Friday 13 June 2014

காசிம் நானுத்வியின் மீது தக்Fபீர் பத்வா


           சில காலம் முன்பு,தாருல் உலூம் தேவ்பந்த்க்கும் ஜமாத்தே இஸ்லாமி (மௌதூதி) கக்கும் இடையேயான சண்டை அதன் உச்சத்தில் இருந்த போது,ஜமாஅத்தே இஸ்லாமியைச் சார்ந்த சில நபர்கள் மௌலவி காசிம் நானுத்வி எழுதிய நூலான தப்சியதுல் அகாயித் நூலில் இருந்து சில வாசகங்களை எடுத்து அவை குப்ரின் பக்கம் சேர்க்குமா என்ற வினாவை எழுப்பி தாருல் உலூம் தேவ்பந்த்க்கு பத்வா கோரி அனுப்பினர் .

ஆனால் அவர்கள் இந்த வாசகங்கள் தேவ்பந்தின் முன்னோடியான காசிம் நானுதிவியால் எழுதப்பட்டது எனத் தெரிவிக்கவில்லை. ஆக தேவ்பந்தின் அறிஞர்களுக்கு இவை மௌலவி காசிம் நானுத்வியின் வாசகங்கள் என அறிந்திருக்கவில்லை.

தாருல் உலூம் தேவ்பந்தின் முப்திகள் இதன் மீது உடனடி விசாரணை நடத்தி,குப்ருடைய பத்வாவை வெளியிட்டார்கள் .

இந்த பத்வாவில் நீல நிறத்தில் அடிக்கோடிட்ட பகுதிகளைக் காணுங்கள். அதில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது,
"இத்தகைய அகீதாவுடைய நபர் காபிர். அவர் தஜ்தீத் ஏ ஈமான் ,தஜ்தீத் ஏ நிக்காஹ் செய்யாத வரை அவருடன் எந்த உறவும் வைக்கக் கூடாது ".


பின்னர் ஜமாத்தே இஸ்லாமியினர் இந்த வாசகம் மௌலவி காசிம் நானுத்வியின் நூலான தப்சியதுல் அகாயித் ல் இருந்து எடுக்கப்பட்டது என்று வெளிப்படுத்திய பொழுது, தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர் !!!

பின்னர் மௌலானா அமீர் உத்மானி அல் தேவ்பந்தி "ஜமாத்தே இஸ்லாமி அவுர் தேவ்பந்த் கி இக்திலாப் கி ஹகீகத் " என்ற நூலை எழுதினார். அதில் இந்த பத்வாவைக் குறிப்பிட்டு ,தேவ்பந்தி அறிஞர்கள் மிகவும் சோர்வாகவும்,வேலைப் பளுவின் காரணமாக கவனம் செலுத்த வில்லை என்ற நொண்டிச் சாக்கு கூறினார்.

சம்பந்தப்பட்ட நபர் மீது குப்ர் பத்வா கொடுத்த தேவ்பந்தி முப்திகள், அந்த வாசகங்களுக்கு வேறொரு கருத்து இருக்க வாய்ப்பிருக்கலாம் என நினைத்து குப்ர்ருடைய பத்வா சுமத்தும் முன் சிறிது கூட யோசிக்கவில்லை.

உங்களை எல்லாம்  வஹாபிய சிந்தனை வேறு எவ்வாறு வழிநடத்தும்,எப்போது
சமயம் கிடைக்கும் எப்போது ஒரு முஸ்லிம் மீது குப்ர் ,ஷிர்க்,பித்அத்  என்று கூப்பாடு போடுலாம் என்று எண்ணுவதை விட !!!               
             





Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment