Wednesday 18 June 2014

அஷ்ரப் அலி தானவியின் ஷிர்க்

Hayaathul Muslimeen -Ashraf ali thaanavi

Hayaathul Muslimeen - Pg 9

         
   மௌலவி அஷ்ரப் அலி தானவி கூறுகிறார் ,

" (நாயகமே !) தாங்கள் தான் எங்கள் இதயங்களில் மறைத்துள்ளதை வெளிப்படுத்துகின்றீர்கள் "

[நூல்- ஹயாத்துல் முஸ்லிமீன் ,பக்கம்  9]

ஆக தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரின் ஹகீமுல் உம்மத் கண்மணி நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுக்கு மறைவான ஞானம் அருளப்பட்டுள்ளது என்பதை ஒத்துக் கொள்கிறார்.

அவ்வாறு இல்லையெனில் உங்கள் இதயத்தில் மறைத்துள்ள விஷயத்தை பெருமானார் அறிந்தது எங்கனம் ???

வாசகர்கள் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் இமாம் மௌலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி கூறியதை தங்கள் நினைவில் கொள்க ,

"யாரேனும் ஒருவர் நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுக்கு மறைவான ஞானம் அருளப்பட்டுள்ளது என்று கூறுவாராயின் ,அவர் ஷிர்க்கான காரியம்  செய்துவிட்டார்"
 
[ நூல் -பதாவா ரஷீதியா ,பக்கம் 217]

மௌலவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் பத்வா சரியாக இருக்கும் பட்சத்தில் மௌலவி அஷ்ரப் அலி தானவி ஷிர்க் செய்துவிட்டார் !!!

அஷ்ரப் அலி தானவி மேலும் எழுதுகிறார் ,

"(நாயகமே !) தேவைப்படுவோருக்கு சிரமத்தில் இருந்து நிவாரணம் அளிக்கக்கூடியவர் தாங்கள் தானே "

அஷ்ரப் அலி தானவி நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்களை முஷ்கில் குஷா (சிரமங்களில் இருந்து நிவாரணம் அளிக்கக்கூடியவர் )   என்று விளிப்பது தெளிவாகவில்லையா ???

தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் 'ஷஹீத்', இஸ்மாயில் திஹ்லவி போலி ஜிஹாத் மூலம் இஸ்லாமியர்களை கொன்றவர் ,தனது நூலான தக்வியத்துள் ஈமானில் கூறுகிறார் ,

" கருமங்களை பூர்த்தியாக்குவது ,சிரமங்களை நீக்குவது, ஆபத்து நேரங்களில் உதவி வழங்குவது,இவை  அனைத்தும் அல்லாஹ்வுக்கே மட்டுமே உரியன, மேலும் எந்த நபியும்,வலியும் ,ஷைகுமார்களும்,ஷஹீதும்,ஜின்னும்,மலக்கும் எந்தவிதமான உதவியும் செய்ய இயலாது. யாரேனும் ஒருவர் அவர்களின் மீது சபதம் செய்தாலோ அல்லது ஆபத்து நேரங்களிலும் அவர்களை  நினைவில் கொண்டாலோ, அவர் ஒரு முஷ்ரிக் ஆவார்.அவர்களது நம்பிக்கை எதுவாக இருந்தாலும்,இவர்கள் சூயமாக சக்தியுடையவர்கள் என்றாலும் சரி,அல்லது இவர்கள் அல்லாஹ்வினால் சக்தி வழங்கப்பட்டு உதவுகிறார்கள் என்றாலும் ,எந்த நிலையிலும் இது ஷிர்க் "

 [ நூல் - தக்வியதுல் ஈமான்,பக்கம் 10 ,தில்லி பதிப்பு ] 

ஆக இஸ்மாயில் திஹ்லவியின் கூற்றின் பிரகாரம் தேவ்பந்திகளின் ஹக்கீமுள் உம்மத் ஷிர்க் செய்துவிட்டார் !!!

அஷ்ரப் அலி தானவி எழுதுகிறார் ,

" (நாயகமே !) தாங்கள் மறைந்திருந்தாலோ அல்லது வராமல் இருந்தாலோ மரணம் வந்தடைந்து உலகம் இருள் சூழ்ந்திருக்கும் "

அஷ்ரப் அலி தானவி  நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்)  அவர்களை ஹாளிர் நாழிர் என்று ஏற்றுக் கொள்கிறார் !!!

இது தான் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரின் கொள்கையால் வரும் விளைவு . அந்தோ பரிதாபம் !!!உங்களின் ஹகீமுல் உம்மத் கூட உங்களின் ஷிர்க் பத்வாக்களில் இருந்து தப்ப முடியவில்லையே .

இதே விஷயங்களை ஒரு முஸ்லிம் கூறினால் அவர் மீது ஷிர்க்,குப்ர்,பித்அத் என்று பட்டம் சுமத்துவது,உங்களின் தேவ்பந்தின் முன்னோடிகள் இவ்வாறு கூறியல்லாரே என்று வினவினால் சப்பைக் கட்டு கட்டுவது,நொண்டிச் சாக்கு சொல்லுவது .

இனியாவது இஸ்லாமிய சமுதாயத்தை உங்களின் வஹாபிய விஷம் தடவிய நாக்கினால் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதீர்கள் .


 
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment