Sunday 23 September 2018

ரஷீத் அஹ்மத் கங்கோஹிக்காக சமைக்கும் கண்மணி நாயகம்

தலைப்பை கண்டதும் உண்மை மூஃமீன்களின் நெஞ்சம் பதறத் தான் செய்யும் .

தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் மற்றோரு பொய் பித்தலாட்டங்களில் ஒன்று ,தமது முன்னோடிகளின் அந்தஸ்தையும் , மதிப்பையும் உயர்த்த எந்த அளவுக்கும் துணிந்து செல்வர் . எந்த அளவிற்கு என்றால்  அது   மூஃமீன்களின்  உயிரினும் மேலான ஈருலக இரட்சகர் கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின் கண்ணியத்தை குறைத்து தங்களின் முன்னோடிகளின் பெருமைகளை மேடையேற்றுவதில் ,பெருமை பீற்றுவதில் ,அகங்காரச் செருக்கில் அவர்களின் உஸ்தாதான இப்லீஸின் அடியொற்றி நடப்பவர்கள் .

" ஒரு முறை ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்கள் ஓர் கனவு கண்டார்கள் . அதில் தமது சகோதரரின் மனைவி தமது விருந்தினர்களுக்கு உணவு சமைப்பதாக கண்டார்கள் . அப்பொழுது நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் வந்து கூறினார்கள் ," இங்கிருந்து எழுந்திருங்கள் . இம்தாதுல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு சமைப்பதற்கு நீங்கள் தகுதியானவர் அல்ல . அவரது விருந்தினர் உலமாக்கள் ,எனவே நானே சமைகின்றேன் " . ஹாஜி இம்தாதுல்லாஹ் அவர்களின் இக்கனவு மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி ,அவரிடம் பைஅத் எடுத்ததன் மூலம்  உண்மையானது .ஏனெனில் ஹாஜி சாஹிப் அவர்களிடம் பைஅத் எடுத்த முதல் உலமா அவர்தான் ."


[ நூல்- தஸ்கிரத்தூர் ரஷீத் , பாகம் 1,பக்கம்  75 ,புதிய பதிப்பு ]


ஷெய்கு ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கீ رضي الله عنه அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தை சார்ந்த காமிலான ஷெய்கு . கனவு அவர்தானே கண்டார் ,இதில் ரஷீத் அஹ்மத் கங்கோஹியை குற்றம் பிடிப்பது என்ன நியாயம் என்று நினைக்கலாம் . 

தஸ்கிரத்தூர் ரஷீத் நூலானது ரஷீத் அஹமத் கங்கோஹியின் வரலாற்றை கூறும் நூல் .அவரது மகன் மஸுத் அஹ்மத் தின் உத்தரவின் பேரில் ,தேவ்பந்தி முன்னோடிகள் ஆஷிக் இலாஹி மீரடி , அப்துல் காதிர் ராம்பூரி ,மற்று கலீல் அஹ்மத் சஹ்ரான்புரி ஆகியோரின் எழுத்தாலும் முயற்சியாலும் வெளிவந்த நூல் . எண்ணற்ற ஹதீத் நூற்களையே பிறழ்வு செய்த இவர்கள் ,ரஷீத் அஹ்மத் கங்கோஹியை பரிசுத்தப் படுத்த   ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கீ அவர்கள் மீது இட்டுக்கட்டி உள்ளனர் . 
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment