Wednesday 17 January 2024

இந்தியாவில் வஹாபிசத்தை முதன்முதலாக பரப்பியது

இந்திய துணை கண்டத்தில் முதன் முதலாக வஹாபிய கொள்கைகளை பரப்பியவர்கள் எவர் என்று வஹாபிய மார்க்க அறிஞர் தமது நூலில் எழுதியுள்ளதை ஆதாரமாக கீழே தருகின்றோம்.

இது குறித்து அக்காலத்தில் வாழ்ந்த அநேக அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் உலமாப் பெருமக்கள் தமது கிதாபுகளில் பதிவு செய்திருந்தாலும், அதை ஏற்க மறுக்கும் வஹாபிய கொள்கைகளை பின்பற்றும் தேவ்பந்தி தப்லீக் ஜமாத் மற்றும் ஹதீஸ்,ஜமாத்தே இஸ்லாமி வஹாபிகள்  குறைந்தபட்ச நேர்மை இருக்குமானால் தமது நூல்களில் உள்ள மேற்கோள்களையாவது ஏற்றுக் கொள்வர் அல்லது இதனை காணும் பாமரர்கள் உண்மையை அறிவர்.

இனி வஹாபிய மார்க்க அறிஞர் அஹ்மது ஸயீத் என்பார் தமது நூலில்  பின்வருமாறு எழுதுகின்றார்,

" ஸயீத் அஹ்மது ரேபரேலி ஹஜ் செய்திட மக்கா சென்ற பொழுது ,அங்கு அவர் இப்னு அப்துல் வஹாப் நஜ்தி தமீமியின் மத்ஹபை ஏற்றுக் கொண்டார்.பின்னர் அவர் இந்தியா திரும்பியதும் வஹாபிசத்தை பரப்ப ஆரம்பித்தார்.கப்ருகளை ஜியாரத் செய்வது  மற்றும் எவரையாவது வஸீலாவாக்குவதையும் ஹராமாக்கினார் " 



நூல் : ஜுஹ்மஉல் இஸ்லாஹ் பீ அஸ்ரில் ஹதீத் ,பக்கம் 126 

சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றவர்களே , கொஞ்சம் இந்த வாக்குமூலத்தை சீர்தூக்கிப் பாருங்கள். அஹ்லுஸ் ஸுன்னத் வல் கொள்கைகளான வலிமார்களை ஜியாரத் செய்வது மற்றும் அவர்களை வஸீலா ஆக்குவது ஆகியவற்றை ஹராமாக்குவது தான் சத்திய வழிமுறையா ???

இந்த மேற்கூறிய ஸெய்யத் அஹ்மது ரேபரேலியின் ,மாணவர் தான் இஸ்மாயில் திஹ்லவி. இவர்களது வழிகெட்ட கொள்கைகளால் தான் இமாமுல் ஹதீத் பில் ஹிந்த் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி قدس الله سره العزيز அவர்களது கான்காஹ்வை விட்டும் இவர்கள் விரட்டி அடிக்கப்பட்டார்கள்.தில்லியின் ஜும்மா மஸ்ஜிதில் இவர்கள் வழிகேடர்கள் என்று பத்வா வழங்கப்பட்டது .இறுதியில் பால்கோட்டில் முஸ்லிம்களால் வெட்டி வீழ்த்தவும் பட்டார்கள்.

இத்தகைய நபர்களை தூக்கிக் கொண்டாடுவது இரண்டே கூட்டத்தார் தான். முதலாவது நாங்களும் மதுஹபு வாதிகள் தான் என்று வெளிரங்கத்தில் கூறிக்கொண்டு உள்ரங்கத்தில் சையது அகமது லேபரேலி மற்றும் இஸ்மாயில் திஹ்லவியின் வஹாபிய கொள்கைகளை பின்பற்றும தேவ்பந்தி தப்லீக் ஜமாத் வஹாபிகள்.இரண்டாவது கைர் முகல்லிதுகளான அஹ்லே ஹதீஸ்,ஸலபி,ஜாக்,ஜமாத்தே இஸ்லாமி ஆகியோர்.

சமீபகாலமாக இந்த வழிகெட்ட வஹாபியை புனிதமிகும் காதிரியா ஜிஷ்தியாவின் ஆகப்பெரிய ஷெய்கு என்ற மாயத்தோற்றத்தை விதைத்து தரீக்கத் என்ற பெயரில் வியாபாரக் கிளைகளை பரப்பும் நூரிஷா கூட்டத்தார்.

இவர்களைப் பற்றி ஆஷிகுர் ரஸூல் F.M.இப்ராஹீம் ரப்பானி ஹழ்ரத் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் அவர்களுடன் பழகி,அவர்களது முனாபிக்தனத்தை தாம் நடத்திய " அஹ்லுஸ் ஸுன்னா" பத்திரிக்கையில் 90களில் தோலுரித்து எழுதினார்கள்.


இஸ்மாயில் திஹ்லவியும்,முஹம்மது அலி ராம்பூரியும் 'கர்னுஷ் ஷைத்தான் ' இப்னு அப்துல் வஹாப் நஜ்தியை பின்பற்றும் வழிகேடர்கள் என்று கீழக்கரையில் அரசாட்சி புரியும் சங்கைக்குரிய இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் நாயகம் قدس الله سره العزيز தமது கிதாபான மஆனியில் எழுதியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தகைய வழிகேடர்களின் மாயவலையில் வீழ்ந்து ஈமானை இழந்திடாமல் வல்ல நாயன்,தனது ஹபீப் முஸ்தபா  ﷺ அவர்கள் பொருட்டால் நம் அனைவரையும் காப்பானாக! آمین بجاہ سیّد المرسلین صلّی اللّہ علیہ وسلّم
Related Posts Plugin for WordPress, Blogger...