருகிறார் !!!.

  ஒரு இடத்தில் இல்ஹாம் மூலம் சீக்கியரை எதிர்ப்பதாகக் கூறுகிறார்,மறுபுறம் யுத்தகளத்தை விட்டு வெளியேறி குகையில் உட்கார்ந்து கொள்கிறார் . என்னே இவரின் ஜிஹாத் !!!

    அதுமட்டுமில்லாமல் இன்றைய காலத்தில் வஹாபிகள் என்ன செய்கிறார்களோ ,அதைத்தான் அவரும் அன்றே செய்து தனது வஹாபிய விசுவாசத்தை வெளிப்படுத்தினார் . முஸ்லிம்களிம்களின் கபுருகளை தரைமட்டமாக்கினார் .

இல்ஹாம் மூலம் சீக்கியரை எதிர்ப்பதாகக் கூறும் சைய்யத் அஹ்மத் தனது முடிவில் எவ்வளவு உறுதியாக இருந்தார் என்பதைக் கீழே  காணலாம் ,

" தன்னுடன் போதிய ஆள் பலம் இருந்த பொது மௌலானா சைய்யத் அஹமத், மௌலவி இஸ்மாயில் திஹ்லவியுடன் கலந்து ஆலோசித்து , குலாம் அலி ரயீஸ் அலஹாபாதி அவர்களின் செல்வாக்குடன் ,அவர் தாம் சீக்கியர்கள் மீது ஜிஹாத் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு அரசாங்கம் ஏதேனும் எதிர்ப்பு தெரிவிக்குமா என்று  வடமேற்கு பகுதியின் லெப்டினன்ட் ஜெனரல் தெரிவித்தார். ஆளுநர் எமது இறையாண்மையை பாதிக்காதவரை, நாங்கள் கவலைப்படவில்லை என்று பதிலளித்தார் . "

[ஹயாதே தய்யிபா, பக்கம் 302 ]

இது தான் இந்த தேவ்பந்திய தப்லீக் ஜமாத்தின் முன்னோடிகள் நடத்திய ஜிஹாதின் லட்சணம் . பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் அனுமதி வாங்கிய பின் நடத்தும் இந்த ஏவல் வேலையை வலிமார்கள் கூறும் இல்ஹாமுடன் தொடர்புபடுத்தி பொய் பேசும் இவர்களின் வஹாபிய நாக்கு இன்னும் என்னவெல்லாம் பேசும் என்பதை உலமாக்களும் , மக்களும் சிந்திக்க வேண்டும் .  


Hayaathe Tayyibaa




 
Related Posts Plugin for WordPress, Blogger...

Thursday 29 May 2014

இஸ்மாயில் திஹ்லவியின் மீது வழங்கப்பட்ட பத்வா



            மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் எழுதுகிறார்கள் ,

"             மௌலானா முஹம்மத் இஸ்மாயில் தெஹ்லவி ஷஹீத் , மௌலானா முனவ்வருத்தீனின் வகுப்புத் தோழர். ஷாஹ் அப்துல் அஜீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மறைவுக்குப் பின்,அவர் (இஸ்மாயில் திஹ்லவி ) தக்வியதுள் ஈமான் ,ஜிலா உல் அய்னய்ன் ஆகிய நூல்களை எழுதிய போதும் , அவரது கொள்கைகள் நாடெங்கும் பரவிய போது, எல்லா மார்க்க அறிஞர்களும் அதற்கு எதிராக ஒன்று திரண்டனர். அவர்களில் இந்த நூற்களை வெகுவாக எதிர்த்து,இதற்கு எதிராக பல நூற்களை எழுதியவர்கள் மௌலானா முனவ்வருத்தீன் அவர்கள்.
ஹிஜ்ரி 1240ல் தில்லி ஜாமியா மஸ்ஜிதில் பிரசித்தி பெற்ற அந்த விவாதம் நடைபெற்றது. இந்த நூற்களின் மீது இந்தியாவில் உள்ள அனைத்து உலமாக் களிடமும் பத்வா கேட்கப்பட்டு , பின்னர் ஹரம் ஷரீபில் இருந்தும் ஒன்று கேட்கப்பட்டது.

                  மௌலானா முனவ்வருத்தீன் ஆரம்ப காலத்தில் இஸ்மாயில் திஹ்லவியையும் அவரது மருமகன் மௌலானா அப்துல் ஹை மற்றும் அவர்களை பின்பற்றுவோரை சமாதானப்படுத்த முயன்றார் ,மேலும் அவர்களை சம்மதிக்க வைக்க அனைத்து வழிமுறைகளையும் முயற்சி செய்தார் என்பது அவரது எழுத்துகளில் புலனாகிறது.எனினும் , அவரது அனைத்து முயற்சிகளும் எந்த  பலனளிக்கவில்லை என்ற போது, மௌலானா முனவ்வருத்தீன் விவாதிக்கவும்,மறுப்பு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருந்தார். தில்லி ஜாமியா மஸ்ஜிதில் அந்த பிரசித்தி பெற்ற விவாதம் எற்பாடு செய்யப்பட்டது, ஒரு பக்கம் இஸ்மாயில் திஹ்லவியும் மௌலானா அப்துல் ஹையும் , மற்றொரு பக்கம் மௌலானா முனவ்வருத்தீனும் தில்லியைச் சார்ந்த அணைத்து உலமாக்களும். "

 [ நூல் - ஆசாத் கி கஹானி ,பக்கம் 48,மக்தபா கலீல் ,உர்து பஜார்,லாகூர்,மௌலானா அப்துர் ரஜ்ஜாக் மலீஹ் ஆபாதி ]

மவ்லானா மக்சூஸ் உல்லாஹ் பின் ஷாஹ் ரபியுத்தீன் திஹ்லவி,மவ்லானா முஹம்மது மூசா பின் ஷாஹ் ரபியுத்தீன் திஹ்லவி,மவ்லானா பஜ்லே ஹக் கைராபாதி(ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவியின் மாணவர்), முப்தி சத்ருத்தீன் ஆசுர்தாஹ்(ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவியின் மாணவர்),மவ்லானா பஜ்லே ரசூல் உத்மானி பதாயுனீ,மவ்லானா அஹ்மத் சய்யத் நக்ஷபந்தி திஹ்லவி,மவ்லானா ரஷீத்துத்தீன் திஹ்லவி,மவ்லானா கைருத்தீன் திஹ்லவி,ஹகீம் சாதிக் அலி கான் திஹ்லவி(மசீஹ் உல் முல்க் ஹகீம் அஜ்மல் கான் னின் பாட்டனார்),மவ்லானா சய்யத் அஷ்ரப் அலி குல்ஷன் ஆபாதி,மவ்லானா முக்லிசுர்ரஹ்மான் சத்காமி,மவ்லானா கலந்தர் அலி ஜுபைரி பானிபட்டி இன்னும் எண்ணற்ற அஹ்லுஸ் சுன்னத் வால் ஜமாத்தின் உலமாக்கள் இந்த புதிய வஹாபிய நம்பிக்கைகள் மற்றும் கோட்பாடுகளை தங்கள் பேச்சிலும், எழுத்திலும் எதிர்த்தார்கள்.

அவர்கள்  அஹ்லுஸ் சுன்னத் வால் ஜமாத்தின் சத்திய கொள்கைகளைப் பாதுகாக்க தங்களின் அறிவின் மூலமும் ,நடவடிக்கைகளின் மூலமும் இந்த உன்னத ஜிஹாதில் பங்கேற்றனர்.

தக்வியதுள் ஈமான் கிதாபைப் பற்றி மவ்லானா ஷாஹ் மக்சூஸ் உல்லாஹ் பின் ஷாஹ் ரபியுத்தீன் திஹ்லவி பின் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி அவர்களிடத்தில் மவ்லானா பஜ்லே ரசூல் உத்மானி பதாயுனீ அவர்கள் ஏழு கேள்விகள் கேட்டார்கள். இந்த கேள்வி விடை தொகுப்பு தஹ்கீக் அல் ஹகீகா என்று பெயரில் பம்பாயில் இருந்து 1267 ஹிஜ்ரியில் வெளிவந்துள்ளது . அதில் உள்ள மூன்று விடைகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

 மவ்லானா ஷாஹ் மக்சூஸ் உல்லாஹ் திஹ்லவி அவர்கள் எழுதுகிறார்கள்,

"   தக்வியதுள் ஈமான் பற்றிய முதல் கேள்விக்கான விடையாவது, நான் அதை தப்வியதுள் ஈமான் என்று அழைக்கிறேன்,நான் அதை மறுத்து
முஈதுல் இமான்ப் என்று ஒரு தனிக்கட்டுரை எழுதியுள்ளேன். இஸ்மாயிலின் புத்தகம் நமது குடும்ப மரபுகளுக்கு எதிரான மட்டுமின்றி நபிமார்கள்,ரசூல்மார்கள் கூறிய தவ்ஹீதுக்கும் எதிராக இருக்கிறது.ஏனெனில் நபிமார்கள் மற்றும் ரசூல்மார்கள் அனுப்பப்பட்டது மக்களுக்கு கற்பித்து அவர்களை தவ்ஹீதின் வழியில் நடத்தவே.எனினும் இந்த புத்தகத்தில் தவ்ஹீதோ அல்லது நபிமார்களின் சுன்னத்தை கூறும் எந்த அடையாளமும் இல்லை.எந்த விஷயங்களை எல்லாம் இவர்கள் ஷிர்க், பித்அத் என்று கூறி மக்களுக்கு கற்பிக்கிறார்களோ அவற்றை எல்லாம் நபிமார்களோ அல்லது அவர்களை பின்பற்றியவர்களோ அவ்வாறு கூறவில்லை.இல்லை ,அவர்களிடத்தில் ஆதாரம் இருந்தால் , அவரை பின்பற்றுவோரை நம்மிடம் சமர்ப்பிக்க சொல்லுங்கள்.

நான்காம் கேள்விக்கான விடையாவது, வஹாபியின்(இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி)  புத்தகம் உரையாகவும், தக்வியதுள் ஈமான் அதன் வர்ணனை போன்றும் உள்ளது. ஐந்தாம் கேள்வியின் விடையாதெனில் ,ஷாஹ் அப்துல் அஜீஸ் அவர்கள் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் .இந்த புத்தகத்தை பற்றி அவர்கள் கேள்வி பட்ட பொது,அவர்கள் கூறினார்கள் தாம் மட்டும் நோய்வாய்படவில்லையாயின் , இந்த புத்தகத்திற்கு துப்னா இத்னா அஷரியா போன்று ஒரு மறுப்பு எழுதியிருப்பேன் என்றார்கள்.

அல்லாஹ்வின் அருளைக் கொண்டு நான் (ஷாஹ் மக்சூஸ் உல்லாஹ் திஹ்லவி) நான் தக்வியதுள் ஈமான் என்ற வர்ணனைக்கு எழுதிய மறுப்பு ,அதன் உரை நூலான (கிதாபுத்  தவ்ஹீத்) க்கும் மறுப்பாக அமைந்தது.எனது தந்தை ஷாஹ் ரபியுத்தீன் அவர்கள் இந்த நூலை(தக்வியதுள் ஈமான்) பார்க்கவில்லை எனினும் ஷாஹ் அப்துல் அஜீஸ் அவர்கள் அதைக் கண்டு , நிரகரித்தபொழுது நான் இதற்கு மறுப்பு எழுத ஆரம்பித்தேன்  "

[ நூல் - அன்வர் ஏ அப்தாப் ஏ சதாகத் ,பக்கம் 617-620,கரீம் பிரஸ் ,லாகூர்,முஹம்மத் காதி பஜ்லே அஹ்மத் லுத்யான்வி ]

இமாம் பஜ்லே ஹக் கைராபாதி ரஹ்மாதுள்ளஹி அலைஹி அவர்கள் இஸ்மாயில் திஹ்லவியின் வழிகெட்ட வஹாபிய கொள்கைகளை எதிர்த்து தஹ்கீக் அல் பத்வா பி இப்தல் அல் தக்வா என்ற நூலை எழுதினார்கள் .இஸ்மாயில் திஹ்லவியின் மீதும் அவரது நூலான தக்வியதுள் ஈமான் மீதும் குப்ர் பத்வா வெளியிடப்பட்டது. அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்த 17 முண்ணனி உலமாக்களால் கையெழுத்திடப்பட்டது .

அதன் ஸ்கேன் கீழே உள்ளது.

Fatwa on Ismail Dihlawi
Tahqeeq al-Fatwa fi Ibtal al-Taghwa
Tahqeeq al-Fatwa fi Ibtal al-Taghwa


Tahqeeq al-Fatwa fi Ibtal al-Taghwa
 
 

                         
 
  
Related Posts Plugin for WordPress, Blogger...

Wednesday 28 May 2014

ஹுசைன் அலி வான் பச்ரானியின் வஹாபிய வழிகேடு

தேவ்பந்திய  மௌலவி ஹுசைன் அலி (வான் பச்ரானி,மியான்வாலி ) (1283 -1363 ஹிஜ்ரி) கூறுகிறார்,
Tafseer Bulghatul Hairaan

"அல்லாஹுதஆலா தனது படைப்புகள் செய்யும் செயலை முன்னறே அறிந்திருக்க மாட்டான்.படைப்புகள் ஒரு செயலை செய்த பின்னரே அல்லாஹ் அதை அறிகின்றான்."
 [ தஃப்சீர் புல்காதுல் ஹைரான்,பக்கம் 157,158]
 
Bulghathul Haairaan Pg 157


Bulghathul Hairaan Pg 158
 

"நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தாகூத் (ஷைத்தான்) என்றழைப்பது கூடும் "  (அஸ்தக்பிருல்லாஹ் )
[ தஃப்சீர் புல்காதுல் ஹைரான்,பக்கம் 43 ]
 
Tafseer Bulghatul Hairaan, page 43


ஹசைன் அலி வான் பச்ரானி கூறுகிறார்,
"தேவ்பந்தி மௌலவி நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நரகில் விழுவதிலிருந்து காப்பாற்றினார் "
[ தஃப்சீர் புல்காதுல் ஹைரான்,பக்கம் 8 ]

தேவ்பந்தி வஹாபிகளின் முஹத்தித் மற்றும் முபஸ்ஸிருமான  ஹுசைன் அலி வான் பச்ரானி மௌலவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் மாணவர்.

                   இவர் தனது  தப்சீரில் எழுதுகிறார் 'பெருமானார் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தன்னுடன் நரகின் மேலிருக்கும் சிராத்தே முஸ்தகீம் பாலம் மீது நடந்து கொண்டிருப்பதாக கனவு கண்டார்.பெருமானார் அவர்கள் சிராத்தே முஸ்தகீம் பாலத்தில் இருந்து கீழே விழப்போகும் தருவாயில்,இந்த தேவ்பந்திய மௌலவி பெருமானாரைக் காப்பாற்றி விடுகிறார்.'
Bulghathul Haairaan_Husain Ali
Bulghathul Hairaan Pg 8
 
                                                  அஸ்தக்பிருல்லாஹ் !!!
Related Posts Plugin for WordPress, Blogger...

Monday 26 May 2014

அன்வர் ஷாஹ் கஷ்மிரியின் வஹாபிய வழிகேடு


மௌலானா அன்வர் ஷாஹ் கஷ்மிரி (பிறப்பு .1875 - இறப்பு.1933 )
           
தன்னுடைய புத்தகமான  ' அல் பத்ர் அஸ் ஸாரி இலா பைஜ் அல் பாரி' யில், பதிப்பாளர்கள் 'அல் மக்தப் அல் ரஷீதியா,சிறகி ரோடு குஎட்டா,பாகிஸ்தான்' [பக்கம் 395, பாகம் 3,அஷ் ஷகாதத் என்ற தலைப்பில் ] ,எழுதியுள்ளார் .
Anwar Shah Kashmiri Tehreef e Quran


Faiz al Bari Arabic
 


Faiz al Bari English Transalation of Arabic text
 

ராபிதி ஷியாகளைப் போன்று இந்த தேவ்பந்திய தப்லீக் ஜமாத்தும் தற்போதுள்ள குரான் சஹாபாக்களால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று நம்புகிறார்கள் .

1. குர்ஆனில் மாற்றம் (தெஹ்ரீப் ஏ லப்சி ) ஏற்கனவே நடந்துவிட்டது .
2. குரானின் தொகுப்பாளர்களே (சஹாபாயே கிராம் ) இந்த தவறுக்கு காரணம் .
                                                           

                               அஸ்தக்பிருல்லாஹ்  !!!!
 
Related Posts Plugin for WordPress, Blogger...

Friday 23 May 2014

அஷ்ரப் அலி தானவியின் வஹாபிய வழிகேடு


மௌலவி அஷ்ரப் அலி தானவி கூறுகிறார்,


Hifzul Imaan

"பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து அளிக்கப்பட்ட அறிவைப் போன்றதே விலங்குகள், பைத்தியக்காரர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் உள்ள  அறிவு "
[ நூல் - ஹிப்ளுல் ஈமான் , பக்கம் 7]


Hifzul Iman, Page 7-Asraf ali Thanvi

"பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து அளிக்கப்பட்ட மறைவான ஞானம் விலங்குகள், பைத்தியக்காரர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் உள்ளது போன்றே மேலும் அதற்கு சமமானதே "
[ நூல் - ஹிப்ளுல் ஈமான் , பக்கம் 7, பதிப்பாளர்கள் ஷேய்க் ஜான் முஹம்மத் அல்லா
பக்ஷ் குதுப் உலூம் ஏ மஷ்ரிகி காஷ்மிரி பஜார் , லாகூர் 1934 ]


அஷ்ரப் அலி தானவி கூறுகிறார் ,
" மறைவான ஞானம் என்பது ஒரு பகுதி தான் எனில் அதில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுக்கு  என்ன சிறப்பு இருந்து விட போகிறது. அது மாதிரியான ஞானம் ஜைதுக்கும்,அம்ர்க்கும் , எல்லா விலங்குகள், பைத்தியக்காரர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் தான் உள்ளது.   "
[ நூல் - ஹிப்ளுல் ஈமான் , பக்கம் 7, பதிப்பாளர்கள் ஷேய்க் ஜான் முஹம்மத் அல்லா
பக்ஷ் குதுப் உலூம் ஏ மஷ்ரிகி காஷ்மிரி பஜார் , லாகூர் 1934 ]




Hifzul Iman -page 8


Ashraf Ali Thanvi - Hifzul Iman,page13
 
இதே வாசகம் ஹிப்ளுல் ஈமான் மழாஹிருள் உலூம் பதிப்பகம் 6ஆம் பக்கத்தில் உள்ளது .



Hifzaul Iman  New Edition

மௌலவி அஷ்ரப் அலி தானவியை தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் ஹக்கீமுல் உம்மத் என்று அழைக்கிறனர். இவர் தான் தப்லீக்  ஜமாத்தின் ஸ்தாபகார் மௌலவி இல்யாஸின் ஆசிரியர்.

அஷ்ரப் அலி தானவி கூறுகிறார் ,
" லா இலாஹா இல்லல்லாஹு அஷ்ரப் அலி ரசூலுல்லாஹ் , அல்லாஹும்ம ஸல்லிஅலா செய்யதினா நபியினா அஷ்ரப் அலி என்று  கூறுவதால் எந்த கேடும் இல்லை "
[ரிஸாலா அல் இம்தாத் ,பக்கம் 35,சபர் மாதம் 1336 ஹிஜ்ரி ,ரூதத் ஏ முனாஜிரா கேயா,அல் புர்கான் வால்யூம் 3,பக்கம் 85 ]
"லா இலாஹா இல்லல்லாஹு அஷ்ரப் அலி ரசூலுல்லாஹ் , அல்லாஹும்ம ஸல்லிஅலா செய்யதினா நபியினா அஷ்ரப் அலி என்று கூறுவது ஆகுமானதே ,அவ்வாறு கூறுவதால் ஷரீயத்தில் எந்த ஆட்சேபணையும் இல்லை "
[ரிஸாலா அல் இம்தாத் ,பக்கம் 35, சபர் 1336, பதிப்பாளர்கள் இம்தாத் உல் மதாபே தானாபவன் ]

அஷ்ரப் அலி தானவி எழுதுகிறார் ,
" முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றுமில்லாத பயனற்றவர்கள் "
[ நூல் - அஷ்ரபுஸ் சவானெஹ் ,பக்கம் 42]
"நான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறேன் இக்காலத்தில் எந்த மனிதனும் ஒரு நல்லமல் செய்தால் ,அவன் 50 அபூபக்கர் சித்திக் ரலியல்லாஹு அன்ஹு வின் சவாபை பெறுகின்றான் "
[நூல் - அஷ்ரபுஸ் சவானெஹ் , பாகம் 2, பக்கம் 99]


எச்சரிக்கை !!!
அஷ்ரப் அலி தானவியின் நூல்களில் உள்ள ஆபாச விரசங்கள்
இங்கு நாம் ஸ்கேன் செய்துள்ளவை  மூல நூல் பிரதிகள் .  பிஹஷ்தி ஜேவர் நூலின் புதிய பிரதிகளில் இந்த தேவ்பந்திய தப்லீக் ஜமாத்தினர் இந்த ஆபாசங்களை மறைக்க அஷ்ரப் அலி தானவி தவ்பா,ரூஜூ செய்துவிட்டார் என்று சொல்லி வருகின்றனர்.

இது போன்ற மாற்றங்களை தக்வியத்துள் ஈமான்,ஹிப்ழுள் ஈமான்,சிராத்தே முஸ்தகீம்,பராஹீனே காதியா போன்ற பிற நூல்களிலும் செய்துள்ளனர் இந்த தேவ்பந்திய வஹாபிகள்.

நூல்  - கமாலாதே அஷ்ரபியா, பக்கம் 369 ,ஆசிரியர் மௌலவி முஹம்மத் இசா இலாஹாபாதி ( அஷ்ரப் அலி தானவியின் கலீபா )
நூல்  - இம்தாதுல் முஷ்தாக் ,பக்கம் 713,673 , ஆசிரியர் அஷ்ரப் அலி தானவி
நூல்  - இபாஜாத்ஏ யௌமியா ,பாகம் 4, பக்கம் 7,570,பாகம் 5 பக்கம் 440,ஆசிரியர் அஷ்ரப் அலி தானவி


மௌலவி அஷ்ரப் அலி தானாவியின் தினசரி பாடங்கள் தொகுக்கப்பட்டு இபாஜாத்ஏ யௌமியா என்று வெளியிடப்பட்டுள்ளது . இது மல்புஜாத் ஹக்கிமுல் உம்மத்  என்றும் அழைக்கப்படுகிறது.   
மல்பூஜாத் எண் 43, பக்கம் 61 .

அஷ்ரப் அலி தானவி தம்மை ஒரு பித்அதி என்று ஒப்புக்கொள்கிறார்
" இக்காலத்தில் மக்கள் தங்கள் தன்மைகளில் குறும்புடையவர்கலாக இருக்கிறார்கள்.நான் அவர்களை மாற்றும் பொருட்டு ஒரு புதிய பித்அத் தை உருவாக்கியுள்ளேன் " 
[நூல் - மல்புஜாத் ஹக்கிமுல் உம்மத் , வால்யூம் 5 ,பக்கம் 208,இதாரா தாலிபதே அஷ்ரபியா,முல்தான்,பாகிஸ்தான் ]

தேவ்பந்திகளின் கொள்கை
"தொழுகையில் அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிந்தனை வருவது எருமை அல்லது கழுதையின் சிந்தனையில் மூழ்குவதி விட மோசமானது."
[ஸிராத்தே முஸ்தகீம் ,பக்கம் 86].

ஆனால் தொழுகையில் ஒரு தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் பெரியாரின் நினைவு வருவது சரியானதே !!!

மௌலானா அப்துல் மஜீத் தைராபாதி அஷ்ரப் அலி தான்வியின் மாணவரும் கலீபாவும் ஆவார் . அவர் அஷ்ரப் அலி தானாவியின் வாழ்க்கை வரலாறை 'ஹக்கீமுள் உம்மத்' என்று ஒரு புத்தகமாக வெளியிட்டார். மௌலவி அப்துல் மஜீத் தனது ஒரு பிரச்னையை அஷ்ரப் அலி தானவிக்கு கடிதமாக எழுதுகிறார், 
"தொழுகையில் மன ஒருமைப்பாடு இல்லாத நிலை என்பது ஒரு பழைய பிரச்சினை.அனால் என்னுடைய அனுபவத்தில் தொழுகையில் உங்களை நினைக்கும் போது மன ஒருமைப்பாடு இல்லாத நிலை,சிறிது நேரத்திற்கே ஆனாலும்  என்னை விட்டும் விலகியது . இது விஷயமாக, இது சரிதான என்று  எனக்கு ஆலோசனைக் கூறுங்கள்,இல்லையெனில் எதிர்காலத்தில் நான் கவனாமாக இருப்பேன் "
அஷ்ரப் லை தானவியின் பதில்
"இந்த முறை சரியானதே நீர் யாரிடமும் இதை வெளிப்படுத்தாதவரை "
[ நூல்  - ஹகீமுல் உம்மத் ,பக்கம் 54 ]

"மௌலானா அஷ்ரப் அலி தானவி ஒருமுறை கூறினார் , நான் நோய்வாய்பட்டிருந்தேன் மேலும் மௌத்தை நினைத்து அச்சப்பட்டுக்  கொண்டிருந்தேன். நான் ஹஜ்ரத் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை கனவில் கண்டேன் அவர்கள் என்னை கட்டியணைத்தார்கள், நான் சுகம் அடைந்தேன் "
[ நூல் - மல்பூஜாத் ஹகீமுல் உம்மத் ,வால்யூம்  8, பக்கம் 37] 

                                  உம்  மீது லக்னத் உண்டாகட்டும்
                                         
                                        அஸ்தக்பிருல்லாஹ்  !!!
 
  
Related Posts Plugin for WordPress, Blogger...

கலீல் அஹமத் அம்பேட்வியின் வஹாபிய வழிகேடு


மௌலவி கலீல் அஹ்மத் கூறுகிறார்,
Baraheen-e-Qatiah, pg 278, lines 13, 14

"ஈமானே கிஸ்ப் என்பதன் அர்த்தம் இதுதான்,அல்லாஹுதலாவிற்கு பொய் சொல்லும் அதிகாரம் உள்ளது,எனினும் இது நடக்காது "
[ நூல் - பராஹீனே காதியா,பக்கம் 278 ]   
"அல்லாஹ் பொய் சொல்லுவான் மேலும் இது விஷயமாக எழும் கேள்விகள் தற்போது எழுபவை அல்ல, இதற்கு முன்னர் வாழ்ந்த உலமாக்கள் மத்தியிலும் இது விவாதப் பொருளாகயிருந்தது."
[ நூல் - பராஹீனே காதியா,பக்கம் 6]
"ஷைத்தானும் மலக்குல் மவ்த்தும்,பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட அறிவிமிக்கவர்கள் "
[நூல் - பராஹீனே காதியா,பக்கம் 51 -52, பதிப்பாளர்கள் முஹம்மத் இஷாக் மாலிக் குதுப்கானா ரஹீமியா சஹரான்பூர் ஹிஜ்ரி 1365]
"நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தனது இறுதி முடிவு என்னவென்று தெரியாது , மேலும் அவர்களுக்கு சுவற்றுக்கு பின்னால் இருப்பது கூட தெரியாது"
[நூல் - பராஹீனே காதியா,பக்கம் 51,பதிப்பாளர்கள் முஹம்மத் இஷாக் மாலிக் குதுப்கானா ரஹீமியா சஹரான்பூர் ஹிஜ்ரி 1365 ]
"அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உர்து மொழியை தாருல் உலூம் தேவ்பந்தின் உலமாக்களிடம்  இருந்த தொடர்பின்மூலம் கற்றார்கள் "
[நூல் - பராஹீனே காதியா,பக்கம் 26,பதிப்பாளர்கள் முஹம்மத் இஷாக் மாலிக் குதுப்கானா ரஹீமியா சஹரான்பூர் ஹிஜ்ரி 1365 ]

கலீல் அஹமத் எழுதுகிறார் ,
"அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உங்களின் சகோதரர் என்று அழைப்பது நியாயமானதே "
[நூல் - பராஹீனே காதியா,பக்கம் 3 -6 ]
"மீலாதுந்நபி கொண்டாடுவது இந்துக்கள் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுவது போன்றது "
[நூல் - பராஹீனே காதியா,பக்கம் 148,பதிப்பாளர்கள் முஹம்மத் இஷாக் மாலிக் குதுப்கானா ரஹீமியா சஹரான்பூர் ஹிஜ்ரி 1365]

கலீல் அஹ்மத் கூறுகிறார்,
" ஷைத்தான் மற்றும் மலக்குல் மவ்த்து ஆகியோருடைய நிலையை பார்த்த பின்னர் அவர்கள் ஆழமான அறிவுடையவர்கள் என்று தெரிந்துகொள்ளலாம் மேலும் இது குரான் ஹதீஸ் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. குரான் ஹதீஸ் ஆதாரம் இல்லாமல் அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்  அதேபோன்ற ஆழமான அறிவுடையவர்கள் என்று பகுத்தறிவின் மூலம் நிரூபனம் செய்வது தவறான் எண்ணம்.அவ்வாறு செய்வது ஷிர்க் அல்லாமல் வேறு எந்தவிதமான ஈமான் ?"
[ நூல் - பராஹீனே காதியா,பக்கம் 148,பதிப்பாளர்கள் முஹம்மத் இஷாக் மாலிக் குதுப்கானா ரஹீமியா சஹரான்பூர் ஹிஜ்ரி 1365]

                                                 
                                         அஸ்தக்பிருல்லாஹ்  !!!


 
Related Posts Plugin for WordPress, Blogger...

Thursday 22 May 2014

ரஷீத் அஹமத் கங்கொஹியின் வஹாபிய வழிகேடு


ரஹீத் அஹமத் எழுதுகிறார்,


Fatwa Rasheediya Pg20 Vol1

" அல்லாஹ்  பொய் சொல்லுவது சாத்தியம் என்பதன் அர்த்தம் என்னவென்றால் பொய் சொல்லும் தன்மை அல்லாஹ்வின் அதிகாரத்திற்குள் உள்ளது,அர்த்தமென்னவென்றால் அல்லாஹ்வால் காபிர்களுக்கு என்ன தண்டனைகள் உறுதியளிக்கப்பட்டுள்ளதோ,அவன் அதற்கு மாற்றமாக செய்ய அதிகாரம் கொண்டுள்ளான்,அவன் இதை செய்யமாட்டான் என்றாலும்....
சாத்தியம் என்பதன் அர்த்தம் நிச்சயம் நடக்கும் என்பதல்ல,அனால் நடக்கலாம் என்பதே. ஆதலால் மார்க்க அறிஞர்கள்,இஸ்லாமிய உலமாக்களின் நம்பிகையாகிறது பொய் சொல்லுவது அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு உட்பட்டதே என்பதாகும் "



Fatwa Rasheediya

[ பதவா ரஷீதியா வால்யூம் 1,பக்கம் 20, பதிப்பாளர்கள் குதுப்கானா ரஹீமியா தில்லி மற்றும் ஜய்யத் பார்கி பிரஸ் தில்லி ]             
" அல்லாஹ்வால் பொய் சொல்ல முடியும் "
[ பதவா ரஷீதியா வால்யூம் 1,பக்கம் 18,19,20 ]


Fatwa Rasheediya Vol 1 pg 18,19

"அல்லாஹ் பொய் சொல்லுவது சாத்தியம் "
"அல்லாஹ்வால் பொய் சொல்ல முடியும் "
"அல்லாஹ் ஏற்கனவே பொய் உரைத்திருகின்றான் "

[ பதவா ரஷீதியா பாகம் 1, பக்கம் 20 மற்றும் தக்தீசுல் கதீர் பக்கம் 79 ]

மௌலானா ரஷீத் அஹமத் தனது பத்வாவில் கூறுகிறார் ,
"பக்கம் 97 ல்- இதனால் இதன் மூலம் ஊர்ஜிதமாகிறது பொய் உரைப்பதென்பது அல்லாஹுதஆலாவிற்கு சாத்தியம் "


Fatwa Rasheediya Pg 97

ரஷீத் அஹமத் கூறினார்,
"ரஹ்மத்துல் ஆலமீன் என்னும் பதம் பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக தொடர்புடையது அல்ல.,பிற நல்லடியார்களையும் ரஹ்மத்துல் ஆலமீன் என்று அழைக்கப்படும்"
[ பதவா ரஷீதியா பாகம் 2,பக்கம் 12 ]     
"ரஹ்மத்துல் ஆலமீன் என்பது நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட தனித்துவமான பண்பு அல்ல,உம்மதுகளையும் ரஹ்மத்துல் ஆலமீன் என்று அழைக்கலாம் "
[பதவா ரஷீதியா பாகம் 2,பக்கம் 12 ,பதிப்பாளர்கள் ரஹீமியா குதுப்கானா சுநெஹ்ரி மஸ்ஜித் தில்லி 1352 ]
"மீலாத் ஷரீப்,மிஹ்ராஜ் ஷரீப் ,கியார்வீன் ஷரீப்,உர்ஸ் ஷரீப்,கத்தம் ஷரீப் ,சைலும்,பாதிஹா,ஈசாலே சவாப் இவை ஷரியத்திற்கு மாற்றமாகவும்,கெட்ட பித்அத்களாகும்,மேலும் இவை ஹிந்துக்களின் நடைமுறையாகும்"
[பதவா ரஷீதியா பாகம் 2,பக்கம் 144-150 ,பதிப்பாளர்கள் ரஹீமியா குதுப்கானா சுநெஹ்ரி மஸ்ஜித் 1352 ஹிஜ்ரி ]
[பதவா ரஷீதியா பாகம் 2,பக்கம் 93-94 ,பதிப்பாளர்கள் ரஹீமியா குதுப்கானா சுநெஹ்ரி மஸ்ஜித் 1351 ஹிஜ்ரி ]

"காகம் உண்பது  நன்மைபயக்கும் செயலாகும் ஷபே பராத் அன்று உண்ணும் நேர்ச்சையால் எந்த நியாயமும்மில்லை "
[பதாவா ரஷீதியா பாகம் 2, பக்கம் 130]

ரஷீத் அஹமத் கூறினார்,
"ஹிந்துக்களின் திபாவளி ,ஹோலி பண்டிகைகளின் போது வழங்கப்படும் பிரசாதம் முஸ்லிம்கள் உண்பது  கூடும்,எனினும் பாத்திஹாவின் போது வழங்கப்படும்  நேர்ச்சை உணவுகளை உண்பது கூடாது  "
[பதாவா ரஷீதியா பாகம் 2, பக்கம் 123]
"சுத்தமாக இருந்தால் ஒரு தாழ்ந்த ஜாதியைச்  சேர்ந்தவரின் இல்லத்தில் சமைத்த உணவை உண்பது கூடும் , என்பது கியார்வீன் ஷரீப் (கௌதுல் அஃழம் அவர்களின் ஈசாலே சவாப் )போது வழங்கப்படும்  உணவுகளை உண்பது ஹராம்  "
[பதாவா ரஷீதியா பாகம் 2, பக்கம் 130]
"ஒரு ஹிந்துவின் வட்டி பணத்தில் வைத்திருக்கும் தண்ணீர் பந்தலில் முஸ்லிம்கள் தண்ணீர் குடிப்பது கூடும், எனினும் ஒரு முஸ்லிம் முஹர்ரம் மாதத்தில் இமாம் ஹுசைன் அவர்களின் நினைவாக தண்ணீர் பந்தல் அமைத்து அதன் மூலம் தண்ணீர் அருந்துவது ஹராம்  "
[பதாவா ரஷீதியா பாகம் 2, பக்கம் 112,113]
"ஹிந்துக்களின் திபாவளி ,ஹோலி பண்டிகைகளின் போது வழங்கப்படும் பரிசுகளையும்,உணவையும்  முஸ்லிம்கள் வாங்குவது கூடும் மற்றும் நன்மை தரக்கூடியது  "
[பதாவா ரஷீதியா பாகம் 2, பக்கம் 123,பதிப்பகம் ரஹீமியா குதுப்கானா சுநெஹ்ரி மஸ்ஜித் 1352 ஹிஜ்ரி ]

ரஷீத் அஹமத் பராஹீனே காத்தியா 51 பக்கத்தில் கூறுகிறார் கலீல் அஹ்மத் புத்தகம் பாக்கியம் போருந்தியவொன்று மேலும் தான் அதை பைத் ஐனி இஸ்லாம் என்னும் தரத்தில் வைத்துள்ளதாக கூறுகிறார் .


தச்கிரதூர் ரஷீத் பாகம் 2, பக்கம் 100 படிக்க தவறாதீர்  !!!

                                         அஸ்தக்பிருல்லாஹ்  !!!

Related Posts Plugin for WordPress, Blogger...

மௌலவி காசிம் நானூத்வியின் வஹாபிய வழிகேடு


         தாருல் உலூம் தேவ்பந்த் மௌலவி காசிம் நானூத்வியால் 1866/68 ல் ஸ்தாபிதம்   செய்யப்பட்டது .

காசிம் நானூத்வி எழுதுகிறார் ,

"நபிமார்கள் அப்பட்டமான பொய்கள் உரைப்பதை விட்டும் தூய்மையானவர்களாகவும் ,பாவங்களை விட்டும் அப்பாவியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை" (மஆதல்லாஹ்)
[ நூல் - தஸ்பியத் உல் அகாயித் ,பக்கம் 25,பதிப்பாளர்கள் சையத் மாலிக் குதுப்கானா அஜீஸியா தேவ்பந்த் ]
"மார்க்கம் அறியாத பாமர மக்களுக்கு “காத்தமுன் நபீயீன்” என்பது இறுதி நபி என்று அர்த்தம் கொள்வர்.எனினும் விஷயம் அறிந்தவர்களுக்கு இது சரியான விளக்கமன்று. அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னர் ஒரு நபி பிறந்தாலும் அது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இறுதியானவர்கள் என்பதில் எந்த விளைவையும் உண்டாக்காது "
[ நூல் -தக்தீருன் நாஸ் ,பக்கம் 3,25 ]


Tahzeerun naas

Tahzeerun naas Pg 2- 3

Tahzeerun naas Pg  3

காசிம் நானூத்வி எழுதுகிறார் ,
"வெளிப்படையான அமல்கள் மூலம் ஒரு சராசரி முஸ்லிம் நபியை விட உயர்ந்த அந்தஸ்துக்கு செல்ல  முடியும். "
 [ நூல் -தக்தீருன்னாஸ் ,பக்கம் 5]
"மார்க்கம் அறியாத பாமர மக்களுக்கு “காத்தமுன் நபீயீன்” என்பது இறுதி நபி என்று அர்த்தம் கொள்வர்.எனினும் விஷயம் அறிந்தவர்களுக்கு இது சரியான விளக்கமன்று."
[ நூல் -தக்தீருன் நாஸ் ,பக்கம் 3 ,பதிப்பாளர்கள் குதுப்கானா காசிமி தேவ்பந்த் ]

காசிம் நானூத்வி எழுதுகிறார் ,
"அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழும் காலத்தில் ஒரு நபி வந்தால் அல்லது அவர்களுக்கு பின்னர் ஒரு நபி பிறந்தாலும் என்று அனுமானம் செய்தாலும் அது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இறுதியானவர்கள் என்பதில் எந்த விளைவையும் உண்டாக்காது "[நூல் -தக்தீருன் நாஸ் ,பக்கம் 25 ,பதிப்பாளர்கள் குதுப்கானா காசிமி தேவ்பந்த் ] 


Tahzeerun naas Pg 25

"உம்மத்துகள் தங்களது நபியை அமல்களில் முந்திவிடுவர்"
[ நூல் -தக்தீருன் நாஸ் ,பக்கம் 5 ,பதிப்பாளர்கள் குதுப்கானா காசிமி தேவ்பந்த் ]

காசிம் நானூத்வி எழுதுகிறார் ,
"நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தஜ்ஜாலும் வாழ்வைக் கொண்டு நன்மாரயம் பெற்றவர்கள்.எந்த பண்புகள் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குணநலன்களாக உள்ளதோ  அவை தஜ்ஜாலிடமும் உள்ளன."
[ நூல் - ஆபே ஹயாத் ,பக்கம் 169, பதிப்பாளர்கள் குதுப்கானா காசிமி தில்லி 1355 ஹிஜ்ரி,1936 ]

காசிம் நானூத்வி எழுதுகிறார் ,
"நபிமார்கள் தனது உம்மத்தை விட அறிவில் மட்டுமே மேலானவர்கள்,ஆனால் அமல்களில் ,சில சமயம் உம்மத்துகள் நபிமார்களுக்கு சமமானவர்களாகவும் ,மேலும் எப்போதாவது  அமல்களில் முந்தியவர்களாகவும் காணப்படுகின்றனர்"
 [ நூல் -தக்தீருன் நாஸ் ,பக்கம் 5 ,பதிப்பாளர்கள் மக்தபா பைஸ் நசத் ஜாமி மஸ்ஜித் ,தேவ்பந்த் மற்றும் குதுப்கானா காசிமி தேவ்பந்த் ]

தக்தீருன் நாஸ் நூலில் உள்ள மேலும் சில வழிகெட்ட கொள்கைகள்


Tahzeern Naas Pg 13



Tahzeern Naas Pg 24




                                                  அஸ்தக்பிருல்லாஹ் !!!





 
Related Posts Plugin for WordPress, Blogger...

Wednesday 21 May 2014

இஸ்மாயில் திஹ்லவியின் வஹாபிய வழிகெடு

இஸ்மாயில் திஹ்லவி கூறுகிறார் :

"அல்லாஹு தஆலா பொய் சொல்லுவது சாத்தியம் "  (அஸ்தக்பிருல்லாஹ் )
 [நூல் - யக் ரோசா பார்ஸி,பக்கம் 17-18 ].
மேலும்  கூறுகிறார் "அல்லாஹ் ஒரு பொய்யனாகயிருப்பது சாத்தியம்,நீங்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் மனிதனின் திறன் அல்லாஹ்வின் திறனை விட மேலானது என்று கருதவேண்டும் " .
Yak Roza

Ismail dehalwi Yak Roza Pg 17

Ismail dehalwi Yak Roza Pg 18


இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார் ,
"நீங்கள் தொழுகையின் போது உங்கள் மனைவியுடன் கூடுவது அல்லது தீய சலனமுடைய விபச்சார சிந்தனை கொள்வது நல்லது மேலும் ஷைகுமார்களையோ அல்லது ஒரு நல்லடியாரையோ அல்லது அது பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நினைவு வருவது உங்கள் கழுதை ,எருமையின் நினைவு வருவதைக்  காட்டிலும் கீழானது"
[ நூல் -சிராத்தே முஸ்தகீம் பார்ஸி ,பக்கம் 86, ஹிஜ்ரி 1308,தில்லி பதிப்பகம் ]
[ நூல் -சிராத்தே முஸ்தகீம்  உர்து ,பக்கம் 150,நவம்பர் 1956 ,லாகூர் பதிப்பகம் ]

இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார் ,
"தொழுகையின் போது பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நினைவு வருவது உங்கள் கழுதை ,எருமையின் நினைவில்  மூழ்கி இருப்பதை விட கீழானது" (அஸ்தக்பிருல்லாஹ் )
[ நூல் -சிராத்தே முஸ்தகீம் பார்ஸி ,பக்கம் 86, ஹிஜ்ரி 1308,முஜ்தபை தில்லி பதிப்பகம் ]
[ நூல் -சிராத்தே முஸ்தகீம்  உர்து ,பக்கம் 150,நவம்பர் 1956 ,மாலிக் சிராஜுதீன் சன்ஸ் லாகூர் பதிப்பகம் ]
Siraata e  Mustaqeem Urdu Pg 86


இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார் ,
"கருமங்களை பூர்த்தியாக்குவது ,சிரமங்களை நீக்குவது, ஆபத்து நேரங்களில் உதவி வழங்குவது,இவை  அனைத்தும் அல்லாஹ்வுக்கே மட்டுமே உரியன, மேலும் எந்த நபியும்,வலியும் ,ஷைகுமார்களும்,ஷஹீதும்,ஜின்னும்,மலக்கும் எந்தவிதமான உதவியும் செய்ய இயலாது. யாரேனும் ஒருவர் அவர்களின் மீது சபதம் செய்தாலோ அல்லது ஆபத்து நேரங்களிலும் அவர்களை  நினைவில் கொண்டாலோ, அவர் ஒரு முஷ்ரிக் ஆவார்.அவர்களது நம்பிக்கை எதுவாக இருந்தாலும்,இவர்கள் சூயமாக சக்தியுடையவர்கள் என்றாலும் சரி,அல்லது இவர்கள் அல்லாஹ்வினால் சக்தி வழங்கப்பட்டு உதவுகிறார்கள் என்றாலும் ,எந்த நிலையிலும் இது ஷிர்க் "
[தக்வியதுல் ஈமான்,பக்கம் 10 ,தில்லி பதிப்பு ] 

இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார் ,
"தேவ்பந்திய உலமாவான (சையத் அஹ்மத் பரேல்வி) அவர்களை ஹஜரத் அலி குளிப்பட்டினார்கள் மேலும் ஹஜ்ரத் பாத்திமா அவர்கள் ஆடை மாற்றினார்கள் "
[நூல் -சிராத்தே முஸ்தகீம் பார்ஸி ,பக்கம் 164, ஹிஜ்ரி 1308,முஜ்தபை தில்லி பதிப்பகம்]
[ நூல் -சிராத்தே முஸ்தகீம்  உர்து ,பக்கம் 280,நவம்பர் 1956 ,மாலிக் சிராஜுதீன் சன்ஸ் லாகூர் பதிப்பகம் ]


Siraata e  Mustaqeem Urdu Pg 280



இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார் ,
"நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒரு மூத்த சகோதரரைப் போன்று தான் கண்ணியமளிக்கப்பட வேண்டும் "
[ நூல் - தக்வியத்துல் ஈமான் , பக்கம் 58].
"அல்லாஹ் நாடினால்  நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் போன்று கோடானு கோடி பேர்களை உருவாக்குவான்"
 [நூல் - தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 16]
 "பெருமானார் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறைந்த பிறகு மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள்." (அஸ்தக்பிருல்லாஹ் )
[நூல் - தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 59]


Taqwiyatul Eeman, page 58-59


இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார் ,
"அனைத்து அன்பியாக்களும்,இறைத்தூதர்களும் பயனற்றவர்கள்."
 [நூல் - தக்வியத்துல் ஈமான் ,பக்கம்29]
"ஒரு நபியை ஒரு மனிதனைப் போல மட்டும் தான் புகழ வேண்டும் ,இன்னும் அதற்கு குறைவாகவே புகழவேண்டும்"
[நூல் - தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 35]
"படைப்புகளில் மேலானவர்களான நபிமார்களும் ,கீழான பிற படைப்புகளும் ,எல்லாரும் இல்ம் என்னும் அறிவற்றவர்களாகவும் அறியாமையிலும் இருக்கிறார்கள் ." (அஸ்தக்பிருல்லாஹ் )
[நூல் - தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 3]
"ஒரு நபிக்கு தனது உம்மதிடம் உள்ள அந்தஸ்து ஒரு கிராம தலைவரைப் போன்று அல்லது நிலக்கிழார் போன்றது "
[நூல் - தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 61, பைஜே ஆம்,சதர் பஜார்,தில்லி பதிப்பகம் ] 
"படைப்புகளில் மேலானவர்களான நபிமார்களும் ,கீழான பிற படைப்புகளும், அல்லாஹ்வின் திருமுன் ஒரு செருப்பு தைக்கும் செம்மானை விட கீழாகவே உள்ளனர்" (அஸ்தக்பிருல்லாஹ் )
 [நூல் - தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 14]
"யாருடைய பெயர் முஹம்மது ,அலி என்று உள்ளதோ அவர்களுக்கு எதன் மீதும் அதிகாரம் இல்லை.ஒரு நபியோ அல்லது வலியோ அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது."
[நூல் - தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 41]
"நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது நுண்ணறிவை இழந்து விட்டார்கள் " (அஸ்தக்பிருல்லாஹ் )
 [நூல் - தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 55 ]
Taqwiyatul Eeman, page 55


இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார் ,
"எந்த முஸ்லிமும் நபிமார்களையும் ,வலிமார்களையும் அல்லாஹ்வின் படைப்புகளாகவும்,அடியாராகவும் ஏற்று பின்னர் அவர்களை வசீலாவாக்கி (இடைப்பொருள்) உதவி கோரி,நேர்ச்சை,காணிக்கை செலுத்தினால்  குப்ரில் அபுஜஹலுக்கு ஒப்பாவார்"
[நூல் - தக்வீயதுல் ஈமான்,பக்கம் 7 மற்றும் 27]
 "அல்லாஹ்வின் திருமுன் ,நபிமார்களும் வலிமார்களும் தூசுக்கு சமம் "
[நூல் -தக்வீயதுல் ஈமான்,பக்கம் 54 ]

மேற்கூரிய ஆதாரங்கள் தக்வீயதுல் ஈமான் பின்வரும் பதிப்புகளில் காணப்படும்

பாருகி பிரஸ் ,தில்லி  1895.
முஜ்தபை பிரஸ் ,தில்லி 1900.
கான்பூர் பதிப்பு 1905.
தில்லி பதிப்பு 1920.
ஜய்யெத் பிரஸ், 1937.
முஹ்சினி பிரஸ் ,கல்கத்தா 1954.
தேவ்பந்த் பதிப்பு 1976.
சல்பியாஹ் ,வாரணாசி 1986,1987.
பாம்பே பதிப்பு 1987.
ரியாத் பதிப்பு 1990 ( இது ஹஜ்ஜின் போது உர்து பேசும் மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது !!! )
முபரக்பூர் பதிப்பு 1997.


முழுமையான ஆதாரங்களுக்கு இங்கு க்ளிக் செய்யவும்




                                    அஸ்தக்பிருல்லாஹ் !!!



     
Related Posts Plugin for WordPress, Blogger...

Thursday 1 May 2014

ஹதீஸ்களின் வெளிச்சத்தில் வஹாபிகள் - 2

ஹதீஸ் எண் 11
  பின்னர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (எங்களை நோக்கி) இறுதிகாலத்தில் ஒரு கூட்டம் வெளிப்படும்.இவனும்(துல் குவைஸரா) அவர்களைப் போன்றவனே.அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்.ஆனால் அவை அவர்களது உதட்டளவோடு நின்றுவிடும்.அவர்கள் வில்லில் இருந்து வெளிப்படும் அம்பினைப் போல் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவர்.தலையைச் சிரைத்திருப்பது அவர்களது முக்கிய அடையாமாகும்.அவர்கள் கூட்டங்கூட்டமாக வெளிப்பட்டுக் கொண்டேயிருப்பர்.அவர்களின் இறுதிக் கூட்டம் தஜ்ஜாலுடன் இருக்கும்.நீங்கள் அவர்களை சந்திக்க நேருமாயின் அவர்கள் பிறப்பிலும்,குணஒழுக்கத்திலும் மிகமோசமான நடப்பாளர்களாக அவரகளைப் பெற்றுக் கொள்வீர்கள் எனக்கூறினர்.

அ-ர்: ஹஜ்ரத் ஷரீக் இப்னு ஷிஹாப் ரலியல்லாஹு அன்ஹு நூல்:மிஷ்காத்,பக்கம்-309.

 குறிப்பு:
       பனூ ஹனீஃப் என்ற கோத்திரத்தாருக்கு பனூ தமீம் என்னும் மற்றோர் பெயரும் இருக்கின்றதென்பதை தேவ்பந்திகளின் தலைவர் ஒருவர் கூரிடக் கேட்டோம். மேலும் இப்பூவுலகில் இறைவனின்  அருட்கொடைகளான நீதி,நேர்மை,நெறி,நியாயம்,கண்ணியம் போன்றவைகளின் தொகுப்பாளரான நபிகள் நாதருக்கே நியாயத்தை போதிக்க வந்த ‘ துல் குவைஸரா’ என்ற நயவஞ்சகன் பனூ தமீம் பரம்பரையில் வந்தவன் என்பதை ஹதீஸ் எண் 9 நமக்கு விளக்கிக் காட்டுகின்றது.
    இன்னும் அண்ணல் நபிகளாரையே நோக்கி ‘அல்லாஹ்விற்கு அஞ்சி நியாயமாக நடந்து கொள்ளுங்கள்’ எனக் கூறியோர் அக்காலத்திலேயே இருக்கும் பொழுது,இன்று பெருமானாரின் வாரிசுகளாக திகழும் சத்திய உலமாக்களையும்,வலிமார்களையும் குறை கூறுவோர் இக்காலத்தில் இருப்பதைக் கண்டு வியப்பெய்த வேண்டிய தேவையே இல்லை.
   மேலும் ஹதீஸ் எண் 7 முதல் 11 வரை உள்ளவற்றிலிருந்து அண்ணல் நபி நாதருக்கு விரோதியாக் இருந்த குலத்தார் பற்றியும்,அக்குலத்தலைவர் பற்றியும் அறிந்து கொள்ளப்படுவதுடன்,இறுதிக் காலத்தில் தோன்றும் கூட்டமும் இவர்களது பாரம்பரியத்திலிருந்தே வெளிப்படும் என விபரிக்கப்பட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்க ஒன்று .

ஹதீஸ் எண் 12
         அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர், ‘வருங்காலத்தில் என் சமூகத்தாரது மத்தியில் பிரிவினைவாதங்களும்,கருத்து மோதல்களும் உருவாகும்.அதில் ஒரு கூட்டத்தாரது சொற்கள் மிக அழகாகவும்,கவர்ச்சியாயும்,ஆனால் அவர்களது செயல் மோசமாகவும்,வழிதவறவைக்கக்கூடியதாகவும் இருக்கும்.அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள் ஆனால் அவர்கள் தொண்டைக்கு குழிக்குகீழே இறங்காது. நாணை விட்டுச் செல்லும்அம்பைப் போல அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவர்.அம்பு மீண்டும் நாணை நோக்கி திரும்பி வந்தாலும் வரலாம்.ஆனால் அவர்கள் மார்க்கத்தின் பால் திரும்பவே மாட்டார்கள்.
      அவர்கள் பிறப்பிலும்,நடைமுறை செயல்களிலும் மகாமோசமானவர்களாக இருப்பர். குரானின் பக்கமும்,மார்க்கத்தின்  பாலும் வருமாறு மக்களை அழைத்திடுவர்.ஆனால் அவர்களுக்கும் மார்க்கத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இருக்காது.யார் அவர்களுடன் போராடுவாரோ,அவர் அல்லாஹ்விற்கு மிக நெருங்கியவராக இருப்பார்.அவர்களது அடையாளம் என்ன ? இறைத் தூதரே ! அந்த நபித்தோழர்கள் வினவிட,மொட்டை அடித்திருப்பது அவர்களின் அடையாளமாகும் என்பதாக நபிகள் திலகம் நவின்றனர்.
அ-ர்: அபூ ஸயீதுல் குத்ரி ரலியல்லாஹு அன்ஹு நூல்: மிஷ்காத் பக்கம்:308

ஹதீஸ் எண் 13:
       இந்த ஹதீஸை அறிவிப்பவர் ஹஜ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.ஹதீஸைக் குறிப்பிடும் முன் அவர்கள் கூறுகின்றனர்,”அல்லஹ்வின் மீதாணையாக வானத்திலிருந்து பூமியில் வீழ்வது எனக்கு இலகுவானதே, ஆனால் நபிகள் நாதர் சொன்னதாக அவர்கள் மீது ஒரு பொய்யை இட்டுக்கட்டுதல் எனக்கு மிக மிக கடினமான ஒன்றாகும் எனக் கூறி அதன்பின் கீழ்காணும் ஹதீஸை அறிவிக்கின்றனர்.
       இறுதிக்காலத்தில் தெளிந்த ஞஆனமில்லாத வாலிபர்களைக் கொண்ட கூட்டமொன்று வெளிப்படும். அவர்கள் வெளித்தோற்றத்தில் சிறந்தமுறையில் பேசுவர்.ஆனால் அவர்களின் ஈமான் தொண்டைக் குழிக்குகீழே இறங்காது.வில்லை விட்டும் விரைந்தோடும் அம்பினைப்போல் இவர்கள் மார்க்கத்தைவிட்டும் வெளியேறிவிடுவர் என்பதாக அண்ணல் நபிகளார் நவின்றதை நான் செவியேற்றேன்.
      அ-ர்: ஹஜ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு நூல்:புஹாரி பாகம்:2 பக்கம் 1024

குறிப்பு:
     நானிலம் சிறக்க வந்த நபிகள் பிரான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் அறிவித்த அனைத்தையும் மனம்,வாக்கு,காயம் ஆகியவைகளால் முழு மனதுடன் நம்பிக்கைக் கொள்வது தான் ஈமான் ஆகும்.நாவினால் மொழிவது மட்டும் ஈமான் ஆகாது.ஆதலால் மேற்கூறப்பட்ட ஹதீஸில்,இறுதிக்காலத்தில் தோன்றும் இக்கூட்டத்தினரது ஈமான் வாயள்வில் தான் இருக்குமேயன்றி,உண்மையில் அவர்கள் விசுவாசிகளாக இருக்கமாட்டார்கள் என்பது தெளிவாகின்றது.

ஹதீஸ் எண் 14:
     இறுதிக் காலத்தில் எங்கு நோக்கிலும் புழு புச்சிகளைப் போன்று முல்லாக்கள்(போலி அறிஞர்கள்) திரிவார்கள்.உங்களில் எவராவது அக்காலத்தை அடையப் பெற்றால் அல்லாஹ்விடம்,அவர்களைவிட்டும் பாதுகாப்பு தேடிக்கொள்ளட்டும்”
அ-ர் : அபூ உமாமத்துல் பாலிஹி ரலியல்லாஹு அன்ஹு நூல்:ஹூலிய்யா ஷரீஃப்

ஹதீஸ் எண் 15
  அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (முஸ்லிம்களை நோக்கி) மக்களிடையே இப்படியும் ஒரு காலம் வரும்.அக்காலத்தில் உலக சம்பந்தமான விஷயங்களே பள்ளிவாயில்களில் பேசப்படும்.அத்தகைய ஓர் காலத்தை நீங்கள் பெற்றுக்கொண்டால் அவர்களுடன் (கலந்து) அமர வேண்டாம். அவர்களை விட்டும் அல்லாஹ் தேவையற்றவனாக் இருக்கிறான்.
அ-ர்:ஹஜ்ரத் ஹசன் பஸரீ ரலியல்லாஹு அன்ஹு நூல்:மிஷ்காத்

ஹதீஸ்களின் சுருக்கம்:
           இந்த ஹதீஸ்கள் ஒரு சாதாரண சமூகத் தலைவரால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் அல்ல. மாறாக இப்பிரபஞ்சத்தில் இது வரை நடந்த,நடந்து கொண்டுள்ள,நடக்கப் போகின்ற அனைத்தும் யாரால் வடிவமைக்கப்படுகின்றதோ, அந்த வல்லோனான அல்லாஹ்வினால் அவனது திருத்தூதரான நபிகள் நாதருக்கு விளக்கிக் காண்பிக்கப்பட்ட எச்சரிக்கைகளாகும்.கிழக்கில் தோன்றும் ஆதவன் ஒரு வேளை திடீரென தனது இயக்க நியதியை மாற்றிக்கொண்டு மேற்கிலிருந்து உதித்தாலும் உதிக்கலாம்.ஆனால் நபிகளாரது நாவினின்றும் வெளிப்பட்ட வார்த்தைகள் எக்காலத்திலும்,எந்தச் சூழ்நிலையிலும் யாருக்காகவும் மாறவே மாறாது.மாறவும் முடியாது.
  அவ்வாறு மாறிவிடும் பட்சத்தில் அவர்களால் யார் மூலம் நமக்கு இவ்வாறு எச்சரிக்கைகள் அறிவிக்கப்பட்டதோ,அந்த இறைவனையே நாம் நிராகரிக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிடும். ஏன் தெரியமா ? நபிகளாருக்குத் தெரிந்த பிற்காலத்தில் நடைபெறப்போகும் மறைவான விஷயங்கள் அனைத்தும், அல்லாஹ்வினால் நபிகளாருக்கு அறிவிக்கப்பட்டவைகளாகும்.இது பற்றி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும் போது,
  “இதுவரை உலகில் நடந்த,நடக்கின்ற,நடைபெறப்போகின்ற நிகழ்வுகள் எல்லாவற்றையும் இறைவன் எனக்கு மிஃராஜ் என்னும் விண்ணேற்றப் பயணத்தின் போது அறிவித்துத் தந்துவிட்டான்” என்று கூறியுள்ளனர்.
ஆகையால் அண்ணலெம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலகின் இறுதி நாள்வரை நிகழவிருக்கும் குழப்பங்களைப் பற்றியும்,அக்குழப்பங்களை தோற்றுவிக்கக் கூடியவர்களைப் பற்றியும்,அவர்கள் எந்தக் குலத்தைச் சார்ந்தவர்களாயிருப்பர் என்பதை பற்றியும் தெளிவாக சந்தேகத்திற்கிடமின்றி இனங்காட்டி தந்துவிட்டனர் என்பதை “அபூதாவூத் “ என்னும் ஹதீஸ் கிரந்தத்திலிருந்து அபூஹுதைபா ரலியல்லாஹு அன்ஹூவின் அறிவிப்பைக் கொண்டு விளங்கிக்கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட பதினைந்து ஹதீஸ்களும் உலகின் இறுதிக்காலத்தில் தோன்றும் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினரைப் பற்றியே அறிவித்துத் தருபவைகளாக இருப்பதை கொஞ்சம் ஊன்றி கவனித்தால் தெரிய வரும்.
Related Posts Plugin for WordPress, Blogger...