Tuesday 14 November 2017

இந்திய வஹாபியிசத்தின் தந்தை


இந்திய துணைக்கண்டத்தில் வஹாபியிசத்தின் நிறுவனர் இஸ்மாயில் திஹ்லவி(1193-1246 ஹிஜ்ரி / 1779-1831 ) . இவர் துரதிருஷ்டவசமாக அக்காலத்தில் புகழும் ,பேறும் பெற்று விளங்கிய இமாமுல் ஹிந்த் ஷாஹ்  வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி رضي الله عنها அவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர் .

இஸ்மாயில் திஹ்லவி(1193-1246 ஹிஜ்ரி / 1779-1831 ) ==> அவரது தந்தை ஷாஹ் அப்துல் கனி திஹ்லவி (மறைவு 1203 ஹிஜ்ரி / 1788) அவர்கள்  ==> அன்னாரது தந்தை இமாமுல் ஹிந்த் ஷாஹ்  வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி رضي الله عنها  அவர்கள் 


பால்கோட் நகரிலுள்ள இஸ்மாயில் திஹ்லவியின் சபிக்கப்பட்ட கபர் 

இவர் தமது காலத்தில் அரபகத்திற்குச் சென்று ,இப்னு அப்துல்  வஹாப் நஜ்தியின் நூலான 'கிதாபுத் தவ்ஹீத் ' நூலை வாசித்து ,அதன் பால் ஈர்க்கப்பட்டு அதை உர்துவில் மொழிபெயர்த்து , தமது எண்ணங்களையும் உள்ளடக்கி 'தக்வியத்துள் ஈமான் ' என்று வெளியிட்டார் .

Kitab ut Tawheed and Taqwiyathul Iman - Urdu
சவூதி தாருஸ் ஸலாம் பதிப்பகம் வெளியிட்ட கிதாபுத் தவ்ஹீத் - தக்வியத்துள் ஈமான் உர்து பதிப்பு ,வஹாபிய சகோதர பாசம் ! 

இந்த புத்தகம் இந்திய -பாக் துணைக்கண்டத்தில் இதற்கு முன்னர் எந்தவொரு வழிகெட்ட இயக்கமும் செய்ய இயலாத வண்ணம் இஸ்லாத்திற்கும் ,அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கும் பெரும் கேட்டை விளைவித்தது .

  நாடெங்கிலும்  நடத்தப்பட்ட   கண்மணி நாயகம் அவர்களின் புகழ் பாடும் மவ்லிதுன் நபி மஜ்லிஸ்கள் , பித்அத் என்று அழைக்ப்பட்டன . வலிமார்களின் உரூஸ் நிகழ்வுகள் இஸ்லாத்திற்கு முரணானது என்று கூறப்பட்டன . வலிமார்களை நாடி ஜியாரத் செய்வதும் ,அவர்களிடம் உதவி தேடுவதும் குப்ர்  என்று கூறினர் ,இன்னும் அப்துல் முஸ்தபா என்று பெயரிடுவதே ஷிர்க் என்றனர் .  இந்த புத்தகம் தான் இந்திய -பாக் துணைக்கண்டத்தில்  அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினர் இடையே பிரிவினையை உண்டாக்கிய முதல் மற்றும் முன்னோடி நூல் .

பாமர இஸ்லாமியர் குழப்பத்தில் ஆழ்ந்தனர் . ஏனெனில் இந்த புத்தகம் மேற்கூறப்பட்ட அமல்களில் ஈடுபட்ட அவர்களையும் ,அவர்களின் முன்னோர்களையும் காபிர் என்றும் முஷ்ரிக் என்றும் கூறியது . ஒவ்வொரு வீட்டிலும் சண்டை,சச்சரவுகள் உண்டாயின . உறவினர்கள் ,குடும்பத்தினர் இடையே பிரச்சினைகள் வெடித்தன .

  அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள் இஸ்மாயில் திஹ்லவியை தில்லி ஜும்மா மஸ்ஜிதில் விவாதத்திற்கு அழைத்தனர் . அங்கு இஸ்மாயில் திஹ்லவி வெட்கி தலைகுனியும்படியான தோல்வியை தழுவினான் .

இன்னும் பெஷாவர் நகரத்திற்கு அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள் இஸ்மாயில் திஹ்லவியை விவாதத்திற்கு அழைத்து ,அங்கும் தோல்வியை சந்தித்தான் .

இஸ்மாயில் திஹ்லவியின் சமகால உலமாக்களில் அவனின் வழிகெட்ட கொள்கையை எதிர்த்து விவாதித்தும்  , நூற்கள் எழுதியும் ,பத்வாக்கள் வெளியிட்ட உலமாக்கள் சிலர்.இவர்களில் அவரது குடும்பத்தாரும் ,அவரது சிறிய தந்தை ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவியின் மாணவர்களும் அடங்குவர் .


  • அல்லாமா பஜ்லே ஹக் கைராபாதி  (ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவியின் மாணவர் ) 
  • மவ்லானா ரஷீதுதீன் கான் திஹ்லவி 
  • ஷாஹ் மக்ஸுசுல்லாஹ் திஹ்லவி (இஸ்மாயில் திஹ்லவியின் உடன்பிறவா சகோதரர் )
  • ஷெய்கு முஹம்மது மூஸா திஹ்லவி (இஸ்மாயில் திஹ்லவியின் உடன்பிறவா சகோதரர் )
  • ஷெய்கு முஹம்மது ஷரீப் திஹ்லவி 
  • முப்தி ஷுஜாவுத்தீன் அலி  கான்   
  • அல்லாமா பஜ்லே ரஸூல் பதாயுனீ 
  • முப்தி ஸத்ருத்தீன் திஹ்லவி 
  • ஷெய்கு அஹ்மத் ஸயீத் முஜத்திதி ராம்பூரி 
  • ஷெய்கு ஹைதர் அலி பைஜாபதி 
  • மவ்லனா அப்துல் மஜீத் பதாயுனீ 
  • ஷெய்கு அப்துல் கபூர் ஸ்வாதி 
  • ஷெய்கு முஹம்மது சுலைமான் தஉன்ஸ்வி 
  • ஷெய்கு ஆலே ரஸூல் மறெர்ஹவி (ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவியின் மாணவர் ) 
  •  மவ்லானா துராப் அலி லக்னவி  
1835ல் ,தக்வியத்துள் ஈமான் முழு புத்தகமும் ஆதி முதல் அந்தம் வரை மதராஸ் உலமாக்கள் முன் வாசிக்கப்பட்டு , முப்பது உலமாக்களும் பின்வரும் பத்வா வெளியிட்டனர் : " யாராகிலும் ஒரு நபர் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளது போல் கொள்கை உடையவனாய் இருந்தால் அவன் காபிர் ,இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவன்  ."

மதராஸ் உலமாக்களின் பத்வாவுக்கு ஒப்புதல் அளித்து தில்லி உலமாக்களும் 'தக்வியத்துள் ஈமான் ' என்ற வழிகெட்ட நூலுக்கு எதிராக பத்வா வெளியிட்டனர் .

தில்லியின் வீதியெங்கும் , ' இந்த நூல் கண்மணி நாயகம் ﷺ அவர்களை கண்ணியக் குறைவுபடுத்துவதாலும்  , வலிமார்களை கண்ணியக் குறைவுபடுத்துவதாலும்   இந்த நூலை யாரும் வாசிக்க கூடாது என்றும் . இத்தகைய நூற்களை வாசிப்பது தடை செய்யப்பட்ட ஒன்றென ' அறிவிப்பு செய்யப்பட்டது .

உஸ்தாதுல் உலமா மவ்லானா முஹம்மது வஜ்ஹீ சாஹிப் அவர்கள் 'தக்வியத்துள் ஈமான் ' நூலுக்கு மறுப்பு தெரிவித்து 'நிஜாமுல் இஸ்லாம் ' என்று நூலை எழுதினார்கள் . இந்த நூலுக்கு கல்கத்தாவைச் சார்ந்த 22 உலமாக்கள் ஒப்புதல் அளித்தனர் .

வழிகெட்ட 'தக்வியத்துள் ஈமான்'  நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்ட சில நூற்கள்  :- 

  • குல்ஜார் ஏ ஹிதாயத்  - மதராஸ் முப்தி ,அல்லாமா முஹம்மது ஸிப்ஹதுல்லாஹ் 
  • தஹ்கீக் உல் பத்வா பி இப்தலில் தக்வா  - அல்லாமா பஜ்லே ஹக் கைராபாதி 
  •  ஹயாத்துன் நபி  - ஷெய்கு முஹம்மது ஆபித் சிந்தி 
  • தஹ்கீக் உஷ் ஷிர்க் வத் தவ்ஹீத் - ஹாபிஸ் முஹம்மது ஹசன்
  • ஸலாஹுல் முஃமினீன் பி காதில் காரிஜீன்  -மவ்லானா லுப் உல்ஹக் காதிரி 
  • ஹுஜ்ஜதுல் அமல் பி இஃப்த்தால் இல் ஹைல்  - மவ்லானா மூஸா திஹ்லவி 
  • ரஸ்முல் கைராத் - மவ்லானா கலீலுர் ரஹ்மான் முஸ்தபாபாதி 
  • துஹ்பத் அல் முஸ்லிமீன் பி ஜஸ்சாபி செய்யதில் முர்சலீன் - மவ்லானா அப்துல்லாஹ் சஹ்ரான்புரி 
  • தஹ்லீல் மா அஹல்லாஹு பி தபஸீர் வ மா அஹ்ல் பிஹி லி கைரில்லாஹ் - மவ்லானா கலீலுர் ரஹ்மான் 
  • சபீப்ளுள் நிஜாஹ் இலா தஹஸீல் இல் பலாஹ்  -மவ்லானா துராப் அலி லக்கனவி 
  • சபீனத் உல் நிஜாத்  - மவ்லானா முஹம்மது அஸ்லமீ மதராஸி 
  • நிஜாமே இஸ்லாம்  -மவ்லானா முஹம்மது வஹீதுதீன்  கல்கத்தா 
  • குவத் உல் ஈமான்  -  மவ்லானா கறாமத் அலி ஜஉன்புரி 
  • அஹ்காக் உல் ஹக்  - மவ்லானா செய்யத் பத்ருத்தீன் ரிஸ்வி ஹைதராபாதி 
  • கைர் உஸ் ஸாத் லி யவ்ம் மில் மியாத் - மவ்லானா கைருத்தீன் மதராஸி 
  • நேம் முள் இன்திபாஹ் லி ரப் இல் லிஸ்த்திபாஹ் - மவ்லானா முஅல்லிம் இப்ராஹீம் ,பாம்பே 
  • ஹிதாயத்துள் முஸ்லிமீன் இலா தரீக் கில் ஹக் கில் யகீன் - காழி முஹம்மது ஹுசைன் கூபி 
  • துஹ்பா ஏ முஹம்மதியா தர் ரத்தே வஹாபியா - மவ்லானா செய்யத் அப்துல் பத்தாஹ் முப்தி காதிரி குல்ஷனபாதி 
  • சிராஜுல் ஹிதாயத்  - மவ்லானா குல்ஷனாபாதி 
இந்த உலமாக்களைத் தவிர மவ்லானா இனாயத் கான் , மவ்லானா ஷாஹ் ரவூப் அஹ்மத் , மவ்லானா ஷாஹ் அஹ்மத் ஸயீத் முஜத்திதி ஆகியோர் கடுமையாக எதிர்த்து ,அதன் பித்னாவை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்தனர் .

இறுதியாக இஸ்மாயில் திஹ்லவி,அவனது உஸ்தாத் செய்யித் அஹ்மத் ரேபரேலியுடன்  ,அவர்கள் இருவரும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கு மாற்றமான கொள்கை உடையவர்கள் என்று தெரிந்ததும் , அல்லாஹ்வையும்,கண்மணி நாயகம் ﷺ அவர்களை கண்ணியக் குறைவுபடுத்துபவர்கள் என்று  தெரிந்ததாலும்  , பால்கோட் நகர பதான் முஸ்லிம்களால்கொல்லப்பட்டனர் .
தேவபந்திகளும் , கைர் முகல்லித் வஹாபிகளும் அவர்கள் இருவரும் சீக்கியருக்கு எதிராக போரிட்டு மடிந்தனர் என்று கூறி வந்தாலும் , அதற்கு சரித்திர சான்றுகள் இல்லை .


கண்மணி நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள் , 'பித்னா கொலையை விட கொடியது ' . இஸ்மாயில் திஹ்லவி மடிந்தாலும் , அவனின் மரபு தொடர்ந்தது . அவனின் தவறிய , வழிகெட்ட கொள்கைகள் பரவின .

இஸ்மாயில் திஹ்லவியின் மறைவுக்குப் பின் அவனது ஆதரவாளர்கள் இரு பிரிவாகப் பிரிந்தனர் . அவர்களில் ஒரு கூட்டத்தார் தாம் இமாம் அபூஹனீஃபா அவர்களை பின்பற்றுவோர் என்று கூறினார்கள் . இவர்கள் பின்னாட்களில் தேவ்பந்திகள் என்று அழைக்ப்பட்டனர் .

மற்றோரு கூட்டத்தார் இமாம்களின் தக்லீதை ஏற்க மறுத்து தம்மை அஹ்லே ஹதீத் என்று அழைத்துக் கொண்டனர் . 

   
  



Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment