Friday 31 October 2014

தேவ்பந்த் தப்லீக் ஜமாத் பற்றி தமிழக உலமாக்கள்



Hidayathul Anaam IlaJiyarathil Auliayil Kiram

எம்பெருமானார் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நஜ்தைக் குறிப்பிட்டு , 
“ இங்கு தான் அதிர்ச்சிகளும்,குழப்பங்களும் உண்டாகும். இங்கிருந்து தான் ஷைத்தான் உடைய கொம்பு உதயமாகும்” என்று முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்."
நூல் – ஸஹீஹ் முஸ்லிம் ,பாகம் 2,பக்கம் 393,394. ஸஹீஹ் புஹாரி ,பாகம்  2,பக்கம் 1051, மிஷ்காத் .

அவ்வாறாகவே , சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நஜ்து தேசத்தில் அப்துல் வஹ்ஹாபும் அவருடைய மகன் முஹம்மதும் உண்டாயினர். அவ்விருவரையும் பின்பற்றியவர்கள் தான் மௌலவி இஸ்மாயில் திஹ்லவியும் அவரைச் சார்ந்தவர்களும். அக்குழுவினர் இரு பிரிவினராகப் பிரிந்தனர், வெளிரங்கமாகவே தங்களை வஹாபிகள் என்று காட்டிக் கொண்டவர்கள் ஒரு குழுவினர் ( அஹ்லே ஹதீத் ) . அவர்கள் எந்த மத்ஹபையும் ஏற்று பின்பற்றாதவர்கள். வெளிரங்கத்தில் தங்களை வஹாபிகள் என்று காட்டிக் கொள்ளாமல் அந்தரங்கத்தில் வஹாபிகளா இருக்கக் கூடியவர்கள் மற்றக் குழுவினர் (தேவ்பந்தி தப்லீக் ஜமாத்) . இவர்கள் ஹனபீ-ஹன்பலி என்று வெளிக்கு மதுஹபுஹளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டு முற்றிலும் வஹாபிக் கொள்கைளையே தங்கள் கொள்கைகளாகக் கொண்ட ‘முகல்லிது’ வேடதாரிகள்.

இவர்களில் முந்திய கூட்டத்தாரின் அபாயங்களைவிட பிந்திய இந்தக் கூட்டத்தாரின் அபாயங்கள் மிகவும் பயங்கரமானவை. ஏனெனில் , இவர்கள் ‘மத்ஹபு’ என்ற போர்வையை போர்த்திக் கொண்டு முஸ்லிம்களை வழிகேட்டில் ஆக்க முற்பட்டிருக்கிறார்கள். இவர்கள் தங்களது நயவசகத் தந்திர உபாயத்தினால் ஸூன்னத்து வல் ஜமாத்துடைய நல்ல கொள்கையில் ஆகி இருந்த அனேகர்களை பொல்லாங்குடைய வஹாபியத்தான வழிகேட்டின் அளவில் இழுத்து போட்டும் விட்டனர்.

வஹாபிகளான அவர்களின் கொள்கைக் கூற்றுகளைப் பாருங்கள்:

“ முஹம்மது நபி அவர்கள் மரணித்து மண்ணோடு மண்ணாகிப்  போய்விட்டார்கள். அவர்களுடைய ரவ்ழாவிற்கு ஜியாரத்திற்காகப் போவது ஷிர்க்கு (இணைவைத்தல்) ஆகும்.

யா நபி! யா முஹம்மது !  யா ரசூலல்லாஹ் ! என்று அழைத்துக் கூப்பிடுவது ஷிர்க்காகும். அவ்விதம் அழைத்துக் கூப்பிடுபவர் காபிராக இருப்பார்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மறைவான சங்கதிகளை அறிய மாட்டார்கள். தொழுகையில் அவர்களுடைய க்யாபகம் வருவதானது மாடு,கழுதையின் க்யாபகம் வருவதை விட மிகக் கெட்டதாகும். அவர்களுடைய முஃஜிஸாத்துகளை விட சூனியக்காரர்களின் சூனியம் அதிக சக்தி வாய்ந்த்து. அவர்கள் ஷபாஅத்து செய்வார்கள் என்று நம்புவது ஷிர்க்காகும்.

நபிமார்கள்,அவ்லியாக்களின் கப்ரு புத்து(விக்கிரகம்)களுக்கு ஒப்பாகும். அவைகளை தகர்த்து எறிய வேண்டும்.அவர்களுக்கு எத்தகைய சக்தியும் கிடையாது. அவர்கள் பால் வஸீலா தேடுதல் ஷிர்க்காகும்.அவர்களுக்கு நேர்ச்சை செய்வது ஹறாமாகும்.

சகல நபிமார்கள்,ஸஹாபாக்கள்,அவ்லியாக்கள் ஆகியவர்கள் அல்லாஹ்வின் தகுதிக்கு முன் செம்மானை விடக் கீழ்த்தரமானவர்கள்.
மீலாதுன் நபி கிருஷ்ண ஜெயந்திக்கு ஒப்பாகும். 
காதிரிய்யா,ஜிஷ்திய்யா,நக்ஷபந்தியா முதலான தரீக்காக்கள் வழி கேடானவை.

மவ்லித்,பாத்திஹா,கத்தம் முதலானவற்றின் ஷீர்னி(வினியோகப் பொருள்) ஹறாம் ஆகும்.அவ்லியாக்களின் பெயராலும்,மவுத்தானவர்களின் பெயராலும் கத்தம் பாத்திஹா ஓதி அதன் பலனை அவர்கள் பால் ஈஸால் தவாபு செய்வது,பிராமணப் புரோகிதர்கள் அவர்களுடைய வேதத்தை ஓதி சுலோகம் படித்து பிதுர்களுக்கு திதி செய்வது போன்றேயாகும் . “

அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். மேற்சொன்னவைகளும் அவை போன்ற தப்புத் தவறான நூற்றுக்கணக்கான கொள்கைகளும்,வஹாபிகளின் வழிகேடான அகீதாக்களாகும். இத்தகைய வழிகெட்டகொள்கைகளின் பால் வஹ்ஹாபிய்யா மொளலானா,மொளலவிகளும் மார்க்கத்தில் மறுமலர்ச்சி காண விரும்புவதாகச் சொல்லிக்கொள்பவர்களும்,தாங்கள் வழிகேட்டில் இருப்பதை அறியாமல்,ஏனைய முஸ்லிம் பெருமக்களை நேர்வழியில் ஆக்க முற்படுவதாக மனப்பால் குடித்துக் கொண்டு வழி கெடுக்க முற்பட்டு இருக்கிறார்கள்.

“நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் , இபுலீசை நஜ்து தேசத்து ஷைகு உடைய உருவத்திலே காண்பார்கள் “ என்ற விபரம் சரியாகவே இருக்கிறது.

நஜ்து வஹ்ஹாபிஷ் ஷைகுடைய ‘கிதாபுத் தவ்ஹீது’ வின் உர்து மொழி பெயர்ப்பு நூற்களாகிய ‘தக்வியத்துல் ஈமான்,ஸிராத்துல் முஸ்தகீம்,இதுபாத்துத் தவ்ஹீது ‘ போன்ற ஆபாச மலக் குவியல்களிலிருந்து சிலவற்றை பொறுக்கி தவ்ஹீதோ இபாதத் என்ற பெயரில் வடநாட்டு வஹாபி மொளலவியொருவர் உர்துவில் அச்சிட்டுள்ளார். அதை ‘ஏக தெய்வ வணக்கம்’  நாமத்தால் தென்னாட்டு பாக்கவீ ஒருவர் தமிழாக்கம் செய்திருக்கின்றார். அதை மற்றொரு ‘பீடி மொளலவி’ அச்சிட்டு இலவசமாக வினியோகம் செய்துள்ளார்.

மேலும் ‘ஜியாரத்துல் குபூர்’ அவ்லியாக்களை அவமதிக்காதீர் – ‘மஹான் ஷாகுல் ஹமீது’ ‘ஏக தெய்வ வணக்கம்’ முதலான சில்லறைத் துக்கடாப் பிரசுரங்களை – அதிக விஷமுடைய நச்சரவத்திற்கு நல்ல பாம்பு என்று பெயர் உள்ளது போல- வஹ்ஹாபியத்தின் விஷவித்துகளைக் கொண்ட மேற்சொன்ன நூற்கள் பெயரால் கவர்ச்சிகரமான பெயர்களை சூட்டிக் கொண்டு நஜ்து ஷைத்தானிய்யத்தான பணிகளை தென்னாட்டில் செய்து வருகின்றன.இத்தகைய அகீதா கெட்டவர்கள் தங்களை வஹ்ஹாபிகள் என்று சொல்லிக் கொள்வார்களானாலும் பரவாயில்லை.ஆனால் இவர்களோ அவ்வாறு சொல்லாமல் தங்களை ஸுன்னத்து வல் ஜமாத் என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள். எனவேதான் இவர்களுக்கு எதிர்ப்பும்,மறுப்பும் ஏற்படுகின்றன. உள்ளொன்று புறம் ஒன்றாயிராமல் வெளிக்கும் தங்களை வஹ்ஹாபிகள் என்று பகிரங்கமாக அறிவித்து தங்களது வஹ்ஹாபிக் கொள்கையை இவர்கள் பரப்பினால் இவர்களை யார் ஆட்சேபிக்கப் போகின்றார்கள்.

நூல் – ஹிதாயத்துல் அனாம் இலாஜியாரதில் அவ்லியா இல்கிராம்,பக்கம் 15-18 , ஏழாம் பதிப்பு டிசம்பர் 2008, வெளியீடு சுலைமானியா பப்ளிஷர்ஸ் .

ஆசிரியர் – நாகூர் ஷரீபில் திலகமாய் இலங்குகின்ற குத்புல் மஜீது,பர்துல் வஹீது,ஸையிதுஸ் ஸாதாத்தி  ஸையிதுனா ஸையிது அப்துல் காதிர் ஷாஹூல் ஹமீது காதர்வலி கன்ஜபக்ஷ் கன் ஜஸவாயீ ரலியல்லாஹூ அன்ஹூ  அவர்களின் பொளத்திர் அல்ஹாஜ் மொளலானா மொளலவி முஹம்மது பாக்கர் சாஹிப் ஆலிம் காதிரி ரஹ்மதுல்லாஹி அலைஹி, நாகூர் ஷரீப்.

இந்நூலின் முதற்பதிப்பை(1950) சரிபார்த்து சிறப்புரை வழங்கிய மேன்மை தாங்கிய உலமாக்கள்:


1.       காயல்பட்டணம் மஜ்லிசுல் புகாரிஷ் ஷரீபின் முக்கியஸ்தரும்,சிறந்த முப்தியுமான, மெளலானா,மெளலவி,அல்ஹாஜ்,நஹ்வி முஹம்மது  இஸ்மாயில் ஆலீம் முப்தி அவர்கள்.

2.       காயல்பட்டணம் மஹ்ளறா அரபிக் கல்லூரியின் ஸதர் முதர்ரிஸும்,பிரபல முஃப்தியுமான மெளலானா,மெளலவி அல்ஹாஜ் முஹியித்தீன் தம்பி ஆலீம் அவர்கள்.

3.       காயல்பட்டணம் பிரபல முஃப்தியும்,ஜாவியா மத்ரஸத்துல் பாஸிய்யா பேராசிரியருமான மெளலானா,மெளலவி முஹம்மது அப்துல் காதிர் ஆலீம் ஸித்திகீ அவர்கள்.

4.       காயல்பட்டணம் ஸாகிபு அப்பா தைக்கா மானேஜரும் புகழுடைய பெரியாருமான மெளலானா,மெளலவி, அல்ஹாஜ், பா.சு.முஹம்மது அப்துல்லாஹ் லெப்பை அஸ்ஸதகலி ஆலீம் அவர்கள்.

5.       காயல்பட்டணம் முத்துவாப்பா வலியுல்லாஹ் அவர்களின் திருப்பேரரும்,பெரியாருமான மெளலானா,மெளலவி, ஸூபி முஹம்மது இஸ்மாயில் லெப்பை ஆலீம் (கொம்பாலீம்) அவர்கள்.

6.       மதராஸ் அரசாங்க காஜி மெளலானா,மெளலவி, அல் ஹாஜ், முஹம்மது ஹபீபுல்லாஹ் ஸாகிபு அவர்கள்.

7.       குர்ஆன் தப்ஸீர் விரிவுரையாளரும்,பன்னூல் ஆசிரியருமான மெளலானா,மெளலவி, அல்ஹாஜ், உத்தமபாளையம் முஹம்மது அப்துல் காதிர் ஆலீம் பாக்கவி அவர்கள்.

8.       கொழும்பு அல் ஜாமிஉல் அள்பர் சம்மங்கோடு பள்ளியின் இமாம் மெளலானா,மெளலவி, கிருஷ்ணாப்பட்டணம் அபுல்ஜமால் முஹம்மது  பதுருத்தீன் ஆலிம் நூரி அவர்கள்.

9.       கோட்டாறு மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் செய்யது முஹம்மது ஆலிம் (கத்தீபு,ஜும்மா மஸ்ஜித்,சிங்கப்பூர்)

10.   ஹஜ்ரத் மெளலானா,மெளலவி,அல் ஹாஜ் ஷாஹ் சுல்தான் கலீபா சாஹிபு ஷத்தாரி,காதிரி ,அரசாங்க காஜி,நாகூர்.

11.   மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆலீம் சாகிபு நூரி,ஸத்ரு முதர்ரிஸ் ,காதிரியா மத்ரஸா,நாகூர்.

12.   மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் அஸ்ஸெய்யது ஹூசைன் சாஹிபு காதிரி, நாகூர்.

13.   மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் குலாம் தஸ்தகீர் என்னும் நானா ஸாகிபு ,நாகூர்.

14.   மெளலானா,மெளலவி அஸ்ஸெய்யிது அஹ்மது சாகிபு காதிரி,நாகூர்.

15.   மெளலானா,மெளலவி காஜி கத்திபு,அல்ஹாஜ் ஷைகு ஹசன் சாகிபு ஷத்தாரீ,காதிரி ,நாகூர்.

16.    மெளலானா,மெளலவி செய்யிது முஹம்மது அலி சாஹிபு காதிரி என்னும் சின்னதம்பி சாஹிபு,நாகூர்.

17.   மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் செய்யிது முஹ்யித்தீன் சாகிபு காதிரி,நாகூர்.

18.   மெளலானா,மெளலவி,ஹாபிழ் ஷாகுல் ஹமீது,மேலப்பாளையம்.

19.   மெளலானா,மெளலவி முஹம்மது மீறான், மேலப்பாளையம்.

20.   மெளலானா,மெளலவி,அல்ஹாஜ், ஹாபிழ் முஹ்யித்தீன், மேலப்பாளையம்.

21.   மெளலானா,மெளலவி அஹ்மது முஹ்யித்தீன் ஸித்திக்கீ நூரி,மேலப்பாளையம்.

22.   மெளலானா,மெளலவி அபுல்ஹசன் அலி ஷாதுலி,நூரி,தென்காசி.

23.   மெளலானா,மெளலவி ஹுசைன் முஹம்மது ஆலிம் என்னும் ஆயக்குடி ஸூஃபி ஹஜ்ரத் (மதராஸ் பெரம்பூர் ஜமாலிய்யா அரபி கலாசாலை,தலைமைப் பேராசிரியர்) ஆயக்குடி,பழனி.

24.   மெளலானா,மெளலவி அப்துல் மஜீத் நூரி,ஆயக்குடி,பழனி.

25.   மெளலானா,மெளலவி முஹம்மது அபூஸாலிஹ் ஆலிம் காலங்குடி இருப்பு,கிரிஸ்தியா நகரம்,திருநெல்வேலி.

26.   மெளலானா,மெளலவி முஹம்மது கலீலுர் ரஹ்மான் ஸாகிபு காதிரி,பீஹார்.

27.   மெளலானா,மெளலவி முஹம்மது பஸீஹுத்தீன் சாஹிபு,கவர்மெண்டு காஜி,மதறாஸ்.

28.   மெளலானா,மெளலவி கான் முஹம்மது சாகிபு நூரி,திண்டுக்கல்.

29.   மெளலானா,மெளலவி ஷைகு முஹம்மது இப்னு பீர் முஹம்மது நூரி கோட்டாரீ- பேராசிரியர் ,மத்ரஸா நூருல் இஸ்லாம்,தொடுபுழை,கேரளா.

30.   மெளலானா,மெளலவி ஷைகு அப்துல் காதர் பாகவி இப்னு அல்ஹாஜ் அஷ்ஷைகு அப்துல் மஜீத் காதிரி,பள்ளப்பட்டி.

31.   உலகமெல்லாம் இஸ்லாமை பரப்பும் பணியில் அரும்பெரும் சேவை செய்த உத்தமர்,காதிரிய்யா தரீக்காவின் புகழ் மிக்க ஷைகும்,முர்ஷிதுமான மீரட் ஷாஹ் முஹம்மது அப்துல் அலீம் ஸித்தீக்கி மொளலானா அவர்களது அருந்தவப் புதல்வர் நதர் முஹ்யித்தீன் நூரானி ஸித்தீக்கி காதிரி அவர்கள்.

32.   மெளலானா,மெளலவி,அல்ஹாஜ்  உத்தமபாளையம் முஹம்மது அபூபக்கர் ஆலிம் ஹஜ்ரத் கிப்லா அவர்கள் (நாஜிர் ,மத்ரஸத்துல் காதிரிய்யா மஹ்லறா,காயல்பட்டணம் மற்றும் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் மத்ரஸா,வேலூர்).

33.   இந்தியா ,இலங்கை ஹிஸ்புல்லாஹ் சபையின் தலைவர், மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் ஷைகு அப்துல் காதிர் ஆலிம் ஸித்தீக்கி ஸூபி ஹஜ்ரத் அவர்கள்.

34.   தமிழ்நாட்டில் பிரபல்ய ஆலிமும் முஃப்தியுமான மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் முஹம்மது தமீம் ஆலிம் ஸாகிபு முஃப்தி அவர்களது அருமைப் புத்திரர் மெளலானா,மெளலவி அபுல்பரகாத் ஸிப்கதுல்லாஹ் ஆலிம் – முதர்ரிஸ் நாஜிர்,மத்ரஸா யூசுபிய்யா அவர்கள்.

35.   காயல்பட்டணம் ஜாவியா மத்ரஸத்துல் பாஸிய்யா பேராசிரியர் மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் கத்தீபு சாகுல் ஹமீத் ஆலிம் முஃப்தி அவர்கள்.
 
தேவ்பந்திய தப்லீக் ஜமாஅத் தமிழகத்தில் இஸ்லாமியர் இடையே தலை தூக்கிய ஆரம்ப நாட்களிலேயே,அதாவது 1950 முதல் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தின் சத்திய உலமாக்கள் தமிழக இஸ்லாமியரை அதன் வஹாபிய கொள்கைகளால் உண்டாகும் வழிகேடை கடுமையாக எதிர்த்து உள்ளனர் என்பதற்கு இதுவே தக்க சான்று.
இன்று வரை எதிர்த்தும் வருகின்றனர் .

இன்ஷா அல்லாஹ் மறுமை வரை எதிர்ப்பர் என்பது திண்ணம்  !!!



       


Related Posts Plugin for WordPress, Blogger...

Sunday 26 October 2014

தப்லீக் ஜமாஅத் என்றால் என்ன ? - 8

Related Posts Plugin for WordPress, Blogger...

தப்லீக் ஜமாஅத் என்றால் என்ன ? - 7

Related Posts Plugin for WordPress, Blogger...

Saturday 25 October 2014

தப்லீக் ஜமாஅத் என்றால் என்ன ? - 6

Related Posts Plugin for WordPress, Blogger...

தப்லீக் ஜமாஅத் என்றால் என்ன ? - 5

Related Posts Plugin for WordPress, Blogger...

Sunday 19 October 2014

ஷாஹ் வலியுல்லாஹ்வும் இஸ்திகாதாவும் - 2


                 இன்னும் மற்றொரு அவ்ராத் ஆன  'துஆ யே ஹைதரி'  ஜிஷ்தி-ஸப்ரி தரீக்காவின் மிக முக்கியமான அவ்ராத் ஆகும் .  ஜிஷ்தி -ஸப்ரி சில்சிலாவின் மஷாயிகுமார்களின் கூற்றுப்படி இந்த அவ்ராத் மிகப் பெரும் இறைநேசரான 'ஷைகுல் ஆலம் அப்துல் ஹக் ருதால்வி (ரலியல்லாஹு அன்ஹு) ' அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது . அன்னார் ஹிஜ்ரி 836ல் இவ்வூலகை விட்டும் மறைந்தார்கள் .

அல்லாஹ் அன்னாரின் மண்ணறையை ஓளி வீசும் சுவனச் சோலையாக ஆக்குவானாக. ஆமீன் !!!

இந்த துஆ ஜிஷ்தி-ஸப்ரி தரீக்காவில் மிகவும் விஷேசமான துஆ ஆகும் . எனினும் பிற சில்சிலாவைச் சார்ந்த ஷைகுமார்களும் இதை ஓதுவர் .

இந்த துஆ பாமர முஸ்லிம்கள் ஓதுவது ஆகாது என்று ஸூபியாக்கள் கூறியுள்ளனர் .

பின்வரும் ஸ்கேன் ஷைகு ஷைகுல் ஆலம் அப்துல் ஹக் ருதால்வி (ரலியல்லாஹு அன்ஹு)  அவர்களின் மல்பூஜாத்தைக் கூறும் 'அன்வாருல் உயூன் ' நூலாகும் .  இது மிகவும் அரிதான ஒரு நூல் .

இதில் துஆ யே ஹைதரி உள்ளதைக் காணுங்கள் .
Anwarul uyoon

Dua e Haidari Anwarul uyoon

மேலும் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தன்னுடைய நூலான ''அல் இன்திபாஹ் பி சலாசில் உல் அவுலியா அல்லாஹ் ' வில் தாம் ஷைகு அபூ தாஹிர் குர்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் இருந்து 'கிர்காஹ் ' என்னும் ஸூபியாக்கள் அணியும் கம்பளி ஆடையை வாங்கியதாகவும் ,மேலும் ஜவாஹிர் கம்ஸா வின் விஷேச ஓதும் முறையைக் கொண்டு அனுமதிஅளிக்கப்பட்டதாக எழுதியுள்ளார்கள் .

மேலும் ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் தம்முடைய ஹதீதுகளின் ஸனதை ஷைகு அபூதாஹிர் குர்தி அல் மக்கி அவர்களிடம் தாம் மக்காவில் தங்கியிருந்த காலத்தில் பெற்றார்கள் .

ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் இந்த ஹதீதுக் கலையின் இஜாஸாவை தமது மகனார் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்கு வழங்கினார்கள் . அதன் பின் ஷைகு அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி இந்த இஜாஸாவை பல இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுக்கு வழங்கினார்கள் . அவர்களுள் ஷாஹ் இஷாக் திஹ்லவியும் ஒருவர் . இவர் தான் பின்னர் வஹாபிகளின் ஷைகுகல் ஹதீத்களில் ஒருவர் . நசீர் ஹுசைன் திஹ்லவி ஷாஹ் இஷாக் திஹ்லவியிடம் இருந்து ஹதீதுக் கலையை கற்றார் .

வஹாபிகள் ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களின் மீது 'நாத் யே அலி'  ஓதுவதற்காக  முஷ்ரிக் என்று அவதூறு கூறுவதை நிறுத்த வேண்டும் . ஏனெனில் அது ஷைகு அபூதாஹிர் குர்தி அல் மக்கி அவர்களையும் முஷ்ரிக் என்று கருத வேண்டி வரும் . நவூது பில்லாஹ் !!!

மேலும் ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களின் நூலான 'அல் இன்திபாஹ் பி சலாசில் உல் அவுலியா அல்லாஹ் ' இரு பகுதிகளை உடையது .

முதல் பகுதியில் ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் தஸவ்வுப் தரீக்கா என்னும் ஞானவழிப் பாட்டையின் சில்சிலாவை விளக்கி உள்ளார்கள் .
இரண்டாம் பகுதியில் ஹதீது மற்றும் பிக்ஹ் கலையில் தமது ஸனதை விளக்கி உள்ளார்கள் .

ஷைகு அபூதாஹிர் குர்தி அல் மக்கி அவர்களோ ,ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி அவர்களோ ஷியா அல்ல . இதை ஓதும் பிற மார்க்க அறிஞர்களின் பெயர்களை நீங்கள் ஸ்கேனில் காணலாம் .

வலிமார்கள் மீது இத்தகைய அவதூறு கூறுவதை விட்டும் அல்லாஹ் நம்மை காப்பானாக .
அனைவரும் அஹ்லுஸ் சுன்னத் ஜமாத்தின் அகீதாவில் நின்றுமுள்ள சத்தியமான இஸ்லாமிய அறிஞர்கள் .

'நாத் யே அலி'  யா அலி என்னும் சொற்கள் உள்ளன . ஒரு ஸுன்னி முஸ்லிம் இம்மாதிரியான இஸ்திகாதவைக் கொண்டு அழைக்கும் போது அமீருல் மூஃமினீன்  அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களோ அல்லது கௌதுல் அஃலம் (பைஸ்லா ஹப்த் மஸ்லா ) அவர்களோ அல்லது ஷைகு அஹ்மது ஜர்ரூக் (புஸ்தா அல் முஹத்திதீன் )அவர்களோ அல்லது ஷைகு அஹ்மது அல்வான் (ரத்துல் முஹ்தார் ) அவர்களோ சுயமாக உதவுவதாகக் கருதுவதில்லை .

இம்மாதிரி அழைப்பது வழிகேடர்கலான ராபிதி ஷியாக்களின் வழக்கம் என்பது தவறான வாதம் . ஷியாக்களில் பல பிரிவுகள் உண்டு அவர்கள் இமாம் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை விட உயர்வாகக் கருதும் ஒரு பிரிவும் உண்டு . அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பெருமானார் அவர்களை விட உயர்வானவர்களாகக் கருதும் வழிகேடும் உள்ளது .

இனி தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் மௌலவி ரஷீத் அஹ்மது கங்கோஹியின் பத்வா ரஷீதியாவில் உள்ள ஒரு பத்வாவைக் காண்போம் .

கேள்வி : ஹதீதின் பிரகாரம் ஒருவர் தனிமையில் காட்டில் இருந்து சிங்கத்தை நினைத்து அஞ்சினால் ,அவர் யா தானியால் (அலைஹிவஸலாம் ) என்னைக் காப்பாற்றுங்கள் என்று கூற வேண்டும் . இது அனுமதிக்கப் பட்டதா ,இல்லையா ? இம்மாதிரியான இஸ்திகாதா அனுமதிக்கப்பட்டால் அது ஷிர்க்கா இல்லையா ?

பதில் : இந்த ஹதீத் சரியென்றால் , அதன் பொருள் அல்லாஹ் தானியால் அலைஹிவஸலாம் அவர்களின் பெயரின் மீது அத்தகைய விளைவை சாட்டியுள்ளான் .


Fatwa Rasheediya

(இந்த ஹதீத் ழயீபான ஹதீத் ஆகும் .இன்னும் மௌலவி ரஷீத் அஹ்மத் இதை ஷிர்க் என்று கூறவில்லை )


ஆக இத்தகைய இஸ்திகாதாவை எந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் ஷிர்க் என்று கூறவில்லை கர்னுஷ் ஷைத்தான் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி அல் தமீமி தனது வஹாபிய பித்னாவை தொடங்கும் வரை .

ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி ரஹ்மதுல்லாஹி அலைஹி 'அத்யாப் உன் நகம் பி மத் சைய்யதில் அரபி வல் அஜம் ' என்னும் நூலை அரபியில் எழுதியுள்ளார்கள் . அது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களை புகழ்ந்தும் அவர்களின் மீது பேரன்பு வைப்பதைப் பற்றிய நூல் . இதற்கான விளக்கவுரையை பார்சியில் எழுதியுள்ளார்கள் .


atyab un naghm fi madh sayyidil arab wal ajam

atyab un naghm fi madh sayyidil arab wal ajam  - Chapter 11

atyab un naghm fi madh sayyidil arab wal ajam  - Chapter 11


அதில் 11ம் அத்தியாயத்தில் (நபி பாக் ஸல்லல்லாஹு அலைஹி வா ஸல்லம் கீ பார்காஹ் மே ஆஜிஸி வ பரயாத் பே பயான் மேன் ) அன்னார் பெருமானார் அவர்களை இவ்வாறான சொற்களைக் கொண்டு எழுதுகின்றார்கள் :

" நாங்கள் நம்பிக்கை கொள்ளும் ஒருவர் "
"துன்பங்களை நீக்கும் ஒருவர் "
" தாங்கள் தான் எனது மனம் பெரும் துன்பத்தில் உள்ள போது எனது கஷ்டங்களை நீக்குபவர் "


இவ்வாறு எழுதிய பின்பு அதற்கு பின்வரும் விளக்கவுரையை எழுதுகின்றார்கள் ,

' பல்வேறு விஷயங்களில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் புனித ஆன்மாவிடத்திலே  உதவி தேடுவது இன்றியமையாதது .'




இந்த நூல் உர்துவில் பீர் கரம் ஷாஹ் அஸ்ஹரி  ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது .
Related Posts Plugin for WordPress, Blogger...

Saturday 18 October 2014

ஷாஹ் வலியுல்லாஹ்வும் இஸ்திகாதாவும் - 1


    ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் தன்னுடைய 'அல் இன்திபாஹ் பி சலாசில் உல் அவுலியா அல்லாஹ் ' என்னும் நூலில் எழுதுகிறார்கள் தாம் ஷத்தாரியா சில்சிலாவில் (தரீக்காவில்)  இஜாஸத் என்னும் அனுமதி பெற்றதாகச் சொல்கிறார்கள் . அவர்கள் இந்த இஜாஸத்தின் சில்சிலா என்னும் சங்கிலித் தொடர் வரிசையை அறிவிக்கிறார்கள் .அதில் அனுமதி வழங்கிய பல்வேறு பெரியார்களின் பெயர்களை அறிவிக்கிறார்கள் . அதில்  இந்தியாவில் ஷத்தாரியா சில்சிலாவின்  தலைமை வகித்த ஷைகு கவுஸ் குவாலியர் அவர்களின் பெயரும் அடங்கும் .

ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் இந்த சங்கிலித் தொடர் மூலம் தனக்கு ஷத்தாரியா தரீக்காவில் கிடைத்த அவ்ராதுகளையும் ,விர்துகளையும் குறிப்பிட்டுள்ளார்கள் . அதில் 'துஆ யே ஸைபி' மற்றும் 'ஜவாஹிர் கம்ஸா' ஆகியவை அடங்கும் .

Al Intibah fi Salasil ul Auliaullah’

Dua e Saifi

Nad e ali

'துஆ யே ஸைபி ' எனப்படும் துஆ அதை ஓதுவதற்கும்,கற்பித்துக் கொடுக்கவும்  அனுமதி பெற்ற ஷைகுமார்களால் தனது மூரீதுக்கு கற்றுக் கொடுக்கப்படும் . துஆ யே ஸைபியின் இறுதிப் பகுதியில் 'நாதே அலி ' என்னும் பகுதியில் 'யா அலி ,யா அலி ,யா அபூ துராப் '  போன்ற சொற்கள் வருகின்றன .

தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளுக்கு இதை விட இஸ்திகாதாவுக்கு ஆதாரம் வேண்டுமா? தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் இனியாவது ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களை தங்களைச் சார்ந்தவர் என்று முன்னிறுத்துவதை நிறுத்த வேண்டும் .

இனி அவர்கள் ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களின் இந்த அகீதாவை ஏற்றுக் கொண்டால் இனி அஹ்லுஸ் சுன்னத் வால் ஜமாத்தைச் சார்ந்த முஸ்லிம்களை முஷ்ரிக் என்று அழைப்பதை நிறுத்த வேண்டும் .

'ஜவாஹிர் கம்ஸா ' என்னும் நூல் வேறு துஆக்களின் தொகுப்பாகும் . இதில் உள்ள 'துஆ யே ஹைதரி' ன் இறுதிப் பகுதியில் 'யா அலி ,யா அலி ,யா அபூ துராப் ' போன்ற சொற்கள் வருகின்றன .

இனி தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத் வஹாபிகள் இதை கருத்தில் கொண்டு இஸ்திகாதா மீதான தங்களின் வஹாபிய தீர்ப்பை ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் மீது செலுத்தட்டும் .

மேலும் ஷாஹ் வலியுல்லாஹ் தமது மற்றொரு நூலான 'அன்பாஸுல் ஆரீபீன்' ல் குறிப்பிடுகின்றார்கள் தமது தந்தையும் ஷைகுமான ஷாஹ் அப்துர் ரஹீம் அவர்கள்  ஒவ்வொரு வருடமும் மௌலித் கொண்டாடுபவர்களாகவும் அதில் நியாஜ் என்னும் நேர்ச்சை செய்பவராகவும் இருந்தார்கள் என்று .

அதே நூலில் பிறிதொரு இடத்தில் தமது தந்தை ஷாஹ் அப்துர் ரஹீம் அவர்கள் தனது ஆசிரியரின் கபுருக்குச் சென்று குரான் ஓதியதாகவும்,அப்பொழுது அன்னார் சூராவின் ஒரு பகுதியை ஓதிய பின்பு மற்றொரு கபுரில் இருந்து ' எமது கபுர் அதில்லை .எனினும் அங்கு குரான் ஓதிய பின்பு இங்கு வரவும் ' என்று அசரீரி வந்ததாகவும்,எனவே ஷாஹ் அப்துர் ரஹீம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் இரு கபுருகளிலும் குரான் தனித்தனியாக ஓதியதாக பதிவு செய்துள்ளார்கள் .

'ஜவாஹிர் கம்ஸா ' எனப்படுவது இந்திய துணைக் கண்டத்தில் உள்ள பல ஸுபி ஷைகுமார்களால் ஓதப்படும் பல்வேறு துஆக்களின் தொகுப்பு . இதனை தொகுத்தவர்கள் ஷைகு கவுஸ் குவாலியரி .
அன்னார் அந்த துஆக்களுக்கு ஓரக் குறிப்பும்,விளக்கமும் பார்சியில் எழுதியுள்ளார்கள் .

அதை உர்துவில் பலரும் மொழிபெயர்த்துள்ளனர் .எனினும் மிர்ஸா பைக் நக்ஷபந்தியின் மொழிபெயர்ப்பு பிரசித்தி பெற்றது .

துஆ யே ஸைபி ஜவாஹிர் கம்ஸாவில் உள்ள அத்தகைய ஒரு துஆ .இதை ஓதுவதற்கு பல ஷரத்துகள் என்னும் நிபந்தனைகள் உள்ளன .அதில் ஒன்று துஆ ஏ ஸைபி ஓதும் முன் 'நாதே அலி' ஓதுவதாகும் .

இந்த துஆவின் 'நுகாத்'  படி 'நாதே அலி' ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு துஆ யே ஸைபி க்கு முன்னும் ,பின்னும் ஓத வேண்டும் .

அந்த ஷரத்துகளை இங்கு காணலாம் .


Jawahir Kamsa

Dua e Saifi Condition Jawahir Kamsa

ஆக துஆ யே ஸைபி ஓதும் நபர்,முதலில் நாதே அலி ஓதுவார் .

ஜவாஹிர் கம்ஸா முழுமையாக ஓத அனுமதி பெற்ற நபர் ,நாதே அலியும் ஓதுவார் ,ஏனெனில் நாதே அலி ஜவாஹிர் கம்ஸாவில் உள்ள பல்வேறு துஆக்களில் நின்றுமுள்ளது . 

ஜவாஹிர் கம்ஸாவுடன் இணைந்து உள்ள நாதே அலியின் ஸ்கேன் பின்வருமாறு.


Nade Ali Jawahir Kamsa

 
Related Posts Plugin for WordPress, Blogger...