Thursday 16 November 2017

முதன்முதலாக தக்பீர் (تكفير‎‎ ) செய்தது யார் ?

நவீன கால தேவ்பந்தி வஹாபிகளின் மற்றோரு மோசடிப் பிரச்சாரம் , இமாம் அஹ்மத் ரிழா கான் காதிரி பரேலி   رضي الله عنه அவர்கள் தான் பரேலி உலமாக்கள் ,தேவ்பந்தி உலமாக்களிடையே பிரிவினை உண்டாக முதல் காரணம் என்று கூறி பொய் பிரச்சாரம் செய்வது .  அறியாமையை தனது குணமாகக் கொண்ட முட்டாளை அன்றி வேறு யாரும் இவ்வாறு பிதற்றித் திரிவதில்லை .

இந்த பொய் பிரச்சாரத்தின் உண்மை தன்மை என்னவென்று ஆய்வு செய்வோம் :

இஸ்மாயில் திஹ்லவி முஸ்லிகளால் பால்கோட்டில் , கொல்லப்பட்டது 1831 ஆம் ஆண்டு . மாறாக இமாம் அஹ்மத் ரிழா கான் பரேலி  رضي الله عنه  அவர்கள்  பிறந்தது 1856 ஆம் ஆண்டு , சுமார் 25 ஆண்டுகள் கழித்து .

இனி 'பிரிவினையின் மூல காரணம் யார் ? ' என்ற கேள்விக்கு விடை அளிக்கும் விதமாக , இஸ்மாயில் திஹ்லவி தனது நூலான 'தக்வியத்துள் ஈமான் ' பற்றி அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தை காண்போம் . இன்றளவும் தேவ்பந்தி வஹாபிகளால் அச்சிடப்படும் நூல் . அவர்களால் ஐனுல் இஸ்லாம் என்று கொண்டாடப்படும் நூல் 'தக்வியத்துள் ஈமான் '.
தக்வியத்துள் ஈமான்

இந்த வாக்குமூலத்தை  தேவ்பந்தி வஹாபி பிர்காவின் ஹக்கீமுல் உம்மத் அஷ்ரப் அலி தானவி தமது நூலான 'ஹிகாயத்துள் அவ்லியா ' வில் பதிவு செய்துள்ளார் .
ஹிகாயத்துள் அவ்லியா 
பக்கம் 83

பக்கம்  84

" உபகதை  59 :   கான் ஸாஹிப் கூறினார்கள் மவ்லவி இஸ்மாயில் திஹ்லவி , தக்வியத்துள் ஈமான் நூலை அரபியில் எழுதினார்கள் . அதனால் அதன் ஒரு பிரதி என்னிடமும் ,மற்றோரு பிரதி மவ்லவி ரஷீத் அஹமத் கங்கோஹியிடமும் ,மற்றுமொன்று பிரதி மவ்லவி நஸ்ருல்லாஹ் கான் குஜருவியின் நூலகத்திலும் இருந்தது . எனவே மவ்லனா அதை உர்துவில் மொழிபெயர்த்து , புகழ்பெற்ற ஆளுமைகளான செய்யத் மவ்லவி அப்துல் ஹை சாஹிப் , ஷாஹ் இஷ்ஹாக் சாஹிப் , மவ்லானா முஹம்மது யாகூப் சாஹிப் ,மவ்லவி பரீதுத்தீன் சாஹிப் முராதாபாதி ,முஃமீன் கான் மற்றும் அப்துல்லாஹ் கான் அலவி ஆகியோரை   ஒன்று திரட்டினார் .

அவர்கள் முன் தக்வியத்துள் ஈமான் சமர்ப்பிக்கப்பட்டது . அவர் கூறினார்  ,' நான் இந்த நூலை எழுதியுள்ளேன் . இன்னும் இதில் சில இடங்களில் சிந்தனையற்ற வார்த்தைகள் சேர்த்துள்ளதை அறிவேன் . சில இடங்கள் கொடுமையானவை ,உதாரணமாக ,ஷிர்க் ஏ காஃபி என்று சொல்லப்படுபவை ஷிர்க் ஏ ஜலீல் என்று பெயரிடப்பட்டுள்ளது . இதன் காரணமாக எனக்கு உண்டாகும் பயம் என்னவென்றால் இந்த நூல் பதிப்பிக்கப்பட்டால் நிச்சயமாக குழப்பமும் ,அமளிகளும் உண்டாகும் .

நான் இங்கு தங்கினேன் என்றால் ,இதைபற்றி எட்டுஅல்லது பத்து வருடங்களுக்கு விளக்கம் அளிப்பேன் , எனினும்  நான் இப்பொழுது ஹஜ் செய்ய நாடியுள்ளேன் , திரும்பிய பின்னர் ஜிஹாத் செய்வதே எனது நோக்கம் . எனவே என்னை இந்த வேலையை விட்டும் தவிர்க்கின்றேன் , என்னும் என்னைத் தவிர வேறு யாரும் இந்த முயற்சியை செய்ய முன் வரமாட்டார்கள் . எனவே தான் இந்த நூலை எழுதியுள்ளேன் , பிரச்சனைகள் உண்டாகும் எனினும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்ட பின் சில காலத்தில் அமைதியாகி விடுவார்கள் என்று நம்புகிறேன் .

இதுவே எனது கவலை . நீங்கள் விரும்பினால் இதை பதிப்பித்து வெளியிடுவோம் அல்லது அளித்து விடுவோம் . அப்பொழுது கூடி இருந்தவர்களில் ஒருவர் சில இடங்களில் திருத்தம் செய்து வெளியிடுவோம் என்றார் . மவ்லவி அப்துல் ஹை சாஹிப் , ஷாஹ் இஷ்ஹாக் சாஹிப் ,முஃமீன் கான் மற்றும் அப்துல்லாஹ் கான் அலவி ஆகியோர் திருத்தம் செய்து தொகுத்து வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் .

அதன் பின்னர் அனைவரும் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தி , திருத்தம் செய்வது தேவை இல்லை , நூல் அதன் மூல வடிவிலேயே வெளியிட வேண்டும் என்று முடிவு செய்து , அதன் பின்னர்  அது இவ்வாறு பதிப்பிக்கப்பட்டது . நூல் வெளியான பின் மவ்லவி இஸ்மாயில் ஹஜ்ஜுக்கு சென்று , திரும்பி வந்ததும் தில்லியில் தங்கினார் . இந்த காலத்தில் தில்லியின் தெருக்களிலும் ,சந்துகளில் மவ்லவி இஸ்மாயில் பிரச்சாரம் செய்தார் . மவ்லவி அப்துல் ஹை சாஹிப் பள்ளியில் ஆறு மாத காலம் தங்கிய பின் ஜிஹாதுக்கு கிளம்பினார் . இந்த செய்தியை நான் மவ்லவி அப்துல் கைய்யும் சாஹிப் மற்றும் எனது ஆசிரியர் மியாஜி முகம்மதி சாஹிப் அவர்களிடமும் இருந்து கேட்டறிந்தேன் "

[ நூல்- ஹிகாயத்துள் அவ்லியா (அர்வாஹே தலாதா  ) , உபகதை எண் 59, அஷ்ரப் அலி தானவி , ஜக்கரிய்யா புத்தக நிலையம் , தேவ்பந்த் , ஸஹரான்பூர் , உ .பி ,இந்தியா , பக்கம் 83-84 ]   

   எந்த அறிவார்ந்த முஸ்லிம் இஸ்லாமியரிடையே குழப்பத்தை உண்டாக்கும் புத்தகத்தை முன்னரே கணித்து எழுதுவார் ?

இது எந்த மாதிரியான ஒரு இதயம் , இஸ்லாமியரிடையே சகோதரத்துவத்தையும் ,நலனையும் காட்டிலும்  குழப்பமும் ,அமளிகளும் உண்டாக விரும்புவது ?

பளிங்கு கண்ணாடி போல் விளங்கும் விஷயம் இஸ்லாமியரிடையே முதன் முதலில் உண்டான பிரிவினையின் மூல கர்த்தா ,வேண்டுமென்றே கடுமையான சொற்களும் ,வழிகெட்ட கொள்கைகளும் கொண்ட இஸ்மாயில் திஹ்லவியின்  'தக்வியத்துள் ஈமான் ' என்னும் நூல் .

நாற்பெரும் பிக்ஹ் உடைய இமாம்களான இமாமுல் அஃலம்  இமாம் அபூ ஹனீபா رضي الله عنه , இமாம் ஷாபிஈ رضي الله عنه , இமாம் மாலிக்  رضي الله عنه , இமாம் ஹன்பல் رضي الله عنه      ஆகியோரை தக்லீத் செய்வதை மறுக்கும் கூட்டமான அஹ்லே ஹதீத் வஹாபிகளும்  தம்முடைய  முன்னோடிகளில் ஒருவராக ஏற்றுக் கொண்டுள்ளது இஸ்மாயில் திஹ்லவியை தான் .

இமாம் அஹ்மத் ரிழா கான் பரேலி காதிரி رضي الله عنه  அவர்கள் தமது காலத்தில்   இஸ்மாயில் திஹ்லவியின் நூற்களை வாசித்து ,அதில் எழுபது குப்ரியத்தான விஷயங்களை பட்டியலிட்டு , அதற்கு மாற்றமான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கைகளை விளக்கினார்கள் . 

எனினும் இஸ்மாயில் திஹ்லவியின் மீது குப்ர் பத்வா வெளியிடாததின் காரணம் , இஸ்மாயில் திஹ்லவி தமது இறுதி காலத்தில் தவ்பா செய்தார் என்று ஒரு கூற்று காரணமாக , இஸ்மாயில் திஹ்லவிக்கு சந்தேகத்தின் பலனை அளித்தார் . 

ஒரு சாதாரண சொல் , இமாம் அஹ்மத் ரிழா கான் பரேலி  رضي الله عنه  அவர்கள் எவ்வளவு விசாலமான பார்வை கொண்டவர்களாக இருந்தார்கள் என்று விளக்கும் பொழுது , யார் தான் அன்னார்  மார்க்கத் தீர்ப்பு அளிக்கும் போது  தயங்கினார்கள் என்று கூற முடியும் ? 
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment