Monday 30 June 2014

அஸ் ஸவாரிமுல் ஹிந்தியா



ஹரம் ஷரீபின் மார்க்க அறிஞர்கள் தங்கள் "ஹுஸாமுல் ஹரமைன்" பத்வாவை வெளியிட்ட பின் தேவ்பந்தி வஹாபிகளின் சாயம் வெளுத்து விட்டது. பொது மக்களை குழப்பும் பொருட்டு தேவ்பந்தி வஹாபிகள், இமாம் அஹமத் ரஜா கான் பரேலி (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் தேவ்பந்தி அறிஞர்களின் கூற்றுகளை தவறுதலாக மொழிபெயர்த்து விட்டார்கள் என வதந்திகளை கட்டவிழ்த்து விட்டார்கள்.

அப்போது அக்காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த மிகப்பெரும் இஸ்லாமிய மார்க்க அறிஞரான அல்லாமா ஹஷ்மத் அலி கான் அவர்கள் ,ஒருங்கிணைந்த இந்தியாவின் பல மார்க்க அறிஞர்களிடமும் , மேற்படி ஐந்து அறிஞர்களின் ( குலாம் அஹ்மத் காதியானி,மௌலவி அஷ்ரப் அலி தானவி,மௌலவி ரஷீத் அஹ்மத், மௌலவி காசிம் நானுத்வி,மௌலவி கலீல் அஹ்மத் அம்பேத்வி )  சர்ச்சைக்குரிய கொள்கைகளைப் பற்றி கேட்டறிந்தார் .

ஒருங்கிணைந்த இந்தியாவைச் சார்ந்த 268 முன்னணி முப்திகள் தங்கள் பத்வாவை வெளியிட்டனர் .அனைவரும் உர்து , பார்சி , அரபி மொழி அறிந்தவர்கள் மேலும் மேற்படி ஐந்து அறிஞர்களின் ( குலாம் அஹ்மத் காதியானி,மௌலவி அஷ்ரப் அலி தானவி,மௌலவி ரஷீத் அஹ்மத், மௌலவி காசிம் நானுத்வி,மௌலவி கலீல் அஹ்மத் அம்பேத்வி )  சர்ச்சைக்குரிய கொள்கைகளைப் பற்றி நன்கு அறிந்திருந்தனர்.

அவர்களிடம் இந்த ஐந்து அறிஞர்களின் நூல்கள்,பத்வாக்களை நேரடியாக அணுகவும் வசதி இருந்தது .அவர்களின் பத்வா தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.   சங்கைக்குரிய 268 உலமாக்கள் “அஸ்ஸவாரிமுல் ஹிந்தியா” என்ற தலைப்பில் மேற்கூறப்பட்டவர்கள் காஃபிர்கள்,முர்தத்துகள் என்று மார்க்கத் தீர்ப்பு ஹிஜ்ரி 1345ல் வழங்கியுள்ளார்கள்.


268 முப்திகளின் பட்டியலில் பிராங் மஹால்,ராம்பூர்,சிந்த், ஹைதராபத்,சூரத்,டில்லி,ஆக்ரா போன்ற நகரங்களின் முப்திகளும் அடங்குவர் .

இந்த பத்வாவுக்கு பின் தேவ்பந்தி வஹாபிகளின் வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி இடப்பட்டது .

Al Sawarim Ul Hindiyah Ala Makri Shyaatin Al Deobandiyah

Related Posts Plugin for WordPress, Blogger...

Saturday 21 June 2014

இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்புகள்



                                    
Gujarat High Court- India

1)      குஜராத் மாநிலம் அஹமதாபாத் நகரில் “தாருல் உலூம் ஷாஇ ஆலம்” எனற அமைப்பு ஸுன்னி முஸ்லிம்களின் கலைகூடமாக 1953ல் நிறுவப்பட்டு,அதன் மூலம் ‘தைய்யிபா’  எனும் பத்திரிக்கை வெளியிடப்பட்டு வந்த்து.1968 டிசம்பர் இதழில் காயிரா மாவட்ட கபாட்வாஞ்ச் எனும் ஊரின் ஜும்மா மஸ்ஜிதில் பணியாற்றி வந்த பேஷ் இமாம் ஜனாப் குலாம் ஹுஸைன் தார்ஸோத் அவர்களை “வஹ்ஹாபி தேவ்பந்தி” எனக் குறிப்பிட்டிருந்த்தால்,அவர் கபாட்வாஞ்ச் முதல் வகுப்பு குற்ற இயல் நீதிமன்றத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500ன் கீழ் 22-5-65ல் தாக்கல்  செய்தார். அந்த வழக்கு நீதிமன்றத்தில் 1129/69 என்ற நம்பரில் பதிவாக்கப்பட்டது.
             வாத, பிரதிவாதங்கள் நடந்தன.இறுதியாக நீதிபதி கிருஷ்ணபண்டிட் அவர்கள் 27-2-1970ல் தப்லீக் ஜமாத்தினர்களை “தேவ்பந்தி வஹாபி” என்றழைக்கலாம் என்றும்,தப்லீக்காரர்கள் ஸுன்னத் வல் ஜமாத் பள்ளியில் நுழைவது கூடாது என்றும் தீர்ப்புக் கூறினார். மௌலவி குலாம் ஹுசைன் அவர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதி மன்றத்தில் அப்பீல் தாக்கல் செய்தும், அது ஆரம்பக் கட்டத்திலேயே தள்ளுபடி செய்யப்பட்டது.

2)      கர்னாடக மாநிலத்தின் பல்காம் உயர்நீதிமன்றத்தில், பல்காமைச் சார்ந்த காஸிம் N.C.O அவர்களும், அவர்களது மூன்று சகாக்களும் ஜனாப் இப்ராஹீம் தாஜுதீன் அவர்களும் அவர்களது ஷாப்பூர் பள்ளிவாசல் பரிபாலன சபைக்கும் எதிராக தொடுக்கப்பட்ட வழ்க்கின்போது, நீதிபதி பல்கங்காதர், “தப்லீக் ஜமாத் இந்த சகாப்தத்தின் சிருஷ்டியாதலின் அது பொதுஜன சமுதாயத்தின் நம்பிக்கைக்கும்,மனவுறுத்தலுக்கும் உரியதாக இல்லை என்றும்,இதன் கொள்கைகள் முஸ்லீம்களுடைய அடிப்படைக் கொள்கைகளில் சந்தேகத்தையும், பிள்வையும் ஏற்படுத்தும் மூல காரணியாகவும் இருப்பதால்,தப்லீக் ஜமாத் கிதாபுகளை பள்ளியில் வாசிப்பதையும்,இஜ்திமா நடாத்துவதையும் தடை செய்கிறேன்” என்று தீர்ப்பு வழங்கினார்.
ஆதாரம் – முஸ்லிம் டைஜஸ்ட் பக்கம் 47,நவம்பர் 1986 – பிப்ரவரி 1987.

3)      13-10-1973ல் சிங்கப்பூர் கோர்ட் பள்ளியினுள் தப்லீக் ஜமாத் பயான் செய்ய தடை விதித்துள்ளது.   


  
Related Posts Plugin for WordPress, Blogger...

Wednesday 18 June 2014

அஷ்ரப் அலி தானவியின் ஷிர்க்

Hayaathul Muslimeen -Ashraf ali thaanavi

Hayaathul Muslimeen - Pg 9

         
   மௌலவி அஷ்ரப் அலி தானவி கூறுகிறார் ,

" (நாயகமே !) தாங்கள் தான் எங்கள் இதயங்களில் மறைத்துள்ளதை வெளிப்படுத்துகின்றீர்கள் "

[நூல்- ஹயாத்துல் முஸ்லிமீன் ,பக்கம்  9]

ஆக தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரின் ஹகீமுல் உம்மத் கண்மணி நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுக்கு மறைவான ஞானம் அருளப்பட்டுள்ளது என்பதை ஒத்துக் கொள்கிறார்.

அவ்வாறு இல்லையெனில் உங்கள் இதயத்தில் மறைத்துள்ள விஷயத்தை பெருமானார் அறிந்தது எங்கனம் ???

வாசகர்கள் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் இமாம் மௌலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி கூறியதை தங்கள் நினைவில் கொள்க ,

"யாரேனும் ஒருவர் நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுக்கு மறைவான ஞானம் அருளப்பட்டுள்ளது என்று கூறுவாராயின் ,அவர் ஷிர்க்கான காரியம்  செய்துவிட்டார்"
 
[ நூல் -பதாவா ரஷீதியா ,பக்கம் 217]

மௌலவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் பத்வா சரியாக இருக்கும் பட்சத்தில் மௌலவி அஷ்ரப் அலி தானவி ஷிர்க் செய்துவிட்டார் !!!

அஷ்ரப் அலி தானவி மேலும் எழுதுகிறார் ,

"(நாயகமே !) தேவைப்படுவோருக்கு சிரமத்தில் இருந்து நிவாரணம் அளிக்கக்கூடியவர் தாங்கள் தானே "

அஷ்ரப் அலி தானவி நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்களை முஷ்கில் குஷா (சிரமங்களில் இருந்து நிவாரணம் அளிக்கக்கூடியவர் )   என்று விளிப்பது தெளிவாகவில்லையா ???

தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் 'ஷஹீத்', இஸ்மாயில் திஹ்லவி போலி ஜிஹாத் மூலம் இஸ்லாமியர்களை கொன்றவர் ,தனது நூலான தக்வியத்துள் ஈமானில் கூறுகிறார் ,

" கருமங்களை பூர்த்தியாக்குவது ,சிரமங்களை நீக்குவது, ஆபத்து நேரங்களில் உதவி வழங்குவது,இவை  அனைத்தும் அல்லாஹ்வுக்கே மட்டுமே உரியன, மேலும் எந்த நபியும்,வலியும் ,ஷைகுமார்களும்,ஷஹீதும்,ஜின்னும்,மலக்கும் எந்தவிதமான உதவியும் செய்ய இயலாது. யாரேனும் ஒருவர் அவர்களின் மீது சபதம் செய்தாலோ அல்லது ஆபத்து நேரங்களிலும் அவர்களை  நினைவில் கொண்டாலோ, அவர் ஒரு முஷ்ரிக் ஆவார்.அவர்களது நம்பிக்கை எதுவாக இருந்தாலும்,இவர்கள் சூயமாக சக்தியுடையவர்கள் என்றாலும் சரி,அல்லது இவர்கள் அல்லாஹ்வினால் சக்தி வழங்கப்பட்டு உதவுகிறார்கள் என்றாலும் ,எந்த நிலையிலும் இது ஷிர்க் "

 [ நூல் - தக்வியதுல் ஈமான்,பக்கம் 10 ,தில்லி பதிப்பு ] 

ஆக இஸ்மாயில் திஹ்லவியின் கூற்றின் பிரகாரம் தேவ்பந்திகளின் ஹக்கீமுள் உம்மத் ஷிர்க் செய்துவிட்டார் !!!

அஷ்ரப் அலி தானவி எழுதுகிறார் ,

" (நாயகமே !) தாங்கள் மறைந்திருந்தாலோ அல்லது வராமல் இருந்தாலோ மரணம் வந்தடைந்து உலகம் இருள் சூழ்ந்திருக்கும் "

அஷ்ரப் அலி தானவி  நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்)  அவர்களை ஹாளிர் நாழிர் என்று ஏற்றுக் கொள்கிறார் !!!

இது தான் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரின் கொள்கையால் வரும் விளைவு . அந்தோ பரிதாபம் !!!உங்களின் ஹகீமுல் உம்மத் கூட உங்களின் ஷிர்க் பத்வாக்களில் இருந்து தப்ப முடியவில்லையே .

இதே விஷயங்களை ஒரு முஸ்லிம் கூறினால் அவர் மீது ஷிர்க்,குப்ர்,பித்அத் என்று பட்டம் சுமத்துவது,உங்களின் தேவ்பந்தின் முன்னோடிகள் இவ்வாறு கூறியல்லாரே என்று வினவினால் சப்பைக் கட்டு கட்டுவது,நொண்டிச் சாக்கு சொல்லுவது .

இனியாவது இஸ்லாமிய சமுதாயத்தை உங்களின் வஹாபிய விஷம் தடவிய நாக்கினால் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதீர்கள் .


 
Related Posts Plugin for WordPress, Blogger...

Friday 13 June 2014

காசிம் நானுத்வியின் மீது தக்Fபீர் பத்வா


           சில காலம் முன்பு,தாருல் உலூம் தேவ்பந்த்க்கும் ஜமாத்தே இஸ்லாமி (மௌதூதி) கக்கும் இடையேயான சண்டை அதன் உச்சத்தில் இருந்த போது,ஜமாஅத்தே இஸ்லாமியைச் சார்ந்த சில நபர்கள் மௌலவி காசிம் நானுத்வி எழுதிய நூலான தப்சியதுல் அகாயித் நூலில் இருந்து சில வாசகங்களை எடுத்து அவை குப்ரின் பக்கம் சேர்க்குமா என்ற வினாவை எழுப்பி தாருல் உலூம் தேவ்பந்த்க்கு பத்வா கோரி அனுப்பினர் .

ஆனால் அவர்கள் இந்த வாசகங்கள் தேவ்பந்தின் முன்னோடியான காசிம் நானுதிவியால் எழுதப்பட்டது எனத் தெரிவிக்கவில்லை. ஆக தேவ்பந்தின் அறிஞர்களுக்கு இவை மௌலவி காசிம் நானுத்வியின் வாசகங்கள் என அறிந்திருக்கவில்லை.

தாருல் உலூம் தேவ்பந்தின் முப்திகள் இதன் மீது உடனடி விசாரணை நடத்தி,குப்ருடைய பத்வாவை வெளியிட்டார்கள் .

இந்த பத்வாவில் நீல நிறத்தில் அடிக்கோடிட்ட பகுதிகளைக் காணுங்கள். அதில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது,
"இத்தகைய அகீதாவுடைய நபர் காபிர். அவர் தஜ்தீத் ஏ ஈமான் ,தஜ்தீத் ஏ நிக்காஹ் செய்யாத வரை அவருடன் எந்த உறவும் வைக்கக் கூடாது ".


பின்னர் ஜமாத்தே இஸ்லாமியினர் இந்த வாசகம் மௌலவி காசிம் நானுத்வியின் நூலான தப்சியதுல் அகாயித் ல் இருந்து எடுக்கப்பட்டது என்று வெளிப்படுத்திய பொழுது, தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர் !!!

பின்னர் மௌலானா அமீர் உத்மானி அல் தேவ்பந்தி "ஜமாத்தே இஸ்லாமி அவுர் தேவ்பந்த் கி இக்திலாப் கி ஹகீகத் " என்ற நூலை எழுதினார். அதில் இந்த பத்வாவைக் குறிப்பிட்டு ,தேவ்பந்தி அறிஞர்கள் மிகவும் சோர்வாகவும்,வேலைப் பளுவின் காரணமாக கவனம் செலுத்த வில்லை என்ற நொண்டிச் சாக்கு கூறினார்.

சம்பந்தப்பட்ட நபர் மீது குப்ர் பத்வா கொடுத்த தேவ்பந்தி முப்திகள், அந்த வாசகங்களுக்கு வேறொரு கருத்து இருக்க வாய்ப்பிருக்கலாம் என நினைத்து குப்ர்ருடைய பத்வா சுமத்தும் முன் சிறிது கூட யோசிக்கவில்லை.

உங்களை எல்லாம்  வஹாபிய சிந்தனை வேறு எவ்வாறு வழிநடத்தும்,எப்போது
சமயம் கிடைக்கும் எப்போது ஒரு முஸ்லிம் மீது குப்ர் ,ஷிர்க்,பித்அத்  என்று கூப்பாடு போடுலாம் என்று எண்ணுவதை விட !!!               
             





Related Posts Plugin for WordPress, Blogger...

Tuesday 10 June 2014

அல் கவ்ல் அல் பாதி நூலில் தேவ்பந்தி மோசடிகள்


             ஷம்சத்தீன் முஹம்மத் இப்னு அப்துல் ரஹ்மான் அல் சக்ஹாவி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) [இறப்பு ஹிஜ்ரி 902] , இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி(ரஹ்மத்துல்லாஹி அலைஹி) யின் மாணவர்களில் முதன்மையானவர். அன்னார் மிகச் சிறந்த சட்ட நிபுணராகவும்,வரலாற்றாசிரியராகவும், ஹதீத் கலை வல்லுனராகவும் விளங்கியவர்கள்.

இமாம் சக்ஹாவி(ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் அல் கவ்ல் அல் பாதி பி அல் ஸலாத் அலா அல் ஹபீப் அல் ஷபி என்னும் நூலை எழுதினார்கள். அது கண்மணி நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்)  அவர்களின் மீது ஓதும் சலவாத்துகளின் சிறப்புகளை கூறும் நூல்.

தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் இந்த நூலை உர்துவில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்கள் .

பதிப்பாசிரியர் - ரசிஉத்தீன் அஹ்மத் பக்ரீ
இதாரா அல் குரான் வ உலூம் அல் இஸ்லாமியா, நசாத் சபீல் சௌக்,கராச்சி,பாகிஸ்தான்
.

இந்த மொழிபெயர்ப்பில் பல மோசடிகளும் ,திரிபுகளும் உள்ளன . இங்கே சிலவற்றை காண்போம் .

மோசடி 1

    இமாம் சக்ஹாவி(ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் அபூபக்கர் பின் முஹம்மத் அவர்களைக் கொண்டு அறிவிகிறார்கள் ," நான் அபூபக்கர் பின் முஜாஹித் அவர்களின் சமீபம் இருக்கையில் ஷைகுல் மஷாயிக் ஷிப்லி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் வந்தார்கள். அபூபக்கர் பின் முஜாஹித் அவர்கள் எழுந்து நின்று,ஷிப்லி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)  அவர்களை ஆரத்தழுவி அவர்களின் முன் நெற்றியில் முத்தமிட்டார்கள் . நான் கூறினேன் ,எஜமானே தாங்களும் பக்தாதைச் சார்ந்த பிற அறிஞர்களும் அவரை பைத்தியக்காரர் என்று கருதும் நிலையில் , ஷிப்லி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)  அவர்களுக்கு இவ்வாறு சங்கை செய்யக் காரணம் என்ன ?.

 அபூபக்கர் பின் முஜாஹித்(ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறினார்கள், "நான் கண்மணி நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்)  அவர்கள் எவ்வாறு செய்யக் கண்டேனோ அவ்வாறே செய்துள்ளேன் ".

பின்னர் அவர்கள் நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்)  அவர்கள் ஷிப்லி அவர்களின் முன் நெற்றியில் முத்தமிட்டதைக் கண்ட தமது கனவை விளக்கினார்கள். நான் கண்மணி நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்)  அவர்களிடத்தில் தாங்கள் இந்த அளவுக்கு ஷிப்லி அவர்களின் மேல் பிரியம் வைக்க கராணம் என்ன என்று வினவியபோது ,சாந்த நபி கூறினார்கள் ,ஷிப்லி ஒவ்வொரு தொழுகைக்கு பின்னும் 'லகத் ஜா அகும் ரசூலுன் மின் அன்புசிகும் ' (குரான் சுரா 9) ஓதி ,பின்னர் 'ஸல்லலாஹு அலைக்க யா முஹம்மத் ,ஸல்லலாஹு அலைக்க யா முஹம்மத்,'ஸல்லலாஹு அலைக்க யா முஹம்மத் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்' என்று ஓதி வந்தார் என்றார்கள் "

[ இந்த குறிப்பை அரபி ஆன்லைன் பிடிஎப் -இல் பக்கம் 173ல்  காணலாம் .]        

தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் மொழிபெயர்ப்பாளர் அவருடைய மொழிபெயர்ப்பில் 'யா' என்ற சொல்லை எடுத்துள்ளார் .ஏனெனில் தப்லீக் ஜமாத்தின் வஹாபிய நம்பிக்கை படி யாராகிலும் யா முஹம்மத் என்று அழைத்தால் ஷிர்க் .

மோசடி 2

      இமாம் சக்ஹாவி(ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் எழுதுகிறார்கள் ," நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்)  அவர்கள் மீது ஸலவாத்தையும் ஸலாமையும் சொல்லும் வழக்கத்தை உண்டாக்கியவர்கள் சுல்தான் சலாஹுத்தீன் அல் அய்யூபி(ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள். ஹாகிம் பின் அஜீஜ் கொல்லப்பட்ட பின் அவரது சகோதரி தமது மகன் மீதும் அதை தொடர்ந்து கலீபாக்களின் மீதும் ஸலவாத் கூறும்படி உத்தரவிட்டார். சுல்தான் சலாஹுத்தீன் இந்த நடைமுறையை நிறுத்தி பாங்கிற்கு பின் நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்)  அவர்கள் மீது ஸலவாத் கூறும்படி உத்தரவிட்டார்."

  மேலும் இமாம் சக்ஹாவி(ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் எழுதுகிறார்கள் ," உண்மையாதெனில் , இந்த நடவடிக்கை ஒரு நல்ல பித்அத்(பித்அத் அல் ஹசனா) மேலும் இதை செய்யும் ஒருவர் இதற்கான நன்மையை பெறுவார் "

[ பக்கம் 192 , அரபி ஆன்லைன் பிடிஎப் பதிப்பு ]

தேவ்பந்தி மொழிபெயர்ப்பாளர் ஹசனா என்ற வார்த்தையை நீக்கி விட்டு வெறும் பித்அத் என்று வைத்துள்ளார். மேலும் அவர் அதைத் தொடர்ந்து வரும் வாசகத்தை அப்படியே முழுமையாக நீக்கி விட்டார்.

இதன் மூலம் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் பாங்கிற்கு பின் சலவாத் சொல்லும் வழத்திற்கு உண்டான ஆதாரத்தை மறைத்து விட முற்படுகின்றனர்.  இது தான் ஸலவாத் மீது தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரின் காழ்ப்புணர்ச்சி .

மோசடி 3

          இமாம் சக்ஹாவி(ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் எழுதுகிறார்கள் ,"ஒரு முறை இப்னு உமர்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் காலில் உணர்ச்சியில்லாமல் ஆனது. அவர்களிடம் கூறப்பட்டது நீங்கள் மிகவும் நேசிக்கும் ஒருவரை நினைத்து கொள்ளுமாறு அவரிடம் சொல்லப்பட்டது . இப்னு உமர்(ரலியல்லாஹு அன்ஹு)  அவர்கள் யா முஹம்மத் என்று கூறினார்கள் . அவர்களின் கால் சரியானது "

[ பக்கம் 225, அரபி ஆன்லைன் பிடிஎப் பதிப்பு ]

தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் மொழிபெயர்ப்பாளர் இந்த முழு சம்பவத்தையும் நீக்கிவிட்டார் .ஏனெனில் தப்லீக் ஜமாத்தின் வஹாபிய நம்பிக்கை படி யாராகிலும் யா முஹம்மத் என்று அழைத்தால் ஷிர்க் .

Al- Qawl al-badi‘ fi al-salat ‘ala al-habib al-shafi’ - Urdu Transalation

Al- Qawl al-badi‘ fi al-salat ‘ala al-habib al-shafi’ - Urdu Transalation

Al- Qawl al-badi‘ fi al-salat ‘ala al-habib al-shafi’ - Arabic

Al- Qawl al-badi‘ fi al-salat ‘ala al-habib al-shafi’ - Arabic

 
      
    
                
Related Posts Plugin for WordPress, Blogger...

Friday 6 June 2014

நஷ்ர் உத் தீப் நூலில் தேவ்பந்தி மோடிகள்


    இஸ்லாமிய புத்தகங்களை  திரித்து எழுதும் அவர்களின் நடைமுறையை தொடர்ந்து,தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் இப்போது அவர்களின் தலைவர்களுள் ஒருவரால்  எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை திரித்துள்ளனர்!

மௌலவி அஷ்ரப் அலி தானவி எழுதிய நூல் நஷ்ர் உத் தீப் பி திக்ரில் நபிய்யில் ஹபீப். இந்த புத்தகத்தில் உள்ள சில கருத்துகளைக் கொண்டு தேவ்பந்திகள் சங்கடத்தில் உள்ளனர். ஏனெனில் அந்த கருத்துகள் அவர்களின் வஹாபிய முழக்கத்திற்கு எதிராக உள்ளது.

அல்லாமா முஹம்மத் அலி முஸ்தபா அவர்கள்  நஷ்ர் உத் தீப் புதிய பதிப்பில்(தாருல் இஷாஅத் ,கராச்சி,பாகிஸ்தான் )  தேவ்பந்திகளின் இந்த மோசடிகளை கண்டுபிடித்துள்ளார் . இங்கே இரண்டு புனைவுகள் விளக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இந்த திரிக்கப்பட்ட பதிப்பை வெளியிடும் பணி தாருல் கிதாப் ,தேவ்பந்த் மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது .

மோசடி 1

   அஷ்ரப் அலி தான்வி தேவ்பந்தி நஷ்ர் உத் தீப்-பின் முன்னுரையில் எழுதுகிறார் , " ஹிஸ்ன் ஏ ஹஸீன் நூலின் முன்னுரையில் எழுதப்பட்டதாவது புர்தா ஷரீபின் ஆசிரியர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் .எல்லா மருத்துவ உதவிகளும் வீணான நிலையில் அவர் பரக்கத்தை எதிர்பார்த்து புர்தா ஷரீபை இயற்றினார் .அவர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காணும் பாக்கியம் பெற்றார் . பெருமானார் அவர்கள் அவர் மீது தனது கையால் தடவினார்கள் , அவர் உடனே குணமடைந்தார்  "

[ நூல் -  நஷ்ர் உத் தீப் , பக்கம் 2 ]

அல்லாமா முஹம்மத் பின் முஹம்மத் அல் ஜஸ்ரி அல் ஷாபியி (இறப்பு 833 ஹிஜ்ரி ) தமது நூலான
ஹிஸ்ன் ஏ ஹஸீன் -ல் இந்த சம்பவத்தை பதிவு செய்துள்ளார்கள் . இது பெருமானார் அவர்கள் தாஃபிஇல்  பலாஇ வல் வபாயி வல் கஹ்த்தி வல் மரளி வல் அலம் (இயற்கை சீற்றங்கள், நோய், வறட்சி, வியாதிகள் மற்றும் கவலைகளை விட்டும் விலக்குபவர் )   என்பது நிரூபணமாகிறது.

தேவ்பந்திய தப்லீக் ஜமாத்தின் மௌலவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி, தரூத் தாஜ் ஓதுவது கூடாது ஏனெனில் அதில் உள்ள தாஃபிஇல்  பலாஇ வல் வபாயி வல் கஹ்த்தி வல் மரளி வல் அலம் ஷிர்க்கான வார்த்தைகள் என்று தமது பத்வாவில் கூறியுள்ளார் .

[ நூல் - பத்வா ரஷீதியா, கிதாப் அல் இல்ம்,பக்கம் 169,தாருல் இஷாஅத் ]

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தின் பல அறிஞர்கள் இந்த பத்வாவுக்கு எதிராக எழுதியுள்ளனர் .இன்ஷா அல்லாஹ் அதை பின்னர் விரிவாக காண்போம் .

எப்போதெல்லாம் இது விஷயமாக தேவ்பந்தி தப்லீக் ஜமாத்திடம் விவாதிக்கப் பட்டதோ அப்போதெல்லாம் அவர்களுக்கு மௌலானா அஷ்ரப் அலி தானவி தமது நூலிலேயே இதை எழுதியுள்ளார் என்று அவர்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது .

இந்த ஆதாரங்களை எதிர்கொள்வது தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினருக்கு தர்ம சங்கடத்தை உண்டு பண்ணியது . அவர்கள் இந்த முன்னுரையை தமது புதிய பதிப்பில் இருந்து நீக்கி விட்டனர் .

மோசடி 2

        அத்தியாயம் 21ல் அஷ்ரப் அலி தானவி அரபியில் ஒரு கவிதையை எழுதி அதற்கான விளக்கத்தை உர்துவில் கொடுத்துள்ளார் .

அந்த கவிதை இவ்வாறு ஆரம்பிக்கிறது " தஸ்தகிரீ கிஜியே மேரே நபி, கஷ்மா காஷ் மே தும் ஹி ஹோ மேரே நபி "

[ நூல் - நஷ்ர் உத் தீப் , அத்தியாயம் 21, பக்கம் 194 ]

அதன் பொருள் " உதுவுங்கள் பெருமானே ! சிரமம் உண்டாகும் போது நீங்கள் மட்டுமே உதவ முடியும் ".

அது ஒரு நீளமான கவிதை மேலும் அஷ்ரப் அலி தானவி இஸ்திகாதா செய்து வந்தார் என்பதும் தெளிவாகும்.  இந்த ஆதாரம் தேவ்பந்தி தப்லீக் வாஹாபிகளிடம் இஸ்திகாதா அனுமதிக்கப்பட்ட ஒன்று என்று விளக்க அளிக்கப்பட்டது.

தேவ்பந்தி வாஹாபிகளின் கொள்கையின்படி இஸ்திகாதா ஷிர்க் என்பதால் , தங்களின் முன்னோடிகளில் ஒருவரான அஷ்ரப் அலி தனவியை முஷ்ரிக் என்று அழைக்க விரும்பாததால் , அவர்கள் இந்த முழு கவிதையும் புதிய பதிப்பில் இருந்து நீக்கி விட்டார்கள் .
 

Nashr ut Teeb fi Dhikr il Nabbiyal Habeeb

Nashr ut Teeb -Ashraf Ali Thanvi





  
Related Posts Plugin for WordPress, Blogger...

Thursday 5 June 2014

மதாரிஜுன் நுபுவ்வா வில் தேவ்பந்திகளின் மோசடிகள்


           ஷைக் அப்துல் ஹக் முஹத்தித் திஹ்லவி (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) [இறப்பு 1052 ஹிஜ்ரி]  இந்திய துணை கண்டம் இந்நாள் வரை உருவாக்கிய மிக பெரிய இஸ்லாமிய அறிஞர்களுள்  ஒருவர்.அவர் தான் முதன் முதலில் இந்திய துணை கண்டத்தில் ஹதீஸ் கலையின் போதனைகளை நிறுவியவர்.

இந்திய துணை கண்டத்தை சார்ந்த சில  முஹத்தித்தீன்களுக்கு  ஷாஹ்  அப்துல் ஹக் அவர்களுக்கு முன்பு அரபு அறிஞர்களிடம் இருந்து  ஹதீஸ் அறிவிக்க இஜாஸா(அனுமதி) இருந்தது, ஆனால் அந்த அறிஞர்கள் ஹதீஸ் கற்பிக்க எந்த மதராஸாவும் ஆரம்பிக்க வில்லை அல்லது திட்டமிட்ட போதனை முறைகளை தொடங்கியதும் இல்லை.ஷாஹ் அப்துல் ஹக் அவர்களின் முப்பாட்டனார் புகாராவில் இருந்து இந்தியாவின் தில்லிக்கு புலம் பெயர்ந்தார்.

அவர் ஒரு முஹக்கிக் (அராய்ச்சியாளர் ) ,தம் வாழ்க்கை முழுவதும் பழமையான இஸ்லாமிய கையெழுத்து பிரதிகளை கற்பித்தும் ,படித்தும் வந்தார்.அவர் எழுதிய பல நூற்களில் மதாரிஜுன் நுபுவ்வத் மிகவும் பிரசித்தி பெற்றது.அது செய்யதுல் அன்பியா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் அவர்களின் சுயசரிதை. அதன் மூல பிரதி பார்ஸியில் எழுதப்பட்டது .

பாகிஸ்தானைச் சார்ந்த ஒரு தேவ்பந்தி அறிஞரான சயீதுர் ரஹ்மான் அலவீ என்பவர் இந்த நூலை சமீபத்தில் உர்துவில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இதன் பதிப்பாளர்கள் மக்தபா ரஹ்மானியா,உர்து பஜார்,லாகூர், பாகிஸ்தான்.

இந்த தேவ்பந்தி அறிஞர் தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினர் காலம் காலமாக செய்து வரும் மோசடியை அரங்கேற்றினார். தனது தேவ்பந்தி வஹாபிய கொள்கைக்கு மாற்றமான பகுதிகளை திரித்து மொழிபெயர்த்தார்.

அல்லாமா முப்தி முஹம்மத் அப்பாஸ் அவர்கள் இந்த பதிப்பில் உள்ள மோசடிகளை வெளிப்படுத்தினார்
.
மோசடி 1

     ஷெய்கு முஹக்கிக் அவர்கள் ' வ ஹுவ பி குல்லி ஷையின் அலீம் ' என்பதை விளக்கும் போது எழுதுகிறார்கள் " பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மறைவான ஞானம் அருளப்பட்டது,எல்லா படைப்பினங்களின் ஞானமும் இன்னும் இறுதி நாளின் ஞானமும் "

தேவ்பந்தி மொழிபெயர்ப்பாளர் ஷெய்கு முஹக்கிக் அவர்களின் இந்த வாக்கியத்தை முற்றிலுமாக தவிர்த்திருக்கிறார்.      

மேலும் ஷெய்கு முஹக்கிக் அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்வரும் சொற்பதங்களை பயன்படுத்தி இருக்கிறார் .
"நபிமார்களின் தலைவரும்,உஸ்தாத் ஏ குல்,முதன்மையானதையும் இருதியானதையும் நன்கறிந்தவரும்,மழார் ஹசன் வ ஜமால் "

இந்த வாக்கியம் தேவ்பந்தி வாஹாபிகளின் கொள்கைக்கு முரணானவையாதலால் தேவ்பந்தி மொழிபெயர்ப்பாளர் இதையும் எழுதவில்லை ,தவிர்த்திருக்கிறார்.  

மோசடி 2
        
ஷெய்கு முஹக்கிக் அவர்கள் எழுதுகிறார்கள் "அவ்வலூ மா ஹலக் வா நூரி " அதோடு எழுதுகிறார்கள் " அல்லாஹ் முதன் முதலில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நூரை படைத்தான் " .

தேவ்பந்தி மௌலவி [வால்யும் 2,பக்கம் 11] ல் ஷெய்கு முஹக்கிக் அவர்களின் விளக்கத்தை கொடுக்கவில்லை ,இன்னும்  [வால்யும் 1,பக்கம் 71] விளக்கம் கொடுக்கும் போது தனது சுய விளக்கத்தை அடைப்புக் குறியில் கொடுத்து எழுதுகிறார் " நுபுவத்தின் ஒளியையும் ,வழிகாட்டுதலையும் " என்று .


மோசடி 3
 
ஷெய்கு முஹக்கிக் அவர்கள் துவைபாவின் ஹதீஸை மேற்கோளிட்டு , எழுதுகிறார்கள் " இந்த ஹதீதில் மீலாதுன் நபியை கொண்டாடுவோருக்கு சுப சோபனம் கூறப்படுகிறது  ".


எம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மேல் முஹப்பத் கொள்வது என்பது தேவ்பந்தி தப்லீக் ஜமாத்துக்கு அலர்ஜி ஆதலால், தேவ்பந்தி மொழிபெயர்ப்பாளர் இந்த வாக்கியத்தை தமது மொழிபெயர்ப்பில் இருந்து அழித்து விட்டார் .

மோசடி 4

ஷெய்கு முஹக்கிக் அவர்கள் எழுதுகிறார்கள் " நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூரிய வெளிச்சத்திலோ நிலவின் ஒளியிலோ நிழல் விழுந்தது இல்லை,இது விஷயமாக சவ்கான் அவர்கள் விவரித்துள்ளார்கள் மேலும் அல் ஹாகிம் அல் திர்மிதி அவர்களும் நவாதிர் அல் உசூல் லில் பதிவுசெய்துள்ளார்கள் "

 தேவ்பந்தி மொழிபெயர்ப்பாளர் இதை எழுதி பின்னர் தனது வஹாபிய கருத்தை இணைத்துள்ளார் "மேலும் உண்மை என்னவெனில் நபிகளாருக்கு நிழல் இருந்த்தது".

மோசடி 5

ஷெய்கு முஹக்கிக் அவர்கள் எழுதுகிறார்கள் " இன்னும் சிலரின் அறிவிப்பாகிறது ரோஜா மலர் பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனிதமான வியர்வையில் இருந்து உண்டாக்கப் பட்டது "

 தேவ்பந்தி மொழிபெயர்ப்பாளர் இதை எழுதி பின்னர் தனது கருத்தை இவ்வாறு எழுதியள்ளார்  " இவை நல்ல பேச்சாக இருக்கின்றன" 
(யே மஹஸ் குஷ் அகீதே கி பாத் ஹை )


மோசடி 6

ஷெய்கு முஹக்கிக் அவர்கள் எழுதுகிறார்கள் " பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறுநீர் குணப்படுத்தும் தன்மையுடையதாக உள்ளது என பல ஆதாரங்கள் உள்ளன "

 தேவ்பந்தி மொழிபெயர்ப்பாளர் இதை எழுதி பின்னர் தனது கருத்தை இவ்வாறு எழுதியள்ளார்  " இந்த போதனைகள் ஆன்மாவுக்கு எதிரானவை"
( லேகின் இன் சீசோ கோ பீனே பீலானே கி பாதேன் முகத்தஸ் தாலிமாத் கே முஸ்முஅயெ மீஜாஸ் அவுர் ரூஹ் கே கிளாப் ஹை )









    
Related Posts Plugin for WordPress, Blogger...

Wednesday 4 June 2014

பழாயிலே அமல் நூலில் உள்ள தேவ்பந்தி மோசடிகள்


  ஆராய்ச்சியாளர்: முஹக்கிக் கலீல் அஹ்மத் ரானா

     தேவ்பந்தி வஹாபிகள் மீண்டும் தமது விஷமத்தை வெளிப்படுத்தியுள்ளனர் !!!          

பழாயிலே அமல் என்ற நூல் தேவ்பந்திகளின் பிரச்சார பிரிவான தப்லீக் ஜமாஅத்தினரால் பயன்படுத்தப்படும் நூல்.இந்த நூலை எழுதியவர்கள் மௌலவி ஜக்கர்ரியா காந்தலவி தேவ்பந்தி (மறைவு 1402 ஹிஜ்ரி).இந்த நூலின் அசலான பெயர் தப்லீகி நிஸாப்.இந்த நூல் பழாயிலே நமாஸ், பழாயிலே தரூத், பழாயிலே ஹஜ் என பல பிரிவுகளை கொண்டது.
பின்னர் தேவ்பந்திகளால்  பழாயிலே அமல் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

    பழாயிலே நமாஸ் அத்தியாயத்தின் இறுதியில் மௌலவி ஜக்கர்ரியா காந்தலவி எழுதுகிறார் .

" தொழுகையின் முக்கியமான பகுதி திக்ர் ,அதாவது தொழுகையில் குரானை ஓதுவது.இந்த விஷயங்களை முழுமையான கவனம்  இல்லாமல் செய்தால் அது அல்லாஹ்விடம்  பிரார்த்தனை செய்வது என்று ஆகாது. இது  வீண் பேச்சு மற்றும் காய்ச்சலின் போது மக்கள் பேசும் தேவையில்லாத  பேச்சு போன்றது "

[ நூலில் உள்ள உர்து வார்த்தை பிரயோகம்  " யே கலாம் நஹி ஹை. ஐசீ ஹை ஜைசீ புஹார் கி ஹாலத் மே ஹிஸ்யான் அவுர் பக்வாஸ் ஹோத்தி ஹை " ]

கீழே உள்ள ஸ்கேனில் நீல நிறத்தில் அடிக்கொடிட்ட இடத்தில் பக்வாஸ் என்ற வார்த்தை உள்ளது .


Fazaile amal -Moulavi Zakkariya Khandalavi
 
 
 


இந்த விஷயத்தை  முதன்முதலில் முஹக்கிக்  கலீல் அஹ்மத் ராணா கவனித்த போது, அவர்களால்  குர்ஆன் ஓதுவதற்கு பக்வாஸ் (தேவையில்லாத பேச்சு) போன்ற வார்த்தைகளை ஏற்க முடியவில்லை.ஏனெனில் பல சாதாரண மக்கள் அவர்கள் குர்ஆன் ஓதி  தொழும் தொழுகையின் போது அவர்களால் முழுமையான கவனம் செலுத்த இயலாத சூழ்நிலை உள்ளது.

மேலும் நமக்கு மார்க்கம் கற்பித்த முன்னோடிகள் கூறுகின்றனர் ,யாராகிலும் குர்ஆன் ஓதி  தொழும் தொழுகையின் போது அவர்களால் முழுமையான கவனம் செலுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டாலும், ஓதுவது குர்ஆன் ஆக இருக்கின்ற காரணத்தால் , நாம் அதை தேவையில்லாத பேச்சு எனக் கூற முடியாது . மேலும் இது அல்லாஹ் வின் வேதமான குர்ஆனுக்கு செய்யும் அவமரியாதை.

இந்த பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு, இந்த முழு மேற்கோள் ஒரு பிரபலமான தேவ்பந்தி மதரஸாவான 'கைருல் மஜாலிஸ் ,முல்தான், பாகிஸ்தான்' க்கு  அனுப்பப்பட்டது.
    
நாம் இந்த மேற்கோள் அவர்களின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை.

மேலே குறிப்பிட்டுள்ள முழு மேற்கோள் குறிப்பிட்ட பிறகு, நாம் பின்வரும் கேள்வியை கேட்டோம்.

கேள்வியாளர் : முஹம்மத் சப்தார் அலி,புல் அசதாபால்,கான்வால்,பாகிஸ்தான்

பதில்         : பத்வா நம்பர் 33/148 , தேதி 17.11.1421 ஹிஜ்ரி /12 பிப்ரவரி 2001

" இந்த வார்த்தைகள் குர்ஆனுக்கு தெளிவாக அவமரியாதை செய்பவையாக இருக்கின்றன. பகிரங்கமாக தவ்பா செய்ய வேண்டும் .அந்த நபர் தவ்பா செய்யும் வரை அவர் தொழ வைக்க அனுமதிக்கக் கூடாது .முஸ்லீம்கள் இந்த நபரை விட்டும் விலகி இருக்க வேண்டும் . அல்லாஹ் நன்கறிந்தவன் "


அல் ஜவாப் அல் சஹீஹ் (சரியான விடை ) மதரஸாவின் முத்திரை .

முஹம்மத் அபாஉல்லாஹ்
அப்துஸ் ஸத்தார்

ஜாமியா கைர் அல் மதாரிஸ்,முல்தான் .

பத்வா வின் மூலப் பிரதி


Jamia Khair al madaris  Fatwa




 



பின்னர் தேவ்பந்திகளிடம் இந்த வாசகங்கள் அவர்களின் நூலில் இருந்தும்,தேவ்பந்தின் முன்னோடியால் எழுதப்பட்டதில் இருந்து எடுக்கப்பட்டவை எனத் தெரிவித்த பொழுது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர் .

அவர்களின் வஹாபிய ஆசிரியரான மௌலவி ஜக்கர்ரியா காந்தலவி தேவ்பந்தி இந்த பத்வாவில் இருந்து காப்பாற்ற இந்த தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினர் காலம் காலமாக செய்து வரும் மோசடியை அரங்கேற்றினர் .

 பழாயிலே அமல் நூலின் அடுத்த பதிப்பைத் திரித்து, அதில் இருந்து பக்வாஸ் என்ற சொல்லை வாசகத்தில் இருந்து நீக்கினர்.


Fazaile-amal - Fabricated Version


 


பச்சை நிறத்தில் கோடிட்ட இடத்தில் பக்வாஸ் என்ற பதம் இல்லாததை கவனியுங்கள் .திரிக்கப்பட்ட புதிய பதிப்பில் இவ்வாறு உர்துவில் வருகிறது " யே கலாம் நஹி ஹை. ஐசீ ஹை ஜைசீ புஹார் கி ஹாலத் மே ஹிஸ்யான் ஹோத்தி ஹை "

இவ்வாறு திரித்து பதிப்பித்தது மூலம் வஹாபிகள் காலம் காலமாக மக்களை ஏமாற்றும் தங்களின் சுயரூபத்தை வெளிப்படுதியதோது மட்டுமல்ல தாங்கள் உர்து மொழியில் திறனற்றவர்கள் என்பதையும் நிருபித்து உள்ளார்கள் .

  மூல நூலில் உள்ள உர்து வார்த்தை பிரயோகம்  " யே கலாம் நஹி ஹை. ஐசீ ஹை ஜைசீ புஹார் கி ஹாலத் மே ஹிஸ்யான் அவுர் பக்வாஸ் ஹோத்தி ஹை "

உர்து இலக்கணப்படி இதில் ஹிஸ்யான் என்பது ஆண்மை சொல், பக்வாஸ் என்பது பெண்மை சொல், எனவே அதைத் தொடர்ந்து வருவது  ஹோத்தி  ஹை என்னும் பெண்மை சொல். 

புதிய திரித்த பதிப்பில் பக்வாஸ் வார்த்தையை நீக்கிய பின் வருவது
" யே கலாம் நஹி ஹை. ஐசீ ஹை ஜைசீ புஹார் கி ஹாலத் மே ஹிஸ்யான் ஹோத்தி ஹை "
ஆனால் அது ஹோத்தா ஹை என்று வந்திருக்க வேண்டும்,ஏனெனில் ஹிஸ்யான் என்பது ஆண்மை சொல்.


 ஆரம்ப காலம் முதல் இன்று குர்ஆனுக்கு அவமரியாதை செய்வதே இந்த வாஹாபிகளின் கொள்கை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் !!!   அல்லாஹ் முஸ்லிகள் அனைவரையும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் தின் பாதையில் நிலைத்திருக்கச் செய்வானாக !!  ஆமீன் !!!
      
   

Related Posts Plugin for WordPress, Blogger...

Tuesday 3 June 2014

அஷ்ரப் அலி தானவியும் வஹாபிகளும்


            தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரின் ஹகீமுல் உம்மத் அஷ்ரப் அலி தானவி தமது வஹாபிய விசுவாசத்தை பின்வருமாறு பிரகடனப்படுத்துகிறார் .

" என்னிடம் 10,000 ருபாய் இருந்தால் நான் அதை மக்களிடம் விநியோகித்திருப்பேன் , மக்கள் தானாக வஹாபிகளாகி விடுவர் "
     
    [ நூல்- அல் இபாததுல் யௌமியா ,மௌலவி அஷ்ரப் அலி தானவி ]
     



Al Ifadatul Yaumiya
 
Related Posts Plugin for WordPress, Blogger...

தொழுகையில் பெருமானாரின் நினைவு


    தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் பிதாமகன் மௌலவி இஸ்மாயில் திஹ்லவி கூறுகிறார் ,

" தொழுகையில் அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிந்தனை வருவது எருமை அல்லது கழுதையின் சிந்தனையில் மூழ்குவதை விட மோசமானது."

[ நூல் - ஸிராத்தே முஸ்தகீம் ,பக்கம் 86]

இனி பின்வரும் வாசகங்களை படிப்பீர்களானால் தேவ்பந்தி வஹாபிகளின் இரட்டை நிலைப்பாட்டின் உச்சம் என்னவென்று அறிவீர்கள் .
மௌலானா அப்துல் மஜீத் தைராபாதி,மௌலவி அஷ்ரப் அலி தானவியின் மாணவரும் கலீபாவும் ஆவார் . அவர் 'ஹக்கீமுல் உம்மத்' என்று அஷ்ரப் அலி தானவியின் வாழ்க்கை வரலாறை கூறும்  புத்தகத்தை வெளியிட்டார். மௌலவி அப்துல் மஜீத் தனது ஒரு பிரச்னையை அஷ்ரப் அலி தானவிக்கு கடிதமாக எழுதுகிறார். அவர் கூறிய பிரச்சனையும்  மௌலவி அஷ்ரப் அலி பதிலும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்ட்டுள்ளது. அதை வாசித்து உண்மையை உணருங்கள்

"தொழுகையில் மன ஒருமைப்பாடு இல்லாத நிலை என்பது ஒரு பழைய பிரச்சினை.அனால் என்னுடைய அனுபவத்தில் தொழுகையில் உங்களை நினைக்கும் போது மன ஒருமைப்பாடு இல்லாத நிலை,சிறிது நேரத்திற்கே ஆனாலும்  என்னை விட்டும் விலகியது . இது விஷயமாக, இது சரிதானா  என்று  எனக்கு ஆலோசனைக் கூறுங்கள்,இல்லையெனில் எதிர்காலத்தில் நான் கவனமாக இருப்பேன் "

[ நூல்  - ஹகீமுல் உம்மத் ,பக்கம் 54 ]

இது தான் மௌலவி அப்துல் மஜீத் தைராபாதியின் தனிப்பட்ட பிரச்சனை.இனி மௌலவி அஷரப் அலி தானவியின் பதிலைப் பாருங்கள் ,

"இந்த முறை சரியானதே நீர் யாரிடமும் இதை வெளிப்படுத்தாதவரை "

[ நூல்  - ஹகீமுல் உம்மத் ,பக்கம் 54 ]

நான் இதன் தீர்ப்பை சங்கைமிகு வாசகர்களிடத்தில் விட்டு விடுகிறேன். அல்லாஹுவுக்கு அஞ்சுங்கள் மேலும் இதை உங்கள் சிந்தையில் நினைவு கொள்ளுங்கள் , சூரியன் ஒரு பனைமர உச்சியளவு உயரமே இருக்கும் பொழுது, நம் உடல் வியர்த்து வழியும் நேரத்தில் ஒவ்வொரும் ஒரு நபியில் இருந்து மற்றொரு  நபியைத் தேடி நாடி ஓடிக் கொண்டிருக்கும் அவ்வேளையில் , செய்யதுல் அன்பியா நமது நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே நமக்காக ஷபாஅத் செய்வார்கள் .

வல்ல நாயன் எல்லா முஸ்லிம்களின் இதயத்திலும் தனது ஹபீபின் முஹப்பத்திலேயே தரிபட்டு அதே நிலையிலே மவ்த்தை அனுபவிக்கக் கூடிய பாக்கியத்தை தருவானாக !!!
 
Siraathe Musthaqeem


Related Posts Plugin for WordPress, Blogger...

Monday 2 June 2014

இஸ்மாயில் திஹ்லவியும் இஜா உல் ஹக்


இஸ்மாயில் திஹ்லவி எழுதிய பார்ஸி நூல் இஜா உல் ஹக் . அதில் அவர் கூறுகிறார் ,

"வஹ்ததுல் வுஜூத் மற்றும் வஹ்ததுல் ஷுஹூத் இரண்டும் பித்அத்  "

[ வாசகர்களின் கவனத்திற்கு தஸவ்வுப்- பையும் விட்டு வைக்காத இந்த வஹாபிய தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினரின் சிஷ்தி சப்ரி சில்சிலா வஜூதி சில்சிலா . இந்த வஹாபிய தப்லீக் ஜமாஅத் தரீக்காக்களில் எவ்வாறு ஊடுருவியுள்ளனர் என்பதை பின்னர் விளக்குவோம் ]

இஸ்மாயில் திஹ்லவி மேலும் கூறுகிறார் ,

"அல்லாஹ் நேரத்தை விட்டும் காலத்தை விட்டும் திசைகளை விட்டும்  தேவையற்றவன் என்று நம்புவது பித்அத் மேலும் அல்லாஹ் ஹுதஆலாவின் பரிசுத்த லிகா என்னும் தரிசனத்தை நியாயத் தீர்ப்பு   நாளில் திசையில்லாமல்  பார்க்கலாம் என்று நம்புவது பித்அத் "

இஸ்மாயில் திஹ்லவி   கூறுகிறார் ,

" ஆயத்தே முதஷ்பிஹாத் வின்  தாவீல் செய்வது பித்அத் "

மௌலவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி இந்த வஹாபிய கொள்கையுடைய இஸ்மாயில் திஹ்லவியின் அகீதாவை சஹீஹ் அகீதா என்கிறார் . என்னே இவர்களின் வஹாபிய விசுவாசம் !!!
 


Iza ul Haq


 


 
 
 
Related Posts Plugin for WordPress, Blogger...