Friday 31 October 2014

தேவ்பந்த் தப்லீக் ஜமாத் பற்றி தமிழக உலமாக்கள்



Hidayathul Anaam IlaJiyarathil Auliayil Kiram

எம்பெருமானார் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நஜ்தைக் குறிப்பிட்டு , 
“ இங்கு தான் அதிர்ச்சிகளும்,குழப்பங்களும் உண்டாகும். இங்கிருந்து தான் ஷைத்தான் உடைய கொம்பு உதயமாகும்” என்று முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்."
நூல் – ஸஹீஹ் முஸ்லிம் ,பாகம் 2,பக்கம் 393,394. ஸஹீஹ் புஹாரி ,பாகம்  2,பக்கம் 1051, மிஷ்காத் .

அவ்வாறாகவே , சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நஜ்து தேசத்தில் அப்துல் வஹ்ஹாபும் அவருடைய மகன் முஹம்மதும் உண்டாயினர். அவ்விருவரையும் பின்பற்றியவர்கள் தான் மௌலவி இஸ்மாயில் திஹ்லவியும் அவரைச் சார்ந்தவர்களும். அக்குழுவினர் இரு பிரிவினராகப் பிரிந்தனர், வெளிரங்கமாகவே தங்களை வஹாபிகள் என்று காட்டிக் கொண்டவர்கள் ஒரு குழுவினர் ( அஹ்லே ஹதீத் ) . அவர்கள் எந்த மத்ஹபையும் ஏற்று பின்பற்றாதவர்கள். வெளிரங்கத்தில் தங்களை வஹாபிகள் என்று காட்டிக் கொள்ளாமல் அந்தரங்கத்தில் வஹாபிகளா இருக்கக் கூடியவர்கள் மற்றக் குழுவினர் (தேவ்பந்தி தப்லீக் ஜமாத்) . இவர்கள் ஹனபீ-ஹன்பலி என்று வெளிக்கு மதுஹபுஹளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டு முற்றிலும் வஹாபிக் கொள்கைளையே தங்கள் கொள்கைகளாகக் கொண்ட ‘முகல்லிது’ வேடதாரிகள்.

இவர்களில் முந்திய கூட்டத்தாரின் அபாயங்களைவிட பிந்திய இந்தக் கூட்டத்தாரின் அபாயங்கள் மிகவும் பயங்கரமானவை. ஏனெனில் , இவர்கள் ‘மத்ஹபு’ என்ற போர்வையை போர்த்திக் கொண்டு முஸ்லிம்களை வழிகேட்டில் ஆக்க முற்பட்டிருக்கிறார்கள். இவர்கள் தங்களது நயவசகத் தந்திர உபாயத்தினால் ஸூன்னத்து வல் ஜமாத்துடைய நல்ல கொள்கையில் ஆகி இருந்த அனேகர்களை பொல்லாங்குடைய வஹாபியத்தான வழிகேட்டின் அளவில் இழுத்து போட்டும் விட்டனர்.

வஹாபிகளான அவர்களின் கொள்கைக் கூற்றுகளைப் பாருங்கள்:

“ முஹம்மது நபி அவர்கள் மரணித்து மண்ணோடு மண்ணாகிப்  போய்விட்டார்கள். அவர்களுடைய ரவ்ழாவிற்கு ஜியாரத்திற்காகப் போவது ஷிர்க்கு (இணைவைத்தல்) ஆகும்.

யா நபி! யா முஹம்மது !  யா ரசூலல்லாஹ் ! என்று அழைத்துக் கூப்பிடுவது ஷிர்க்காகும். அவ்விதம் அழைத்துக் கூப்பிடுபவர் காபிராக இருப்பார்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மறைவான சங்கதிகளை அறிய மாட்டார்கள். தொழுகையில் அவர்களுடைய க்யாபகம் வருவதானது மாடு,கழுதையின் க்யாபகம் வருவதை விட மிகக் கெட்டதாகும். அவர்களுடைய முஃஜிஸாத்துகளை விட சூனியக்காரர்களின் சூனியம் அதிக சக்தி வாய்ந்த்து. அவர்கள் ஷபாஅத்து செய்வார்கள் என்று நம்புவது ஷிர்க்காகும்.

நபிமார்கள்,அவ்லியாக்களின் கப்ரு புத்து(விக்கிரகம்)களுக்கு ஒப்பாகும். அவைகளை தகர்த்து எறிய வேண்டும்.அவர்களுக்கு எத்தகைய சக்தியும் கிடையாது. அவர்கள் பால் வஸீலா தேடுதல் ஷிர்க்காகும்.அவர்களுக்கு நேர்ச்சை செய்வது ஹறாமாகும்.

சகல நபிமார்கள்,ஸஹாபாக்கள்,அவ்லியாக்கள் ஆகியவர்கள் அல்லாஹ்வின் தகுதிக்கு முன் செம்மானை விடக் கீழ்த்தரமானவர்கள்.
மீலாதுன் நபி கிருஷ்ண ஜெயந்திக்கு ஒப்பாகும். 
காதிரிய்யா,ஜிஷ்திய்யா,நக்ஷபந்தியா முதலான தரீக்காக்கள் வழி கேடானவை.

மவ்லித்,பாத்திஹா,கத்தம் முதலானவற்றின் ஷீர்னி(வினியோகப் பொருள்) ஹறாம் ஆகும்.அவ்லியாக்களின் பெயராலும்,மவுத்தானவர்களின் பெயராலும் கத்தம் பாத்திஹா ஓதி அதன் பலனை அவர்கள் பால் ஈஸால் தவாபு செய்வது,பிராமணப் புரோகிதர்கள் அவர்களுடைய வேதத்தை ஓதி சுலோகம் படித்து பிதுர்களுக்கு திதி செய்வது போன்றேயாகும் . “

அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். மேற்சொன்னவைகளும் அவை போன்ற தப்புத் தவறான நூற்றுக்கணக்கான கொள்கைகளும்,வஹாபிகளின் வழிகேடான அகீதாக்களாகும். இத்தகைய வழிகெட்டகொள்கைகளின் பால் வஹ்ஹாபிய்யா மொளலானா,மொளலவிகளும் மார்க்கத்தில் மறுமலர்ச்சி காண விரும்புவதாகச் சொல்லிக்கொள்பவர்களும்,தாங்கள் வழிகேட்டில் இருப்பதை அறியாமல்,ஏனைய முஸ்லிம் பெருமக்களை நேர்வழியில் ஆக்க முற்படுவதாக மனப்பால் குடித்துக் கொண்டு வழி கெடுக்க முற்பட்டு இருக்கிறார்கள்.

“நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் , இபுலீசை நஜ்து தேசத்து ஷைகு உடைய உருவத்திலே காண்பார்கள் “ என்ற விபரம் சரியாகவே இருக்கிறது.

நஜ்து வஹ்ஹாபிஷ் ஷைகுடைய ‘கிதாபுத் தவ்ஹீது’ வின் உர்து மொழி பெயர்ப்பு நூற்களாகிய ‘தக்வியத்துல் ஈமான்,ஸிராத்துல் முஸ்தகீம்,இதுபாத்துத் தவ்ஹீது ‘ போன்ற ஆபாச மலக் குவியல்களிலிருந்து சிலவற்றை பொறுக்கி தவ்ஹீதோ இபாதத் என்ற பெயரில் வடநாட்டு வஹாபி மொளலவியொருவர் உர்துவில் அச்சிட்டுள்ளார். அதை ‘ஏக தெய்வ வணக்கம்’  நாமத்தால் தென்னாட்டு பாக்கவீ ஒருவர் தமிழாக்கம் செய்திருக்கின்றார். அதை மற்றொரு ‘பீடி மொளலவி’ அச்சிட்டு இலவசமாக வினியோகம் செய்துள்ளார்.

மேலும் ‘ஜியாரத்துல் குபூர்’ அவ்லியாக்களை அவமதிக்காதீர் – ‘மஹான் ஷாகுல் ஹமீது’ ‘ஏக தெய்வ வணக்கம்’ முதலான சில்லறைத் துக்கடாப் பிரசுரங்களை – அதிக விஷமுடைய நச்சரவத்திற்கு நல்ல பாம்பு என்று பெயர் உள்ளது போல- வஹ்ஹாபியத்தின் விஷவித்துகளைக் கொண்ட மேற்சொன்ன நூற்கள் பெயரால் கவர்ச்சிகரமான பெயர்களை சூட்டிக் கொண்டு நஜ்து ஷைத்தானிய்யத்தான பணிகளை தென்னாட்டில் செய்து வருகின்றன.இத்தகைய அகீதா கெட்டவர்கள் தங்களை வஹ்ஹாபிகள் என்று சொல்லிக் கொள்வார்களானாலும் பரவாயில்லை.ஆனால் இவர்களோ அவ்வாறு சொல்லாமல் தங்களை ஸுன்னத்து வல் ஜமாத் என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள். எனவேதான் இவர்களுக்கு எதிர்ப்பும்,மறுப்பும் ஏற்படுகின்றன. உள்ளொன்று புறம் ஒன்றாயிராமல் வெளிக்கும் தங்களை வஹ்ஹாபிகள் என்று பகிரங்கமாக அறிவித்து தங்களது வஹ்ஹாபிக் கொள்கையை இவர்கள் பரப்பினால் இவர்களை யார் ஆட்சேபிக்கப் போகின்றார்கள்.

நூல் – ஹிதாயத்துல் அனாம் இலாஜியாரதில் அவ்லியா இல்கிராம்,பக்கம் 15-18 , ஏழாம் பதிப்பு டிசம்பர் 2008, வெளியீடு சுலைமானியா பப்ளிஷர்ஸ் .

ஆசிரியர் – நாகூர் ஷரீபில் திலகமாய் இலங்குகின்ற குத்புல் மஜீது,பர்துல் வஹீது,ஸையிதுஸ் ஸாதாத்தி  ஸையிதுனா ஸையிது அப்துல் காதிர் ஷாஹூல் ஹமீது காதர்வலி கன்ஜபக்ஷ் கன் ஜஸவாயீ ரலியல்லாஹூ அன்ஹூ  அவர்களின் பொளத்திர் அல்ஹாஜ் மொளலானா மொளலவி முஹம்மது பாக்கர் சாஹிப் ஆலிம் காதிரி ரஹ்மதுல்லாஹி அலைஹி, நாகூர் ஷரீப்.

இந்நூலின் முதற்பதிப்பை(1950) சரிபார்த்து சிறப்புரை வழங்கிய மேன்மை தாங்கிய உலமாக்கள்:


1.       காயல்பட்டணம் மஜ்லிசுல் புகாரிஷ் ஷரீபின் முக்கியஸ்தரும்,சிறந்த முப்தியுமான, மெளலானா,மெளலவி,அல்ஹாஜ்,நஹ்வி முஹம்மது  இஸ்மாயில் ஆலீம் முப்தி அவர்கள்.

2.       காயல்பட்டணம் மஹ்ளறா அரபிக் கல்லூரியின் ஸதர் முதர்ரிஸும்,பிரபல முஃப்தியுமான மெளலானா,மெளலவி அல்ஹாஜ் முஹியித்தீன் தம்பி ஆலீம் அவர்கள்.

3.       காயல்பட்டணம் பிரபல முஃப்தியும்,ஜாவியா மத்ரஸத்துல் பாஸிய்யா பேராசிரியருமான மெளலானா,மெளலவி முஹம்மது அப்துல் காதிர் ஆலீம் ஸித்திகீ அவர்கள்.

4.       காயல்பட்டணம் ஸாகிபு அப்பா தைக்கா மானேஜரும் புகழுடைய பெரியாருமான மெளலானா,மெளலவி, அல்ஹாஜ், பா.சு.முஹம்மது அப்துல்லாஹ் லெப்பை அஸ்ஸதகலி ஆலீம் அவர்கள்.

5.       காயல்பட்டணம் முத்துவாப்பா வலியுல்லாஹ் அவர்களின் திருப்பேரரும்,பெரியாருமான மெளலானா,மெளலவி, ஸூபி முஹம்மது இஸ்மாயில் லெப்பை ஆலீம் (கொம்பாலீம்) அவர்கள்.

6.       மதராஸ் அரசாங்க காஜி மெளலானா,மெளலவி, அல் ஹாஜ், முஹம்மது ஹபீபுல்லாஹ் ஸாகிபு அவர்கள்.

7.       குர்ஆன் தப்ஸீர் விரிவுரையாளரும்,பன்னூல் ஆசிரியருமான மெளலானா,மெளலவி, அல்ஹாஜ், உத்தமபாளையம் முஹம்மது அப்துல் காதிர் ஆலீம் பாக்கவி அவர்கள்.

8.       கொழும்பு அல் ஜாமிஉல் அள்பர் சம்மங்கோடு பள்ளியின் இமாம் மெளலானா,மெளலவி, கிருஷ்ணாப்பட்டணம் அபுல்ஜமால் முஹம்மது  பதுருத்தீன் ஆலிம் நூரி அவர்கள்.

9.       கோட்டாறு மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் செய்யது முஹம்மது ஆலிம் (கத்தீபு,ஜும்மா மஸ்ஜித்,சிங்கப்பூர்)

10.   ஹஜ்ரத் மெளலானா,மெளலவி,அல் ஹாஜ் ஷாஹ் சுல்தான் கலீபா சாஹிபு ஷத்தாரி,காதிரி ,அரசாங்க காஜி,நாகூர்.

11.   மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆலீம் சாகிபு நூரி,ஸத்ரு முதர்ரிஸ் ,காதிரியா மத்ரஸா,நாகூர்.

12.   மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் அஸ்ஸெய்யது ஹூசைன் சாஹிபு காதிரி, நாகூர்.

13.   மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் குலாம் தஸ்தகீர் என்னும் நானா ஸாகிபு ,நாகூர்.

14.   மெளலானா,மெளலவி அஸ்ஸெய்யிது அஹ்மது சாகிபு காதிரி,நாகூர்.

15.   மெளலானா,மெளலவி காஜி கத்திபு,அல்ஹாஜ் ஷைகு ஹசன் சாகிபு ஷத்தாரீ,காதிரி ,நாகூர்.

16.    மெளலானா,மெளலவி செய்யிது முஹம்மது அலி சாஹிபு காதிரி என்னும் சின்னதம்பி சாஹிபு,நாகூர்.

17.   மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் செய்யிது முஹ்யித்தீன் சாகிபு காதிரி,நாகூர்.

18.   மெளலானா,மெளலவி,ஹாபிழ் ஷாகுல் ஹமீது,மேலப்பாளையம்.

19.   மெளலானா,மெளலவி முஹம்மது மீறான், மேலப்பாளையம்.

20.   மெளலானா,மெளலவி,அல்ஹாஜ், ஹாபிழ் முஹ்யித்தீன், மேலப்பாளையம்.

21.   மெளலானா,மெளலவி அஹ்மது முஹ்யித்தீன் ஸித்திக்கீ நூரி,மேலப்பாளையம்.

22.   மெளலானா,மெளலவி அபுல்ஹசன் அலி ஷாதுலி,நூரி,தென்காசி.

23.   மெளலானா,மெளலவி ஹுசைன் முஹம்மது ஆலிம் என்னும் ஆயக்குடி ஸூஃபி ஹஜ்ரத் (மதராஸ் பெரம்பூர் ஜமாலிய்யா அரபி கலாசாலை,தலைமைப் பேராசிரியர்) ஆயக்குடி,பழனி.

24.   மெளலானா,மெளலவி அப்துல் மஜீத் நூரி,ஆயக்குடி,பழனி.

25.   மெளலானா,மெளலவி முஹம்மது அபூஸாலிஹ் ஆலிம் காலங்குடி இருப்பு,கிரிஸ்தியா நகரம்,திருநெல்வேலி.

26.   மெளலானா,மெளலவி முஹம்மது கலீலுர் ரஹ்மான் ஸாகிபு காதிரி,பீஹார்.

27.   மெளலானா,மெளலவி முஹம்மது பஸீஹுத்தீன் சாஹிபு,கவர்மெண்டு காஜி,மதறாஸ்.

28.   மெளலானா,மெளலவி கான் முஹம்மது சாகிபு நூரி,திண்டுக்கல்.

29.   மெளலானா,மெளலவி ஷைகு முஹம்மது இப்னு பீர் முஹம்மது நூரி கோட்டாரீ- பேராசிரியர் ,மத்ரஸா நூருல் இஸ்லாம்,தொடுபுழை,கேரளா.

30.   மெளலானா,மெளலவி ஷைகு அப்துல் காதர் பாகவி இப்னு அல்ஹாஜ் அஷ்ஷைகு அப்துல் மஜீத் காதிரி,பள்ளப்பட்டி.

31.   உலகமெல்லாம் இஸ்லாமை பரப்பும் பணியில் அரும்பெரும் சேவை செய்த உத்தமர்,காதிரிய்யா தரீக்காவின் புகழ் மிக்க ஷைகும்,முர்ஷிதுமான மீரட் ஷாஹ் முஹம்மது அப்துல் அலீம் ஸித்தீக்கி மொளலானா அவர்களது அருந்தவப் புதல்வர் நதர் முஹ்யித்தீன் நூரானி ஸித்தீக்கி காதிரி அவர்கள்.

32.   மெளலானா,மெளலவி,அல்ஹாஜ்  உத்தமபாளையம் முஹம்மது அபூபக்கர் ஆலிம் ஹஜ்ரத் கிப்லா அவர்கள் (நாஜிர் ,மத்ரஸத்துல் காதிரிய்யா மஹ்லறா,காயல்பட்டணம் மற்றும் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் மத்ரஸா,வேலூர்).

33.   இந்தியா ,இலங்கை ஹிஸ்புல்லாஹ் சபையின் தலைவர், மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் ஷைகு அப்துல் காதிர் ஆலிம் ஸித்தீக்கி ஸூபி ஹஜ்ரத் அவர்கள்.

34.   தமிழ்நாட்டில் பிரபல்ய ஆலிமும் முஃப்தியுமான மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் முஹம்மது தமீம் ஆலிம் ஸாகிபு முஃப்தி அவர்களது அருமைப் புத்திரர் மெளலானா,மெளலவி அபுல்பரகாத் ஸிப்கதுல்லாஹ் ஆலிம் – முதர்ரிஸ் நாஜிர்,மத்ரஸா யூசுபிய்யா அவர்கள்.

35.   காயல்பட்டணம் ஜாவியா மத்ரஸத்துல் பாஸிய்யா பேராசிரியர் மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் கத்தீபு சாகுல் ஹமீத் ஆலிம் முஃப்தி அவர்கள்.
 
தேவ்பந்திய தப்லீக் ஜமாஅத் தமிழகத்தில் இஸ்லாமியர் இடையே தலை தூக்கிய ஆரம்ப நாட்களிலேயே,அதாவது 1950 முதல் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தின் சத்திய உலமாக்கள் தமிழக இஸ்லாமியரை அதன் வஹாபிய கொள்கைகளால் உண்டாகும் வழிகேடை கடுமையாக எதிர்த்து உள்ளனர் என்பதற்கு இதுவே தக்க சான்று.
இன்று வரை எதிர்த்தும் வருகின்றனர் .

இன்ஷா அல்லாஹ் மறுமை வரை எதிர்ப்பர் என்பது திண்ணம்  !!!



       


Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment