Thursday 10 July 2014

முரண்பட்ட கொள்கைகளால் கிழியும் தேவ்பந்தின் வஹாபிய முகமூடி


     மறைமுக ஞானம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இல்லை.இல்லவே இல்லை.அப்படி உண்டென்று ஒருவர் கருதுவாராகில் அவர் முஷ்ரிக்காகி போவார்.இது தேவ்பந்தின் எல்லா நூல்களிலும் உள்ள தாரக கொள்கைகளில் ஒன்று .

அதை பற்றி மௌலவி இஸ்மாயில் திஹ்லவியின் உலகப் புகழ் பெற்ற நூல் என்று தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் தம்பட்டம் அடிக்கும் தக்வியத்துள் ஈமான் பக்கம் 8,21,26 ல் காணலாம் .

மறைமுக ஞானம் நபிகள் நாயகம் அவர்களுக்கு உண்டென்று நம்பிக்கைக் கொள்வது ஷிர்க் ஆகும் என மௌலவி ரஷீத் அஹமத் கங்கொஹி தமது பதாவா ரஷீதியா பக்கம்-141ல் கூறுகிறார் .

                                       
Bahishti Zewar

ஒரு மஹான் அல்லது பீர் தமது அனைத்து நிலைமைகளையும் எல்லா நேரங்களிலும் அறிந்தவராய் என்பதை இருக்கிறார் என்று நம்பிக்கைக் கொள்வது ஷிர்க் மற்றும் குப்ர் ஆகும் என மௌலவி அஷ்ரப் அலி தானவி பிஹிஷ்தி ஜேவர் உர்து பக்கம் 49ல் குப்ர் மற்றும் ஷிர்க்கின் பயானில் கூறுகிறார்.   

இதையே நமது தமிழகத்து தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தைச் சார்ந்த டி.ஸ்.ஏ ரசூல் (டி . சையத் அப்துர் ரசூல் 1957 வரை )  என்றிருந்து முஷ்ரிக்காகிப்போய் பின்பு குலாம் ரசூல் எனப் பெயர் மாற்றிக் கொண்ட பன்னூல் ஆசிரியர் தமது சுவர்க்க நகைகள் என்னும் நூலில் பக்கம் 74ல் தமிழாக்கம் செய்துள்ளார் .

தமிழகத்தில் தப்லீக் ஜமாஅத்தின் பெரிய அடிவருடி மௌலானாவான கலீல் அஹ்மத் கீரனூரி தப்லீக் ஜமாஅத் பற்றி தவறான குற்றச்சாட்டுகளும் தக்க பதில்களும் என்னும் நூலில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் அறிந்திருப்பது போன்ற அறிவை ஜைது,அம்ரு,பக்ரு போன்ற சாதாரண மனிதர்களும் தான் ,ஒவ்வொரு மதழைக் குழந்தையும் தான், பைத்தியக்காரர்களும் தான் பெற்றிருந்தார்கள் ,ஏன் மிருகங்களும் தான் பெற்றிருக்கின்றன.நபியவர்களுக்கு இதில் என்ன விஷேசமிருக்கிறது ?  என்பதை பக்கம் 156 ல் விஷமத்தனமாகக் குறிப்பிட்டு எழுதியுள்ளார் .

நபிகள் பெருமானின் மறைமுக ஞானத்தைப் பற்றி இப்படி காட்டமாக எழுதியுள்ள அஷ்ரப் அலி தானவி தனது பீர் சாஹிபின் மறைமுக ஞானத்தைப்  பற்றி எப்படி பெருமையாக பீற்றி எழுதுகிறார் எனப் பாருங்கள் ,

" மௌலானா முஜப்பர் ஹுசைன் அவர்களின் ஆசை மதீனா ஷரீபில் மௌத்தாக வேண்டும் என்றிருந்தது . அதைப் பற்றி ஹாஜி சாஹிபிடம் விசாரித்தார்கள் . அதற்கு ஹாஜி சாஹிப் எனக்கு என்ன தெரியும் எனக் கூறவே இந்த சாக்கு போக்கு சொல்லாமல் பதில் தாருங்கள் என வேண்டவே ஹாஜி சாஹிப் முராக்கபா செய்து நீர் மதீனாவில் மௌத்தாவீர் என்றார்கள். "

[ நூல்- கசசுல் அக்பார் ,பக்கம் 136, மௌலவி அஷ்ரப் அலி தானவி ]

எம் பெருமானார் அறிந்திருப்பதை சல்மான் ருஷ்டியை விட கேவலமாக மதழை,பைத்தியக்காரர்கள்,மிருகங்களுடன் கீழ்தரமாக ஒப்பிட்டுள்ளார் . ஆனால் கியாம நாள் வரை ஒவ்வொரு செய்தியையும்,யார் சுவர்க்கம் செல்வார் ,யார் நரகம் புகுவார் ,லிவாவுல் ஹம்து கொடுக்கப்படும் ,   ஷபாத்தே குப்ரா ,ஈஸா நபி வருகை போன்ற எண்ணற்ற மறைவான விஷயங்களை அறிவித்த பூமான் நபியின் புனிதத் தன்மையை ஷரீயத் சட்ட வரையறைக்குள் ஏற்றுக் கொண்ட எல்லா முஸ்லிம்களையும் முஷ்ரிக் என்று பறைசாற்றிய தேவ்பந்த் தப்லீக் ஜமாத்தின் பெரிய்ய்ய்ய மௌலானாவான அஷ்ரப் அலி தானவி தம்மவர்களுக்கு மட்டும் ஒரு முரீது எங்கே எப்போது  சாவார் என்ற மௌத்தை பற்றிய மறைவான ஞானம் உண்டென்பதைப் போட்டு உடைக்கிறார் .

இப்படி கூறிய அஷ்ரப் அலி தானவி முஷ்ரிக்காகிப் போனாரா இல்லையா என்பதை வாசகர்கள் தான் பத்வா கொடுக்க வேண்டும் .

நபிகள் நாயகம் அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், வலிமார்களுக்கும் இல்லாத மறைமுக ஞானம் அஷ்ரப் அலி தானவி யாருக்கு எங்கே மௌத் வரும் என்று தம்மவர்கள் அறிவதை எப்படி ஏற்றுக் கொள்கிறார் பாருங்கள் .

இஸ்லாமியர்களே !!!    தமக்கு ஒரு கொள்கையையும் வலிமார்களுக்கு ஒரு அளவுகோலையும் வைக்கும் முரண்பட்ட கொள்கையுடைய தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளிடம் உஷாராயிருங்கள் .
                                                                                            
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment