Monday 2 June 2014

இஸ்மாயில் திஹ்லவியும் இஜா உல் ஹக்


இஸ்மாயில் திஹ்லவி எழுதிய பார்ஸி நூல் இஜா உல் ஹக் . அதில் அவர் கூறுகிறார் ,

"வஹ்ததுல் வுஜூத் மற்றும் வஹ்ததுல் ஷுஹூத் இரண்டும் பித்அத்  "

[ வாசகர்களின் கவனத்திற்கு தஸவ்வுப்- பையும் விட்டு வைக்காத இந்த வஹாபிய தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினரின் சிஷ்தி சப்ரி சில்சிலா வஜூதி சில்சிலா . இந்த வஹாபிய தப்லீக் ஜமாஅத் தரீக்காக்களில் எவ்வாறு ஊடுருவியுள்ளனர் என்பதை பின்னர் விளக்குவோம் ]

இஸ்மாயில் திஹ்லவி மேலும் கூறுகிறார் ,

"அல்லாஹ் நேரத்தை விட்டும் காலத்தை விட்டும் திசைகளை விட்டும்  தேவையற்றவன் என்று நம்புவது பித்அத் மேலும் அல்லாஹ் ஹுதஆலாவின் பரிசுத்த லிகா என்னும் தரிசனத்தை நியாயத் தீர்ப்பு   நாளில் திசையில்லாமல்  பார்க்கலாம் என்று நம்புவது பித்அத் "

இஸ்மாயில் திஹ்லவி   கூறுகிறார் ,

" ஆயத்தே முதஷ்பிஹாத் வின்  தாவீல் செய்வது பித்அத் "

மௌலவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி இந்த வஹாபிய கொள்கையுடைய இஸ்மாயில் திஹ்லவியின் அகீதாவை சஹீஹ் அகீதா என்கிறார் . என்னே இவர்களின் வஹாபிய விசுவாசம் !!!
 


Iza ul Haq


 


 
 
 
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment