Saturday 26 October 2019

ஷியாக்களின் மீதான தேவபந்திகளின் பாசம்

தேவ்பந்திகளின்  மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியை பொறுத்தமட்டில் அண்ணலெம் பெருமான் அவர்களின் உத்தம தோழர்களை சாபமிடுபவன் ,அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தை விட்டும் வெளியேறிவனாகி விடமாட்டான் ! 

பாகிஸ்தான் பதிப்பு  : 


ரஷீத் அஹ்மத் கூறுகின்றார் ;

" உரூஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை ஒருவர் கட்டாயம் (இல்திசாம் )என்று கருதி செய்தாலும் அல்லது விருப்பப்பட்டால் கலந்து கொள்ளலாம் என்று நினைத்தாலும் சரி, உரூஸ் கொண்டாடுவது பித்அத் ,அனுமதியில்லாத செயல் . தேதி குறிப்பிட்டு ஜியாரத்தில் ஒன்று கூடுவது பாவம் , அதில் வேறு விஷயங்கள் இல்லாவிட்டாலும் கூட (கவ்வாலி ,ஸமா ) . பெருமானாரின் ஸஹாபாக்களை யாரேனும் தக்ஃபீர் செய்தால் ,அவன் சபிக்கப்பட்டவன் ,அத்தகைய நபரை இமாமத் செய்ய அனுமதிக்க கூடாது . இன்னும் அவன் தன்னுடைய இந்த பெரும் பாவம் (கபீரா குனாஹ் ) காரணமாக அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தை விட்டும் வெளியேறிவனாகி விடமாட்டான் . அன்புடைய முஹம்மத் யஹ்யா ,ஸலாம் . என்னிடம் இல்முல் கைப் பற்றி 2-3 நூற்கள் உள்ளன . இன்னும் பராஹீனே காத்தியா நூலும் இல்முல் கைப் பற்றியும் ,உரூஸ் பற்றியும் கையாள்கிறது . "

இந்திய பதிப்பு 1: 




இந்திய பதிப்பு 2: 




சமீபத்திய பதிப்பு (திரிக்கப்பட்டது ) : 




இது பழைய பாதிப்புகளைப் போன்றே பதில்கள் உள்ளன .எனினும் வெளியேறிவிட மாட்டான் என்பது திரிக்கப்பட்டுள்ளது . 

" உரூஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை ஒருவர் கட்டாயம் (இல்திசாம் )என்று கருதி செய்தாலும் அல்லது விருப்பப்பட்டால் கலந்து கொள்ளலாம் என்று நினைத்தாலும் சரி, உரூஸ் கொண்டாடுவது பித்அத் ,அனுமதியில்லாத செயல் . தேதி குறிப்பிட்டு ஜியாரத்தில் ஒன்று கூடுவது பாவம் , அதில் வேறு விஷயங்கள் இல்லாவிட்டாலும் கூட (கவ்வாலி ,ஸமா ) . பெருமானாரின் ஸஹாபாக்களை யாரேனும் தக்ஃபீர் செய்தால் ,அவன் சபிக்கப்பட்டவன் ,அத்தகைய நபரை இமாமத் செய்ய அனுமதிக்க கூடாது . இன்னும் அவன் தன்னுடைய இந்த பெரும் பாவம் (கபீரா குனாஹ் ) காரணமாக அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தை விட்டும் வெளியேறிவனாகி விடுவான்  . அன்புடைய முஹம்மத் யஹ்யா ,ஸலாம் . என்னிடம் இல்முல் கைப் பற்றி 2-3 நூற்கள் உள்ளன . இன்னும் பராஹீனே காத்தியா நூலும் இல்முல் கைப் பற்றியும் ,உரூஸ் பற்றியும் கையாள்கிறது . "

ரஷீத் அஹ்மத் கங்கோஹி ஷியாக்களை காபிர் என்று கருதியவர் அல்லர் 

"
ஷியாக்களை காபிர் எனக் கருதுவோர் அவர்களின் மைய்யத்தை துணியால் சுற்றி ,கபரில் அடக்கம் செய்வர் . ஷியாக்களை பாஸிக் என்று கருதுபவர் ,அவர்களின் மரித்த உடலுக்கு முறையான இஸ்லாமிய சடங்குகளை செய்வர் . நான் அவர்களை தக்ஃபீர் செய்வது இல்லை "

இன்னும் ,  ரஷீத் அஹ்மத் கங்கோஹி ஸஹாபாக்களை ஒரு முஸ்லீம் சாபமிட்டால் அவன் பாவியாவான் (அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தை விட்டும் வெளியேறிவிடமாட்டான் ) 


"அபூ ஸுஃப்யான் மற்றும் இக்ரிமா அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள் .இன்னும் இக்ரிமா அவர்கள் பல ஜிஹாதுகளில் கலந்து கொண்டார்கள் . அஸத் அல் காபாவில் எழுதப்பட்டுள்ளது , ஸஹாபாக்களை அவமரியாதை செய்பவன் பாஸிக்   . " 
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment