Sunday 23 September 2018

ஹிந்துக்களின் கடவுள் பற்றி ரஷீத் அஹ்மத் கங்கோஹி

ஹிந்துக்கள் வணங்கும் பல்வேறு தெய்வங்களில் ராமரும் ,கிருஷ்ணரும் அடக்கம் . காபிர்களின் கடவுள் நம்பிக்கை இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரானது என்பதால் அதனை இணைவைப்பு என்று இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் ,புகஹாக்களும் வரையறுத்துள்ளனர் . 

நாங்களும் தீன் பணி செய்கின்றோம் ,சீர்திருத்தம் செய்கின்றோம் என்று வாய் கூசாமல்  வஹாபிய கொள்கையை பரப்பும் தப்லீக் ஜமாத்தினரின் முன்னோடி ரஷீத் அஹ்மத் கங்கோஹி ஹிந்து மதக் கடவுளைப் பற்றி என்ன நம்பிக்கை கொண்டிருந்தார் என்று பாருங்கள் . 

 " ராமரும் , கன்ஹையாவும் நல்லவர்கள் . பின் வந்த மக்கள் தான் அவர்களுக்கு கெட்ட பெயரை உண்டாக்கினர் " 

[நூல் - தஸ்கிரதுர் ரஷீத் , பாகம் 2, பக்கம் 359 
ஆசிரியர் - ரஷீத் அஹ்மத் கங்கோஹி  ] 


இராமனும் ,கிருஷ்ணனும் வரலாற்று நபர்கள் அல்லர் .அவர்கள் இதிகாசங்களிலும் ,புராணங்களிலும் சொல்லப்பட்ட கதை மாந்தர்கள்(மஹாபாரதம் ,இராமாயணம் )  என்று இந்திய வரலாற்று ஆசிரியர்களே பல நூற்கள் எழுதியுள்ளனர் .

இன்னும் 14ஆம் நூற்றாண்டில் துளசிதாஸ் என்பவர் இயற்றிய இலக்கியமே பின்னர் இராம வழிபாட்டுக்கு மூலம் என்றும் சொல்லப்படுகின்றது .
[என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா   ] 

நமது கேள்வி எந்த ஆய்வுமே செய்யாமல் பொத்தாம் பொதுவாக பிற மதத்தினரின் கடவுளருக்கு  வக்காலத்து வாங்கும் தேவ்பந்தி தப்லீகி  ரஷீத் அஹ்மத் கங்கோஹி ,எத்துணை ஆதாரங்கள் இருந்தும் அல்லாஹு سبحانه وتعالىٰ வையும் , படைப்புகளின் காரணகர்த்தா கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களை நிந்தனை செய்தது ஏன் ??? 


  


Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment