Friday 25 July 2014

போலி தப்லீக் பாக்கியாத் மஹல்லா பள்ளிவாசல் பிரசுரம்


Baqiyath Masjid
 
அநேக நாட்களாய் மஸ்ஜிதுகளில் முத்தவல்லிகளின் அனுமதியைப் பெற்றே பிரசங்கிகள் பிரசங்கம் புரிவது வழமையில் இருந்து வருகிறது .இதே பிரகாரம் பாக்கியாத் மஹல்லாவிற்கு சம்பந்தப்பட்ட இரண்டு மஸ்ஜிதுகளிலும் நடந்து கொண்டிருந்தது. ஆனால் சில தினங்களாக தப்லீக்காரர்களில் ஒருவரும் விருஞ்சிபுரவாசியுமான மௌலவி ஹாஜி ஹாபிஸ் அபூ சவூத் சாஹிப் பெயிட் செக்ரடரி மதரஸா பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் வேலூர் இவர்களின் சகோதரியை தப்லீகில் மும்முரமாக ஈடுபட்டு வேலை செய்து வரும் வட இந்தியவாசியான மியான்ஜி ஈஸா சாஹிப் தப்லீகிக்கு விவாகம் செய்து கொடுக்கபட்டது.

மௌலவி சாஹிபின் சகோதரர் மௌலவி ஹாஜி முஹம்மத் இப்ராஹிம் சாஹிப் மேல்விஷாரத்தில் உள்ள தப்லீக் மதராசாவில் வேலை பார்த்து வருகிறார் .இன்னவரின் சகலை மௌலவி பட்டேல் அப்துல் வஹ்ஹாப் சாஹிபும் ( ஆசிரியர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் வேலூர் ) சேர்ந்து முத்தவல்லி சாஹிபின் அனுமதியைப் பெற்று பாக்கியாத் மஹல்லாவிற்கு சம்பந்தப்பட்ட இரண்டு மஸ்ஜிதுகளிலும் தன் மச்சானை கண்ணியப்படுத்துவதற்கும் ,சந்தொஷப்படுத்துவதற்குமாய் பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார்கள் . இதை நலமான காரியம் என உத்தேசித்து மஸ்ஜிதின் பொறுப்புடையவர்கள் பொருட்படுத்தாமல் விட்டுக் கொடுத்து வந்தார்கள் .

நாளடைவில் கணக்கற்ற தப்லீக்காரர்கள் தப்லீகின் பெயரால் தங்களின் மூட்டை முடிச்சு விரிப்புகளையும் முஸாபர் பங்களாவைப் போல் மஸ்ஜிதின் மேற்கு புறமுள்ள மிம்பரைச் சேர்ந்த சுவரில் சாய்த்து வைக்க ஆரம்பித்தார்கள் .மஸ்ஜிதின் நடுமத்தியில் உணவும் உண்ண ஆரம்பித்தார்கள் .மஸ்ஜிதுகளில் வைக்கப்படும் விரிப்புகள் அனேகமாக சிறுநீர் போன்ற அசூதிகள் நிரம்பிய இடங்களான பஸ் நிலையங்களிலும்  , இரயில் நிலையங்களிலும்  மேற்படி விரிப்புகளை விரித்தோ அல்லது விரிக்காமல் சுருட்டியபடியே வைத்தோ அவர்கள் உட்கார்ந்திருக்கவும் அவைகளில் மேற்படி அசூதிகள் பட்டிருக்கவும் கூடும் என்ற எண்ணத்தினால் சில தொழுகையாளிகள் மனனிம்மதியற்று இருந்தார்கள் .ஆதலால் மேற்படி விரிப்புகளை மஸ்ஜிதில் வைப்பதை விட்டும் தடை செய்யப்பட்டது .

இதற்குப் பின் ஆலிம்களும் ஆலிம் அல்லாதவர்களும் உபன்யாசம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் .ஆலிம் அல்லாதவர்கள் உபதேசம் புரிவது 'அல்லாஹ்வின் பால் நளினமாகவும் அழகான உபந்நியாசத்தை கொண்டும் அழைப்பீராக ! '  என்ற அருளுக்கு முற்றிலும் முரணாக இருப்பதுடன் தப்பும் தவறுமாக மஸ்அலாக்களை கூறவும் துணிந்து விட்டார்கள் .பலவித  நிர்பந்தங்கள் செய்வதிலும் பின்வாங்கவில்லை .அதாவது டெல்லிக்கு வாருங்கள் ,மேவாத்துக்கு வாருங்கள் ,ஒரு சில்லா (40 நாட்கள் ) வாருங்கள் ,உங்களுடைய பொருட்களினால் பிற சனங்களை அனுப்பி வையுங்கள் என்பன போன்ற பல பாடங்களை போதிக்க ஆரம்பித்தனர் .இந்த நிபந்தனைகளின் காரணமாக தொழுகையாளிகளுக்கும் ,மஸ்ஜித் தொடர்புடையவர்களும் ,தனவந்தர்களும் இவர்களின் (தப்லீக்) வருகையைப் பார்த்ததும் மஸ்ஜிதை விட்டு விரண்டோடுவதும் ,அவர்கள் தங்கியிருக்கும் வரை மஸ்ஜிதுகளுக்கு வராமல் இருப்பதுமாக மஸ்ஜிதுகள் காலியாக இருந்து கொண்டிருகின்றன.

தப்லீகர்களின் தவறான மஸ்அலாக்கள் :

தப்லீக் ஜமாஅத் (ஆண் பெண் உட்பட ) இவ்வித தன்னுடைய தவறான நடவடிக்கைகளாலும் பல இடங்களில் பொது மக்கள் மத்தியில் தவறான மஸ்அலாக்களைக் கூறி மக்களை பீதி அடையச் செய்து தன் செல்வாக்கை இழந்து வருவதுடன் கேவலமும் அடைந்து வருவதைக் கண்கூடாகப் பார்த்தும் கேட்டும் வருகிறோம். பல இடங்களில் முஸ்லிகளுக்கு கலிமாக் கூட ஞாபகம் இல்லை என்ற கெட்ட எண்ணம் கொண்டு பகிரங்கமாகக் கலிமா ஓத சொல்லி  கேவலப்படுத்துவதின் காரணமாக   குழப்பத்தை உண்டு பண்ணி கொண்டிருக்கிறார்கள் .பொதுவாக பின் வரக்கூடிவைகளை யோசிக்காமல் செய்யும் வேலைகளாலும் மௌலவி ஆஷிகே இலாஹியின் பகிரங்க அறிக்கையாலும் விளைந்த பலன் என்னவெனில் பாக்கியாத் மஹல்லாவிற்கு சம்பந்தப்பட்ட இரண்டு மஸ்ஜிதுகளின் மிம்பர்கள் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பொதுவாக தப்லீகில் சேராதவர்களும் குறிப்பாக தப்லீக் காரர்களும் மேற்படி இரண்டு மஸ்ஜிதுகளிலும் முத்தவல்லி சாஹிபின் அனுமதியின்றி பிரசங்கம் செய்வதை கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது என்ற சட்டத்தைத் தீர்மானித்துள்ளார்கள் .

எல்லா முஸ்லிம் சகோதரர்களிடமும் இவ்வித குழப்பத்தை உண்டு பண்ணும் தப்லீக் ஜமாத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ளுமாறு நாங்கள் வேண்டி கேட்டுக் கொள்கிறோம் .ஏனெனில் அல்லாஹ் ஹுதஆலா தன திருமறையில் குழப்பத்தை உண்டு பண்ணுவது கொலை புரிவதை விட கடினமானது எனக் கூறியுள்ளான். இவ்விதக் குழப்பம் இஸ்லாமியர்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதால் அதைத் தடுக்க இதை படிப்பவர்கள் படிப்பதுடன் பிறருக்கும் கொடுங்கள் .

நம் முஸ்லிம் சகோதரர்கள் இதனைப் படித்து உண்மையை நன்கு உணர்ந்து தீயவைகளின் பக்கம் செல்லாமல் இருக்கவே இந்த பிரசுரம் மீண்டும் அச்சிடப்பட்டுள்ளது .

இது உருதுவின் மொழிபெயர்ப்பாகும் .உருதுவில் பிரசுரித்தவர் ஜாக்கிர் பஷீருல்லாஹ் சாஹிப் ,ஜாயின் செக்ரெடரி ,பாக்கியாத் மஹல்லா ,வேலூர் - 1957 .

மீண்டும் அச்சிட்டது - 1983
ஆசாரே  ஷரீப் தைக்கால் , கொண்டிராஜ பாளையம் தெரு ,
தஞ்சாவூர் - 613001 .

  

                                                                                         நன்றி- http://sufimanzil.org/

 
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment