Saturday 26 October 2019

ஷியாக்களின் மீதான தேவபந்திகளின் பாசம்

தேவ்பந்திகளின்  மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியை பொறுத்தமட்டில் அண்ணலெம் பெருமான் அவர்களின் உத்தம தோழர்களை சாபமிடுபவன் ,அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தை விட்டும் வெளியேறிவனாகி விடமாட்டான் ! 

பாகிஸ்தான் பதிப்பு  : 


ரஷீத் அஹ்மத் கூறுகின்றார் ;

" உரூஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை ஒருவர் கட்டாயம் (இல்திசாம் )என்று கருதி செய்தாலும் அல்லது விருப்பப்பட்டால் கலந்து கொள்ளலாம் என்று நினைத்தாலும் சரி, உரூஸ் கொண்டாடுவது பித்அத் ,அனுமதியில்லாத செயல் . தேதி குறிப்பிட்டு ஜியாரத்தில் ஒன்று கூடுவது பாவம் , அதில் வேறு விஷயங்கள் இல்லாவிட்டாலும் கூட (கவ்வாலி ,ஸமா ) . பெருமானாரின் ஸஹாபாக்களை யாரேனும் தக்ஃபீர் செய்தால் ,அவன் சபிக்கப்பட்டவன் ,அத்தகைய நபரை இமாமத் செய்ய அனுமதிக்க கூடாது . இன்னும் அவன் தன்னுடைய இந்த பெரும் பாவம் (கபீரா குனாஹ் ) காரணமாக அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தை விட்டும் வெளியேறிவனாகி விடமாட்டான் . அன்புடைய முஹம்மத் யஹ்யா ,ஸலாம் . என்னிடம் இல்முல் கைப் பற்றி 2-3 நூற்கள் உள்ளன . இன்னும் பராஹீனே காத்தியா நூலும் இல்முல் கைப் பற்றியும் ,உரூஸ் பற்றியும் கையாள்கிறது . "

இந்திய பதிப்பு 1: 




இந்திய பதிப்பு 2: 




சமீபத்திய பதிப்பு (திரிக்கப்பட்டது ) : 




இது பழைய பாதிப்புகளைப் போன்றே பதில்கள் உள்ளன .எனினும் வெளியேறிவிட மாட்டான் என்பது திரிக்கப்பட்டுள்ளது . 

" உரூஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை ஒருவர் கட்டாயம் (இல்திசாம் )என்று கருதி செய்தாலும் அல்லது விருப்பப்பட்டால் கலந்து கொள்ளலாம் என்று நினைத்தாலும் சரி, உரூஸ் கொண்டாடுவது பித்அத் ,அனுமதியில்லாத செயல் . தேதி குறிப்பிட்டு ஜியாரத்தில் ஒன்று கூடுவது பாவம் , அதில் வேறு விஷயங்கள் இல்லாவிட்டாலும் கூட (கவ்வாலி ,ஸமா ) . பெருமானாரின் ஸஹாபாக்களை யாரேனும் தக்ஃபீர் செய்தால் ,அவன் சபிக்கப்பட்டவன் ,அத்தகைய நபரை இமாமத் செய்ய அனுமதிக்க கூடாது . இன்னும் அவன் தன்னுடைய இந்த பெரும் பாவம் (கபீரா குனாஹ் ) காரணமாக அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தை விட்டும் வெளியேறிவனாகி விடுவான்  . அன்புடைய முஹம்மத் யஹ்யா ,ஸலாம் . என்னிடம் இல்முல் கைப் பற்றி 2-3 நூற்கள் உள்ளன . இன்னும் பராஹீனே காத்தியா நூலும் இல்முல் கைப் பற்றியும் ,உரூஸ் பற்றியும் கையாள்கிறது . "

ரஷீத் அஹ்மத் கங்கோஹி ஷியாக்களை காபிர் என்று கருதியவர் அல்லர் 

"
ஷியாக்களை காபிர் எனக் கருதுவோர் அவர்களின் மைய்யத்தை துணியால் சுற்றி ,கபரில் அடக்கம் செய்வர் . ஷியாக்களை பாஸிக் என்று கருதுபவர் ,அவர்களின் மரித்த உடலுக்கு முறையான இஸ்லாமிய சடங்குகளை செய்வர் . நான் அவர்களை தக்ஃபீர் செய்வது இல்லை "

இன்னும் ,  ரஷீத் அஹ்மத் கங்கோஹி ஸஹாபாக்களை ஒரு முஸ்லீம் சாபமிட்டால் அவன் பாவியாவான் (அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தை விட்டும் வெளியேறிவிடமாட்டான் ) 


"அபூ ஸுஃப்யான் மற்றும் இக்ரிமா அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள் .இன்னும் இக்ரிமா அவர்கள் பல ஜிஹாதுகளில் கலந்து கொண்டார்கள் . அஸத் அல் காபாவில் எழுதப்பட்டுள்ளது , ஸஹாபாக்களை அவமரியாதை செய்பவன் பாஸிக்   . " 
Related Posts Plugin for WordPress, Blogger...

Wednesday 23 October 2019

அன்வார் ஏ ஸாதியா தர் பயான் ஏ மவ்லுத் வ பாத்திஹா

அன்வார் ஏ ஸாதியா தர் பயான் ஏ மவ்லுத் வ பாத்திஹா 

Anwar-e-Satia Dar Bayan-e-Molood Wa Fatiha


                                                  [download link: PDF]


ஆசிரியர் : அல்லாமா முப்தி முஹம்மத் அப்துல்  ஸமி  'பே தில்' ஸஹரான்பூரி رحمه الله  (மறைவு  1318 ஹிஜ்ரி )  

ஆரம்பகால கல்வி :  அல்லாமா ரஹ்மத்துல்லா கீரான்வி முஹாஜிர் மக்கி رحمه الله  (மத்ரஸா ஸவ்லாதியாவின் நிறுவனர்  ,மக்கா முக்கரமா  ,மறைவு 1308 . மவ்லானா அஹ்மத் அலி முஹத்திஸ் ஸஹரான்பூரி  , மவ்லானா ஷைகு முஹம்மத் தான்வி , முஹம்மத் காஸிம் நானோத்வி .

மேற்படிப்பு :  சத்ர் அல் ஸுதுர் மவ்லானா முப்தி சத்ருத்தீன் ஆஸர்தா  திஹ்லவி .
கவிதை  :  மிர்சா அஸதுல்லாஹ் கான் காலிப் திஹ்லவி .  'பே-தில்'   என்று புனைபெயர் (தகல்லுஸ்  ) சூட்டிக் கொண்டார் .

ஆன்மீக ஆசான் : ஷைக் அல் மஷாயிக் மவ்லானா இம்தாதுல்லாஹ் பாரூக்கி ஜிஷ்தி தான்வி முஹாஜிர் மக்கி رحمه الله  (மறைவு  1317 ஹிஜ்ரி ) . இன்னும் தனது ஷைகிடம் இஜாஸத்தும் ,கிலாபத்தும் பெற்றார்கள் . அன்னாரின் ஷெய்கு அவர்களும் இன்னும் பல கலீபாக்கள் இருந்தனர்  .அவர்களுள் சிலர் : மவ்லானா லுத்புல்லாஹ் அலிகரி (மறைவு 1334 ஹிஜ்ரி ) , மவ்லானா அஹ்மத் ஹசன் கான்பூரி (மறைவு 1322 ஹிஜ்ரி ) , முஹம்மத் காஸிம்   நானோத்வி  (மறைவு 1297), ரஷீத் அஹ்மத் கங்கோஹி (மறைவு 1322) , அஷ்ரப் அலி தான்வி (மறைவு 1362)   .

இறுதியாக குறிப்பிடப்பட்ட மூவர் வழிதவறிவர்களாகி , தமது ஆன்மீக வழிகாட்டியாகிய  ஷெய்கு  இம்தாதுல்லாஹ்  ஜிஷ்தி  முஹாஜிர் மக்கி رحمه الله  அவர்களின் போதனைகளுக்கு மாற்றாக நடந்தனர் .

மறைவு : அல்லாமா முப்தி முஹம்மத் அப்துல்  ஸமி  'பே தில்' ஸஹரான்பூரி رحمه الله   அவர்கள் மிராத் என்னும் ஊரில் , ஹிஜ்ரி 1318ல்  துனியாவை விட்டும் மறைந்தனர் .


படைப்புகள் :  1. நூரே ஈமான் (கவி)  , 2 .சல்ஸபில்  (கவி)  , 3.ராஹத் ஏ குலூப் , 4 .பஹார் ஏ ஜன்னத் , 5 .மல்ஹர் ஏ ஹக் , 6. ஹம்த் ஏ பாரி , 7.  அன்வார் ஏ ஸாதியா தர் பயான் ஏ மவ்லுத் வ பாத்திஹா , 8. தாஃபி அல் அவ்ஹாம் பீ மஹ்பில்   கைர் அல் அனாம் , 9. கவ்ல் அல் நபி பி தஹ்கீக் அஸ்ஸலாமு அழைக்க அய்யுஹன் நபி  . 


அன்வார் ஏ ஸாதியா தர் பயான் ஏ மவ்லுத் வ பாத்திஹா  நூல் எழுதப்பட்டதன் வரலாற்று பின்னணி : 


 தேவ்பந்தின் உலமாக்களும் ,கைர் முகல்லிதுகளும் இணைந்து நான்கு பக்க பத்வா ஒன்றை ஹிஜ்ரி  1302ல் (1884) வெளியிட்டனர் (ஹாஷ்மி பிரஸ் , மிராத் ) . இந்த சிறிய கையேடு  , " பத்வா மவ்லூத் வ உரூஸ் வகைறா " என்னும் தலைப்பிட்டு வெளிவந்தது . அந்த பத்வா மீலாத் கொண்டாடுவதை பித்அத் என்றும் ,வழிகேடு என்றும் கூறியது .

இந்த பத்வாவுக்கு ஒப்புதல் அளித்தவர்கள், மூன்று கைர் முகல்லித் அறிஞர்கள் ; ஹாபிதுல்லாஹ் , ஷரீப் ஹுசைன் , மற்றும் இலாஹி பக்ஷ் மற்றும் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின்  அறிஞர்கள் ;  முஹம்மத் யாகூப் ( மத்ரஸா தேவ்பந்தின் தலைமை ஆசிரியர் ) ,முஹம்மத் மஹ்மூத் ஹசன் தேவ்பந்தி , முஹம்மத் அப்துல் ஹாலிக் தேவ்பந்தி , ரஷீத் அஹ்மத் தேவ்பந்தி.

அதன்பிறகு சில மாதங்கள் கழித்து , மற்றுமொரு 24 பக்க பத்வா மீலாத் கொண்டாடுவதை மறுத்து வெளியிடப்பட்டது . அதனுடன் முன்னர் வெளியிடப்பட்ட நான்கு பக்க பத்வாவும் இந்த புதிய கையேட்டில் இணைக்கப்பட்டது .

இந்த பத்வாக்கள் முஸ்லிம்களிடையே குழப்பத்தையும் , ஒழுங்கின்மையையும் ஏற்படுத்தின .அப்பகுதியில் இருந்த  பெரும்பாலான முஸ்லிம்கள், ஷைக் அல் மஷாயிக் மவ்லானா இம்தாதுல்லாஹ் பாரூக்கி ஜிஷ்தி தான்வி முஹாஜிர் மக்கி رحمه الله  அவர்களின் மாணவர்களாகவும் , முரீதுகளாகவும் இருந்தனர் . 

கால சூழ்நிலைகளின் காரணமாக ஷைக் இம்தாதுல்லாஹ்  முஹாஜிர் மக்கி رحمه الله   அவர்கள் மக்கா முகர்ரமாவிற்கு ஹிஜ்ரி 1276ல்(1859)  ஹிஜ்ரத் செய்தனர் . எனவே முஸ்லிம்கள் ஷெய்கு இம்தாதுல்லாஹ்  முஹாஜிர் மக்கி رحمه الله   அவர்களது நெருங்கிய கலீபா ,அல்லாமா முப்தி முஹம்மத் அப்துல்  ஸமி  'பே தில்' ஸஹரான்பூரி رحمه الله  அவர்களின் உதவியை நாடினர் .

எனவே இப்பெருந்தகை தமது கடமையை நிறைவேற்றும் பொருட்டு , 'அன்வார் ஏ ஸாதியா தர் பயான் ஏ மவ்லுத் வ பாத்திஹா'  என்னும் நூலை எழுதி ஆதாரமற்ற ஆட்சேபனைகளுக்கு பதில் அளித்தார் . இந்த புத்தகம் பதிப்பித்து சில நாட்களில் ,எல்லா பிரதிகளும் விநியோகிக்கப்பட்டன . இந்நூல் பல்வேறு தரப்பினரால் சிறப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டு , அநேகர் உள்ளங்களில் ஈடில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியது .

தேவ்பந்தின் தப்லீக் ஜமாத்தின்  அறிஞர்களும் நூலினை படித்தார்கள் ,அது தங்களின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்துவிடும் என்றும் அறிந்தனர் . அவர்கள் அந்நூலுக்கு மறுப்பாக , 'அல் பராஹீனே காத்தியா அலா தலாம் அல் அன்வார் அல் ஸாத்தியா ' என்னும் நூலினை எழுதினர் . இந்த நூலினை ரஷீத் அஹ்மத் கங்கோஹி எழுதி , அதனை தனது மாணவர் கலீல் அஹ்மத் சஹரான்பூரியின்(மறைவு 1346 ஹிஜ்ரி )  பெயரில் வெளியிட்டார்.

al-Barāhīn al-Qaţi’ah

ரஷீத் அஹ்மத் கங்கோஹி ,மீலாத் ,உரூஸ்  பித்அத் ,அனுமதியல்லாத செயல் என்று கூறியதுடன் மட்டுமல்லாது அதற்கப்பாலும் எல்லை மீறி , மீலாதை கொண்டாடும் இஸ்லாமியர் காபிர்களை விடவும் மோசமானவர்கள் என்று குறிப்பிட்டார் . இது மட்டுமல்ல , அவர் அதற்கு மேலும் சென்று , தனது  நூலில் மேற்கோள் காட்டியவை :

1. அல்லாஹ் பொய் சொல்லவது  சாத்தியம்  (பக்கம் 10 )

2. அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஓர் சாதாரண மனிதர் (பக்கம் 12)

3.நாயகம் அவர்களின் ஞானத்தை விடவும் ,ஷைத்தானுக்கும் ,மலக்குல் மவ்த்துக்கும் அதிகமான ஞானம் உண்டு .இன்னும் ஷைத்தானின் ஞானத்தை பற்றிய ஆதாரங்கள் குர்ஆனில் உள்ளது ,எனினும் இத்தகைய ஆதாரங்கள் நாயகம் அவர்களின் பேரில்  இல்லை .இன்னும் இவ்வாறு ஷைத்தானின் ஞானம் பற்றி நம்பிக்கை கொள்வது ஷிர்க் அல்ல , ஆனால் நாயகம் அவர்களின் பேரில் நம்பிக்கை கொள்வது ஷிர்க் . (பக்கம் 120 ) .

4.கண்மணி நாயகம் அவர்களுக்கு தமது அந்திம நிலை என்னவென்று தெரியவில்லை . (பக்கம் 121 )

5. நாயகம் அவர்கள் உர்து மொழியை தேவ்பந்தின் அறிஞர்களிடம் கற்றார்கள் . (பக்கம் 63 )  

மேலும் இந்நூல் அல்லாமா முப்தி முஹம்மத் அப்துல்  ஸமி  'பே தில்' ஸஹரான்பூரி رحمه الله  அவர்களை சாபமிடுவதை கொண்டே நிரப்பினர் .

மறுபுறம் , 'அன்வார் ஏ ஸாதியா ' நூல் ஷெய்கு இம்தாதுல்லாஹ்  முஹாஜிர் மக்கி رحمه الله   அவர்களை அடைந்தது . அந்நூலை முழுவதும் படித்த பின்னர் 
ஷெய்கு இம்தாதுல்லாஹ்  முஹாஜிர் மக்கி رحمه الله   அவர்கள் தமது ,முரீதும் ,கலீபாவுமான முப்தி முஹம்மத் அப்துல்  ஸமி  'பே தில்' ஸஹரான்பூரி رحمه الله  அவர்களது பணியை பாராட்டி கடிதம் எழுதினார்கள் . ( 22 ஷவ்வால் ,ஹிஜ்ரி 1302 / 1886 தேதியிடப்பட்டது ) .


 ஷெய்கு இம்தாதுல்லாஹ்  முஹாஜிர் மக்கி رحمه الله   அவர்கள் 'அன்வார் ஏ ஸாதியா ' நூலின் இரண்டாம் பதிப்பில் கடுமையான சொற்பிரயோகத்தை தவிர்க்குமாறும் ,தமக்கு மேலும் பல பிரதிகள் அனுப்புமாறும் கூறினர் .

இதனால் ஹிஜ்ரி 1306ல் , அல்லாமா முப்தி முஹம்மத் அப்துல்  ஸமி  'பே தில்' ஸஹரான்பூரி رحمه الله  அவர்கள் கடுமையான சொல்லாடலை தவிர்த்து புத்தகத்தை பதிப்பிட்டார்கள் . அதனை பின்னர் பல பகுதிகளுக்கும் அனுப்பினார்கள் .

தமது கலீபாக்களுக்கு இடையே வேறுபாடுகள் வெடிப்பதைக் கண்ட ,ஷெய்கு இம்தாதுல்லாஹ்  முஹாஜிர் மக்கி رحمه الله   அவர்கள் , முஸ்லிம்களிடையே பிரிவினையை உண்டாக்கிய ,இவ்வேறுபாடுகளைக் களைய ஓர் கையேட்டினை வெளியிட்டார்கள் .


Faysal-e-Haft Mas’alah

'பைஸ்லா ஹப்த் மஸ்அலா' என்னும் அந்த நூல் ஏழு சர்சைக்குள்ளான விஷ்யங்களைப் பற்றியது : 

1. மீலாத் 
2.பாத்திஹா 
3.உரூஸ் ,ஸமா 
4.யா ரஸூலல்லாஹ் என்று அழைப்பது 
5.இரண்டாவது ஜமாஅத் 
6.இம்கான் ஏ நதீர் 
7.இம்கான் ஏ கித்ப் 

 'பைஸ்லா ஹப்த் மஸ்அலா' என்னும்  நூல்  கிடைக்கப்பெற்றதும் , தேவ்பந்தி அறிஞர்கள் அதனை தீயில் இட்டு கொழுத்தி விட்டு ,தங்களது ஆன்மீக வழிகாட்டியாகிய  ஷெய்கு இம்தாதுல்லாஹ்  முஹாஜிர் மக்கி رحمه الله   அவர்களது கொள்கைகளுக்கு எதிராக வழிகெட்டு சென்றனர் .

இந்த சம்பவம்  பற்றிய ஓர் பதிவு தமிழகத்தில் இந்த தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் போலி தரீக்காவை சேர்ந்த ஆரணி பாவா என்ற கமாலுத்தீன் பாகவி எழுதிய 'தேவ்பந்தின் 200 வருட இறைநேசர்கள் 'என்ற நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது .   .  

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்களுக்கு 'அல் பராஹீனே காத்தியா ' நூல் கிடைக்கப்பெற்றதும் அவர்கள் அறைகூவல் இட்டனர் . மவ்லானா குலாம் தஸ்தகீர் குஸுரி ,கலீல் அஹ்மத் அம்பேத்வியை முனாஜாராவிற்கு அழைத்தார்கள் .

இந்த முனாஜாரா ஹிஜ்ரி 1306ல் ஷவ்வால் மாதம் , பஹவல்பூரில் நடைபெற்றது . தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் இந்த விவாதத்தில் மண்ணை கவ்வினர் . அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள்  'கலீல் அஹ்மத் அம்பேத்வியும் ,அவரது சக  அறிஞர்களும் வஹாபிகள் என்றும் ,அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தை விட்டும் விலகியவர்கள் என்றும் ' முடிவு செய்யப்பட்டது .

மேற்சொன்ன விவாதம் பற்றிய சம்பவங்களும் , குறிப்புகளும் 'தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத் வ கலீல் ' என்று ஓர் நூல் வடிவில் பதிவு செய்யப்பட்டது . 
Taqdīs al-Wakīl ‘An Tawhīn al-Rashīd wa al-Khalīl


                                                  [download link: PDF]

'அன்வார் ஏ ஸாதியா தர் பயான் ஏ மவ்லுத் வ பாத்திஹா'   நூலுக்கு ஒப்புதல் அளித்த சமகால அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள் :

1.அபுல் ஹஸனாத் மவ்லானா அப்துல் ஹை லக்னவி பிரங்கி மஹல்லி رحمه الله  (மறைவு ஹிஜ்ரி 1304) 

2. மவ்லானா பைஜூல் ஹசன் சஹரான்பூரி (மறைவு ஹிஜ்ரி 1304) 

3.மவ்லானா ரஹ்மத்துல்லாஹ் கீரான்வி முஹாஜிர் மக்கி رحمه الله  (மறைவு ஹிஜ்ரி 1308) 

4.மவ்லானா முப்தி முஹம்மத் இர்ஷாத் ஹுசைன் முஜத்திதி ராம்பூரி رحمه الله  (மறைவு ஹிஜ்ரி 1311) 

5.மவ்லானா குலாம் தஸ்தகீர் குஸுரி(மறைவு ஹிஜ்ரி 1315) 

6.ஷெய்கு இம்தாதுல்லாஹ்  முஹாஜிர் மக்கி رحمه الله   (மறைவு ஹிஜ்ரி 1317) 

7.தாஜுல் புஹுல் மவ்லானா அப்துல் காதிர் பதாயூனி رحمه الله  (மறைவு ஹிஜ்ரி 1319)   

8.மவ்லானா வகீல் அஹ்மத் ஹனஃபி சிக்கந்தர்புரி (மறைவு ஹிஜ்ரி 1322) 

9.மவ்லானா முஹம்மத் பாரூக் அப்பாஸி சார்யகோடி (மறைவு ஹிஜ்ரி 1327)  

10.மவ்லானா அபூ முஹம்மத் அப்துல் ஹக் ஹக்கானி திஹ்லவி (மறைவு ஹிஜ்ரி 1335) 

11.மவ்லானா முஹம்மத் அப்துல் மஜீத்  பிரங்கி மஹல்லி (மறைவு ஹிஜ்ரி 1340) 

12.இமாம் அஹ்மத் ரிழா கான் காதிரி பரேல்வி رحمه الله   (மறைவு ஹிஜ்ரி 1340) 


 




Related Posts Plugin for WordPress, Blogger...