Thursday 16 November 2017

முதன்முதலாக தக்பீர் (تكفير‎‎ ) செய்தது யார் ?

நவீன கால தேவ்பந்தி வஹாபிகளின் மற்றோரு மோசடிப் பிரச்சாரம் , இமாம் அஹ்மத் ரிழா கான் காதிரி பரேலி   رضي الله عنه அவர்கள் தான் பரேலி உலமாக்கள் ,தேவ்பந்தி உலமாக்களிடையே பிரிவினை உண்டாக முதல் காரணம் என்று கூறி பொய் பிரச்சாரம் செய்வது .  அறியாமையை தனது குணமாகக் கொண்ட முட்டாளை அன்றி வேறு யாரும் இவ்வாறு பிதற்றித் திரிவதில்லை .

இந்த பொய் பிரச்சாரத்தின் உண்மை தன்மை என்னவென்று ஆய்வு செய்வோம் :

இஸ்மாயில் திஹ்லவி முஸ்லிகளால் பால்கோட்டில் , கொல்லப்பட்டது 1831 ஆம் ஆண்டு . மாறாக இமாம் அஹ்மத் ரிழா கான் பரேலி  رضي الله عنه  அவர்கள்  பிறந்தது 1856 ஆம் ஆண்டு , சுமார் 25 ஆண்டுகள் கழித்து .

இனி 'பிரிவினையின் மூல காரணம் யார் ? ' என்ற கேள்விக்கு விடை அளிக்கும் விதமாக , இஸ்மாயில் திஹ்லவி தனது நூலான 'தக்வியத்துள் ஈமான் ' பற்றி அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தை காண்போம் . இன்றளவும் தேவ்பந்தி வஹாபிகளால் அச்சிடப்படும் நூல் . அவர்களால் ஐனுல் இஸ்லாம் என்று கொண்டாடப்படும் நூல் 'தக்வியத்துள் ஈமான் '.
தக்வியத்துள் ஈமான்

இந்த வாக்குமூலத்தை  தேவ்பந்தி வஹாபி பிர்காவின் ஹக்கீமுல் உம்மத் அஷ்ரப் அலி தானவி தமது நூலான 'ஹிகாயத்துள் அவ்லியா ' வில் பதிவு செய்துள்ளார் .
ஹிகாயத்துள் அவ்லியா 
பக்கம் 83

பக்கம்  84

" உபகதை  59 :   கான் ஸாஹிப் கூறினார்கள் மவ்லவி இஸ்மாயில் திஹ்லவி , தக்வியத்துள் ஈமான் நூலை அரபியில் எழுதினார்கள் . அதனால் அதன் ஒரு பிரதி என்னிடமும் ,மற்றோரு பிரதி மவ்லவி ரஷீத் அஹமத் கங்கோஹியிடமும் ,மற்றுமொன்று பிரதி மவ்லவி நஸ்ருல்லாஹ் கான் குஜருவியின் நூலகத்திலும் இருந்தது . எனவே மவ்லனா அதை உர்துவில் மொழிபெயர்த்து , புகழ்பெற்ற ஆளுமைகளான செய்யத் மவ்லவி அப்துல் ஹை சாஹிப் , ஷாஹ் இஷ்ஹாக் சாஹிப் , மவ்லானா முஹம்மது யாகூப் சாஹிப் ,மவ்லவி பரீதுத்தீன் சாஹிப் முராதாபாதி ,முஃமீன் கான் மற்றும் அப்துல்லாஹ் கான் அலவி ஆகியோரை   ஒன்று திரட்டினார் .

அவர்கள் முன் தக்வியத்துள் ஈமான் சமர்ப்பிக்கப்பட்டது . அவர் கூறினார்  ,' நான் இந்த நூலை எழுதியுள்ளேன் . இன்னும் இதில் சில இடங்களில் சிந்தனையற்ற வார்த்தைகள் சேர்த்துள்ளதை அறிவேன் . சில இடங்கள் கொடுமையானவை ,உதாரணமாக ,ஷிர்க் ஏ காஃபி என்று சொல்லப்படுபவை ஷிர்க் ஏ ஜலீல் என்று பெயரிடப்பட்டுள்ளது . இதன் காரணமாக எனக்கு உண்டாகும் பயம் என்னவென்றால் இந்த நூல் பதிப்பிக்கப்பட்டால் நிச்சயமாக குழப்பமும் ,அமளிகளும் உண்டாகும் .

நான் இங்கு தங்கினேன் என்றால் ,இதைபற்றி எட்டுஅல்லது பத்து வருடங்களுக்கு விளக்கம் அளிப்பேன் , எனினும்  நான் இப்பொழுது ஹஜ் செய்ய நாடியுள்ளேன் , திரும்பிய பின்னர் ஜிஹாத் செய்வதே எனது நோக்கம் . எனவே என்னை இந்த வேலையை விட்டும் தவிர்க்கின்றேன் , என்னும் என்னைத் தவிர வேறு யாரும் இந்த முயற்சியை செய்ய முன் வரமாட்டார்கள் . எனவே தான் இந்த நூலை எழுதியுள்ளேன் , பிரச்சனைகள் உண்டாகும் எனினும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்ட பின் சில காலத்தில் அமைதியாகி விடுவார்கள் என்று நம்புகிறேன் .

இதுவே எனது கவலை . நீங்கள் விரும்பினால் இதை பதிப்பித்து வெளியிடுவோம் அல்லது அளித்து விடுவோம் . அப்பொழுது கூடி இருந்தவர்களில் ஒருவர் சில இடங்களில் திருத்தம் செய்து வெளியிடுவோம் என்றார் . மவ்லவி அப்துல் ஹை சாஹிப் , ஷாஹ் இஷ்ஹாக் சாஹிப் ,முஃமீன் கான் மற்றும் அப்துல்லாஹ் கான் அலவி ஆகியோர் திருத்தம் செய்து தொகுத்து வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் .

அதன் பின்னர் அனைவரும் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தி , திருத்தம் செய்வது தேவை இல்லை , நூல் அதன் மூல வடிவிலேயே வெளியிட வேண்டும் என்று முடிவு செய்து , அதன் பின்னர்  அது இவ்வாறு பதிப்பிக்கப்பட்டது . நூல் வெளியான பின் மவ்லவி இஸ்மாயில் ஹஜ்ஜுக்கு சென்று , திரும்பி வந்ததும் தில்லியில் தங்கினார் . இந்த காலத்தில் தில்லியின் தெருக்களிலும் ,சந்துகளில் மவ்லவி இஸ்மாயில் பிரச்சாரம் செய்தார் . மவ்லவி அப்துல் ஹை சாஹிப் பள்ளியில் ஆறு மாத காலம் தங்கிய பின் ஜிஹாதுக்கு கிளம்பினார் . இந்த செய்தியை நான் மவ்லவி அப்துல் கைய்யும் சாஹிப் மற்றும் எனது ஆசிரியர் மியாஜி முகம்மதி சாஹிப் அவர்களிடமும் இருந்து கேட்டறிந்தேன் "

[ நூல்- ஹிகாயத்துள் அவ்லியா (அர்வாஹே தலாதா  ) , உபகதை எண் 59, அஷ்ரப் அலி தானவி , ஜக்கரிய்யா புத்தக நிலையம் , தேவ்பந்த் , ஸஹரான்பூர் , உ .பி ,இந்தியா , பக்கம் 83-84 ]   

   எந்த அறிவார்ந்த முஸ்லிம் இஸ்லாமியரிடையே குழப்பத்தை உண்டாக்கும் புத்தகத்தை முன்னரே கணித்து எழுதுவார் ?

இது எந்த மாதிரியான ஒரு இதயம் , இஸ்லாமியரிடையே சகோதரத்துவத்தையும் ,நலனையும் காட்டிலும்  குழப்பமும் ,அமளிகளும் உண்டாக விரும்புவது ?

பளிங்கு கண்ணாடி போல் விளங்கும் விஷயம் இஸ்லாமியரிடையே முதன் முதலில் உண்டான பிரிவினையின் மூல கர்த்தா ,வேண்டுமென்றே கடுமையான சொற்களும் ,வழிகெட்ட கொள்கைகளும் கொண்ட இஸ்மாயில் திஹ்லவியின்  'தக்வியத்துள் ஈமான் ' என்னும் நூல் .

நாற்பெரும் பிக்ஹ் உடைய இமாம்களான இமாமுல் அஃலம்  இமாம் அபூ ஹனீபா رضي الله عنه , இமாம் ஷாபிஈ رضي الله عنه , இமாம் மாலிக்  رضي الله عنه , இமாம் ஹன்பல் رضي الله عنه      ஆகியோரை தக்லீத் செய்வதை மறுக்கும் கூட்டமான அஹ்லே ஹதீத் வஹாபிகளும்  தம்முடைய  முன்னோடிகளில் ஒருவராக ஏற்றுக் கொண்டுள்ளது இஸ்மாயில் திஹ்லவியை தான் .

இமாம் அஹ்மத் ரிழா கான் பரேலி காதிரி رضي الله عنه  அவர்கள் தமது காலத்தில்   இஸ்மாயில் திஹ்லவியின் நூற்களை வாசித்து ,அதில் எழுபது குப்ரியத்தான விஷயங்களை பட்டியலிட்டு , அதற்கு மாற்றமான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கைகளை விளக்கினார்கள் . 

எனினும் இஸ்மாயில் திஹ்லவியின் மீது குப்ர் பத்வா வெளியிடாததின் காரணம் , இஸ்மாயில் திஹ்லவி தமது இறுதி காலத்தில் தவ்பா செய்தார் என்று ஒரு கூற்று காரணமாக , இஸ்மாயில் திஹ்லவிக்கு சந்தேகத்தின் பலனை அளித்தார் . 

ஒரு சாதாரண சொல் , இமாம் அஹ்மத் ரிழா கான் பரேலி  رضي الله عنه  அவர்கள் எவ்வளவு விசாலமான பார்வை கொண்டவர்களாக இருந்தார்கள் என்று விளக்கும் பொழுது , யார் தான் அன்னார்  மார்க்கத் தீர்ப்பு அளிக்கும் போது  தயங்கினார்கள் என்று கூற முடியும் ? 
Related Posts Plugin for WordPress, Blogger...

Tuesday 14 November 2017

இந்திய வஹாபியிசத்தின் தந்தை


இந்திய துணைக்கண்டத்தில் வஹாபியிசத்தின் நிறுவனர் இஸ்மாயில் திஹ்லவி(1193-1246 ஹிஜ்ரி / 1779-1831 ) . இவர் துரதிருஷ்டவசமாக அக்காலத்தில் புகழும் ,பேறும் பெற்று விளங்கிய இமாமுல் ஹிந்த் ஷாஹ்  வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி رضي الله عنها அவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர் .

இஸ்மாயில் திஹ்லவி(1193-1246 ஹிஜ்ரி / 1779-1831 ) ==> அவரது தந்தை ஷாஹ் அப்துல் கனி திஹ்லவி (மறைவு 1203 ஹிஜ்ரி / 1788) அவர்கள்  ==> அன்னாரது தந்தை இமாமுல் ஹிந்த் ஷாஹ்  வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி رضي الله عنها  அவர்கள் 


பால்கோட் நகரிலுள்ள இஸ்மாயில் திஹ்லவியின் சபிக்கப்பட்ட கபர் 

இவர் தமது காலத்தில் அரபகத்திற்குச் சென்று ,இப்னு அப்துல்  வஹாப் நஜ்தியின் நூலான 'கிதாபுத் தவ்ஹீத் ' நூலை வாசித்து ,அதன் பால் ஈர்க்கப்பட்டு அதை உர்துவில் மொழிபெயர்த்து , தமது எண்ணங்களையும் உள்ளடக்கி 'தக்வியத்துள் ஈமான் ' என்று வெளியிட்டார் .

Kitab ut Tawheed and Taqwiyathul Iman - Urdu
சவூதி தாருஸ் ஸலாம் பதிப்பகம் வெளியிட்ட கிதாபுத் தவ்ஹீத் - தக்வியத்துள் ஈமான் உர்து பதிப்பு ,வஹாபிய சகோதர பாசம் ! 

இந்த புத்தகம் இந்திய -பாக் துணைக்கண்டத்தில் இதற்கு முன்னர் எந்தவொரு வழிகெட்ட இயக்கமும் செய்ய இயலாத வண்ணம் இஸ்லாத்திற்கும் ,அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கும் பெரும் கேட்டை விளைவித்தது .

  நாடெங்கிலும்  நடத்தப்பட்ட   கண்மணி நாயகம் அவர்களின் புகழ் பாடும் மவ்லிதுன் நபி மஜ்லிஸ்கள் , பித்அத் என்று அழைக்ப்பட்டன . வலிமார்களின் உரூஸ் நிகழ்வுகள் இஸ்லாத்திற்கு முரணானது என்று கூறப்பட்டன . வலிமார்களை நாடி ஜியாரத் செய்வதும் ,அவர்களிடம் உதவி தேடுவதும் குப்ர்  என்று கூறினர் ,இன்னும் அப்துல் முஸ்தபா என்று பெயரிடுவதே ஷிர்க் என்றனர் .  இந்த புத்தகம் தான் இந்திய -பாக் துணைக்கண்டத்தில்  அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினர் இடையே பிரிவினையை உண்டாக்கிய முதல் மற்றும் முன்னோடி நூல் .

பாமர இஸ்லாமியர் குழப்பத்தில் ஆழ்ந்தனர் . ஏனெனில் இந்த புத்தகம் மேற்கூறப்பட்ட அமல்களில் ஈடுபட்ட அவர்களையும் ,அவர்களின் முன்னோர்களையும் காபிர் என்றும் முஷ்ரிக் என்றும் கூறியது . ஒவ்வொரு வீட்டிலும் சண்டை,சச்சரவுகள் உண்டாயின . உறவினர்கள் ,குடும்பத்தினர் இடையே பிரச்சினைகள் வெடித்தன .

  அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள் இஸ்மாயில் திஹ்லவியை தில்லி ஜும்மா மஸ்ஜிதில் விவாதத்திற்கு அழைத்தனர் . அங்கு இஸ்மாயில் திஹ்லவி வெட்கி தலைகுனியும்படியான தோல்வியை தழுவினான் .

இன்னும் பெஷாவர் நகரத்திற்கு அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள் இஸ்மாயில் திஹ்லவியை விவாதத்திற்கு அழைத்து ,அங்கும் தோல்வியை சந்தித்தான் .

இஸ்மாயில் திஹ்லவியின் சமகால உலமாக்களில் அவனின் வழிகெட்ட கொள்கையை எதிர்த்து விவாதித்தும்  , நூற்கள் எழுதியும் ,பத்வாக்கள் வெளியிட்ட உலமாக்கள் சிலர்.இவர்களில் அவரது குடும்பத்தாரும் ,அவரது சிறிய தந்தை ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவியின் மாணவர்களும் அடங்குவர் .


  • அல்லாமா பஜ்லே ஹக் கைராபாதி  (ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவியின் மாணவர் ) 
  • மவ்லானா ரஷீதுதீன் கான் திஹ்லவி 
  • ஷாஹ் மக்ஸுசுல்லாஹ் திஹ்லவி (இஸ்மாயில் திஹ்லவியின் உடன்பிறவா சகோதரர் )
  • ஷெய்கு முஹம்மது மூஸா திஹ்லவி (இஸ்மாயில் திஹ்லவியின் உடன்பிறவா சகோதரர் )
  • ஷெய்கு முஹம்மது ஷரீப் திஹ்லவி 
  • முப்தி ஷுஜாவுத்தீன் அலி  கான்   
  • அல்லாமா பஜ்லே ரஸூல் பதாயுனீ 
  • முப்தி ஸத்ருத்தீன் திஹ்லவி 
  • ஷெய்கு அஹ்மத் ஸயீத் முஜத்திதி ராம்பூரி 
  • ஷெய்கு ஹைதர் அலி பைஜாபதி 
  • மவ்லனா அப்துல் மஜீத் பதாயுனீ 
  • ஷெய்கு அப்துல் கபூர் ஸ்வாதி 
  • ஷெய்கு முஹம்மது சுலைமான் தஉன்ஸ்வி 
  • ஷெய்கு ஆலே ரஸூல் மறெர்ஹவி (ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவியின் மாணவர் ) 
  •  மவ்லானா துராப் அலி லக்னவி  
1835ல் ,தக்வியத்துள் ஈமான் முழு புத்தகமும் ஆதி முதல் அந்தம் வரை மதராஸ் உலமாக்கள் முன் வாசிக்கப்பட்டு , முப்பது உலமாக்களும் பின்வரும் பத்வா வெளியிட்டனர் : " யாராகிலும் ஒரு நபர் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளது போல் கொள்கை உடையவனாய் இருந்தால் அவன் காபிர் ,இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவன்  ."

மதராஸ் உலமாக்களின் பத்வாவுக்கு ஒப்புதல் அளித்து தில்லி உலமாக்களும் 'தக்வியத்துள் ஈமான் ' என்ற வழிகெட்ட நூலுக்கு எதிராக பத்வா வெளியிட்டனர் .

தில்லியின் வீதியெங்கும் , ' இந்த நூல் கண்மணி நாயகம் ﷺ அவர்களை கண்ணியக் குறைவுபடுத்துவதாலும்  , வலிமார்களை கண்ணியக் குறைவுபடுத்துவதாலும்   இந்த நூலை யாரும் வாசிக்க கூடாது என்றும் . இத்தகைய நூற்களை வாசிப்பது தடை செய்யப்பட்ட ஒன்றென ' அறிவிப்பு செய்யப்பட்டது .

உஸ்தாதுல் உலமா மவ்லானா முஹம்மது வஜ்ஹீ சாஹிப் அவர்கள் 'தக்வியத்துள் ஈமான் ' நூலுக்கு மறுப்பு தெரிவித்து 'நிஜாமுல் இஸ்லாம் ' என்று நூலை எழுதினார்கள் . இந்த நூலுக்கு கல்கத்தாவைச் சார்ந்த 22 உலமாக்கள் ஒப்புதல் அளித்தனர் .

வழிகெட்ட 'தக்வியத்துள் ஈமான்'  நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்ட சில நூற்கள்  :- 

  • குல்ஜார் ஏ ஹிதாயத்  - மதராஸ் முப்தி ,அல்லாமா முஹம்மது ஸிப்ஹதுல்லாஹ் 
  • தஹ்கீக் உல் பத்வா பி இப்தலில் தக்வா  - அல்லாமா பஜ்லே ஹக் கைராபாதி 
  •  ஹயாத்துன் நபி  - ஷெய்கு முஹம்மது ஆபித் சிந்தி 
  • தஹ்கீக் உஷ் ஷிர்க் வத் தவ்ஹீத் - ஹாபிஸ் முஹம்மது ஹசன்
  • ஸலாஹுல் முஃமினீன் பி காதில் காரிஜீன்  -மவ்லானா லுப் உல்ஹக் காதிரி 
  • ஹுஜ்ஜதுல் அமல் பி இஃப்த்தால் இல் ஹைல்  - மவ்லானா மூஸா திஹ்லவி 
  • ரஸ்முல் கைராத் - மவ்லானா கலீலுர் ரஹ்மான் முஸ்தபாபாதி 
  • துஹ்பத் அல் முஸ்லிமீன் பி ஜஸ்சாபி செய்யதில் முர்சலீன் - மவ்லானா அப்துல்லாஹ் சஹ்ரான்புரி 
  • தஹ்லீல் மா அஹல்லாஹு பி தபஸீர் வ மா அஹ்ல் பிஹி லி கைரில்லாஹ் - மவ்லானா கலீலுர் ரஹ்மான் 
  • சபீப்ளுள் நிஜாஹ் இலா தஹஸீல் இல் பலாஹ்  -மவ்லானா துராப் அலி லக்கனவி 
  • சபீனத் உல் நிஜாத்  - மவ்லானா முஹம்மது அஸ்லமீ மதராஸி 
  • நிஜாமே இஸ்லாம்  -மவ்லானா முஹம்மது வஹீதுதீன்  கல்கத்தா 
  • குவத் உல் ஈமான்  -  மவ்லானா கறாமத் அலி ஜஉன்புரி 
  • அஹ்காக் உல் ஹக்  - மவ்லானா செய்யத் பத்ருத்தீன் ரிஸ்வி ஹைதராபாதி 
  • கைர் உஸ் ஸாத் லி யவ்ம் மில் மியாத் - மவ்லானா கைருத்தீன் மதராஸி 
  • நேம் முள் இன்திபாஹ் லி ரப் இல் லிஸ்த்திபாஹ் - மவ்லானா முஅல்லிம் இப்ராஹீம் ,பாம்பே 
  • ஹிதாயத்துள் முஸ்லிமீன் இலா தரீக் கில் ஹக் கில் யகீன் - காழி முஹம்மது ஹுசைன் கூபி 
  • துஹ்பா ஏ முஹம்மதியா தர் ரத்தே வஹாபியா - மவ்லானா செய்யத் அப்துல் பத்தாஹ் முப்தி காதிரி குல்ஷனபாதி 
  • சிராஜுல் ஹிதாயத்  - மவ்லானா குல்ஷனாபாதி 
இந்த உலமாக்களைத் தவிர மவ்லானா இனாயத் கான் , மவ்லானா ஷாஹ் ரவூப் அஹ்மத் , மவ்லானா ஷாஹ் அஹ்மத் ஸயீத் முஜத்திதி ஆகியோர் கடுமையாக எதிர்த்து ,அதன் பித்னாவை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்தனர் .

இறுதியாக இஸ்மாயில் திஹ்லவி,அவனது உஸ்தாத் செய்யித் அஹ்மத் ரேபரேலியுடன்  ,அவர்கள் இருவரும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கு மாற்றமான கொள்கை உடையவர்கள் என்று தெரிந்ததும் , அல்லாஹ்வையும்,கண்மணி நாயகம் ﷺ அவர்களை கண்ணியக் குறைவுபடுத்துபவர்கள் என்று  தெரிந்ததாலும்  , பால்கோட் நகர பதான் முஸ்லிம்களால்கொல்லப்பட்டனர் .
தேவபந்திகளும் , கைர் முகல்லித் வஹாபிகளும் அவர்கள் இருவரும் சீக்கியருக்கு எதிராக போரிட்டு மடிந்தனர் என்று கூறி வந்தாலும் , அதற்கு சரித்திர சான்றுகள் இல்லை .


கண்மணி நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள் , 'பித்னா கொலையை விட கொடியது ' . இஸ்மாயில் திஹ்லவி மடிந்தாலும் , அவனின் மரபு தொடர்ந்தது . அவனின் தவறிய , வழிகெட்ட கொள்கைகள் பரவின .

இஸ்மாயில் திஹ்லவியின் மறைவுக்குப் பின் அவனது ஆதரவாளர்கள் இரு பிரிவாகப் பிரிந்தனர் . அவர்களில் ஒரு கூட்டத்தார் தாம் இமாம் அபூஹனீஃபா அவர்களை பின்பற்றுவோர் என்று கூறினார்கள் . இவர்கள் பின்னாட்களில் தேவ்பந்திகள் என்று அழைக்ப்பட்டனர் .

மற்றோரு கூட்டத்தார் இமாம்களின் தக்லீதை ஏற்க மறுத்து தம்மை அஹ்லே ஹதீத் என்று அழைத்துக் கொண்டனர் . 

   
  



Related Posts Plugin for WordPress, Blogger...

Friday 27 October 2017

இந்தியாவில் வஹாபிய பித்னாவின் ஆரம்பம் - 6

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள் ஒருவரை காபிர் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்குவதற்கான விதிகளையும் ,நிபந்தனைகளையும் விவரித்துள்ளனர் .

* தகல்லும்  -  ஒரு குறிப்பிட்ட வாக்கியம் நிச்சயமாகச் சொல்லப்பட்டது .

* கலாம்  - அவ்வகையான வாக்கியம் நிச்சயமாக குப்ரானது .

* முதகல்லிம்  - அவ்வகையான வாக்கியம் நிச்சயமாக அந்த நபரால் சொல்லப்பட்டது .

மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளில் ,சிறிதளவும் சந்தேகத்திற்கிடமில்லாத பொழுது (அல்லது சொல்லப்பட்டது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்றில்லாத போது )  அல்லது சொல்லப்பட்டதின் பெயரில் தகுந்த விளக்கம் அளிக்காத பொழுது தான் குப்ருடைய தீர்ப்பு வழங்கப்படும் . இதுவே  தான் செயல்களுக்கும் ,வார்த்தைகளுக்கும் (குப்ரின் அளவில் கொண்டு சேர்க்கக் கூடிய )  பொருந்தும் . இதை ஒரு எளிய உதாரணம் கொண்டு புரிந்து கொள்ள முடியும் .

தம்மை முஸ்லிம் என்று உரிமை கோரும் ஜைத் தின் மீது குப்ருடைய மார்க்கத் தீர்ப்பு எப்பொழுது வழங்கப்படும் என்றால் , ஜைத் மார்க்கத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் (ஜரூரியத் ஏ தீன் ) , தனது வார்த்தைகளின் மூலமோ ,செயல்களின் மூலமோ மறுத்தாலோ அல்லது மாற்றமாக நடந்தாலோ , இன்னும் அத்தகைய மறுப்பும் ,மாற்றமும்

* நிச்சயமாக நடந்துள்ளது .
* அத்தகைய செயல்களும் ,சொற்களும் நிச்சயமாக குப்ரானது .
* அத்தகைய செயல்களும் ,சொற்களும் நிச்சயமாக ஜைத் உடையவை தான் .

மேலே மூன்று அம்சங்களும் உறுதியாக நிரூபிக்கப்பட்டு, உறுதி செய்யப்படுகின்றன எனும் பொழுது தான் ,குப்ருடைய மார்க்கத் தீர்ப்பு ஜைத் தின் மீது வழங்கப்படும் .

தேவபந்த்தின் முன்னோடி உலமாக்கள்(அஷ்ரப் அலி தான்வி ,முஹம்மது காஸிம் நாணோத்வி ,கலீல் அஹ்மத் அம்பேத்வி ,ரஷீத் அஹ்மத் கங்கோஹி  ) மற்றும் அவர்களது கூற்றுகளின் மீது அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்களின் தெளிவான நிலைப்பாடு என்னவெனில்   : இந்த குப்ருடைய வாக்கியங்களைப் பற்றி முழமையான அறிவுள்ள நபர் , மற்றும் அதைப் பற்றி தெளிந்த புரிதல் கொண்ட பின்னும்  , இத்தகைய நபர்களை காபிர்கள் என்று நம்ப மறுத்தால் ,அவர் தாமே காபிராவார் .

அதாகிறது  , இந்த விஷயம் தொடர்பான முழுமையான அறிவும், அவ்வாக்கியங்களைப் பற்றிய முழுமையான புரிதலும் இருத்தல் , இரண்டாவது நபரின்(தேவபந்த் முன்னோடிகளின் அபிமானி அல்லது அவர்களை ஏற்றுக் கொண்டவர் ) மீது குப்ருடைய தீர்ப்பு வழங்குவதற்கு தேவையான நிபந்தனையாகும் .

 நபிகள் நாயகம்   அவர்களின் காலத்தில் இருந்து தொடங்கி அன்னாரின் தோழர் பெருமக்களான சஹாபாக்கள் , மற்றும்  அவர்களைப் பின்தொடர்ந்து வந்த பெருமக்களான தாபயீன்கள் , மற்றும் தப்ஸீர் ,ஹதீத் ,பிக்ஹ் ,தஸவ்வுப் , ஸீரா மற்றும் தாரீக் நூற்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளவையே அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கை கோட்பாடுகளும் ,செயல்பாடுகளும்  ஆகும் .

இந்திய துணைக்கண்டத்தைப் பொறுத்தவரை வட நாட்டில் பிறங்கி மஹால் ,லக்னோ ,கைராபாத் , பதாயூன் மற்றும் பரேலி உலமாக்களின் பேச்சுகளும் ,எழுத்தும் மேற்குறிப்பிட்ட இந்த நம்பிக்கையின் தொகுப்பிற்கு இணங்க உள்ளவை .

இத்தகைய உலமாக்கள்  தான் ,இஸ்லாமிய உலமாக்களின் உண்மையான வாரிசுகளான , ஷாஹ் அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنها அவர்கள்(மறைவு  -ஹிஜ்ரி 1052) ,சிராஜுல் ஹிந்த் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنها அவர்கள் (மறைவு-ஹிஜ்ரி 1239) ஆகியோரின் போதனைகள் மற்றும் கருத்துக்களின் உண்மையான சார்பாளர்கள் .

அவர்கள் இஸ்லாமிய கோட்பாடுகளில் முரண்படுகின்ற புதிய யோசனைகளை  அவர்கள் ஏற்கவோ அல்லது தணிக்கை செய்யவோ இல்லை . தங்களின் முன்னோடிகளால்  முன்வைக்கப்பட்ட மற்றும் பிரசுரிக்கப்பட்ட கோட்பாட்டை அவர்கள் சிரத்தையோடு சமரசம் செய்யாமல்  கடைப்பிடிக்கிறார்கள். இதை ஒரு விலைமதிப்பற்ற பரிசாக கருதுவதுடன் , தங்களின் இரட்சிப்புக்கும் ,ஏனைய இஸ்லாமியரின் இரட்சிப்புக்கும் இதுவே பாதை என்று கருதுகின்றார்கள் .

இமாம் அஹ்மத் ரிழா கான் காதிரி  رضي الله عنها அவர்களின் நெருங்கிய பிரதிநிதியான வ்லானா நயீமுத்தீன் முராதாபாதி அவர்கள் எழுதுகின்றார்கள் , " ஸுன்னி என்பவர் , மா அன அலைஹி வ அஸ்ஹாபிஹி , என்பதற்கு வாழும் உதாரணமாக இருப்பவர் ஆகும் . அவர் குலபாயே ராஷிதீன்கள் ,மார்க்கத்தின் இமாம்கள்  (பிக்ஹ் மற்றும் தஸவ்வுப் ), மற்றும்  பிந்தைய உலமாக்களில் ஷைகு ஷாஹ்அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنها , மலிக்குள் உலமா பஹ்ருல் உலூம்  மவ்லானா அப்துல் அலி பிராங்கி மஹாலி رضي الله عنها , மவ்லானா பஜ்லே ஹக் கைராபதி رضي الله عنها , மவ்லானா பஜ்லே பதாயூனி رضي الله عنها , முப்தி இர்ஷாத் ஹுசைன் ராம்பூரி رضي الله عنها , முப்தி ஷாஹ் அஹ்மத் ரிழா கான் பரேலி رضي الله عنها  ஆகியோரின் கொள்கையின்படி இருப்பவர் . "
[அல் பகீஹ் - பக்கம் 9, அம்ரித்ஸர் , 21 ஆகஸ்ட் , 1925]

இமாம் அஹ்மத் ரிழா கான் காதிரி  رضي الله عنها அவர்கள் - அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் பிற உலமாக்கள் போன்று ,முஸ்லிம்கள் தமது அகீதாவில் உறுதியானவர்களாகவும் , தமது சமூக நிலைப்பாடுகளில் சிறந்து விளங்கவும் அறிவுறுத்தியுள்ளனர் .
இவை சிறு புத்தகங்களாக எழுதப்பட்டுள்ளன .பின்வருபவை அன்னாரின் பத்வாக்களின் பாடங்கள் ஆகும் ;

- ஷரீயத் மட்டுமே இறுதியான சட்டமாகும் , முஸ்லிம்கள் அனைவரின் மீதும் கட்டாயமானதும் ஆகும் .

- பித்அத்தை விட்டும் விலகி இருப்பது மிகவும் முக்கியமானது 

- அறிவில்லாத ஓர் ஸுபி , செயற்பாடற்ற ஷெய்கும் ஷைத்தானின் பரிகாசம் 

- குப்பார்களை பின்பற்றுவதும் ,வழிகேடர்களுடன் உறவாடுவதும் ,ஹிந்துக்களின் பண்டிகைகளில் பங்கெடுப்பதும்  தடுக்கப்பட்டுள்ளது  .

- அல்லாஹ் அல்லாதவற்றிக்கு வழிபாடு செய்யும் எண்ணத்துடன் ஸுஜூது செய்வது ஷிர்க் , சங்கை செய்யும் பொருட்டு ஸுஜூது
 (سجده تعظيم يا تحيت)செய்தால் அது ஹராம் .

- சக முஸ்லிம்களை கேவலப்படுத்தி ,அவ்ர்களைக் காட்டிலும் தன்னை மேன்மையானவராகக் காட்டிக் கொள்வது தடுக்கப்பட்டுள்ளது .

- ஷியாக்கள் முஹர்ரம் மாதத்தில் வைக்கும் படிமவியலும் (தாஜியா) ,அவற்றை சங்கை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது .

- இசைக் கருவிகளுடன் கூடிய கவ்வாலி (ஸமா ) தடை செய்யப்பட்டுள்ளது .

-  இஸ்லாமிய பெண்கள் ஜியாரத்திற்காக(வலிமார்களின் மகாம்களுக்குச் செல்வது ) பயணம் செய்வது அனுமதிக்கப் படவில்லை .

- உயிருள்ளவற்றின் படங்கள் வரைவதற்கு அனுமதி இல்லை .

- ஸலவாத்   என்பதை சுருக்கி   ஸாத் லாம் ஐன் மீம் என்று எழுதுவதற்கு அனுமதி இல்லை .

- மாதிரி கபுறுகளை (அடிப்படையோ ,ஆதாரமோ இல்லாதது ,மக்களிடையே வாய் வழி பரவியது  ) ஜியாரத் செய்வது கூடாது .

ஈசாலே சவாப் என்ற எண்ணத்துடன்,  ஏழைகளுக்கும் ,தேவையுள்ளவர்களுக்கும் உணவளிப்பது அனுமதிக்கப்பட்டது . எனினும் செல்வதர்களைக் கூட அழைத்து விருந்து உபச்சாரங்கள் போல் நடத்துவதற்கு அனுமதி இல்லை .

மேலதிக விபரங்களுக்கு அல்லாமா யாஸீன் அக்தர் மிஸ்பாஹி அவர்கள் எழுதிய 'இமாம் அஹ்மத் ரிழா அவ்ர் ரத்தே பித்அத் ஒ முன்கராத் '  என்னும் நூலை காணவும் .

ஸவாத் அல் ஆஜம் என்னும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரை ஒட்டியே அன்னாரது நம்பிக்கைகள் இருந்தன ; பதாயூன் ,கைராபாத் , பரேலி உலமாக்கள் ,மஹ்ரேரா ஷரீப் ,கிச்சவ்சா ஷரீப் மஷாயிகுமார்களின் நம்பிக்கைகள் பின்வரும் செயல்கள் ,கொள்கைகள் அனுமதிக்கப்பட்டது என்பது  போன்றே இமாம் அஹ்மத் ரிழா கான் காதிரி  رضي الله عنها அவர்களது நம்பிக்கைகள் இருந்தன .

- அன்பியாக்கள் மற்றும் வலிமார்களின் தவஸ்ஸுல் அனுமதிக்கப் பட்டதாகும் .

- அன்பியாக்கள் மற்றும் வலிமார்களின் நினைவாக உள்ள பொருட்களை (ஆஸார் ஷரீப் ) சங்கை செய்வது அனுமதிக்கப்பட்டது .

-  வலிமார்களின் மகாம்களை தவஸ்ஸுலின் எண்ணத்துடன் ஜியாரத் செய்வது அனுமதிக்கப்பட்டது  .

- அனாச்சரங்கள் , அனுமதியற்ற செயல்களை விட்டும் அகன்ற வலிமார்களின் உரூஸ் நிகழ்வுகளை நடத்துவது அனுமதிக்கப்பட்டது .

- பெருமானார் கண்மணி நாயகம்    அவர்களின் மீலாத் ,மவ்லித் மஜ்லிஸ்கள் நடத்துவதும் ,அவற்றில் கியாமில் எழுந்து நிற்பதும் அனுமதிக்கப்பட்டது .

- இறந்தவர்களுக்கு நன்மைகளை எத்தி வைக்கும் பாத்திஹா மற்றும் ஈசாலே சவாப் அனுமதிக்கப்பட்டது .

இந்த அமல்கள் நமது முன்னோடிகளால் செயற்படுத்தப்பட்டு வந்துள்ளன . இன்றும் உலகெங்கிலும் உள்ள 90% முஸ்லிகளால் இந்த அமல்கள்  செயற்படுத்தப்பட்டு வருகின்றன .


Mafaheem Yajib an Tusahhaha - Arabic

Mafaheem Yajib an Tusahhaha  -English


தற்காலத்தில் ஹிஜாஸ் மாகாணத்தில் வாழ்ந்து வந்த பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சார்ந்த ,  அஷ்ஷைகு ஸெய்யத் முஹம்மத் பின் அலவி அல் மாலிக்கி  அவர்கள் எழுதி அரபியில் வெளிவந்த நூல் , 'மபாஹீம் யஜிப் அல் துசஹ்ஹஹா '  [முதல் பதிப்பு  ,1985,  அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் நடைமுறைகளை விரிவான விளக்கமாக எடுத்துக்காட்டுகளும் ,ஆராய்ச்சியும் கொண்ட நூலாகும் . சம காலத்தின் பல அரபுலக மற்றும் ஆப்பிரிக்க ஸுன்னத் வல் ஜமாத் உலமாக்கலால் அங்கீகரிக்கப்பட்ட நூலாகும் . அவர்களில் பெரும்பாலானோர்  'ராப்தா அல் ஆலமி இஸ்லாமி' , மக்கா வின் அங்கத்தினர் ஆவர் .  இந்நூல் இந்தியா ,பாகிஸ்தானில் உர்துவில் 'இஸ்லாஹே   பிக்ர் அவ்ர் இத்திக்காத் ' என்னும் பெயரில்  மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது .இந்நூல் "Notions That Must Be Corrected"  ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது .

ஸெய்யித் முஹம்மத் பாரூக் காதிரி ,இமாமுல் ஹிந்த் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி رضي الله عنها அவர்களது தசவ்வுப் உடைய நூலான 'அன்பாஸ் அல் ஆரிபீன் ' நூலின் உர்து மொழிபெயர்ப்பாளர் , அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரின் நடைமுறைகள் குறித்து எழுதுகின்றார்கள் ,
' எண்ணிப் பாருங்கள் ! என்ன ஷாஹ் அப்துர் ரஹீம் رضي الله عنها அவர்கள் ,இமாமுல் ஹிந்த் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி رضي الله عنها  அவர்கள் , சிராஜுல் ஹிந்த்  ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி رضي الله عنها அவர்கள் ஆகியோர் எல்லாம் பரேல்விகளா ???

இமாம் ஷாஹ் அஹ்மத் ரிழா கான் பரேல்வி  رضي الله عنها அவர்களும் ,  தாருல் உலூம் தேவபந்த் மத்ரசாவும் இந்த பிரச்சனைகள் உண்டான பொழுது இருந்திருக்கவே இல்லை . 

முரண்பாடு என்னவென்றால் இந்திய துணைக்கண்டத்தில் இருந்த அமைதியான சூழலை சீரழித்தது, துரதிருஷ்டவசமாக இந்த முக்கியத்துவம் நிறைந்த குடும்பத்தைச் சார்ந்த நபர் - இஸ்மாயில் திஹ்லவி மற்றும் அவனது நூல் தக்வியத்துள் ஈமான் . அவரது சிந்தனைகள் ஏற்றுக் கொள்ள இயலாதது . அவர் ஒரு விசித்திரமான யோசனையின் பால்  சென்றார். அவரது அழைப்பின் வழிமுறை போர்க்களம் போன்று  இருந்தது.

நான் அவரது நூல் தக்வியத்துள் ஈமானுக்கு ,அந்த நூல் வெளிவந்த உடன் அதற்கு மறுப்பாக பல்வேறு மொழிகளில் 250 நூற்களின் பட்டியலை நான் கண்டுள்ளேன் . இதன் மூலம் அந்த நூலுக்கு இஸ்லாமிய உலமாக்களும் ,பாமரர்களும் எவ்வாறான எதிர்வினை ஆற்றினார்கள் என்பது விளங்கும் .

நம்மிடம் எல்லா உலமாக்களும் ,ஸூபியாக்களும் ,பாமர இஸ்லாமியரும் குப்ரிலும் ,ஷிர்க்கிலும் ,பித்அத்திலும் இருந்தனர் என்றும் இஸ்மாயில் திஹ்லவி ஒட்டுமொத்த தேசத்திற்கும் அறிவுபுகட்டியதாகவும் , முதன் முதலில் இந்திய முஸ்லிம்களை உண்மையான தவ்ஹீதை  (!) அறிமுகப்படுத்தியதாகவும் காரணமாவார் என்று கூறுவதற்கு எந்த ஆணித்தரமான ஆதாரமும் இல்லை .

சொல்லப் போனால் ,ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنها,ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنهاமற்றும் ஷாஹ் முஹம்மது இஸ்மாயில் திஹ்லவி ஆகியோருக்கிடையே இருந்த கால வேறுபாடு என்பது என்ன ? வெகு சில ஆண்டுகளே ! 

என்ன ஒட்டு மொத்த இந்திய துணைக்கண்டமும் இந்த குறுகிய காலத்தில் ஷிர்க்கிலும் குப்ரிலும் மூழ்கி விட்டதா ???

அவ்வாறு குப்ரிலும் ஷிர்க்கிலும் தான் மூழ்கி விட்டதென்றால் , ஹக்கீமுல் உம்மா ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنها மற்றும் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنها ஆகியோர் இஸ்மாயில் திஹ்லவியைப் போல் அத்தகைய  கடுமையான சொல்லாடலை பயன் படுத்தவில்லை ???

நிதர்சனமான உண்மை என்னவென்றால் , ஸவாதே ஆஜம் என்னும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கையை விட்டு தவறி சென்று முதன் முதலில் இந்திய துணைக்கண்டத்தில் குரல் எழுப்பியவர் இஸ்மாயில் திஹ்லவி . நிச்சயமாக இத்தகைய ஒரு அழைப்பு நஜ்தில் தோன்றிய முஹம்மத் பின் அப்துல் வஹாப் நஜ்தி அல் தமீமியின் அழைப்பை ஒத்து இருக்குமே அன்றி ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنها  அவர்களின் அழைப்புப் பணி போன்று அல்ல !   
Anfas al-Arifeen

[ நூல்- அன்பாஸ் அல் ஆரிபீன் ,பக்கம் 18-19 ,மக்தபா பலாஹ் , தேவ் பந்த் ]

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தை பாதுகாக்கும் இயக்கமாகவும் , கண்மணி நாயகம் ﷺ அவர்களின் கண்ணியத்தை முஸ்லிம்களின் இதயத்தில் நிலைநிறுத்தும் காரியத்தை செயலாற்றுவதில் பங்கு பெற்றோரில் முக்கியமானவர்கள்  கைராபாத் ,பதாயூன் மற்றும் பரேலியைச் சார்ந்த உலமாக்களாகும் .


இந்த இயக்கம் இந்தியாவில் தோன்றிய வஹாபிய இயக்கங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் முக்கியத்துவம் பெற்றது . இதில் பெரும் பங்காற்றியவர்கள் இமாமே அஹ்லுஸ் ஸுன்னாஹ் இமாம் அஹ்மத் ரிழா கான் பரேலி  رضي الله عنها  அவர்கள் . 

அன்னார் தமது மகத்தான அறிவுத் திறமையாலும் , சிறந்த தலைமைப் பண்பின் காரணமாகவும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைகள் ,இமாம்கள் ஆகியோரின் கொள்கைகள் போற்றிப் பாதுகாக்கப்பட பாடுபட்டனர்.  















  
Related Posts Plugin for WordPress, Blogger...

Thursday 11 May 2017

இந்தியாவில் வஹாபிய பித்னாவின் ஆரம்பம் - 5

இதற்கு முன் உள்ள பதிவுகளில் நாம் தேவ்பந்தின் முன்னோடிகள் எழுதியதாக நாம்  சுட்டிக் காட்டியுள்ள குறிப்புகளும் ,கருத்துக்களும் வழிகேட்டின் மீதும் குப்ரின் மீதும் அடிப்படையாக அமைந்தவை .
மூல கருத்துக்களின் பிரதிகளை காண வேண்டுவோர்  மவ்லானா முஹம்மது மான்ஷா தஸ்பீஹ் கஸவ்ரி எழுதிய  'தாவத் ஏ பிக்ர் ' என்னும் நூலைக் காணவும் .
                                       
Dawat e Fikr

இந்த கருத்துக்கள் இஸ்லாத்தின் அடிப்படை ஆணிவேரான அல்லாஹுத்தஆலா பற்றிய நம்பிக்கையையும் ,நுபுவ்வத்தின் புனிதத்தையும் களங்கப்படுத்துபவை .

இவை தான் இந்திய முஸ்லிம்களிடையே பிரிவினையின் ஆணிவேராக இருந்தன . இன்னும் இந்த நிலம் பிரிவினையின் போர்க்களமாக மாறவும் காரணமாயின .இஸ்லாத்தின் ஆன்மாவையே அழிக்கும் இதன் விளைவை இன்றும் இந்திய துணைக்கண்டத்தின் ஒவ்வொரு கிராமத்திலும்,
நகரிலும் ,பெருநகரங்களிலும் காணலாம்  .

நுபுவ்வத்தின் புனிதத்தையும் ,அகமியத்தையும் பாதுகாக்கவும் . அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கைகளை பேணிக் காக்கவும் பல உலமாக்கள் முக்கிய பங்காற்றி இயங்கினர்.

அவர்களில் பிரிவினை தோன்றிய அதே மாநிலத்தில்(உத்திரபிரதேசம் )  இருந்து இயங்கியவர்களில் இருவர் மிகவும் முக்கியமானவர்கள் .

முஹிப்பிர் ரஸூல், தாஜுல் புஹூல்  மவ்லானா அப்துல் காதிர் உத்மானி காதிரி பர்கத்தி பதாயூனி (அல்லாமா பஜ்லே ரஸூல் உத்மானி காதிரி பர்கத்தி பதாயூனி அவர்களின் மகனார்  ) ,அல்லாமா பஜ்லே  ஹக் கைராபாதி(ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி அவர்களின் மாணவர் ) அவர்களின் மாணவர்.  
                                              
Tajul Fuhool Dargah

இமாமே அஹ்லே ஸுன்னத் மவ்லானா அஹ்மத் ரிழா ஹனஃபி காதிரி பர்கத்தி பரேல்வி (மவ்லானா நகீ அலி கான் பரேல்வி அவர்களின் மகனார் ) ,அஷ் ஷைகு ஷாஹ் ஆலே ரசூல்  காதிரி பர்கத்தி மெஹ்ராரவி (சிராஜுல் ஹிந்த் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி அவர்களின் மாணவர்அவர்களின் கலீஃபா  .


                                                 Related image



இவ்விரு பெருமக்களும் தமது காலத்தில் முக்கிய பங்காற்றினர்.இவ்விரு பெருமக்களும் மெஹ்ரேரா ஷரீபில் இருந்து பைஅத் ,இஜாஸத் மற்றும் கிலாபத்   பெற்றிருந்தனர் .

                                             
Marahra Mutahhara (Eta, U.P.)

                                                                                                                                                                              இதில் இமாம் அஹ்மத் ரிழா கான் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் தனித்தன்மையானது பெருமானார் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் மீது கொண்டு மட்டில்லாத இஷ்க் ஆகும் .
அன்னாரின் பேரனார் மவ்லானா முப்தி  அக்தர் ரிழா காதிரி பரேல்வி (ஹாபிதஹுல்லாஹ் ) அவர்கள் கூறுகின்றார்கள் ,"கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் முஹப்பத்  தான் அவர்களது வாழ்வில் பிரதம கவனமாக இருந்தது . அன்னாரின் கூற்றும் ,செயல்பாடுகளும் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின்  இஷ்கில் ஊறிப் போயிருந்தன,எந்தளவுக்கு என்றால் தமது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின்  இஷ்கில் மூழ்கிப் போயிருந்தன  . கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின்  முஹப்பத் தான் அவரது வாழ்வாகவும் ,அவரது செய்தியாகவும் இருந்தது  . "

இங்கு குறிப்பிடத்தக்க விஷயம் யாதெனில் ,இமாம் அஹ்மத் ரிழா கான் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் இஷ்க் என்பது தெளிவான தீர்ப்பு எடுக்க இயலாமல் தமது உணர்விழந்து சிந்தை மாறிப் போகும் நிலையில் அல்ல , மாறாக அவரது முஹப்பத் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் விருப்பத்திற்கு இணங்குமாறு கட்டுப் படுத்துகின்றது . இஷ்கின் இந்த நிலையில் ,ஒரு மனிதனின் சுய விருப்பங்கள் மறைந்து ,தமது நேசரின் விருப்பங்களை பின்தொடருபவர் ஆகின்றார் .

இந்த நிலையைத்தான் ஹதீத் ஷரீபில்  " மனிதனின் விருப்பங்கள் நான் கொண்டு வந்ததுடன்(தூது ) இணைந்துவிடுகின்றன  " என்று கூறப்பட்டுள்ளது .

இந்த நிலையானது அன்னாரின் மார்க்க சேவைகளிலும் ,பணிகளிலும் வெளிப்பட்டுள்ளன . அவர்களின் ஒரு நூல் 'மகால் உல் உரபா பி இஜாஜி ஷரயின் வ உலமா '(مقال العرفاء بإعزاز شرع وعلماءஇதை நிலை நிறுத்த போதுமானது .
                                                     
Maqal e ‘Urafa’ bi I’zaz e Shar’a wa ‘Ulema


இந்த நூலில் அன்னார் ஷரீயத்தின் மேன்மையை விளக்கியுள்ளதோடு ,அதை எதிர்க்கும் நவீன காலத்தவரை மறுத்துள்ளார் . ஷரீயத்திற்கு மாற்றமான செயல்களை மருத்துள்ளதோடு ,முஸ்லிம்களை அவற்றை விட்டும் விலகி இருக்க அறிவுறுத்தி உள்ளார் .உதாரணமாக பெண்கள் இக்காலத்தில் தர்காவுக்கு சென்று ஜியாரத் செய்வது,வலிமார்களின் உரூஸ் போது நிகழும் அனாச்சாரங்கள் .சஜ்தா ஏ தழீம் ,மற்றும் தஜியா (அஹ்லே பைத்தினரின் ஷஹாதத்தின் நினைவாக ) ஆகியவை . இமாம் அஹ்மத் ரிழா கான் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் இத்தகைய சடங்குகளில் இருந்து முஸ்லிம்கள் விலகிக் கொள்ளுமாறு மிக கடுமையாக வலியுறுத்தி உள்ளார்கள் .
[வாராந்திர ஹுஜும்  .டிசம்பர் ,புது டில்லி .1988]

பேராசிரியர் முஹம்மது மசூத் அஹ்மத் நக்ஷ்பந்தி முஜத்திதி மழ்ஹரி ,முப்தி முஹம்மது மழ்ஹருல்லாஹ்  நக்ஷ்பந்தி முஜத்திதி(தில்லி பதேஹ்பூர் மஸ்ஜிதின் கதீப் மற்றும் இமாம்  ) அவர்களின் மகனார் ,எழுதுகின்றார்கள் :


 " (1). இமாம் அஹ்மத் ரிழா முஹத்தித் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் அல்லாஹ்வை பற்றியும் ,நபிமார்களைப் பற்றியும் தளர்வான வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களை பயன்படுத்துவது அதபுக்கு மாற்றமான ஒன்றெனக் கருதினார்கள் , ஏனெனில் அதன் நேரடிப் பொருள் சரியாக இருப்பதாக தோன்றினாலும் ,அவை அவமதிப்பை உண்டாக்குபவையே .

முஹத்தித் பரேல்வி அவர்களை பொறுத்தவரை அத்தகைய சொற்கள் பின்வரும் நூற்களில் இடம்பெற்றுள்ளன .

மவ்லவி காசிம் நாணோத்வியின் தக்தீருன் நாஸ் ,

மவ்லவி அஷ்ரப் அலி தான்வியின் ஹிப்ளுள் ஈமான் ,
மவ்லவி கலீல் அஹ்மத் அம்பேத்வியின் அல் பராஹீன் அல் காதியா ,
மவ்லவி இஸ்மாயில் தெஹ்லவியின் சிராத்தே முஸ்தகீம் மற்றும் தக்வியத்துள் ஈமான் ,
மவ்லவி மஹ்மூத் ஹுசைன் தேவபந்தியின் அல் ஜகத் அல் மகல் .

எனினும் மேற்கூறிய புத்தகங்களின் ஆசிரியர்கள் இந்த வாக்கியங்களை அவமதிப்பை ஏற்படுத்தும் அதன் நேரடிப் பொருளில் ஏற்க கூடாது என வாதிடுக்கின்றார்கள் ,ஏனெனில் அவர்களிடமும் அவமதிப்பு ஹராமாகும் . ஆனால் முஹத்தித் பரேல்வி அவர்களின் நிலைப்பாடானது அந்த புத்தகங்களின் வாக்கியங்கள் உர்து மொழியின் சாதாரண பேச்சுவழக்கில் உள்ளவை .
அதன் இயல்பான பொருள் உர்துவை தாய்மொழியாக கொண்டு பேசுபவர் எவ்வாறு பொதுவாக புரிந்து கொள்வாரோ அதுவே ஆகும் . எனவே தீர்ப்பு அத்தகைய அர்த்தத்தின் மீதே வழங்கப்படும் என்பதாம் .

(2) இரண்டாவதாக ,முஹத்தித் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் குர்ஆனிலும் ,ஹதீதிலும் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் புகழ் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதோ அவ்வாறே  அறிவிக்கப்பட  வேண்டும் என்றும் ,பரப்ப வேண்டும் என்றும் நம்பிக்கை கொண்டார்கள் .இதன் மூலம் எம்பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் மேன்மையும் ,தரஜாவும் முஸ்லிம்கள் அறிந்துகொள்ளவும் அவர்களின் உள்ளம் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் முஹப்பத்திலும்,சங்கையிலும் நிலைத்திருக்கும் என்று நம்பிக்கை பூண்டார்கள் .

எனினும் ,தேவபந்த்தின் உலமாக்கள் இந்த விஷயத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்தார்கள் . ஏனெனில் முஸ்லிம்கள் இது விஷயத்தில் எல்லை மீறிவிடுவார்கள் என்று நினைத்தார்கள்.

(3) இமாம் அஹ்மத் ரிழா முஹத்தித் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)  அவர்களிடத்தில் பெருமானாரின் மீலாதை கொண்டாடுவது அனுமதிக்கப் பட்டதும் ,விரும்பத்தக்கதும் ஆகும் .எனினும் தேவபந்த்தின் உலமாக்கள் அதற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தனர் .

(4) இமாம் அஹ்மத் ரிழா முஹத்தித் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)  அவர்கள் பெருமானாரின் புகழ் பாடும் மவ்லித் மஜ்லிஸ்களில் கியாம் (எழுந்து நின்று சங்கை செய்வது ) பாராட்டுக்குரிய செயல் ,எனினும் தேவபந்த்தின் உலமாக்கள் இதை பித்அத் என்று கருதினர் .

(5) இமாம் அஹ்மத் ரிழா முஹத்தித் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)  அவர்கள் வலிமார்களின் உரூஸ் அனுமதிக்கப்பட்ட ஒன்றென (அதில் ஷரீயத்திற்கு மாற்றமான செயல்கள் நடைபெறாத பொழுது ) கருதினார்கள் . தேவபந்த்தின் உலமாக்கள் அதை அனுமதி மறுக்கப்பட்ட ஒன்றென கருதினர் .

(6) பாத்திஹா ஓதுவது  (மரித்தோருக்கு ஈசால் சவாப் செய்தல் ) இமாம் அஹ்மத் ரிழா முஹத்தித் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)  அவர்களிடத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு செயல் (அதில் ஷரீயத்திற்கு மாற்றமான செயல்கள் நடைபெறாத பொழுது ) . தேவ்பந்த்தின் உலமாக்கள் அதை அனுமதி மறுக்கப்பட்ட ஒன்றென கருதினர் .

சில பத்திகள் கழித்து பேராசிரியர் முஹம்மத் மசூத் அஹ்மத் எழுதுகின்றார்கள் :

தேவபந்த் முன்னோடிகளின் முர்ஷிதும் ஷைகுமான ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) அவர்களும் இது விஷயங்களில் இமாம் அஹ்மத் ரிழா முஹத்தித் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)  அவர்களைப் போன்றே நம்பிக்கை கொண்டிருந்தார்கள் .அவர்கள் இது விஷயமாக எழுதிய நூல் 'பைஸ்லா ஹப்த் மஸ்லா'  .இந்த இரு பிரிவினரையும் ஒன்றிணைக்கும் வண்ணம் இந்த நூல் எழுதபட்டது  .

எனினும் தேவ்பந்தின் உலமாக்கள் அன்னாரின் கருத்துக்களை ஏற்கவில்லை . "
[நூல்- இமாம் அஹ்மத் ரிழா முஹத்தித் பரேல்வி ,பக்கம் 37-38,காதிரி கிதாப் கர் ,பரேலி ,பேராசிரியர் முஹம்மத் மசூத் அஹ்மத் ]

ஸலபுகளில் ஆரம்பித்து கலபுகள் வரை எல்லோரதும் ஏகோபித்த முடிவு நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களை அவமதிப்பது கடுமையான குற்றம் மற்றும் குப்ரை வெளிப்படுத்தும் செயலாகும் . குர்ஆன் ,ஹதீத் மற்றும் ஸஹாபாக்கள் .தாபியீன்களுடைய சொற்கள் இந்த சட்டத்தின் ஆதாரமாக அமைகின்றன .

இது விஷயமாக தாருல் உலூம் தேவபந்த்தின் ஷைகுல் ஹதீத் மவ்லானா ஹுசைன் அஹ்மத் டாண்டவி இது விஷயமாக எழுதுகின்றார்கள் ,
'நபிகள் நாயகம்  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களை அவமதிப்பது  குப்ராகும் . தெளிவான அவமதிப்பை விடுங்கள் ,ஒரு மனிதன் (தெளிவற்ற சொல்லாடல் காரணமாக )அவமதிப்பை ஒத்திருக்கும் சொற்களை பிரயோகிப்பானேயானால்  ,இதுவும் குப்ர் என்னும் தீர்ப்பை வழங்கும் காரணமாகும் . '
[நூல் - மக்தூபாத் ஷைகுல் இஸ்லாம் ,வால்யூம் 2,பக்கம் 165]

இதைப் போன்றே இல்ஹாத் மற்றும் ஜந்தகா  வும் குப்ர்  . இன்னும் ஷரீயத்தின் ஆதாரங்களை சேகரித்த பின்பு , தீனுடைய அடிப்படை நம்பிக்கை சார்ந்த விஷயங்களை மறுக்கும் ஒருவரை காபிர் என்று தீர்ப்பு அளிப்பது கடமை . மவ்லானா அமீன் அஹ்சன் இஸ்லாஹி ,மத்ரஸத்துல் இஸ்லாஹ் (ஆசம்கர் ,உத்தர்பிரதேஷ்  ) ஒரு கடிதத்தில் பின்வருமாறு எழுதுகின்றார்கள் ,
'மவ்லானா தானவி அவர்களின் பத்வா, மவ்லானா ஷிப்லி நுஃமானி அவர்களும் மவ்லனா ஹமீதுத்தீன் பாராஹி அவர்களும் காபிர் இன்னும் மத்ரசத்துள் இஸ்லாஹ் அவர்களின் பணியில் ஒரு அங்கம் வகிப்பதால் ,அது குப்ருடைய மத்ரஸா இன்னும் அதன் குப்ரியத் எந்த அளவுக்கு உள்ளதென்றால்  அந்த மத்ரஸாவின் தாவா பணிகளில் கலந்து கொள்ளும் உலமாக்கள் முல்கித் மற்றும் காபிர்கள்   என்று வெளியானது  '
[நூல் - ஹக்கீமுல் உம்மத் ,பக்கம் 475 , ஆசிரியர் - அப்துல் மஜீத் தைராபாதி ]
Hakeemul Ummath Book

அஷ்ரப் அலி தான்வியின் மாணவர் மற்றும் கலீபா அப்துல் மஜீத் தைராபாதி ,அஷ்ரப் அலி தான்விக்கு ஓர் கடிதம் எழுதி அதில் மவ்லானா ஷிப்லி நுஃமானி ,மவ்லானா ஹமீதுத்தீன் பராஹி ஆகியோரின் அறிவாற்றல்,தக்வா,மார்க்கப் பணிகள் ஆகியவற்றை   புகழ்ந்து எழுதினார். அஷ்ரப் அலி தானவி பதில் பின்வருமாறு எழுதினார் .
'இவை எல்லாம் செயல்கள் (அமல் ) . நம்பிக்கை இதை விட்டும் தனித்த ஒரு விஷயம் . நல்ல நம்பிக்கை தீய செயல்களுடன் இணைக்கப்படலாம் , எவ்வாறு தீய கொள்கைகளுடன் நன் நம்பிக்கை இணைந்திருப்பது போல் .'
[நூல் - ஹக்கீமுல் உம்மத் ,பக்கம் 476 , ஆசிரியர் - அப்துல் மஜீத் தைராபாதி ]

இந்த தலைப்பில் மேலதிக விபரங்கள் பின்வரும் நூற்களில் காணலாம் .
கிதாப் அல் ஷிபா - காழி இயாழ் அல் மாலிகி அல் அந்தலூசி(ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) , அஸ் சரீம் அல் மசலூல் - இப்னு தைமிய்யா , இஃபார் அல் முல்கிதீன் - அன்வர் ஷாஹ் காஷ்மீரி (ஷைகுல் ஹதீத் ,தாருல் உலூம் தேவபந்த் ) , அஷத்துல் அத்ஹாப்  - முர்தஸா ஹசன் தர்பாங்வி (முதன்மை கல்வி செயலர் ,தேவபந்த் ) .இரண்டு தற்கால புதிய புத்தகங்கள் நமூஸ் ஏ ரஸூல் அவ்ர் கானூன் ஏ தவ்ஹீன் ஏ ரிஸாலத் - நீதிபதி முஹம்மத் இஸ்மாயில் குரேஷி , குஸ்தாக் ஏ ரஸூல் கி ஷரீ ஹைசியத் - முப் தி  முஹம்மத் குல் ரஹ்மான் காதிரி .

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள் நபித்துவத்தின் புனிதத்தை பாதுகாத்ததோடு , உறுதி செய்து நிறுவப்பட்ட நம்பிக்கைகள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதலுக்கு எதிராக ஜிஹாத் புரிந்தனர் .

அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி ,இமாமே அஹ்லுஸ் ஸுன்னாஹ் மவ்லானா அஹ்மத் ரிழா ஹனபி காதிரி பர்கத்தி பரேலி அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கைகளை தமது எழுத்துக்களின் மூலம் காத்தார் .அன்னாரின் நூற்கள் கன்சூல் ஈமான் பீ தர்ஜூமத்துல் குர்ஆன் ,அல் அதாயா அல் நபவிய்யா பி அல் பதாவா அல் ரிழ்விய்யா ,ஜத் அல் மும்தர் அலா ரத் அல் முஹ்தர் , ஹதாயிகே பக்ஷிஷ் மற்றும் தவ்லா அல் மக்கியா ஆகியவை அத்தகைய குழப்பங்களுக்கு எதிராக   அன்னாரின் முயற்சியின் ஆதாரங்கள் .

அன்னாருடைய மார்க்க சேவைகளின் ஒரு பகுதி தான் பதாவா அல் ஹரமைன் ரஜபி நத்வத் அல் மைன் (ஹிஜ்ரி 1317 , 1899 ஆம் ஆண்டு ), அல் முஸ்தமத் அல் முஸ்தநத் (ஹிஜ்ரி 1320, 1902 ஆம் ஆண்டு ), ஹுஸாம் அல் ஹரமைன் (ஹிஜ்ரி  1324 ) ஆகியவற்றில் அவர்கள் மேற்கூறப்பட்ட தேவபந்தி முன்னோடிகளின் கூற்று குப்ர் என்று  மார்க்கத் தீர்ப்பு வழங்கி ,அதனை ஹரமைனின் உலமாக்களிடம் சமர்ப்பித்தார் .அவர்கள் அதற்கு ஒப்புதல் (தக்ரீஜ் ) வழங்கினார்கள் .

இது பற்றி மேலதிக விபரங்களுக்கு பாஜிலே பரேல்வி உலமா ஏ ஹிஜாஸ் கி நஜர் மேன் என்று பேராசிரியர் .முனைவர் .மசூத் அஹ்மத் எழுதிய நூலைக் காணவும் .

ஒரு பாகீஹ் மற்றும் முப்தியாக இமாம் அஹ்மத் ரிழா கான் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) அவர்கள் ஆயிரக்கணக்கான பத்வாக்களை எழுதி,எண்ணற்ற கேள்விகளுக்கு பதில் அளித்தனர் . அவர்களின் சமகால ஸுன்னி உலமாக்களும் இந்த சேவையை செய்தனர் ஆயினும் ,இமாம் அஹ்மத் ரிழா (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) அவர்களின் அந்தஸ்தானது அவர்கள் அனைவரின் சார்பாக பேசுபவராகயிருந்தது(செய்தி தொடர்பாளர் - Spokeperson) . அவர்கள்  எப்பொழுதும் பொய்யான நம்பிக்கைகள் மற்றும் இஸ்லாத்திற்கு எதிரான சிந்தாந்தங்கள் ஆகிவற்றை எதிர்ப்பதில் முன்னோடியாக விளங்கினார் .

அன்னார் வஹாபிய பிரிவு மற்றும் அதன் கிளை பிரிவுகளை மிகச் சிறப்புமிக்க தனது திறமையினால் மறுத்ததன் காரணமாக ,பல போலியான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார்கள் .

அன்னார்  தமது நூலான 'தம்ஹீதே ஈமான்' நூலில் எழுதுகின்றார்கள் ,

Tahmeed-e-Iman

' பொதுமக்களை ஏமாற்ற இந்த ஆட்கள் ஒரு திட்டத்தை தீட்டியுள்ளனர் . அவர்கள் கூறுகின்றார்கள் , 'அஹ்லுஸ் ஸுன்னாஹ்வின் இத்தகைய உலமாக்களின் நம்பகத்தன்மை எத்தகையது ? அவர்கள் சின்ன சின்ன விஷயங்களில் தக்பீர் செய்கின்றனர் .அவர்களின் இயந்திரங்கள் மக்களை காபிர் என்று மட்டுமே கூறும் கட்டளைகளை கடைந்து அனுப்புகின்றன .
அவர்கள் மவ்லவி இஸ்மாயில் திஹ்லவி , மவ்லவி ஷாஹ் இஷ்ஹாக் ,மவ்லவி அப்துல் ஹை ஆகியோரை காபிர் என்று பத்வா கொடுத்துள்ளனர் . '
(இங்கு இமாம் அஹ்மத் ரிழா அவர்கள் தாம் இவர்கள் மீது குப்ர் பத்வா வெளியிடவில்லை என்கின்றார் )

இன்னும் அவர்களில் சிறிதும் வெட்கம் இல்லாதோர் நான் - ஷாஹ் அப்துல் அஜீஸ் ,ஷாஹ் வலியுல்லாஹ் ,ஹாஜி இம்தாதுல்லாஹ் ,மவ்லானா ஷாஹ் பஜ்லூர் ரஹ்மான் (அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள் ) ஆகியோரையும் ,இன்னும் அவர்களில் வெட்கம் என்னும் எல்லையைக் கடந்தவர்கள் ,நான் ஷைக் முஜத்தித் அல்பதானி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) அவர்களை காபிர் என்று கூறியதாக   - நான் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுகின்றேன் - கூறுகின்றார்கள் . (தாம் அவ்வாறு கூறவில்லை என்று வெளிப்படுத்துகின்றார்கள் ).

அவர்கள் யாரிடம் எல்லாம் தொடர்பு கொள்கின்றார்களோ ,அத்தகையோர் பெருமதிப்பு வைத்திருக்கும் பெரியார்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் மீது நான் தக்பீர் செய்ததாக கூறுகின்றனர் . இன்னும் உள்ளபடியே அவர்களில் சிலர் மவ்லானா முஹம்மது ஹுசைன் இலாஹாபதி அவர்களிடம் சென்று , நான் ஷைகுல் அக்பர் முஹைனுதீன் இப்னு அரபி (குத்திஸிர்ரஹு ) அவர்களின் மீது தக்பீர் செய்ததாகக் கூறினர் -   நான் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுகின்றேன் .

அல்லாஹுதஆலா சிங்ககைமிகு மவ்லானா அவர்களுக்கு சுவர்க்க பதியில் உயர்வான இடத்தை வழங்குவானாக ,அன்னார் அந்த பொய்யர்களை நம்பவில்லை . மாறாக அவர்கள் திருக்குர்ஆன் ஷரீபின் வசனத்திற்கு கீழ்ப்படிந்தார்கள் ,
'நம்பிக்கையாளர்களே! யாதொரு விஷமி உங்களிடம் யாதொரு செய்தியைக் கொண்டுவந்தால், (அதன் உண்மையை அறியும் பொருட்டு அதனைத்) தீர்க்க விசாரணை செய்து கொள்ளுங்கள். '  [49:6]
இன்னும் நான் அவ்வாறு கூறினேனா என்று என்னிடம் கேட்டு எழுதினார்கள் .

நான் அத்தகைய கூற்றை மறுக்கும் விதமாக நூல் வடிவில் ஒரு மறுப்புரை அவருக்கு பதிலாக எழுதினேன் , இன்ஜா அல் பாரி அந்த வஸ்வாஸில் முப்தாரி  . அதை வாசித்த மவுலானா அவர்கள் 'லா ஹவ்ல வலா ஹுவ்வத்த இல்லா பில்லாஹ் ' என்றனர் . வஞ்சகத்தினால் முற்றுகையிட முயன்றவர்களின் சதியை முறியடித்தவர்களாக .  
[நூல்- தம்ஹீதே ஈமான் ,பக்கம் 45-46,இமாம் அஹ்மத் ரிழா பரேல்வி ,இதாரா மஃரிப் ஏ நுஃமானியா ,லாகூர் ]

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் முக்கியத்துவம் வாய்ந்த உலமாக்களில் ஒருவரான அல்லாமா ஸெய்யித் அஹ்மத் காஜ்மி அம்ரோஹாவி (அன்வாருல் உலூம் ,முல்தான் ) எழுதுகின்றார்கள் ,
'தக்பீர் (ஒருவரை காபிர் என்று பத்வா வழங்குவது ) உடைய விஷயத்தில் , எப்பொழுது எங்களுடைய நிலைப்பாடு என்னவென்றால் ,யாரேனும் குப்ருடைய வாசகங்களை உபயோகித்தால் ,நாம் அவரின் மீது தக்பீருடைய பத்வா வழங்குவதை விட்டும் விலக மாட்டோம் . அவர் தேவபந்தியோ ,பரேல்வியோ ,லீகைச் சார்ந்தவரோ ,காங்கிரசியோ ,நேச்சரியோ (இயற்கைவாதிகள் ),நத்வியோ யாராக இருந்தாலும் சரி . இது விஷயத்தில் நாம் நண்பரா அல்லது எதிரியா என்று பாகுபாடு பார்ப்பதில்லை .

இன்னும் நிச்சயமாக இதன் அர்த்தம் ,லீகைச் சார்ந்த ஒருவர் குப்ருடைய வாசகத்தை உபயோகித்தால் ,லீகைச் சார்ந்த எல்லோரும் காபிர்கள் என்று அர்த்தம் அல்ல அல்லது ஓர் நத்வி குப்ருடைய செயலை செய்தால் எல்லா நத்விக்களும் காபிர் அல்ல என்பதாம் . நாங்கள் தேவபந்த் ஊரில்  வசிக்கும்  எல்லா நபர்களையும், ஒரு சில தேவபந்த்தை சார்ந்தவர்கள் எழுதிய குப்ரான வாசகங்களுக்காக நாம் காபிர்கள் என்று கூறவில்லை .

நாமும் நமது முன்னோடிகளும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது , நாங்கள் தேவபந்த் அல்லது லக்னோ வாசிகள் அனைவரையும் காபிர்கள் என்ற மார்க்க தீர்ப்பு அவர்கள் அங்கு வசிப்பதன் காரணமாகவே நாம் வழங்கிவிடவில்லை . எம்மைப் பொறுத்தவரை , யார் ஒருவன் அல்லாஹுத்தஆலா வை,அவனது நபிமார்களை ,அவனது தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லடியார்களை  நிந்தனை செய்கின்றானோ ,பல முறை எச்சரித்தும் தவ்பா செய்யவில்லையோ அவன் தான் காபிர் .இன்னும் நாங்கள் எத்தகையோர் அத்தகைய குப்ரை அறிந்து கொண்டு ,அவமதிப்பு அளிக்கும் அதன் அசல் அர்த்தங்களை அறிந்து கொண்டு , அத்தகைய அவமதிப்புகளை உண்மை என்று ஏற்று ,அவமரியாதை செய்பவர்களை நம்பிக்கையாளராகவும் . தங்களது தலைவர்களாகவும் ஏற்றுக் கொண்டுள்ளாரோ அவர்களை நாம் காபிர்கள் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்குகின்றோம் .

இது தவிர , யாதொரு முஸ்லிமையும் நாம் காபிர் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்குவதில்லை . நாம் காபிர்கள் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கிய நபர்கள் மிகவும் குறைவு மற்றும் வறையரைப்படுத்தப்பட்டது (குறிப்பிட்ட பிரச்சனையின் அடிப்படையில் ) . இந்த குறிப்பிட்ட நபர்களைத் தவிர தேவ்பந்த் அல்லது பரேலியின் எந்த ஒரு முஸ்லிமும் காபிர் என்று தீர்ப்பளிக்கப்படவில்லை . அது போலவே லீக் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களின் விஷயத்திலும் இதே நிலைப்பாடு தான் . எல்லா முஸ்லிம்களையும் நாம் முஸ்லிம்கள் என்றே கருதுகின்றோம் .'
al haq ul mubeen

[நூல்- அல் ஹக் அல் முபீன் ,பக்கம்  24-25 , அல்லாமா அஹ்மத் சயீத் காஜ்மி ,முல்தான் ]

முப்தி முஹம்மத் ஷரீப் அல் ஹக் அம்ஜதி , புஹாரி ஷரீபின் விரிவுரையாளரும் , தாருல் இப்தா,ஜாமியா அஷ்ரபியா ,முபாரக்பூரின் (இந்தியா ) தலைவரும் ஆனவர்கள்  எழுதுகின்றார்கள் .
' பத்வா என்னும் மார்க்கத் தீர்ப்பு வழங்குவதற்கு பாமர மக்களிடம் வழக்கத்தில் உள்ள சொல்லாடல்(உர்ப் ) மட்டும்  போதுமானது அல்ல .
எனவே தம்மை தேவ்பந்தி என்று கூறிக் கொள்ளும் நபர் ,மற்றவர்களால் தேவ்பந்தி என்று அழைக்கப்படும் நபர் ,இந்த நான்கு தேவ்பந்துடைய   உலமாக்களை தம்முடைய  தலைவர்கள் என்று ஏற்றுக் கொள்பவர் ,இன்னும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரை பித்அத்தி என்று அடையாளமிடுபவர் , ஆனால் எதார்த்தத்தில் இந்த நான்கு தேவ்பந்தி உலமாக்களின் குப்ர் வாக்கியங்களை அறியாதிருந்தால் ,அத்தகைய நபர் தேவ்பந்தி அல்ல (காபிர் என்று தீர்ப்பு வழங்கப்பட்டவர்) .அத்தகைய நபர் நம்பிக்கை மறுப்பாளர் அல்ல இன்னும் அவரது ஜனாஸா தொழுகையை தொழுவது இறைமறுப்பு அல்ல  .அல்லாஹ் நன்கு அறிந்தவன் .  '
[நூல்- மஆரிப் ஷரஹ் புஹாரி , பக்கம் 914,ரஜா அகாடமி  ]

மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு - ஷைகு ஷரீப் அல் அம்ஜதி அவர்கள் 'எதார்த்தத்தில் தேவ்பந்தி இல்லை ' என்று குறிப்பிடக் காரணம் ,இமாம் அஹ்மத் ரிழா மற்றும் ஏனைய ஸுன்னி உலமாக்களால் வழங்கப்பட்ட  பத்வாவில் , 'தேவ்பந்தி' என்று பதம் ஒரு குறிப்பிட்ட சாராரையே குறிக்கும் .















Related Posts Plugin for WordPress, Blogger...

Tuesday 7 February 2017

இந்தியாவில் வஹாபிய பித்னாவின் ஆரம்பம் - 4




கத்மே நுபுவ்வத் மற்றும் நஸீர் ஏ முஹம்மதி குறித்த விவாதங்களும் ,இப்னு அப்பாஸ் அவர்களுடைய அதர் பற்றிய கேள்விகளும் அதன் பதில்களும் 

 தேவ்பந்தி பிர்காவின் மவ்லவி முஹம்மத் காஸிம் நானோத்வி (தாருல் உலூம் தேவ்பந்தின் ஸ்தாபகர்  )  தமது நூலான 'தக்தீருன் நாஸ்' ல் பின்வருமாறு எழுதுகிறார் ,

"சாமானிய மக்கள் ,பொதுமக்கள் “காத்தமுன் நபீயீன்” என்பதன் பொருள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் காலம் எல்லா நபிமார்களுக்கும் பிந்தியது என்றும் அவர்கள் தாம் இறுதி நபி என்றும் அர்த்தம் கொள்வர்.எனினும் விஷயம் அறிந்தவர்களுக்கு .பிந்தி வருவதிலோ அல்லது இறுதி நபி என்பதிலோ எந்த விசேஷமும் இல்லை என்று அறிவர் .

அண்ணலம் பெருமான் முஹம்மது ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களுக்கு பின்னர் ஒரு நபி பிறந்தாலும் அது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இறுதியானவர்கள் என்பதில் எந்த விளைவையும் உண்டாக்காது .எனவே அவர்கள் காலத்தில் வேறொரு நபி வேறு ஒரு கிரகத்தில் வருவதிலோ அல்லது இதே கிரகத்தில் வருவதிலோ எந்த வேறுபாடும் உண்டாகாது . "
                                                   
                                                   
                                                   

[ நூல் -தக்தீருன் நாஸ் ,பக்கம் 24,மவ்லவி காசிம் நானோத்வி  ] 

மவ்லானா முஹம்மது பாசிலுக்கு எழுதிய கடிதத்தில் மவ்லவி காசிம் நானோத்வி  பின்வருமாறு எழுதுகிறார் ,

“காத்தமுன் நபீயீன்” என்பதன் பொருளை எழுத்தியல் பொருளாக எடுப்பவர்கள் , நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் நுபுவ்வத்  காலம் எல்லா நபிமார்களுக்கும் பிந்தியது என்றும் அவர்கள் தாம் இறுதி நபி  என்று பொருள் கொள்வர் . எனினும் இந்த விஷயம் புகழோ ,தீங்கோ அளிக்கக்கூடிய ஒன்றாக இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள் . " 

[ நூல் - காசிம் உல் உலூம் ,பக்கம் 55 , முதல் கடிதம் ]   

மவ்லவி அஷ்ரப் அலி தான்வி எழுதுகின்றார் ,
"மவ்லவி காசிம் நானோத்வி தக்தீருன் னாஸ் நூலை எழுதிய பொழுது ஒட்டுமொத்த இந்தியாவிலும் மவ்லவி அப்துல் ஹை என்பவரைத் தவிர வேறு யாரும் ஆதரிக்கவில்லை  "
                                                Al-Ifadat al-Yawmiya

[ நூல் - அல் இபாதாத் அல் யவ்மியா , பக்கம்  580, அஷ்ரப் அலி தான்வி  ] 

மவுலானா முஹம்மது ஷாஹ் பஞ்சாபி , மவ்லானா பஜ்லே மஜீத் பதாயூனி , மவ்லானா ஹிதாயத் அலி பரேல்வி , மவ்லானா பஸீஹுத்தீன் பதாயூனி , மற்றும் ஷைகு முஹம்மது தான்வி ஆகியோர் மவ்லவி காசிம் நாணோத்வியின் 'தக்தீருந் நாஸ் ' நூலுக்கு எதிராக நூற்களை எழுதி அவற்றை கடுமையாக எதிர்த்தனர் . 

   
ஹழ்ரத் மவ்லானா அப்துல் சமீ பேதில் ராம்பூரி ,ஷைகு  ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) அவர்களின் கலீபா  மிகப் பிரபலமான நூலான 'அன்வாரே சாதியா ' என்னும் நூலை எழுதினார் . 

                                                     Anwar-e-Sati’ah



இந்த நூலுக்கு பதில் அளிக்கும் விதமாக மவ்லவி கலீல் அஹ்மத் அம்பேத்வி ஸஹ்ரான்பூரி ( பிறப்பு - ஹிஜ்ரி 1269 -  1852 ஆம் ஆண்டு)
 (மறைவு ஹிஜ்ரி 1346 - 1927 ஆம் ஆண்டு )     'பராஹீனே காத்தியா ' என்னும் நூலை எழுதினார் .
                                                          Baraheen-e-Qati’ah
இந்த நூலுக்கு மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி அதன் கருத்துக்களை ஏற்று ஒப்புதல் வழங்கினார் . இந்த நூலில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் புனிதமிகு அறிவாற்றலை ,சபிக்கப்பட்ட ஷைத்தான் இப்லீசுடன் இஸ்லாமியர்களின் மனம் நோகும் வகையில் ஒப்பீடு செய்துள்ளார் .

கலீல் அஹ்மத் எழுதுகின்றார் ,

" இறுதி முடிவு : ஷைத்தான் மற்றும் மலக்குல் மவ்த்து ஆகியோருடைய நிலையை பார்த்த பின்னர் சிந்திக்க வேண்டிய விஷயம் யாதெனில் , அதைப்போன்று உலகமனைத்தையும் உள்ளடக்கிய பேரறிவு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களுக்கு உண்டென எந்தவிதமான ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரமும் இல்லாமல் , வெறுமெனே தவறான ஒப்புமை கொண்டு மட்டும் நிரூபிக்க முயல்வது - இதற்கு பெயர் ஷிர்க் இல்லையென்றால் ,இது ஈமானின் எந்த பகுதி ?  

ஏனெனில் அத்தகைய விசாலமான அறிவு ஷைத்தான் மற்றும் மலக்குல் மவ்த்து உண்டென்பது அறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் மூலம்   நிரூபிக்கப்பட்டுள்ளது (நுஸுஸ் கதிய்யாஹ் ). அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்  அதேபோன்ற ஆழமான அறிவுடையவர்கள் என்று என்று நிரூபிக்கும் குரான் ஹதீஸ் உடைய அறுதிப்படுத்தப்பட்ட ஆதாரம் எங்குள்ளது  ?  எல்லா அறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை மறுத்து  இந்த ஒரு ஷிர்க்குடைய நம்பிக்கையை நிலைநிறுத்தவதற்கு  ".

"பராஹீனே காத்தியா " நூல்  எழுதப்பட்டது ஹிஜ்ரி 1303ல் (1885ஆம் ஆண்டு ) . இந்த நூலைக் கொண்டு பெரும் அதிருப்தி ஏற்பட்டது .

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள் இதை எதிர்த்தனர் . ஹிஜ்ரி 1306ல்  (1888ஆம் ஆண்டு ) , பஞ்சாபின் பஹவல்பூர் நகரில் ஓர் விவாதம் நடந்தது , பஹவல்பூரின் நவாப் நவாப் முஹம்மது சாதிக் அப்பாஸியின் ஏற்பாட்டில் . இந்த நகரில் தான் அப்பொழுது கலீல் அஹ்மத் அம்பேத்வி பணி செய்து வந்தார் .

மவ்லவி மஹ்மூது ஹசன் தேவ்பந்தி மற்றும்  கலீல் அஹ்மத் அம்பேத்வி "பராஹீனே காத்தியா " நூலை ஆதரித்தும் ,
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் சார்பாக மவ்லானா குலாம் தஸ்தகீர் கஸூரி வாதிட்டார்கள் . ஷைகுல் மஷாயிக் ஷாஹ் குலாம் பரீத் அவர்கள் இந்த  விவாதத்தின் நீதிபதியாக இருந்தார்கள் .

இந்த முழுமையான விவாதமும் "தக்தீஸ் உல் வகீல் அன் தவ்ஹீன் உர் ரஷீத் வ கலீல் " என்று நூல் வடிவில் வெளியிடப்பட்டுள்ளது .

                                        Taqdees ul Wakeel an Tauheen ur rasheed wal khalil


இது தான் 'அஹ்லே தேவ்பந்த்' க்கு எதிரான முதல் பத்வா .  மவ்லானா குலாம் தஸ்தகீர்   கஸூரி  ஹாஷ்மி நக்ஷ்பந்தி அவர்களால் வெளியிடப்பட்டது .

இந்த விவாதம் முழுக்க முழுக்க  எழுத்துப்பூர்வமானது ,மேலும்
மவ்லானா குலாம் தஸ்தகீர்   அவர்களின் வாதமானது ,

" என்னுடைய மறுப்பானது நீங்கள் படைப்புகளில் மிகவும் அறிவார்ந்தவர்களான நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் விசாலமான அறிவை மறுத்ததோடு , அவர்களின் அறிவை ஷைத்தானை விடவும் குறைவானது என்று கூறியுள்ளீர்கள் . இது மிகவும் மோசமான அவமரியாதை ஆகும்  " 
[நூல் -தக்தீஸ் உல் வகீல் ,பக்கம்  93  ]


 ரஷீத் அஹ்மத் கங்கோஹி  , கலீல் அஹ்மத் அம்பேத்வி ஆகியோரின் ஷைகான ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) ,மற்றும் பாக்கியத்துஸ் ஸாலிஹாத்தின் நிறுவனர் ஷம்சுல் உலமா அஃலா ஹஸ்ரத் அப்துல் வஹ்ஹாப் அல் காதிரி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) அவர்களின் ஆசிரியர்களில் ஒருவரான ஷைகு ரஹ்மத்துல்லாஹ் கீரான்வி  (ரஹ்மத்துல்லாஹி அலைஹி )  அவர்களும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்களை ஆதரித்து , மவ்லானா குலாம் தஸ்தகீர் அவர்களின் நிலைப்பாட்டை ஒப்புக்கொண்டு அவரது நூலான தக்தீஸ் உல் வகீல் க்கு ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டனர் . 

மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி, கலீல் அஹ்மத் அம்பேத்விக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளதை கண்ட  ஷைகு ரஹ்மத்துல்லாஹ் கீரான்வி  (ரஹ்மத்துல்லாஹி அலைஹி )  அவர்கள் கூறினார்கள் , " நான் மவ்லவி ரஷீத் அஹ்மத்  'ரஷீத் ' என்று நினைத்தேன் ,ஆனால் அவர் அதற்கு மாற்றாக உருவாக்கியுள்ளார் . அவர் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் அறிவு ஷைத்தானை விட குறைவு என்று நிரூபிக்க மிகக் கடினமாக முயன்றுள்ளார் .இன்னும் அதற்கு மாற்றமான நம்பிக்கை கொள்வது ஷிர்க் என்று கூறுகின்றார் "
[ நூல் -தக்தீஸ் உல் வகீல் ,பக்கம்  419 ]

ஹிஜ்ரி 1319ல் ( 1901ஆம்  ஆண்டு ) மவ்லவி அஷ்ரப் அலி தான்வி 'இல்முல் கைப் ' சம்பந்தமாக ஒரு கேள்விக்கு விடையளித்து 'ஹிப்ளுள் ஈமான் ' என்னும் நூலை எழுதினார் .

                                         Hifzul Iman-Ashraf Ali Thanvi

இந்த நூலில்,அஷ்ரப் அலி தான்வி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் அறிவை ,பைத்தியக்காரர்களுடனும் ,மிருகங்களுடனும் ஒப்பிட்டு ,பெருமானார்  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )  அவர்களுக்கு வழங்கப்பட்ட மறைவான அறிவைக் கொண்டு எந்த தனிச்
சிறப்புமில்லை என்று கூறியுள்ளார் .

அதன் அசல் கூற்று பின்வருமாறு ,
' இன்னும் ஜைத் கூறுவது போன்று நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களுக்கு வழங்கப்பட்ட மறைவான அறிவு என்னும் பண்பை சாட்டுவது உண்மையென்றால் , கேட்க வேண்டிய கேள்வியாதெனில் ,ஜைத் எதைக் குறிப்பிடுகின்றார் . அது மறைவான அறிவில் (இல்முல் கைப் ) ஒரு பகுதியையா அல்லது முழுமையாகவா ? ஜைத் அதில் ஒரு பகுதியை குறிப்பிட்டுகின்றார் என்றால் ,நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் மறைவான இல்மை  கொண்டு என்ன சிறப்பு உள்ளது . இது மாதிரியான மறைவான இல்ம் எல்லோருக்கும் உள்ளது ,ஜைத் அமர க்கும் உள்ளது , இன்னும் குழந்தைகள் ,பைத்தியக்காரர்கள் ,மிருகங்கள் மற்றும் நான்கு கால் பிராணிகளுக்கும் உள்ளது  '.

ஹழ்ரத் ஸெய்யித் முஹம்மத் ஜீலானி ஹைதராபாதி அவர்களின் பேரர் ஸெய்யித் நஸீருத்தீன் ,ஸெய்யித் மொய்னுதீன் அவர்களின் மகனார் அஷ்ரப் அலி தான்வியின் இந்த கூற்றுக்கு தமது கண்டனத்தை பின்வருமாறு தெரிவிக்கிறார்கள் ,

"சிலர்  அஷ்ரப் அலி தான்வி எழுதிய 'ஹிப்ளுள் ஈமான்' நூலை   எனது பாட்டனாரிடம் காண்பித்து அதைப் பற்றி கேட்டார்கள் . அவர்கள் அந்த நூலை வாசித்து 'மவ்லவி அஷ்ரப் அலி இல்முல் கைப் விஷயமாக மிகவும் அவமரியாதையாக எழுதியுள்ளார் என்றார்கள் ".

சில நாட்கள் கழித்து ஹைதராபாத்தின் மக்கா மஸ்ஜிதில் அஷ்ரப் அலி தான்வி இருந்த பொழுது ,எனது பாட்டனார் அவரிடம் எழுந்து சென்று தமது அருவருப்பை வெளிப்படுத்தி 'இந்த பத்தியில் குப்ர் உடைய வாடை உள்ளது என்றார்கள் '.

சில நாட்கள் கழித்து உலமாக்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் மவ்லானா ஹாபிழ் முஹம்மத் அஹ்மத் (மவ்லவி காசிம் நாணோத்வியின் மகனார் ) அவர்களின் வீட்டில் நடைபெற்றது . அவர் எனது பாட்டனார் மீது அன்பு கொண்டவர் என்பதால் அந்த  ஒருங்கிணைப்புக்கு எனது பாட்டனாரையும் அழைத்தார் . அங்கு உலமாக்கள் 'ஹிப்ளுள் ஈமான்'  நூல் பற்றி விவாதித்தனர் . எனது பாட்டனார் இது விஷயமாக தமது அருவருப்பை வெளிப்படுத்தி, இதைப் பற்றி ஓர் பத்வா வெளியிட்டார்கள் .

இதன் பின்னர் சில நாட்கள் கழித்து கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களை கனவில் கண்டார்கள் . நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம்   (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )  அவர்கள் அந்த நூலுக்கு மறுப்பு தெரிவித்ததைக் கொண்டு சந்தோசம் அடைந்து ,அதை 'அக்பாஹ் ' என்றும் கூறினார்கள் .    நபிகள் நாயகம்   (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )  அவர்கள் , 'நான் உம்மை கொண்டு மகிழ்வுறுகின்றேன் .உமக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்கள்'  ? எனது பாட்டனார் இனி தமது இறுதிகாலம் வரை மதீனாவில் இருந்து அங்கேயே அடக்கம் பெற விரும்பினார்கள்.அவரது விருப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது ,அன்னார் மதீனா ஷரீபிற்கு ஹிஜ்ரத் செய்து ,ஏறத்தாழ பத்தாண்டு காலம் அங்கு கழித்து ஹிஜ்ரி 1364ல் மரணம் எய்தினார்கள் .
                                          Maqamat-e-Khair
[நூல் - மகாமத் ஏ கைர் , பக்கம் 616, ஷாஹ் அபுல் கைர் அகாடமி ,தில்லி ] 

ஹழ்ரத் மவ்லானா அபுல் கைர் நக்ஷ்பந்தி முஜத்திதி திஹ்லவி அவர்கள் சில காலம் கோதி இலாஹி பக்ஷ் ,மீரட் நகரில் வசித்தார்கள் . அந்த சமயத்தில் ஹாபிழ் முஹம்மது அஹ்மது ,மவ்லவி காசிம் நாணோத்வி தேவபந்தியின் மகன் மற்றும் அஷ்ரப் அலி தான்வி ஆகியோர் அவரது ஓர் அமர்வுக்கு வந்து அன்னாரை சந்தித்தனர் .

மவ்லானா குலாம் தஸ்தகீர் கசூரி அவர்களின் ஆதரவாளர் மவ்லவி அஷ்ரப் அலி தான்வியின் 'ஹிப்ளுள் ஈமான்' நூலின் கருத்துக்களை வாசித்துக் காண்பித்தார் .   ஹழ்ரத் ஷாஹ் அபுல் கைர் திஹ்லவி அவர்கள் அதனை முற்றிலும் வெறுப்பூட்டும் ஒன்றாக கண்டு ' இது தான் நீங்கள் செய்யும் மார்க்க சேவையா ? உங்களின் முன்னோர் எமது பாதையில் இருந்தனர் . இதை  ஏன் எதிர்த்தீர்கள் ? என்று வினவ ,அஷ்ரப் அலி தான்வி 'நான் இதன் விளக்கத்தை வேறொரு புத்தகத்தில் எழுதியுள்ளேன்'  என்றார்  . ஷாஹ் அபுல் கைர் கூறினார்கள் 'பலதரப்பட்ட மக்கள் இதன் காரணமாக ஹக்கை விட்டு வெளியேறிவிட்டனர் . உமது விளக்கத்தின் தேவை என்ன எஞ்சியுள்ளது ? ' என்றார்கள் .
                                            Bazm-e-Khair az-Zayd
[நூல்-பஸ்மே கைர் அஸ் ஸைத் , பக்கம் 11,ஷாஹ் அபுல் கைர் அகாடமி ,தில்லி  ]

முஸ்லீம்களிடையே பிரிவினையின் ஆரம்பமும் ,முடிவும் அனைவரும் அறியும் வகையில் பளிங்கு கண்ணாடி போல் உள்ளது .

முஹம்மது ஹுசைன் (ரயீஸ் நஹ்டோர் ,ஜில்லா பீஜ்னோர்  ) அவர்கள் எழுதுகிறார்கள் ,

"  இஸ்மாயில் திஹ்லவி தமது ஆதரவாளர்களுடன் தில்லியில் இருந்து லக்னோ வந்து தமது கொள்கைகளை பரப்ப ஆரம்பித்தார் . அந்த சமயத்தில் தான் மவ்லானா அப்துர் ரஹ்மான் விலாயதி அவர்கள் லக்னோவில் இருந்து வந்தார்கள் . அவர் தமது கராமத்துகளின் காரணமாக பிரபலமாகியிருந்தார் . இஸ்மாயில் திஹ்லவி இந்த காலத்தில் விவாதங்களைத் தவிர்த்து வந்தார் . லக்னோவை விட்டு கிளம்பும் முன் இஸ்மாயில் திஹ்லவி லக்னோவின் உலமாக்கள் வழிதவறிவிட்டனர் என்று கூறினார் . அவர் கல்கத்தாவில் இருந்து திரும்பி வந்து இந்த லக்னோவின் வழிதவறியவர்க்கு  எதிராக ஜிஹாத் புரிவேன் என்றார் . இறைவனின் நேசர் மவ்லானா அப்துர் ரஹ்மான் விலாயதி அவர்கள் கூறினார்கள் 'மகனே ,இத்தகைய எண்ணம் உள்ள எவரும் திரும்புவதில்லை'  "
 [நூல்- பர்யாத் அல் முஸ்லிமீன் , ஹிஜ்ரி 1308/ 1890ஆம் ஆண்டு , முஹம்மது ஹுசைன் பஜ்நோரி  ]

செய்யித் அஹ்மத் ரேபரேலியுடைய கொள்கைகளும் , இஸ்மாயில் திஹ்லவியின் எழுத்துக்களும் தமது முன்னோர்களின் நம்பிக்கைகளுக்கும் ,ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி அவர்களின் கொள்கைகளுக்கும் மாற்றாக வழி தவறி சென்றன .

இதன் விளைவுகளை சுட்டிக்காட்டி மவ்லானா உபைதுல்லாஹ் சிந்தி தமது பார்வையை தெளிவாக வெளிப்படுத்துகிறார் ,
" காலம் செல்ல செல்ல , மூல கொள்கையில் இருந்து பிரிந்து சென்றதன் காரணமாக , முஸ்லிம்களின் தேசிய இயக்கமாக மாறியிருக்க வேண்டிய வலியுல்லாஹ் இயக்கம் கொள்கை பிரிவினையின் தளமாக மாறிப் போனது . இந்த பிரிவினை செய்யித் அஹ்மத் ரேபரேலி உடன் தொடங்கியது . இந்த இயக்கத்தின் மற்றோரு பிரிவான தேவ்பந்த் இயக்கமும் அதே முடிவை அடைந்தது . இன்றும் பெருவாரியான மக்கள் பரேலவிகளாக இருப்பதோடு இவ்விரு இயக்கங்களையும் குப்ர் கொள்கைகளை கொண்டவர்கள் என்றே கருதுகின்றனர் . "
[நூல்- இபாதாத் ஏ மல்பூஜாத் , பக்கம் 349, சிந்த் சாகர் அகாடமி , லாகூர் ,மவ்லானா உபைதுல்லாஹ் சிந்தி  ]

இந்தியாவில் ஹிஜ்ரி 1240/1825ஆம் ஆண்டுக்கு பின் உண்டான இஸ்லாமிய பிரிவினையின் காரணமும் ,அதன் காரணகர்த்தாக்களும் ,அதன் பின் புலமும் விவரிக்கப்பட்டுள்ளது .

அக்காலத்தில் வட இந்தியாவைச் சார்ந்த அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தை சார்ந்த  செல்வாக்கு நிறைந்த உலமாக்களின் சுருக்கமான பட்டியல் பின்வருமாறு ,

ஹிஜ்ரி 13ஆம் நூற்றாண்டு :


  • அல்லாமா அப்துல் அலி பிரங்கி மஹல்லி லக்னவி (1144-1235  ஹிஜ்ரி 
  • ஷாஹ் முஹம்மது அஜ்மல் இலாஹாபாதி (1160-1236 ஹிஜ்ரி )
  • ஷாஹ் அன்வாருல் ஹக் பிரங்கி மஹல்லி (1159-1239 ஹிஜ்ரி )
  • ஷாஹ் குலாம் அலி நக்ஷ்பந்தி திஹ்லவி (1158-1240  ஹிஜ்ரி )
  • ஷாஹ் அபூ சயீத் முஜத்திதி ராம்பூரி (1196-1226  ஹிஜ்ரி )
  • ஷாஹ் செய்யித் ஆலே அஹ்மத் காதிரி பரகதி மெஹ்ரார்வி (1160-1262 ஹிஜ்ரி )
  • ஷாஹ் அபுல் ஹசன் பர்த் ப்ஹுல்வாரவி (1191-1265 ஹிஜ்ரி )
  • ஷாஹ் அஹ்மத் சயீத் முஜத்திதி ராம்பூரி (1217-1277  ஹிஜ்ரி )
  • அல்லாமா பஜ்லே ஹக் கைராபாதி (1212-1278  ஹிஜ்ரி 
  • அல்லாமா அப்துல் ஹலீம் பிரங்கி மஹல்லி (1209-1285 ஹிஜ்ரி )
  • அல்லாமா பஜ்லே ரசூல் உத்மானி காதிரி பதாயூனி (1213-1289 ஹிஜ்ரி 
  • ஷாஹ் ஆலே ரஸூல் அஹ்மதி காதிரி பர்கத்தி மெஹ்ரார்வி (1209-1296 ஹிஜ்ரி )  
  • மவ்லானா நகி அலி கான் பரேல்வி (1246-1297 ஹிஜ்ரி )
இன்னும் எண்ணற்றோர் .அல்லாஹ் இவர்களை பொருந்திக் கொள்வானாக ! ஆமீன் .

ஹிஜ்ரி 14ஆம் நூற்றாண்டு :

  • மவ்லானா அப்துல் ஹை பிரங்கி மஹல்லி லக்னவி (1264-1304 ஹிஜ்ரி 
  • முப்தி இர்ஷாத் ஹுசைன் முஜத்திதி ராம்பூரி (1248-1311 ஹிஜ்ரி 
  • மவ்லானா பஜ்லே ரஹ்மான் கஞ் முராதாபாதி (1208-1313 ஹிஜ்ரி 
  • மவ்லானா குலாம் தஸ்தகீர் குஸூரி லாகூரி (மறைவு 1315  ஹிஜ்ரி )
  • மவ்லானா அப்துல் காதிர் உத்மானி காதிரி பரகதி பதாயூனி (1253-1319 ஹிஜ்ரி )
  • மவ்லானா ஹிதாயத்துல்லாஹ் ராம்பூரி ஜான்புரி (மறைவு 1326 ஹிஜ்ரி )
  • மவ்லானா கைருத்தீன் திஹ்லவி (மறைவு 1326  ஹிஜ்ரி )
  • மவ்லானா அஹ்மது ரிழா ஹனஃபி காதிரி பரகதி பரேல்வி (1272-1340 ஹிஜ்ரி )
  • ஷாஹ் அபுல் கைர் நக்ஷபந்தி திஹ்லவி (1272-1341  ஹிஜ்ரி )
  • ஸெய்யித் ஷாஹ் அலி ஹுசைன் அஷ்ரபி கச்சோச்சாவி (1266-1355  ஹிஜ்ரி )
  • ஷாஹ் மெஹர் அலி கோல்ராவி பஞ்சாபி (1274-1356 ஹிஜ்ரி )

இன்னும் எண்ணற்றோர் .அல்லாஹ் இவர்களை பொருந்திக் கொள்வானாக ! ஆமீன் .








  




Related Posts Plugin for WordPress, Blogger...