Monday 3 November 2014

தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் கலிமா

அஷ்ரப் அலி தானவி கூறுகிறார் ,

" லா இலாஹா இல்லல்லாஹு அஷ்ரப் அலி ரசூலுல்லாஹ் , அல்லாஹும்ம ஸல்லிஅலா செய்யதினா நபியினா அஷ்ரப் அலி என்று கூறுவதால் எந்த கேடும் இல்லை "
[ரிஸாலா அல் இம்தாத் ,பக்கம் 35,சபர் மாதம் 1336 ஹிஜ்ரி ,ரூதத் ஏ முனாஜிரா கேயா,அல் புர்கான் வால்யூம் 3,பக்கம் 85 ]

"லா இலாஹா இல்லல்லாஹு அஷ்ரப் அலி ரசூலுல்லாஹ் , அல்லாஹும்ம ஸல்லிஅலா செய்யதினா நபியினா அஷ்ரப் அலி என்று கூறுவது ஆகுமானதே ,அவ்வாறு கூறுவதால் ஷரீயத்தில் எந்த ஆட்சேபணையும் இல்லை "
Al Imdaad

Risala al Imdaad ,page 35,Safar 1336

[ரிஸாலா அல் இம்தாத் ,பக்கம் 35, சபர் 1336, பதிப்பாளர்கள் இம்தாத் உல் மதாபே தானாபவன் ]

அறிவார்ந்த இஸ்லாமிய சமூகமே இந்த தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் வெளிரங்க அமல்களைக் கண்டு உங்கள் ஈமானை இழந்து விடாதீர் .

அவர்கள் நோக்கம் என்ன என்பதை தப்லீக் இயக்கத்தின் ஸ்தாபகார் மௌலவி இல்யாசே கூறுகிறார் ," எனது கருத்துகளை எவரும் விளங்கிக் கொள்ளவில்லை.ஜனங்கள் நினைகிறார்கள் .இது தொழுகைக்கு அழைக்கும் இயக்கம் என்று.நான் சத்தியமாக சொல்கிறேன் .இது ஒரு போதும் தொழுகைக்கு அழைக்கும் இயக்கமல்ல.மாறாக ஒரு புதிய கூட்டத்தை உண்டாக்குவதே இதன் நோக்கம் "
[ நூல் : தீனி தஃவத் ,பக்கம் -234 ]


இனி இவர்களின் முழுத்திட்டத்தை மௌலவி இல்யாஸ் இவ்வாறு கூருகிறார் ,
"ஹஜ்ரத் மௌலானா அஷ்ரப் அலி தானவி அவர்கள் மிகப்பெரிய வேலை செய்திருக்கின்றார்கள் ,எனது மனம் விரும்புகிறது .கல்வி ,ஞானபோதனை அவர்களுடையதாகவும் ,தப்லீக் முறை என்னுடையதாகவும் இருக்கட்டும் .ஏனேனில் இவ்வாறு அவர்களுடைய (அஷ்ரப் அலி தானவியுடைய) போதனை விரிவாகி விடும் ."
[நூல்:மல்பூஜாத்தே இல்யாஸ் ,பக்கம் -71,72]

மேலும் இவர்கள் தானவியுடைய வஹ்ஹாபிய கொள்கைகளை வெளிப்படுத்தாது ,மறைமுகமாகவும் ,தந்திரமாகவும் போதிக்கின்றனர் என்பதையும் மௌலவி இல்யாஸ் பின்வருமாறு கூறுகின்றார் .
" பொது மக்களிடம் இது விஷயம் கூறலாகாது .எங்கு அவசியமோ அங்கு நமது இரகசியங்களையும் ,நோக்கங்களையும் விளக்குவது பாதகமில்லை "
[ நூல்: மல்பூஜாத்தே இல்யாஸ் ,பக்கம் -72]


இத்தகைய வழிகேடர்களை விட்டும் அல்லாஹ் நம்மை அவன் ஹபீபின் பொருட்டால் காப்பானாக !!!
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment