Saturday 24 December 2016

ஷாஹ் வலியுல்லாஹ்வின் இஸ்திகாதா

வஹாபிய தேவ்பந்தி தப்லீக்  ஜமாத்தின் மற்றோரு வேடிக்கையான மோசடிக் கூற்றுகளில் ஒன்று தாங்கள் இமாமுல் ஹிந்த் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி (ரலியல்ல்லாஹு  அன்ஹு) அவர்களின் மஸ்லக்கைச் சார்ந்தவர்கள் என்பதாம் .

இனி  இந்த வஹாபிய பிர்காவின்  முன்னோடிகள் கூறுவதைப்  பாருங்கள்

இஸ்மாயில் திஹ்லவி கூறுகிறார் :
Taqwiyatul Iman Ismail Dehlavi Wahabi

எந்த முஸ்லிமும் நபிமார்களையும் ,வலிமார்களையும் அல்லாஹ்வின் படைப்புகளாகவும்,அடியாராகவும் ஏற்று பின்னர் அவர்களை வசீலாவாக்கி (இடைப்பொருள்) உதவி கோரி,நேர்ச்சை,காணிக்கை செலுத்தினால்  குப்ரில் அபுஜஹலுக்கு ஒப்பாவார் .
 [தக்வீயதுல் ஈமான்,பக்கம் 7 மற்றும் 27]

இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார் ,

"கருமங்களை பூர்த்தியாக்குவது ,சிரமங்களை நீக்குவது, ஆபத்து நேரங்களில் உதவி வழங்குவது,இவை  அனைத்தும் அல்லாஹ்வுக்கே மட்டுமே உரியன, மேலும் எந்த நபியும்,வலியும் ,ஷைகுமார்களும்,ஷஹீதும்,ஜின்னும்,மலக்கும் எந்தவிதமான உதவியும் செய்ய இயலாது. யாரேனும் ஒருவர் அவர்களின் மீது சபதம் செய்தாலோ அல்லது ஆபத்து நேரங்களிலும் அவர்களை  நினைவில் கொண்டாலோ, அவர் ஒரு முஷ்ரிக் ஆவார்.அவர்களது நம்பிக்கை எதுவாக இருந்தாலும்,இவர்கள் சூயமாக சக்தியுடையவர்கள் என்றாலும் சரி,அல்லது இவர்கள் அல்லாஹ்வினால் சக்தி வழங்கப்பட்டு உதவுகிறார்கள் என்றாலும் ,எந்த நிலையிலும் இது ஷிர்க் "
[தக்வியதுல் ஈமான்,பக்கம் 10 ,தில்லி பதிப்பு ]  

ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி (ரலியல்ல்லாஹு  அன்ஹு) அவர்கள் எழுதிய நூல் " அத்யாப் அல் நக்ஹம் பீ மத்ஹி  ஸய்யிதில்  அரபி வல் அஜம் " .
இது நான்கு அரபுக் கஸீதாக்களும் அவற்றின் விளக்கங்களை பார்சியில் உள்ளடக்கியதும் ஆகும் . இதை அன்னாரின் முரீது முஹம்மத் அமீன் காஷ்மீரி அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் அன்னார் எழுதினார்கள் .
இதில் நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  ) அவர்களை விளித்து தவஸ்ஸுல் ,இஸ்திகாதா ,இஸ்தினாத் போன்ற மார்க்கம் அனுமதி அளித்த செயல்களை செய்து நமக்கு வழிகாட்டியுள்ளார்கள் .

* தமது முதல் கஸீதா ஸஹாபா தோழர் ஸவாத் இப்னு காரிப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இயற்றிய அரபிக் கசீதாவை போல் இருப்பதாகக் கூறும்
ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி (ரலியல்ல்லாஹு  அன்ஹு)  அவர்கள் ,இந்த கவிதையை பன்னிரெண்டு பிரிவுகளாகப் பிரித்து அதன் விளக்கத்தை பார்சியில் எழுதினார்கள் .இந்த விளக்கவுரை முடிவுற்ற ஆண்டு 24 ரபீயுத்தானீ  1156 (17 ஜூன் 1743ஆம்  ஆண்டு )

* இரண்டாவது கஸீதா 'ஹம்ஜியா' , கவிதை அடியின் ஒவ்வொரு முடிவும் 'ஹம்ஜா'வில் முடியும் . இது 1157/1745 ஆம் ஆண்டும் ,விளக்கவுரை 1762 ஆம் ஆண்டும் முடிவுற்றது .

* மூன்றாவது 'தாயியா ' .  கவிதை அடியின் ஒவ்வொரு முடிவும் 'தா' வில்  முடியும் .இது  மஃ ரிபா உடைய விளக்கங்கள் கொண்டவை .

* நான்காவது 'லாமியா'. கவிதை அடியின் ஒவ்வொரு முடிவும் 'லா மில்  முடியும் .

வஹாபிய தேவ்பந்தி தப்லீக்  ஜமாத்தின் மீது மிகப்பெரும் பலாவை இறக்கியுள்ளார்கள் .

                                       
                                         
atyab al-nagham fi mad'Hi sayyidi'l arabi wa'l ajam



எல்லாம் வல்ல நாயன் நம்  உயிரினும் மேலான கண்மணி நாயகம் ﷺ  அவர்களின் பொருட்டால் காப்பானாக ! ஆமீன் !
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment