Tuesday 22 April 2014

வஹாபிய வரலாறு - 2

ஷைகு அப்துல் வாஹ்ஹாப் நஜ்தீ :

               ஹிஜ்ரி 1203ல் துருக்கி சுல்தான் இரண்டாவது அப்துல் மஜீத் கான் மார்க்கப்பற்று நிறைந்த அரசராக இருந்து காலமானார் .இவருக்குப் பின் துருக்கி சாம்ராஜ்யம் முழுவதும் குழப்பமும் யுத்தமுமாக இருந்த போது,இச்சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இப்னு தைமியாவை பின்பற்றும் ஷைகு அப்துல் வஹ்ஹாப் நஜ்தீ சூழ்ச்சி செய்து தலைவரானார் .
                              தர்இயா என்னும் ஊரை தமது இருப்பிடமாக கொண்டார்.இந்நிலையில் தர்இயாவின் அமீரான முஹம்மதிப்னு சஊத் இவருக்கு பக்கபலமாக இருந்தார்.அப்துல் வஹ்ஹாப்  தனது உறவினர்களை அரசு அதிகாரிகளாக்கினார்.அப்துல் வஹ்ஹாப் நஜ்தீயின் பெயர் குத்பாவில் இணைக்கப்பட்டது.காரிஜியாக்கள்,ஜாஹிரிய்யா,முஃதஸிலா போன்றோரின் கொள்கைகளிலிருந்து பலவற்றை திரட்டி நூல் ஒன்றை எழுதினர். அவரது இளைய மகன் முஹம்மது அந்த நூலுக்கு மெருகூட்டி "கிதாபுத் தௌஹீத்" என்று பெயரிட்டார்.

பின்குறிப்பு  :

       அப்துல் வஹ்ஹாப் நல்லவரென்றும். 'ழாகிர்' ,'பாத்தின்' இல்முகளில் தேர்ந்தவரென்றும். 'கிதாபுத் தௌஹீத்" அவரது மகனால் எழுதப்பட்டது என்று சிலர் கூறுகின்றனர். எனினும் தவ்ளீஹுல் ஹக்,சைபுல் ஜப்பார்,அபாத்திலே வஹ்ஹாபியா,வசீலயே ஜலீலா,துல்பிகார் ஹைதர்ரிய்யா அலா அக்னாகில் வஹ்ஹாபியா,அன்வாரே ஆப்தாயே சதாகத் போன்ற நூல்களும்,இன்னும் பல்வேறு ஆதாரங்களை கோண்டும்,வஹாபிகளின் மூலகுரு அப்துல் வஹ்ஹாபாகவே காணப்படுகிறார். மேற்படி நூலும் இவர் எழுதிய நூல் என்றே சொல்லப்படுகிறது.

ஷைகுன் நஜ்த் முஹம்மது இப்னு அப்துல் வாஹ்ஹாப் நஜ்தீ :

           நபிகள் நாதரின் வஹ்ஹாபிகள் பற்றிய முன்னறிவிப்பு ஹிஜ்ரி 1221ல்  முழுவதுமாய் நிறைவேறியது.இந்த வருடத்தில் இருந்து தான் நஜ்தில் பித்னாவும்,பசாத்தும் தோன்றின.ஷைகு முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் என்னும் பெயருர்க்கேற்ப அதற்குரிய அப்ஜத் கணக்கான 1221 ஷைத்தானிய உச்சம் அடைந்து தலைவிரித்தாடியது.ஷைகுன் நஜ்த் தலைவரான  பின் குத்பா ஓதும் பொதெல்லாம்  ' நபியைக் கொண்டு ஷபாஅத் தேடுபவன் காபிர் ' என்று ஓதுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

         இவருடன் பிறந்த இவரது மூத்த சகோதரர் ஷைகு சுலைமான் இவரைக் கண்டித்து பல பத்வாக்கள் வெளியிட்டுள்ளார்.மேலும் இவர் தந்தை அப்துல் வஹ்ஹாபையும்,சகோதரர் ஷைக்குன் நஜ்த்தையும் கண்டித்து "அஸ்ஸவாயிகுல் இலாஹியா பீ ரத்தீ அலல் வஹ்ஹாபியா"  என்ற மறுப்பு நூலை வெளியிட்டுள்ளார் .ரத்துல் முக்தார் நூலை எழுதிய இமாம் இப்னு ஆபிதீன் ரஹீமஹுள்ளஹு அவர்கள் பாகம் 3,பக்கம் 339ல் ஷைகுன் நஜ்தை பற்றி தெளிவாக எழுதியுள்ளார்கள் . அக்காலத்தில் மக்காவின் முப்தியாக இருந்த அல்லாமா செய்யத் அஹமத் தஹ்லான் மக்கி ஷாபி ரஹீமஹுல்லாஹு அவர்கள் , 'துரருஸ் சனிய்யா பீ ரத்தீ அலல் வஹ்ஹாபியா' என்னும் நூலிலும் இது பற்றி விரிவாக எழுதியுள்ளனர்.

           மேலும் ஹிஜ்ரி 1221ம் ஆண்டு மக்காவிலுள்ள பெருமை வாய்ந்த உலமாக்கள் ஷைகுன் நஜ்த்கு 'ஹதிய்யா மக்கிய்யா ' என்று லக்னத்துச் செய்து பாத்வா ஒன்று வெளியிட்டுள்ளனர் .அதன்றி அல்லாமா அஹ்மத் பின் அலீ பஸயி அவர்கள் 'பஸ்லுல் கிதாப் பீ ரத்துல் ழலாலதி இப்னு அப்துல் வஹ்ஹாப்'  என்னும் பெயரிலும் ,அல்லாமா செய்யத் ஜவ்வாத் அலவீ துரைமீ அவர்கள் 'மிஸ்பாகுல் அனாம்' என்ற பெயரிலும் மறுப்புரைகள் எழுதியுள்ளார்கள்.

               


               
                
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment