Thursday 21 March 2019

மவ்லவி காஸிம் நானோத்வியும் ,தக்தீருன் நாஸ் நூலும் - 2

காஸிம் நானோத்வி எழுதிய  தக்தீருன் நாஸ் மூலநூலின் சில பதிவுகள்

"முதலில் , காத்தமுன் நபி என்பதன் அர்த்தத்தை நாம் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும் . பொது மக்களுக்கு , நபிகள் நாயகம் அவர்கள் காத்தமுன் நபி என்பதன் அர்த்தம் என்னெவென்றால் , நபிகள் நாயகம் அவர்களின் காலம் பிற நபிமார்களுக்குப் பின்னால் என்பதும் , இறுதி நபி என்பதுமாகும் . எனினும் புரிந்து கொள்ளுபவர்களுக்கு (ஞானமுள்ளவர்கள் ) முதல் அல்லது இறுதி நபியாக இருப்பதில் எந்த மென்மையும் இல்லை என்று உணர்ந்துள்ளனர் . "

[நூல் - தக்தீருன் நாஸ் ,பக்கம் 4,5 ] 

தேவ்பந்தி தப்லீக் பிர்காவிற்கு கண்மணி நாயகம்  صلى الله عليه و سلم அவர்கள் இறுதி நபியாக இருப்பதில் எந்த மேன்மையும் ,சிறப்பும் இல்லை என்று கொள்கை கொண்டுள்ளனர் .  

தேவ்பந்திகளினால் நடத்தப்படும் இணையம் /முகநூல் /வாட்சாப் குழுக்களில் அவர்களின் முன்னோடிகளைப் பற்றி பேசினால் அதற்கு மறுப்பும் ,நீக்கமும் செய்கின்றவர்கள் ,    கண்மணி நாயகம்  صلى الله عليه و سلم அவர்களை நிந்தனை செய்த தமது முன்னோடிளை புகழ்பவர்களை நெஞ்சம் நிறைந்து நேசிப்பர் . என்னே முனாஃபிக் தனம் ! 

அல்லாஹ் سبحانه و تعالى கண்மணி நாயகம்  صلى الله عليه و سلم அவர்களையும் ,ஏனைய நபிமார்களையும்  நேசித்து , அவர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்தொடபர்களை நேசம் கொள்ள நமது இதயங்களை திறப்பானாக ! ஆமீன் ! 


"நபிமார்கள் தங்களது உம்மத்துகளை விட சிறந்தவர்களாகவும் , உயர்ந்தவர்களாகவும் இருப்பது ஞானத்தில் மட்டுமே . அமல்கள் என்று வரும் போது உம்மத்தினர் சிலசமயம் நபிமார்களுக்கு சரிசமமான அந்தஸ்தையும் சிலசமயம் அதை விடவும் உயர்ந்த அந்தஸ்தை அடைகின்றனர் ".  

[நூல் - தக்தீருன் நாஸ் ,பக்கம் 7 ] 

மேற்கூறிய மொழிபெயர்ப்பை வாசித்த பின் தவ்பா செய்து ,ஷஹாதத்  சொல்லிவிடவும் . எத்தகைய ஈமானை பறிக்கும் செயல் ! 

இனி தேவ்பந்திகளிடம் இது பற்றி கேட்டால் ,அவர்கள் இதை எவ்வாறெல்லாம் நியாயப் படுத்துவார்கள் தெரியுமா .  அவர்களின் மோசடியான கூற்று , நபிகள் நாயகம் தமது 40 வது வயதில் தான் அமல்களை ஆரம்பித்தார்கள் . இனி முஸ்லிமான ஒரு சிறுவன் தனது 5 வயதில் திக்ர் செய்ய ஆரம்பித்தால் , அவன் அமல்களில்  நபிமார்களையும் முந்தி விடுவான் . நவூது பில்லாஹ் !

" நபிகள் நாயகம் அவர்களது சமகாலத்தில்,எங்கோ ஓரிடத்தில்  வேறு ஒரு நபி  இருப்பதாக நாம் கருதினாலும் ,அது நபிகள் நாயகம் காத்தமுன் நபி என்பதில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது . "

தேவ்பந்திகளே உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் ,உங்களது நெருங்கி உறவுகளைப் பற்றி தவறாக கற்பனை செய்தால் , ஏற்றுக்கொள்வீர்களா?

ஆனால் ஸய்யிதுல் அன்பியா  கண்மணி நாயகம்  صلى الله عليه و سلم அவர்கள்  மீது எவ்வாறு அனுமானம் கொள்ள முடிகின்றது ?

[நூல் - தக்தீருன் நாஸ் ,பக்கம் 18  ] 

" எதிர்காலத்தில் வேறு ஏதேனும் ஒரு நபி வருவதாக நாம் கருதினால் ,அது நபிகள் நாயகம் அவர்கள் இறுதி நபி (கத்மியத் முஹம்மதி ) என்பதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது ".

[நூல் - தக்தீருன் நாஸ் ,பக்கம் 34  ] 

இவர்கள் உருவாக்க முயன்ற கருத்துருவாக்கம் என்ன என்று மணி அடிக்கின்றதா ?

இந்த பதிவையும் ,இதற்கு முன்னர் தமது முன்னோடிகளைப் பற்றி என்ன கூறினார்கள் என்று முந்தைய பதிவிலும் வாசித்துப் பாருங்கள் இஸ்லாமிய அன்பர்களே !

இரண்டையும் தொடர்புபடுத்தி , தமது முன்னோடிகளுக்கு எந்த வாசலை திறக்க எத்தனித்தார்கள் என்பதை அறியுங்கள் . ஆனால் அவர்களை எல்லாம்  முந்திக் கொண்டு சபிக்கப்பட்ட குலாம் அஹமத் காதியானி  அந்த வாசலின் வழியே நுழைந்தான் .

காதியானிகள் கத்தமே நுபுவ்வத் பற்றி கூறுபவற்றை , தேவ்பந்தின் நிறுவனர் காஸிம் நாணோத்வி கூறுவதுடன் ஒப்பிடுப் பாருங்கள்    








Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment