Saturday 16 May 2015

தேவ்பந்திகளின் கெளஸ் !

மஹ்மூத் அல் ஹசன் சாஹிப் , மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியை 'கெளஸ் ஏ ஆசம் ' என்று அழைக்கின்றார் .


' அவர்தான் இரண்டாம் ஜுனைத் ,ஷிப்லி மற்றும் அபூ மஸூத் அன்சாரி ,
அவர்தான் ரஷீத் ஏ மில்லத் ஏ தீன் ,கெளஸ் ஏ ஆசம் ,குத்பே ரப்பானி  '


அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்த இஸ்லாமியர் கெளதுள் அஃலம் முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹூல் அஜீஸ் அவர்களை கெளது என்று அழைத்தால் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் உதவியாளர்கள் கிடையாது ,அவ்வாறு அழைப்பது ஷிர்க் ,பித் அத் என்று வஹாபிய கூச்சல் போடும் இந்த தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் தங்களுக்கு மட்டும் ஒரு நியாயம் என்று கொள்கை கொண்டு தங்கள் முனாபிக் தனத்தை வெளிப்படுத்துகின்றனர் .


எந்த முஸ்லிமும் நபிமார்களையும் ,வலிமார்களையும் அல்லாஹ்வின் படைப்புகளாகவும்,அடியாராகவும் ஏற்று பின்னர் அவர்களை வசீலாவாக்கி (இடைப்பொருள்) உதவி கோரி,நேர்ச்சை,காணிக்கை செலுத்தினால்  குப்ரில் அபுஜஹலுக்கு ஒப்பாவார் . 
[தக்வீயதுல் ஈமான்,பக்கம் 7 மற்றும் 27]


யாருடைய பெயர் முஹம்மது ,அலி என்று உள்ளதோ அவர்களுக்கு எதன் மீதும் அதிகாரம் இல்லை.ஒரு நபியோ அல்லது வலியோ அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது.
[ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 41 ]

இந்த ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் வஹாபிய கொள்கைகளை இங்கு காணலாம் !!!


Marsiya Praising Rasheed Ahmad As Gauth


Related Posts Plugin for WordPress, Blogger...

Thursday 14 May 2015

கண்மணி நாயகம் அவர்களின் நூர் தான் முதல் படைப்பு என்று ஏற்றுக் கொள்ளும் தேவ்பந்திகளின் 'ஹக்கீமுல் உம்மத் '

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் நம்பிக்கையாகிறது அண்ணலெம் பெருமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நூராகவும் ,பஷராகவும் இருக்கின்றார்கள் என்பது . இந்த நம்பிக்கை அல் குரான்,ஹதீஸ் மற்றும் சத்திய இமாம்களின் இஜ்மாவின் அடிப்படையில் அமைந்த ஒன்று .


எனினும் இவ்விஷயத்தில் தேவ்பந்தி தப்லீக் வஹாபிகள், கைர்  முகல்லிது வஹாபிகளைப் போன்று தம் மனோ இச்சையைப் பின்பற்றி கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நூர் என்பதை ஏற்க மறுக்கினர் .


இனி அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் இந்நம்பிக்கைக்கான ஆதாரங்களைப் பார்ப்போம் .


குரான் பறை சாற்றுகின்றது ,


   يَا أَهْلَ الْكِتَابِ قَدْ جَاءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ كَثِيرًا مِّمَّا كُنتُمْ تُخْفُونَ مِنَ الْكِتَابِ وَيَعْفُو عَن كَثِيرٍ ۚ قَدْ جَاءَكُم مِّنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُّبِينٌ


வேதத்தையுடையவர்களே! உங்களிடம் நிச்சயமாக நம்முடைய ஒரு தூதர் வந்திருக்கிறார். வேதத்தில் நீங்கள் மறைத்துக் கொண்ட பல விஷயங்களை அவர் உங்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிக்கின்றார். மற்றும் பல விஷயங்களை (அவர் அறிந்திருந்தும் உங்களுக்கு கேவலம் உண்டாகக்கூடாது என்பதற்காக அவைகளைக் கூறாது) விட்டுவிடுகின்றார். நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒளியும் தெளிவுமுள்ள ஒரு வேதம் (இப்போது) உங்களிடம் வந்திருக்கின்றது.  


 [ குர் ஆன் - 5:15 ]


மிகப் பெரும் முபஸ்ஸிரான அல்லாமா அலூஸி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) இந்த ஆயத்திற்கு தப்ஸீர் எழுதுகின்றார்கள்  ,


عظيم وهو نور الأنوار والنبـي المختار صلى الله عليه وسلم


அன்னார் ஒளிகளின் பேரொளியாக உள்ளார்கள் (நூருல் அன்வார் ) மேலும் நபியுல் முக்தார் ஆகவும் உள்ளார்கள் 


[நூல் - ரூஹல் மாஃனி ,அல்லாமா அலூஸி ]


இதே போன்று இமாம் ஜலாலுத்தீன் அல் மஹல்லி ,இமாம் ஜலாலுத்தீன் அல் சுயூத்தி ஆகியோர் தமது தப்ஸீர் அல் ஜலாலைனிலும் , இமாம் இப்னு ஜவ்சீ தமது ஜாத் அல் மசீர் பில் இல்ம் அத் தப்ஸீர் நூலிலும் , இமாம் அல் ஷிர்பினி தமது தப்ஸீர் சிராஜுல் முனீரிலும் ,இமாம் பக்ரூத்தீன் ராஸி தமது தப்ஸீர் அல் கபீரிலும் இதே கருத்தை முன் மொழிந்துள்ளனர் .


மேலும் அஹ்காம் அல் குர்ஆன் (6.118) நூலில் இமாம் குர்தூபி மற்றும் மவர்தி ஆகியோர் அரபு இலக்கணத்தின் இமாம் இப்ராஹீம் இப்னு முஹம்மது அல் ஸஜ்ஜாஜ் அவர்கள் இதே கருத்தை உடைய நிலையவர்களாக இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது .


இனி இது விஷயமாக மிகவும் பிரபலமான ஓர் ஹதீத் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களைக் கொண்டு அறிவிக்கப்படுகின்ற அல்லாஹ் முதன் முதலில் எதைப் படைத்தான் என்னும் ஹதீஸ்  . இந்த ஹதீஸ் பின்வரும் ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது ,
  • முசன்னஃப்  அப்துர் ரஸ்ஸாக் ,பக்கம் 99,ஹதீத் எண் 18 .
  • அல்லாமா  கஸ்தலானி தமது மவாகிபுல் லதுனியா ,பாகம் 1,பக்கம் 71.
  • அல்லாமா முஹம்மது அல் ஸுர்கானி தமது ஷரஹ் மவாகிபுல் லதுனியா ,பாகம் 1,பக்கம் 89-91.
  • அல்லாமா அஜ்லுனி தமது கஷ்ப் அல் கபா ,பாகம் 1,பக்கம் 311,ஹதீத் எண் 827.
விரிவஞ்சி இத்துடன் நமது அதாரங்களை இத்துடன் முடிவு செய்கின்றோம் .


இனி இவ்விஷயத்தில் தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத் வஹாபிகளின் 'ஹக்கீமுல் உம்மத் ' என்று கூப்பாடு போடும் அஷ்ரப் அலி தானவி தமது நூலான 'நஷறுத் தீப்' ல்   இதே கருத்தை பதிவு செய்துள்ளார் .
  
Nashar ut-Tib Volume 001, Page No. 13 ,Ashraf Ali Thanvi .










தற்கால தேவ்பந்தி தப்லீக் வஹாபிகள் இனியாவது தமது இரட்டை நிலைப்பாட்டை மாற்றுவார்களா ????



Related Posts Plugin for WordPress, Blogger...

Saturday 9 May 2015

தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் ரஹ்மத்துல் ஆலமீன் !

அல்லாஹ் ஹுதஆலா தன் ஹபீபான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை எண்ணற்ற சிறப்பு பெயர்களைக்  கொண்டு திருமறை குரான் ஷரீபிலே அழைக்கின்றான் .
அவற்றுள் ஒன்று ரஹ்மத்துல் ஆலமீன் என்பது .


وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ


(நபியே!) உங்களை உலகத்தாருக்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை."
[அல் குரான் : 21:107]


கண்மணி நாயகம் அவர்கள் இவ்வுலகிற்கு மட்டுமல்ல எல்லா ஆலம்களுக்கும் ரஹ்மத் ஆக இருக்கின்றார்கள் . இது அவர்களின் தனிச் சிறப்பு .அவர்களே நூரே முகம்மதியா என்னும் முதல் சிருஷ்டி .


எனினும் இந்த தேவ்பந்திய தப்லீக் ஜமாஅத் வஹாபிகளின் கொள்கையாகிறது ,


ரஹ்மத்துல் ஆலமீன் என்பது நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட தனித்துவமான பண்பு அல்ல,பிற நல்லடியார்களையும் ரஹ்மத்துல் ஆலமீன் என்று அழைக்கலாம்.


[ நூல் - ஃபதாவா ரஷீதியா,வால்யூம் 2,பக்கம் 12 ,மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி ]


ஃபதாவா ரஷீதியா


உம்மத்துகள் தங்களது நபியை அமல்களில் முந்திவிடுவர் .


[நூல் - தக்தீருன்னாஸ் ,பக்கம் 5 ]


இந்த கேடுகெட்ட கொள்கையுடைய தப்லீக் வஹாபிகள் தங்கள் நூற்களில் ரஷீத் அஹமத் கண்கோஹியை ரஹ்மத்துல் ஆலமீன் என்று எழுதி வைத்துள்ளனர் .










இதன் மூலம் என்ன கருத்தை இந்த தப்லீக் தேவ்பந்திகள் நிலை நாட்டுகின்றனர் . அல்லாஹ் தன் ஹபீபுக்கு வழங்கிய தனித்துவமான இந்த பெயரை இந்த குழப்பவாதிகள் ஏன் திருடி ரஷீத் அஹ்மத் கங்கோஹிக்கு கொடுக்கின்றனர் . அவர் என்ன ரஹ்மத்தா ???? எல்லா படைப்புகளுக்கும் அவர் எந்த வகையில் ரஹ்மத்  ???? அவரைக் கொண்டு ரஹ்மத் அடைந்த படைப்புகள் எவை ??? இஸ்லாமிய வரலாற்றில் எந்த ஸுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த உலமாக்கள் ,இமாம்கள் ,வலிமார்கள் இவ்வாறு கூறியுல்லனரா ????


நாங்களும் ஸுன்னத் ஜமாஅத் தான்,மத்ஹபை பின்பற்றுகிறோம் ,தரீகாவில் உள்ளோம்  என்று பொய் பேசி ,மோசடி செய்து ஸுன்னத் வல் ஜமாத்தின் அடையாளத்தை திருடும் இந்த முனாபிக்குகளிடம் இருந்து உங்கள் ஈமானைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் !!!



Related Posts Plugin for WordPress, Blogger...

மரணித்த பின் கபுரில் இருந்து மீண்டு வந்த தேவ்பந்தி தப்லீக் மவ்லவி !

தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் கொள்கையாகிறது எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்து மண்ணோடு மண்ணாகி விட்டார்கள் (மஆதல்லாஹ் !!!) .


இது அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாகும் .


 "பெருமானார் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறைந்த பிறகு மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள்." (அஸ்தக்பிருல்லாஹ் )



[நூல் - தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 59, இஸ்மாயில் தெஹ்லவி ]


தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 59


இதே  தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் தங்களது நூலில் மரணித்த பின் ஓர் தேவ்பந்தி  மவ்லவி கபுரில் இருந்து வெளிவருகிறார் என்றும் ,அவர் தேவ்பந்த் தாருல் உலூம் மதரசாவிற்கு வருகை தருகிறார் என்றும் எழுதி வைத்துள்ளனர் . என்னே ! இந்த வஹாபிகளின் ஈனத்தனம் !


ஒரு ஸுன்னி முஸ்லிம் குரான் ,ஹதீஸ் கூறியபடி எம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹயாத்துன் நபியாக உள்ளார்கள் என்று கூறினால் அவர் மீது ஷிர்க் ,குப்ர் பட்டம் கட்டி அவரை இஸ்லாத்தை விட்டும் நீக்கி விடுகின்றனர் .


 
وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا ۚ بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ


(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்து) வெட்டப்பட்டோரை இறந்துவிட்டவர்களென நீங்கள் ஒருபோதும் எண்ண வேண்டாம். அவர்கள் தம் இறைவனிடத்தில் நிச்சயமாக உயிரோடு இருக்கின்றார்கள். (அன்றி) அவர்களுக்கு உணவும் அளிக்கப்படுகிறது.


[அல் குரான் - 3:169.]


‏عن ‏ ‏أبي الدرداء‏ ‏قال ‏قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏أكثروا الصلاة علي يوم الجمعة فإنه مشهود تشهده الملائكة وإن أحدا لن يصلي علي إلا عرضت علي صلاته حتى يفرغ منها قال قلت وبعد الموت قال وبعد الموت إن الله حرم على الأرض
أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق


[அறிவிப்பாளர் : அபூதர்தா ரலியல்லாஹு அன்ஹு ,இப்னு மாஜா ,பாகம் 1,எண் 1626]



இனி இவர்களின் தேவ்பந்தி மவ்லவி அதே குரான் ,ஹதீஸுக்கு மாற்றமான வஹாபிய கொள்கையின் அடிப்படையில் ஷிர்க் செய்து முஷ்ரிக்காகி போய் விட்டாரா இல்லையா என்று தெளிவுபடுத்துவார்களா  ?????














இத்தகைய வழிகேடர்களை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பானாக !!!
Related Posts Plugin for WordPress, Blogger...

Friday 8 May 2015

தேவ்பந்தின் ஷிர்க்கை உண்டாக்கும் பெயர்கள் :

   
பக்ஷ் என்றால் பரிசு என்று அர்த்தம் . தமது குழந்தைகளுக்கு   நபியின் பரிசு என்றோ வலிமார்களின் பரிசு என்றோ பெயரிடுவது முஸ்லிம்களின் வழக்கம் .அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் உலமாக்களும் இது ஷரியத்திற்க்கு மாற்றமில்லா செயல் என்றே சொல்கின்றனர் . ஆனால் வஹாபிகள் இதையும் ஷிர்க் என்றே உளறுகின்றனர் .
         
கேள்வி :
              நீங்கள் குழந்தைகளுக்கு நபி பக்ஷ்,பீர் பக்ஷ்,சலார் பக்ஷ்,மதார் பக்ஷ் என்று பெயர் சூட்டுவதைப் பற்றி என்ன சொல்கின்றீர்கள் ?



பதில் :   
           இவ்வாறு பெயரிடுவது ஷிர்க் .இவ்வாறு பெயர் சூட்டுவது கூடாது ,இவற்றை மாற்ற வேண்டும் .


[ நூல்- பதாவா ரஷீதியா ,பக்கம் 69,மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கொஹி ]






'அலி பக்ஷ்,ஹுசைன் பக்ஷ் அல்லது அப்துன் நபி என்று பெயரிடுவதோ அல்லது அல்லாஹ்வும் அவனது ரசூலும்  ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் நாடினால் நிறைவேறும் என்று கூறுவது ஷிர்க் "


[ நூல் - பிஹிஷ்தீ ஜேவர் ,மவ்லவி அஷ்ரப் அலி தானவி ,பக்கம் 46 , நூலில் மோசடி செய்யும் முன் ]

ஆக தேவ்பந்த் தப்லீக் ஜமாத்தின் வஹாபிய கொள்கைகளைப் பார்த்தீர்கள் .


இப்போது மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கொஹியின் சுயசரிதையான தச்கிரதுர் ரஷீத் என்னும் நூலைக் காண்போம் .


 "மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் தந்தை வழி வம்சா வழியைப் பார்ப்போம் .
மவ்லானா ரஷீத் அஹ்மத் (மகன் ) மவ்லானா ஹிதாயத் அஹ்மத் (மகன் )காழி பீர் பக்ஷ் (மகன் ) காழி குலாம் ஹசன் (மகன் ) காழி குலாம் அலி .


மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் தாய்  வழி வம்சா வழியைப் பார்ப்போம் .
மவ்லானா ரஷீத் அஹ்மத் (மகன் )கரீமுன்னிசா (மகள் ) பரீத் பக்ஷ் (மகன் ) குலாம் காதிர் (மகன் ) முஹம்மது ச்வாலிஹ் (மகன் ) குலாம் முஹம்மது ."


[ நூல் - தச்கிரதுர் ரஷீத் ,பாகம் 1,பக்கம் 32 ]


கேள்வி : ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் முதல் ஆசிரியர் யார் ?
பதில் : மியான் குதுப் பக்ஷ் .


[ நூல் - தச்கிரதுர் ரஷீத் ,பாகம் 1,பக்கம் 39 ]


கேள்வி : ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் முதல் அரபி  ஆசிரியர் யார் ?
பதில்  : மவ்லவி முஹம்மது பக்ஷ் .


[ நூல் - தச்கிரதுர் ரஷீத் ,பாகம் 1,பக்கம் 48 ]


மதிப்பிற்குரிய வாசகர்களே ,இதன் விளைவு என்ன ? ரஷீத் அஹ்மத் கங்கொஹியின் வாழ்க்கையில் எத்துணை பக்ஷ் கள் சூழ்ந்து உள்ளனர் .இவையாவும் ஷிர்க் என்று ரஷீத் அஹமத் பத்வா கொடுத்துள்ளதையும் மறவாதீர் .


மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கொஹி தமது பிறப்பின் ஆரம்பம் முதல் ஷிர்க்கால் சூழப் பட்டுள்ளார் என்று எடுத்துக் கொள்வதா ????











குறிப்பு :



தமிழகத்தில் அஷ்ரப் அலி தானவியின் வஹாபிய கொள்கைகளைக் கொண்ட நூலான பிஹிஷ்தீ ஜேவர் சுவர்க்க நகைகள் என்னும் பெயரில் மொழிபெயர்த்து திருச்சி டி.எஸ்.ஏ.ரஸூல்    என்பவர் 
தப்லீக் ஜமாஅத்தை தமிழகத்தில் காலுன்றச் செய்து ஆதரவளித்த உலமாக்களான அமானி ஹஜ்ரத்,கலீலுர் ரஹ்மான் ரியாஜி ஹஜ்ரத் ஆகியோரின் மதிப்புரை ,சிறப்புரையுடன் வெளிவந்தது .


அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தின் கொள்கைகளுக்கு மாற்றமான இந்த  நூலுக்கு மறுப்பு தெரிவித்து காயல்பட்டிணம் தந்த காமில் வலி அல் ஆரிபுபில்லாஹ் அல் முஹிப்பிர்ரஸூல் அஷ்ஷைகு   அப்துல் காதிர் ஸூபி  பாஜிலே நூரி ஸித்திகி காதிரி காஹிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் 'சுவர்க்க நகைகளா ! அல்ல நரக விலங்குகள்' என்ற நூலை எழுதினார்கள் .


நூலை பதிவிறக்கம் செய்ய 



குப்ர் -ஷிர்க் பற்றிய விளக்கம் :


'43. அலி பக்ஷ்,ஹுசைன் பக்ஷ் அல்லது அப்துன் நபி போன்ற பெயர்களை வைப்பது  "


[ நூல் - சுவர்க்க நகைகள் , பக்கம் 77,பிஹிஷ்தீ ஜேவர் தமிழ் மொழிபெயர்ப்பு , மூல நூல் ஆசிரியர் மவ்லவி அஷ்ரப் அலி தானவி]


அதில் மேற்படி பத்வாவைச் சூட்டிக் காட்டி நூலின் மொழிபெயர்ப்பாளர் டி.எஸ்.ஏ.ரசூல் என்ற செய்யத் அப்துர் ரசூல் அவர்களிடம் இந்த பெயரைச் சூட்டியதால் நீங்களும் ஷிர்க்குடைய பெயர் தானே வைத்துள்ளீர் என்று சுட்டிக் காட்டியதும் ,தனது வஹாபிய கொள்கை விட்டு வெளிவராமல் தனது பெயரை குலாம் ரசூல் என்று மாற்றிக் கொண்டு, தமிழக தப்லீக்வாலாக்களின்  பல நூல்களை எழுதிய திருச்சி குலாம் ரஸூல் தான் அவர் .

இத்தகைய வஹாபிய கொள்கை கொண்ட தப்லீக் தேவ்பந்திகளை விட்டும் நம் ஈமானைக் காப்பாற்றிக் கொள்வோமாக ! ஆமீன் !



Related Posts Plugin for WordPress, Blogger...