Thursday 24 November 2022

ஹிதாயத்துல் அனாம் இலாஜியாரத்தில் அவ்லியாஇல் கிராம்


 குத்புல் மஜீது,கருணைக்கடல்,நாகூர் எஜமான் நாயகம் قدس الله سره العزيز அவர்களது பேரப்பிள்ளை *அல்லாமா ஸெய்யது முஹம்மது பாக்கர் ஸாஹிப் ஆலிம் காதிரி நாகூரி* رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் அக்காலத்தில் தர்கா,ஜியாரத்,வஸீலா தேடுவது,உரூஸ் கொண்டாடுவது ,நேர்ச்சை செய்தல்,போர்வை போர்த்துவது,பூ,புஷ்பம் போடுவது குறித்து இதையெல்லாம் வழிகேடு என்று பிதற்றி்த் திரிந்தவர்களுக்கு மறுப்பாக எழுதிய ஆதாரப்பூர்வமான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் கொள்கை நூல் 📕 *" ஹிதாயதுல் அனாம் இலாஜியாரதில் அவ்லியாஇல் கிராம் "* .
 *1951* வெளிவந்த முதல் பதிப்பிற்கு பல்வேறு உலமாக்கள் சரிகண்டு ஒப்புதல் அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து 2வது பதிப்பிற்கும் பல்வேறு உலமாக்கள்,ஷெய்குமார்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் பின்வருமாறு  : - 

(1) அல்லாமா நஹ்வி முஹம்மது இஸ்மாயில் ஆலிம் முப்தி காஹிரி رَحِمَهُ ٱللَّٰهُ
(2)மஹ்ழரதுல் காதிரியா அரபுக்கல்லூரி முதர்ரிஸ் அல்லாமா முஹையத்தீன் தம்பி ஆலிம் رَحِمَهُ ٱللَّٰهُ
(3) காயல்பதி ஸாஹிபு தைக்கா அப்பா பிரமுகர் அல்லாமா முஹம்மது அப்துல்லாஹ் லெப்பை ஆலிம் ஸதகலி رَحِمَهُ ٱللَّٰهُ
(4)காயல்பதி முத்துவாப்பா வலி அவர்களது திருப்பேரர் கொம்பாலிம் என்ற அல்லாமா ஸூபி முஹம்மது இஸ்மாயில்  லெப்பை ஆலிம் رَحِمَهُ ٱللَّٰهُ.
(5) மதராஸ் அரசு காழி அல்லாமா முஹம்மது ஹபீபுல்லாஹ் ஸாஹிப் رَحِمَهُ ٱللَّٰهُ
(6) பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்,மஹ்ழரதுல் காதிரியா அரபுக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் அல்லாமா  உத்தமபாளையம் முஹம்மது  அபூபக்கர் கிப்லா ஹழ்ரத் رَحِمَهُ ٱللَّٰهُ
(7) ஷெய்கனா ஸூபி ஹழ்ரத் நாயகம் قدس الله سره العزيز
(8) உலகெங்கும் தாவா பணி செய்த ஷெய்கனா  மீரட் மவ்லானா அப்துல் அலீம் ஸித்தீகி قدس الله سره العزيز அவர்களது அருந்தவப் புதல்வர் அல்லாமா ஷாஹ் அஹ்மது நூரானி رَحِمَهُ ٱللَّٰهُ 

இன்னும் அநேக உலமாக்கள் இந்நூலுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

இந்நூலின் *முன்னுரையில்* ,அல்லாமா அஷ்ஷெய்கு ஸெய்யது முஹம்மது பாக்கர் ஸாஹிப் ஆலிம் நாகூரி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் நூல் எழுதப்பட்டதன் பிண்ணனியை பின்வருமாறு விளக்குகின்றனர்.

" எம்பெருமானார் ரசூலே கரீம்  ﷺ அவர்கள் நஜ்தைக் குறிப்பிட்டு, " இங்குதான் அதிர்ச்சிகளும், குழப்பங்களும் உண்டாகும். இங்கிருந்து தான் ஷைத்தானுடைய கொம்பு உதயமாகும் " என முன்னறிவிப்பு செய்தார்கள் ( மிஷ்காத்,ஸஹீஹ் புகாரி )

அவ்வாறாகவே சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு நஜ்து தேசத்தில் அப்துல் வஹ்ஹாபும் அவருடைய மகன் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் உண்டாயினர். அவ்விருவரையும் பின்பற்றியவர்கள் தான் மௌலவி இஸ்மாயில் திஹ்லவியும், அவரைச் சார்ந்தவர்களும் . அக்குழுவினர் இரு பிரிவாகப் பிரிந்தார்கள். வெளிரங்கமாக தங்களை வஹ்ஹாபிகள்  என்று காட்டிக் கொண்டவர்கள் ஒரு குழுவினர். அவர்கள் எந்த மத்ஹபைவயும் ஏற்று பின்பற்றாதவர்கள். வெளிரங்கத்தில் தங்களை வஹாபிகள் என்று காட்டிக்கொள்ளாமல் ,அந்தரங்கத்தில் வஹாபியாக இருக்கக்கூடியவர்கள் மற்ற குழுவினர். இவர்கள் ஹனபி - ஹன்பலி என வெளிக்கு மத்ஹபுகளில்  ஏதாவது ஒன்றினை பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டு முற்றிலும் வஹ்ஹாபிக் கொள்கைகளையே தங்கள் கொள்கையாகக் கொண்ட 'முகல்லிது' வேடதாரிகள்.

இவர்களில் முந்திய கூட்டத்தினரின் அபாயங்களை, விட பிந்திய இந்த கூட்டத்தாரின் அபாயங்கள் மிகவும் பயங்கரமானவை. ஏனெனில் இவர்கள் 'மத்ஹபு' என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு முஸ்லிம்களை வழிகேட்டில் ஆக்க முற்பட்டிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் நயவஞ்சக தந்திர உபாயத்தினால் ஸுன்னத் வல் ஜமாஅத் உடைய நல்ல கொள்கைகளில் ஆகி இருந்த அநேகர்களை பொல்லாங்குடைய  வஹ்ஹாபிய்யத்தான வழிகேட்டின் அளவில் இழுத்துப் போட்டு விட்டனர்.

வஹ்ஹாபிகளான  அவர்களது கொள்கை கூற்றுகளை பாருங்கள்: 

" முஹம்மது நபி  ﷺ அவர்கள் மரணித்து மண்ணோடு மண்ணாகுப் போய் விட்டார்கள். அவர்களுடைய ரவ்ழாவிற்கு ஜியாரத்திற்காகப் போவது ஷிர்க் ( இணைவைத்தல்)  ஆகவும்.

யா நபி! யா முஹம்மது ! யா ரஸூல்லல்லாஹ் ! என்று அழைத்துக் கூப்பிடுவது ஷிர்க்காகும்.அவ்விதம் அழைத்துக் கூப்பிடுபவர் காபிராக இருப்பார்.

முஹம்மது நபி  ﷺ அவர்கள் மறைவான சங்கதிகளை அறிய மாட்டார்கள்.தொழுகையில் அவர்களுடைய ஞாபகம் வருவதானது மாடு,கழுதையின் ஞாபகம் வருவதை விட மிகக் கெட்டதாகும்.அவர்களுடைய முஃஜிஸாத்து ( அற்புதங்களை) விட சூனியக்காரர்களின் சூனியம் அதிக சக்தி வாய்ந்தது. அவர்கள் ஷபாஅத் செய்வார்கள் என நம்புவது ஷிர்க்காகும்.

நபிமார்கள், அவுலியாக்களின் கப்ருகள்  புத்துகளுக்கு(விக்கிரகங்களுக்கு) ஒப்பாகும். அவைகளை தகர்த்து எறிய வேண்டும். அவர்களுக்கு எத்தகையோ சக்தியும் கிடையாது. அவர்கள் பால் உதவி தேடுதல் (வஸீலா) ஷிர்க்காகும். அவர்களுக்கு நேர்ச்சை செய்வது ஹராமாகும்.

சகல நபிமார்கள், ஸஹாபாக்கள், அவ்லியாக்கள் ஆகியவர்கள் அல்லாஹ்வின் தகுதிக்கு முன் செம்மானை விட கீழ்த்தரமானவர்கள்.

மீலாதுந் நபி கிருஷ்ண ஜெயந்திக்கு ஒப்பாகும்.

காதிரியா, ஜிஷ்தியா, நக்ஷபந்தியா முதலான தரீக்காக்கள் வழிகேடானவை.

மவ்லிது, பாத்திஹா, கத்தம் முதலானவற்றின் ஷீர்னி  ( உணவுப் பொருள்) ஹராமாகும்.

அவுலியாக்களின் பெயராலும், மவுத் தானவர்களின் பெயராலும் கத்தம் பாத்திஹா ஓதி அதன் பலனை அவர்கள் பால் ஈஸால் தவாப் செய்வது, பிராமண புரோகிதர்கள் அவர்களுடைய வேதத்தை ஓதி ஸ்லோகம் படித்து பிதுர்களுக்கு திதி செய்வது போன்றே ஆகும்." 

அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். மேற்சொன்னவகைகளும் அவை போன்ற தவறான நூற்றுக்கணக்கான கொள்கைகளும், வஹாபிகளின் வழிகேடான கொள்கைகளாகும். இத்தகைய வழிகெட்ட கொள்கைகள் பால் வஹாபிய மௌலானா, மவ்லவிகளும், மார்க்கத்தில் மறுமலர்ச்சிக் காண விரும்புவதாக சொல்லிக் கொள்பவர்களும், சமூகத்தில் சீர்திருத்தம் செய்வதாக தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள்களும், தாங்கள் வழிகேட்டில் இருப்பதை அறியாமல் ஏனைய முஸ்லிம் பெருமக்களை நேர்வழியில் ஆக்க முற்படுவதாக மனப்பால் குடித்துக் கொண்டு வழிகெடுக்க முற்படுகிறார்கள்.

கண்மணி நாயகம்  ﷺ அவர்கள் ," இப்லீசை நஜ்து தேசத்து செய்யக்கூடிய உருவத்திலே காண்பார்கள்"  என்ற விபரம் சரியாகவே இருக்கிறது.

நஜ்து தேசத்து வஹ்ஹாபி ஷைகு உடைய " *கிதாபுத் தவ்ஹீத்"* வின்  உர்து மொழி பெயர்ப்பு நூல்களாகிய *'தக்வியதுல் ஈமான்','ஸிறாத்துல் முஸ்தகீம்','இதுபாத்துத் தவ்ஹீத்'*  போன்ற ஆபாச மலக்குவியல்களிலிருந்து சிலவற்றை பொறுக்கி *'தவ்ஹீதோ இபாதத்'*  என்ற பெயரில் வடநாட்டு வஹ்ஹாபி மவ்லவி ஒருவர் உருதுவில் அச்சிட்டு இருக்கின்றார். அதை *'ஏகதெய்வ வணக்கம்'*  என்ற நாமத்தால் *தென்னாட்டு பாக்கவி ஒருவர்* தமிழாக்கம் செய்து இருக்கின்றார். அதை மற்றொரு 'பீடி மௌலவி' அச்சிட்டு இலவசமாக விநியோகம் செய்துள்ளார்.

மேலும் *'ஜியாரத்துல் குஃப்ர்' , 'அவ்லியாக்களை அவமதிப்பதிக்காதீர்' ,'* *மகான் ஷாகுல் ஹமீத்',' ஏக தெய்வ வணக்கம்'* முதலான சில்லறைத் துக்கடாப் பிரசுரங்கள்- அதிக விஷத்தை உடைய நச்சரவத்திற்கு நல்ல பாம்பு என்று பெயர் உள்ளது போல - வஹ்ஹாபிய விஷ வித்துகளைக் கொண்ட மேற்சொன்ன நூற்கள் பெயரால் கவர்ச்சிகரமான பெயர்களை சூட்டிக் கொண்டு நஜ்து  சைத்தானிய பணியை தென்னாட்டில் செய்து வருகின்றன. இத்தகைய கொள்கை கெட்டவர்கள் தங்களை வஹாபிகள் என்று சொல்லிக்கொள்வார்களானாலும் பரவாயில்லை. ஆனால், இவர்களோ அவ்வாறு சொல்லாமல் தங்களை ஸுன்னத் ஜமாஅத்தார்கள் என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள், எனவே தான் இவர்களுக்கு எதிர்ப்பும் மறுப்பும் ஏற்படுகின்றன. உள்ளொன்று புறமொன்றுமாயிராமல் வெளிக்கும் தங்களை வஹ்ஹாபிகள்  என்று பகிரங்கமாக அறிவித்து தங்களது வஹ்ஹாபியக் கொள்கைகளை இவர்கள் பரப்பினால் இவர்களை யார் ஆட்சேபிக்க போகின்றார்கள் ! " 

               *****************
1950 களில் இப்பிரச்சாரம் செய்த கூட்டம் நிச்சயம் பீஜேவின் தவ்ஹீத் ஜமாத் அல்ல. அவர்களுக்கு முன்னரே அட்சரம் பிசகாமல் அதே கொள்கையை பரப்பிய தப்லீக் தேவ்பந்தி வஹாபிகளை மட்டும் கண்டும் காணாமல் செல்வது நியாயமா ???
இது தான் தீனுக்கு ஸுன்னத் ஜமாத் உலமாக்கள் என்று கூறிக் கொள்பவர்களது சேவையா???ஏனிந்த இரட்டை வேடம் ???
ஒரே கொள்கையை மத்ஹபை மறுக்கும் பீஜே தவ்ஹீத் கூட்டம் சொன்னால் தவறு ,தப்லீக் தேவ்பந்திகள் கூறினால் எங்கள் அகாபிர் என்ற சப்பைக்கட்டா ???எதற்கு இந்த இரட்டை வேடம் ??? கேவலம் அழிந்து போகும் உலகாதாயங்களுக்காகவா ???
Related Posts Plugin for WordPress, Blogger...