Saturday 6 October 2018

காஸிம் நாணோத்வியின் தவஜ்ஜு

மவ்லானா முனாஜிர் ஹஸன் ஓர் ஆச்சரியமான சம்பவத்தை விவரிக்கிறார் . ஒரு சிலர் சட்டா மஸ்ஜிதில்(தேவ்பந்த் )  குழுமியிருந்தனர் . மவ்லானா யாகூப் (தேவ்பந்த் மத்ரஸாவின் பொறுப்பாளர் ) அந்த கூட்டத்தில் இருந்தார் . மவ்லானா யாகூப் கூறினார்கள் 

" இன்று காலை தொழுது கொண்டிருக்கும் பொழுது எனது உயிர் மாண்டு விடும் நிலையில் இருந்தது . மக்கள் அவரிடம் என்ன காரணம் என்று வினவினர் ? . அவர் கூறினார் சூரா முஸம்மில் ஓதிய பொழுது ,எனது இதயம் ஓர் விந்தையான சக்தியின் காரணமாக திடீரென இறுகி ,எனது ரூஹ் எனது உடலை விட்டும் வெளியேற இருந்தது . ஆனால் எப்படியோ இந்த நிலை சிறிது நேரத்தில் மாறியது .

தொடர்ந்து அவர் கூறினார் ,தொழுகை முடிவுற்றவுடன் இந்த விஷயம் குறித்து ஆழ்ந்து சிந்தித்தேன் . என்னிடம்  சொல்லப்பட்டது அந்த சம்பவம் நடந்த பொழுது மவ்லானா காஸிம் நாணோத்வி மேராத் என்னும் ஊரில் இருந்து என்னை நோக்கி தவஜ்ஜு செய்தார்கள் . இதன் காரணமாக எனது ரூஹ் எனது உடலை விட்டும் வெளியேறும் நிலைக்கு சென்று எனக்கு சங்கடம் ஏற்பட்டது .

மேலும் தொடர்ந்து

" எல்லாவற்றையும் அலசி ஆராயும் புத்தி உடையோர் இதனை எங்கனம் புரிந்து கொள்வர்  . தேவ்பந்திற்கும் ,மேராத் நகரங்களுக்கும் இடையே அதிக தொலைவு இருந்தாலும் , இந்த தூரம் தடை ஏற்படுவதற்கு ஓர் காரணமல்ல " . 

சவானெஹ் காசிமி


[ நூல் - சவானெஹ் காசிமி , பாகம்  1, பக்கம் 345 ]

ஆய்வு :  

இந்த விந்தையான சம்பவத்தை எங்கனம் புரிந்து கொள்வது ? இல்யாஸி தப்லீகி தேவ்பந்திகள் விளக்கம் அளிப்பார்கள் என்று எண்ணுகின்றேன் . மவ்லானா யாகூப் மிகவும் உயர்ந்த தரஜா உடையவர் போலும் . தொழுகை முடிந்து ,நடந்த சம்பவம் பற்றி ஆழ்ந்து யோசித்த நொடிப் பொழுதில் ,எல்லாமே அவருக்கு காண்பிக்கப்பட்டது .

சில மாதங்களோ ,சில மணி நேரங்களோ  அல்ல சில வினாடிகளில் வேறு ஓர் ஊரில் இருக்கும் மவுலானா காஸிம் நாணோத்வி தான் இதை செய்தார் என்று அறிந்தார் .

சிறிதேனும் வெட்கம் இருந்தால் தேவ்பந்திகள் தங்களது  தலையை தொங்கிக் கொள்ளட்டும் . இதுதான் தங்கள் பிர்காவின் உலமாக்களை பற்றிய அவர்களின் நம்பிக்கை .

ஆனால் ஈருலக இரட்சகர் கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் பற்றிய அவர்களது நம்பிக்கை பின் வருமாறு 

" பல விஷயங்களில் ,நபிகள் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்கள் தவஜ்ஜு செய்தார்கள் ,அவர்கள் கவலையுற்றார்கள் ,அமைதி காத்தார்கள் . இப்க் உடைய சம்பவம் நிகழந்த பொழுது (உம்முல் மூஃமீனின் அன்னை ஆயிஷா رضي الله عنها அவர்கள் மோதிரம் தொலைத்ததும் ,இஸ்லாத்தின் எதிரிகள் அவதூறு பேசியதும் )   ,நாயகம் தவஜ்ஜு செய்தார்கள் எனினும் எதையும் அறிய முடியவில்லை . ஒரு மாதம் கழித்து வஹீ மூலமே அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது " 

[ நூல் - ஹிப்ளுள் ஈமான் , பக்கம் 7,அஷ்ரப் அலி தான்வி  ] 

உங்களது பிர்காவின் உலமாக்களை பெருமை பிதற்ற எத்துணை கதைகளை உங்கள் நூற்களில் எழுதியுள்ளீர்கள் . நொடிப்பொழுதில் தவஜ்ஜு செய்யும் உங்களது உலமாக்கள் ???


இல்யாஸி தப்லீகி தேவ்பந்தி வஹாபிகளே ,இன்னும் எத்துணை எத்துணை ஆதாரம் அளித்தால் ,உங்கள் முன்னோடிகள்  கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள்  மீது அவமரியாதை செய்தனர் என்றும்  ,அவர்களின் சங்கையையும் ,கண்ணியத்தையும் குறைத்தனர் என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் ???

மூஃமீன்களே ,நடுநிலை வேஷம் போட்டு உலக ஆதாயம் தேடும் உலமாக்களே , உண்மையில் நாம் நாளை கியாமத் வேளையில் உச்சந் தலையில் சூரியன் அனல் கக்கும் வேளையில் ,இப்பாவிகளுக்கு மன்றாடும் ஷபீயுல் முதனீபீன் தாஹா ரஸூல்   
صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின் ஷபாஅத்தை  யாசிப்பீர்களேயானால் , கண்மணி நாயகத்தை அவமரியாதை செய்யும் முனாஃபிக்களை நேசிப்பதை விட்டும் விலகுங்கள் .

இத்துடன் இஸ்மாயில் திஹ்லவி "தக்வியத்துல்  ஈமான் " நூலில் எழுதியுள்ளதையும் காண்க 

" அல்லாஹ்வையன்றி வேறு யாராகிலும்  மறைவான ஞானம்  உடையவர் என்று நினைத்தாலோ , அல்லது வேறு இடத்தில நடப்பவற்றை அறிகின்றார் என்று நினைத்தாலோ , அவர்கள் சுயமாக அறிந்தார்கள் என்றோ , அல்லது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து அறிவிக்கப் பட்டது என்று நம்பிக்கை கொண்டாலும் ,எல்லா நிலையிலும் அது ஷிர்க் "

[நூல் - தக்வியத்துள் ஈமான் , பக்கம் 10 ] 
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment