Showing posts with label al muhannad. Show all posts
Showing posts with label al muhannad. Show all posts

Thursday, 16 April 2015

அல் முஹன்னத்- 2

தேவ்பந்திகள் தங்களது சொந்த அகீதா நூலான 'அல் முஹன்னத்' க்கு எதிராக முரண்படுகின்றனர் :

         தேவ்பந்திகளின் முன்னோடிகளில் ஒருவரான ரஷீத் அஹ்மத் கங்கோஹி இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி சரியான அகீதா உடையவர் என்கின்றார் .
மவ்லவி ரஷீத் அஹமத் கங்கோஹி எழுதுகிறார் , ' முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபைப் பின்பற்றுபவர்களுக்கு வஹாபிகள் என்று சொல்லப்படும் ,அவர்களது கொள்கைகள் மிகச் சிறந்தவை '
[நூல் - பத்வா ரஷீதியா ,பாகம் 1,பக்கம் 111]

     தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினர் 'அல் முஹன்னத்' எழுதிய பொழுது ( ஸுன்னி அரபுலக உலமாக்களிடம் ஒப்புதல் பெற) அவர்கள் அந்த புத்தகத்தில் இந்த விஷயத்தைக் குறிப்பிடவில்லை.

இப்பொழுது தாருல் உலூம் தேவ்பந்தின் அதிகாரப்பூர்வ பத்வா இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் அகீதாவும் அணுகுமுறையும் சரியானது என்று வந்துள்ளது .இங்கு தேவ்பந்திகள் அவர்களின் சொந்த நூலான 'அல் முஹன்னத்' துடன் முரண்படுகின்றனர் .

இது தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் ஸுன்னி அரபுலக உலமாக்களிடம் ஒப்புதல்  கையொப்பம் பெற வேண்டி செய்த கபட நாடகமே 'அல் முஹன்னத் ' என்பது தெளிவு !!!

தேவ்பந்தி உலமாக்களின் பார்வையில் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி அல் தமீமீ :

அல் முஹன்னத் ,தேவ்பந்தி தப்லீக் உலமாக்களின் கொள்கை நூலில் பக்கம் 12,பின்வரும் கேள்வி பதில் உள்ளது :

" கேள்வி எண் 12 : முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் முஸ்லிம்களின் இரத்தம் சிந்துவதையும்,அவர்களின் உடமைகளை அபகரிப்பதையும் ,அவர்களின் கண்ணியத்தை சிதைப்பதையும் ஆகுமெனக் கருதினார் .அவர் அவர்களை விக்கிரக வணங்கிகள் என்றும் கருதினார் . தமது முன்னோடிகளிடம் ஆணவம் நிறைந்தவராகக் காணப்பட்டார் . அவரைப் பற்றிய உங்களின் அபிப்பிராயம் என்ன ? இன்னும் அஹ்லே கிப்லா உடையோரை இறை நம்பிக்கையற்றவர் என்று அழைப்பது ஆகுமாக்கப்பட்ட செயலா ?இவ்வாறு செய்யும் நபர் இஸ்லாத்தில் முறையான பிரிவைச் சார்ந்தவரா ?


பதில் : இது விஷயத்தில் எங்களின் பார்வையானது துர்ருல்   முக்தார் எழுதியவர்  வழங்கிய தீர்ப்பே  பொருந்தும்.க்வாரிஜியாக்கள் என்னும் குழுவினர் இமாமுக்கு எதிராக போர் தொடுத்தனர் ,ஏனெனில் அவர்கள் இமாம் குப்ரின் மீது இருக்கின்றார் என்று நினைத்தனர் ,அதாவது உருவ வழிபாட்டில்,எனவே போர் தொடுப்பதை நியாயப்படுத்தினர். இதன் காரணமாக அவர்கள் நம் உயிரையும்,உடைமையையும் எடுப்பதையும் நம் பெண்களை சிறைப்பிடிப்பதையும் இஸ்லாமியச் சட்டரீதியாக ஆகுமெனக் கருதினர் .இன்னும் அவர் க்வாரிஜியாக்களைக் கலகக்காரர்கள் எனக் கருதினார்.மேலும் இமாம் க்வாரிஜியாக்கள் அவர்களை நிராகரிப்பாளர்கள் என விவரிக்கவில்லை ஏனெனில் இது புரிந்து கொள்ளுவதில் உள்ள விஷயம் எனக் கூறினார்,அது தவறான கருத்து .

  இன்னும் அல்லாமா ஷாமி புத்தகத்தின் ஓரக் குறிப்பில்,கூறியுள்ளார்கள்,
" நமது காலத்தில் நடைபெற்றது போல் அப்துல் வஹ்ஹாப் நஜ்தியைப் பின்பற்றுபவர்கள் நஜ்தில் இருந்து வெளிப்பட்டு ஹரமைன் ஷரீபை கைப்பற்றினார்கள். அவர்கள் தங்களை ஹன்பலி மத்ஹபை பின்பற்றுபவர்கள் எனக் கூறினார்கள் ,எனினும் அவர்களின் நம்பிக்கை தாங்கள் மட்டுமே முஸ்லிம்கள் எனவும் தங்களுக்கு எதிரான கருத்துகள் கொண்டு தங்களைப் பின்பற்றாதோர் காபிர்கள் எனவும் கருதினர் .  எனவே அவர்கள் அஹ்லே சுன்னத் வல் ஜமாத்தினரையும் ,ஸுன்னி உலமாக்களையும் கொல்வதை நியாயப்படுத்தி கொன்றும் வந்தனர் ,எனினும் எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்கள் மேற்கொண்டு முன்னேறிச் செல்வதைத் தடுத்து நிறுத்தும் வரை ".

தேவ்பந்தி மவ்லவி ஹுசைன்  அஹ்மத் சாஹிப் தாண்ட்வி மதனீ கூறுகிறார் :
' பண்பாளர்களே !  முஹம்மத் இப்னு  அப்துல்  வஹ்ஹாப் நஜ்தில் 13ஆம் நூற்றாண்டில் தோன்றினார் , இன்னும் அவர் தவறான எண்ணங்களில் பிடிபட்டிருந்ததாலும் ,தவறான கொள்கையின் காரணமாகவும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினர் மீது போர் தொடுத்தார் , அவர் அவர்கள் மீது தனது தீய எண்ணங்கள் கட்டாயப்படுத்த முயன்றார் ,அவர் அவர்களின் உடைமைகளைக் கைப்பற்றுவது ஷரீயத்தின் படி ஆகுமான செயலனக் கருதினார் ,அவர்களைக் கொல்வது ஆகுமெனக் கருதினார் ,இன்னும் இம்மாதிரியான செயல்கள் இறைஅன்பைப் பெற்றுத் தரும் செயலாகக் கருதினார் .அவர் ஹரம் ஷரீபைச்  சார்ந்தவர்கள் (மக்கா மற்றும் மதீனா ) மீது மிகக் குறிப்பாகவும் ஹிஜாஸ் மாகாணத்தைச் சார்ந்தவர்கள் மீது பொதுவாகவும்  கடுமையாக நடந்து கொண்டார் .அவர் முன்னோர்களில் நல்லடியார்கள் மீது மிகத் தரக் குறைவான சொற்களைப் பயன்படுத்தினார் . அவர்கள் மீது அவர் செய்த அட்டுழியங்கள் காரணமாக ,எண்ணிலடங்கா மக்கள் புனித மக்கா மதீனாவை விட்டும் விரண்டோடினர் ,இன்னும் பலர் அவரது படையினரால் ஷஹீதாக்கப்பட்டனர் .சுருக்கமாகக் கூறுவதானால் ,அவன் ஒரு கொடுங்கோலன், ஒருகிளர்ச்சியாளன்  மற்றும் ஒரு முற்றிலும் தீய நபர்.'
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 42]

' முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் உலகம் முழுவதும் உள்ள மக்களும் முஸ்லிம்களும் இறை மறுப்பளார்கலாகவும் காபிர்களெனவும் கருதினார் '
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 44]


'அந்த நஜ்தியாக்கள்   நம்பினார்கள் ,இன்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் நம்புகிறார்கள் , நபிமார்களின் வாழ்க்கை இவ்வுலகில் அவர்கள் வாழ்ந்த காலம் மட்டுமே . அவர்களின் மறைவுக்கு பின் அவர்களும் ஏனைய நம்பிக்கையாளர்களும் சரிசமம் என்று.'
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 45]

' இந்த கூட்டம் பெருமானார் ஸல்லலாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களைக் கனவில்/நினைவில் பார்ப்பதையும் அவர்களின் புனித ரவ்ழாவிற்கு ஜியாரத் செய்வதையும் கெட்ட பித்அத் என்றும் ஷரீயத்திற்கு முரணானது என்றும் கூறுகின்றனர் .இன்னும் அவர் அந்த திசையை நோக்கி பிரயாணம் செய்வதைக் கூட ஷரீயத்திற்கு முரணானது என்று கூறுகின்றார்.இன்னும் அவர்களில் சிலரின் கூற்றுப்படி,பெருமானாரின் புனித ஜியாரத் செய்யும் எண்ணம் கொண்டு பிரயாணம் செய்வது ஜினா செய்வதற்கு சமம் என்கின்றனர் .அல்லாஹ் இத்தகைய கெட்ட எண்ணங்களை விட்டும் நம்மைக் காப்பானாக ! '.
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 45]

'வஹ்ஹாபிகள் நபிமார்களுக்கு எதிராக மிகவும் ஆணவம் பிடித்த மொழிப் பிரயோகங்களைப் பயன்படுத்திகின்றனர் .இன்னும் இதை பெருமானாரிடமும் பயன் படுத்துகின்றனர் எந்த
அளவிற்கு அவர்களின் ஆணவம் சென்றுள்ளது என்றால் பெருமானாரின் அந்தஸ்து நமக்கு சரிசமமானது,அவர்களின் மூலம் சிறிதளவு நன்மை அல்லாஹ்வின் தூதை எத்தி வைக்கும் காலத்தில் கிட்டியது,அவர்களின் மறைவிற்கு பின் அவர்களைக் கொண்டு எந்த நன்மையும் இல்லை   என்கின்றனர் .
இவர்கள் இவ்வாறு எண்ணுவதால் ஷபாஅத்தைக் கொண்டு அல்லாஹ்விடம் பாவங்கள் மன்னிக்கப்பட இறைஞ்சுவது ஷரீயத்திற்கு முரணானது என்கின்றனர் .அவர்களின் முன்னோர்களும் இவ்வாறு பெருமானார் அவர்களின்  ஷபாஅத்தைக் கொண்டு அல்லாஹ்விடம் பாவங்கள் மன்னிக்கப்பட இறைஞ்சுவது ஷரீயத்திற்கு முரணானது என்கின்றனர் .(அல்லாஹ் இத்தகைய எண்ணங்களை விட்டும் நம்மைக் காப்பானாக !). எனினும் இத்தகைய எண்ணங்களை மீள்பதிவு செய்வது அனுமதிக்கப்பட்டதே , வெறுமனே குப்ரை உண்டாக்கக் கூடிய சொற்களை மீள்பதிவு செய்வது குப்ரை உண்டாக்காது .இன்னும் அவர்கள் ஒரு மனிதனின் கைத்தடி உண்டாக்கும் பயன் ஒப்பற்ற ஆளுமை பிரபஞ்சத்தின் அரசரான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ  ஸல்லம் அவர்களை விட அதிக நன்மை பயக்கும் ,ஏனெனில் ஒரு மனிதனின் கைத்தடியைக் கொண்டு ஒரு நாயிடம் இருந்து பாதுகாப்பு பெற முடியும் எனினும் பிரபஞ்சத்தின் பெருமையான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ  ஸல்லம் அவர்களால் இதைக் கூட செய்ய இயலாது '
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 47]

'வஹாபிகள் மறைபொருளான சடங்குகள் மற்றும் நயமான நடைமுறைகளுக்கு எதிராக உள்ளார்கள் - தியானிப்பது ,திக்ருல்லாஹ் ,ஷைகுமார்களுக்கு பைஅத் கொடுப்பது மற்றும் மஷாயிகுமார்களுக்கு எதிராகவும் ,ஷைகுமார்களுடன் தொடர்பில் இருப்பது ,இன்னும் பனா மற்றும் நித்திய சாசுவத நிலை அடைதல் போன்ற கொள்கைகளுக்கு எதிராக உள்ளனர் .அவர்களின் கண்ணோட்டத்தில் இவை எல்லாம் எந்த விளைவும் இல்லை ,கெட்ட பித் அத் ,மற்றும் அர்த்தமற்றவை '
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 59]

' வஹாபிய கொள்கையின்படி இமாம்களை தக்லீத் செய்வது பெருமானாரை நிந்தனை செய்வது ,இன்னும் அவர்கள் நான்கு இமாம்களையும் அவர்களை பின்பற்றுபவர்களையும் கேடுகெட்ட மற்றும் துன்மார்க்க வார்த்தைகளால் நிந்தனை செய்கின்றனர் .எனவே இவர்கள் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தை விட்டும் வெளியேறியவர்கள், இன்னும் இந்தியாவில் இவர்களை பிரதிபலிப்பவர்களும் இந்த துஷ்ட கூட்டத்தைச் சார்ந்தவர்களே . இவர்கள் முதலில் வரும் பொழுது தங்களை ஹன்பலி மத்ஹபைச் சார்ந்தவர்கள் என்று கூறினாலும் இவர்கள் பெரும்பாலான விஷயங்களில் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களைப் பின் தொடர்பவர்கள் அல்ல '
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 62]

'அர்  ரஹ்மானு அலல் அர்ஷிஸ் தவா என்ற குரான் வசனத்தின் மூலம் வஹாபிகள் அல்லாஹ் சிம்மாசனத்தில் அமர்ந்து உள்ளான் என்றும் அல்லாஹ் விற்கு பரிமாணங்கள் உண்டென்றும் நிரூபிக்க முயன்று  அல்லாஹ்விற்கு உருவம் உண்டென்று கூறுகின்றனர் '.
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 24]

'அரபுலகின் வஹாபிகள் அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரசூலல்லாஹ் ! என்று கூறுவதை கடுமையாக கண்டனம் செய்கின்றனர் , இன்னும் அதன் பயன்பாட்டை மிகவும் கடுமையாக கண்டிக்கவும்  மற்றும் பரிகாசம் செய்யவும் செய்கின்றனர் ,இன்னும் இதைக் கூறும் ஹரம் ஷரீபின் மக்கள் மீது வசைமாறிப் பொழியவும் செய்கின்றனர் .'
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 65]

'இந்த கேடுகெட்ட வஹாபிகள் பெருமானார் அவர்கள் மீது தொடர்ச்சியாக ஸலவாத் சொல்வதைப்  பகிரங்கமாகக் கண்டனம் செய்கின்றனர் ,இன்னும் தலாயிலுல் கைராத் ,கஸீதா புர்தா ,கஸீதா ஹம்சியா ஓதுவதை வெறுத்தொதுக்கப்பட்ட மற்றும் தேவையற்ற செயல் என்று கருதுகின்றனர் '.இன்னும் அவர்கள் கஸீதா புர்தாவின் சில வரிகளை குப்ர் என்றே கருதுகின்றனர் .உதாரணமாக ;
யா அஷ்ரபுல் ஹல்கி மாலி மன் அலூஸு பிஹி சிவாக இந்த ஹுலூலில் ஹாதிசில் அமமி
(படைபினங்களில் சிறந்தவரே ! எனக்கு தங்களைத் தவிர வேறு யாருமில்லை இந்த அபாய காலங்களில் )

[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 66]

'வஹாபிகள் அல்லாஹ்வின் கட்டளைகளைக் கொண்டு பெற்ற அறிவைத் தவிர ,பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ,அனைத்துவிதமான மறைவான மற்றும் உண்மையான அறிவை விட்டும் அற்றவர்கள் எனக் கருதுகின்றனர் '
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 62]

'வஹாபிகள் பிரபஞ்சத்தின் அரசரான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்  பிறப்பைக் கூறுவதை மிகவும் கண்டனத்திற்குரிய மற்றும் மிக மோசமான பித் அத் எனக் கூறுகின்றனர் '
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 67]

அன்வர் ஷாஹ் கஷ்மீரி பைத் அல் பாரி நூலில் ,பாகம் 1ல் எழுதுகிறார் 'முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி ஒரு மிகக் குறைந்த அளவே இல்முடைய ஒரு முட்டாள் '.

தேவ்பந்தி தப்லீக் உலமாக்களின் நூலில் வஹாபிகளைப்  பற்றி உள்ள மேற்கூறியவற்றைப் படித்த பின் தேவ்பந்த் வஹாபிகளின் அரபி மதரஸாவான தாருல் உலூம் தேவ்பந்த் ,இந்தியாவின் பத்வா வழங்கும் பிரிவில் வஹாபிகளைப் பற்றிய பத்வாவைக் கீழே காணுங்கள் !

இது மிகவும் மோசமான முனாபிக் தனம் இல்லையா என்பதை வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளோம்   .

வஹாபிகளின்  மீதுள்ள தங்களின் முஹப்பைத்தை இன்னும் எவ்வாறெல்லாம் இந்த தேவபந்தி தப்லீக் வஹாபிகள் வெளிப்படுத்துகிறார்கள் என்பதைக் பின்வரும் ஆதாரங்களில் காணலாம் :

எனினும் வாசகர்கள் தேவ்பந்தி தப்லீக் வஹாபிகள் அரபுலக ஸுன்னி உலமாக்களிடம் 'அல் முஹன்னதில் ' என்ன கூறினார்கள் என்பதை நினைவில் கொள்க ,

' நாங்கள் வஹாபிகளை வெறுக்கின்றோம் ,இன்னும் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தியையும் ,அவரைப் பின்பற்றுபவர்களையும் க்வாரிஜியாக்கள் எனக் கருதுகின்றோம் '.


1. இந்த பெயர் (வஹாபி) ஒருவர் இப்னு அப்துல் வஹ்ஹாபின் கொள்கையைப் பின்பற்றுவோருக்கு அல்லது அடிபணிந்து நடப்பவருக்கு சொல்லப்படும் .
[நூல் - இம்தாதுல் பத்வா ,பக்கம் 233]


2. மத்ரஸா ஜாமியுல் உலூம்,கான்பூரில் அஷரப் அலி தானவி சாஹிப் ஆசிரியராக இருந்த காலத்தில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது .அந்த மதரஸாவின் பகுதியில் வாழ்ந்த சில பெண்கள் சில இனிப்புகளைப்  புனித குரான் ஷரீப் ஓதி அதன் மூலம் கிடைக்கும் நன்மை எத்தி வைக்கப்படும் என்ற எண்ணத்துடன் கொண்டு வந்தனர்.எனினும் மத்ரஸா மாணவர்கள் குரான் ஓதாமல் இனிப்புகளை மட்டும் உண்டனர் . அது ஒரு சர்ச்சையைக்  கிளப்பியது .இது பற்றிய விவரம் தெரிவிக்கப்பட்ட பொழுது ,தானவி சாஹிப் வந்து உரத்த குரலில் சொன்னார்கள் ' சகோதரர்களே ! இந்த இடம் வஹாபிகளால் நிரம்பியுள்ளது . இங்கு பாத்திஹா அல்லது நியாஜ் ஓதவோ எதையும் கொண்டு வராதீர்கள் '
[நூல்- அஷ்ரபுஸ் ஸவானிஹ் ,பக்கம் 45]

3.யூசப் காந்தல்வியின் சரிதை ,பக்கம் 192ல் நாங்கள்  தீவிரமான வஹ்ஹாபிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

4.தேவ்பந்தி வஹாபிகளின் மூன்னோடிகளில் ஒருவரான ஷைகுல் ஹதீஸ் ஜக்கரியா சாஹிப் அறிவிக்கின்றார் 'நான் உங்கள் அனைவரையும் விட தீவிரமான வஹ்ஹாபி ' .
[ மவ்லானா முஹம்மத் யூசுப் காந்தலவியின் சரிதை ,பக்கம் 193,எழுதியோர் முஹம்மத் சானி ஹசனி மற்றும் மன்சூர் நுஃமானி ].

5.என்னிடம் 10000 ருபாய் இருந்தால், நான் பகிருந்திருப்பேன் மக்கள் அனைவரும் அவர்களாக முன்வந்து வஹாபியாயிருப்பர் .[நூல் - அல் இபாததுல் யௌமியா ,அஷ்ரப் அலி தானவி ]
Ashraf Ali Thanavi on Wahhabis


குறிப்பு : ஹுசைன் அஹ்மத் தாந்த்வி மதனீ சாஹிப் வஹாபிகளைப் பற்றி என்னவெல்லாம் குறிப்பிட்டார் என்று சீர்தூக்கி பாருங்கள் .

இப்பொழுது ,
தற்காலத்தில் வாழ்ந்து வரும் தேவ்பந்தி முப்தி ஒருவரின் கருத்து அப்துல் வஹ்ஹாப் நஜ்தியைப் பற்றியும் ,வஹ்ஹாபிகளைப் பற்றியும் .
Deobandi Mufti Desai Fatwa on Wahhabis


நிற்க !!!

இதே முப்தி பின்னர் அப்துல் வஹ்ஹாப் நஜ்தியைப் புகழ்ந்து பின்னர் பத்வா வெளியிட்டார் .இது பற்றிய சர்ச்சை வந்ததும் தனது இணையதளத்தில் இருந்து பின்னர் அதை நீக்கி விட்டார் .
இது தொடர்பான விவாதம் நடந்ததின் பதிவு கீழே முப்தியின் பத்வாவுடன் .
Mufti Desai Fatwa Praising Wahabis -Removed


என்ன இந்த தவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் திடீர் மாற்றம் ???

தேவ்பந்திகளின் அதிகாரப்பூர்வ நூலான அல் முஹன்னத் இவர்கள் வஹாபிகளைப் பற்றி துர்ருல் முக்தார் நூலில் என்ன சொல்லப்படுள்ளதோ அதுவே தமது நிலைப்பாடு என்கின்றனர் .

இவ்வாறு பொய் உரைத்ததன் மூலம் மட்டுமே தப்லீக் தேவ்பந்திகள் அரபுலக ஸுன்னி உலமாக்களிடம் பத்வா பெற முடிந்தது எனபது இதன் மூலம் நிரூபணம் ஆகின்றது .

ஆனால் தேவ்பந்தின் பத்வா வழங்கும் தாருல் இப்தாக்களோ அப்துல் வஹ்ஹாப் நஜ்தியை புகழ்ந்து தள்ளுகின்றன !!!

இதுதான் தேவ்பந்திகளின் வஹாபிய முனாபிக் கொள்கை !!!

இது தேவ்பந்தி தப்லீக் வஹ்ஹாபிகள் அல் முஹன்னதை அரபுலக ஸுன்னி உலமாக்களை ஏமாற்றம் அளிக்கவே எழுதியது என்பது திண்ணம் !

தேவ்பந்திகள் வஹ்ஹாபிகளை சந்திக்கும் பொழுது இப்போது உள்ள பத்வாக்களையும் ,துணைக்கண்டத்திற்கு வெளியே உள்ள உலமாக்களை சந்திக்கும் பொழுது அல் முஹன்னதையும் காட்டுவர் .

இதுவே இந்த முனாபிக்கீன்களின் சுயரூபம் !
      
Related Posts Plugin for WordPress, Blogger...

Thursday, 27 November 2014

அல் முஹன்னத் - 1




     தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் அகாபிர் அல் முஹன்னத் நூலை ஏன் எழுதினார்கள் ?
                                            Al Muhannad

                    அல் முஹன்னத் அலா அல் முபன்னத் என்னும் நூல் அல் தஸ்திகத் லி தாப் அல் தல்பிஸாத் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த நூல் இந்திய துணைக்கண்டத்தில் முதன்முதலில்  ஹிஜ்ரி 1325(1907)ல் வெளியிடப்பட்டது.

அல் முஹன்னத் எழுதப்பட்டதின் பிரதான நோக்கம் அரபுலகைச் சார்ந்த அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்களிடையே தேவ்பந்திகள் வஹ்ஹாபிகள் அல்ல என்று நிரூபணம் செய்வதற்கே !!!

 அல் முஹன்னத் மெளலவி கலீல் அஹ்மத் சஹரான்பூரி(மறைவு 1346 ஹிஜ்ரி/1927) என்ற தேவ்பந்திகளின் முன்னோடிகளால் மக்களை ஏமாற்றவும் ,தேவ்பந்திகளின் நூற்களில் உள்ளவற்றை மறைத்தும் எழுதப்பட்டது. அல் முஹன்னதைக் கொண்டு போலி பெருமை பேசும் தேவ்பந்திகள் அதில் கையொப்பமிட்ட அறிஞர்களின் பட்டியலை மட்டும் தான் தருவார்கள்.அவர்களிடம் எவ்வளவு கேட்டாலும் கேட்டாலும் அதில் கையொப்பமிட்ட அறிஞர்களின் கருத்துகளை நம்மிடம் காண்பிக்க வெட்கி மறுத்துவிடுவார்கள் .

இந்த நிலையை இங்கு காணுங்கள் 

இன்னும் தேவ்பந்திகள் அந்த நூலை அதன் மூல வடிவத்தில் எவ்வாறு அரபுலக இஸ்லாமிய அறிஞர்களிடத்தில் சமர்ப்பிக்கப் பட்டதோ அவ்வாறே மக்களிடையே சமர்ப்பிக்க வேண்டும்,அதாவது அதன் கேள்வி,பதில் வடிவத்தில். அதன் மூலம் அனைவரும் உண்மையை அறிய முடியும் .
முதலில்,தேவ்பந்தி முன்னோடிகளில் ஒருவரான மெளலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி தனது 'பதாவா ரஷீதியாவில்'      மெளலூது பற்றி என்ன சொல்கின்றார் என்று பார்ப்போம் .

"எந்த மெளலித் சபைகள் ஷரீயத்திற்கு புறம்பான செயல்களை விட்டும் தூய்மையாக இருந்தாலும்,முன்னெச்சரிக்கை காரணமாக,மக்கள் அதில் கலந்து கொள்வது தற்காலத்தில் ஆகாத செயலாகும்   "   

கேள்வி :
      ஒரு மெளலித் சபையில் பலவீனமான அல்லது ஜோடிக்கப்பட்ட சம்பவங்களை விட்டும் விலக்கி  ஆதாரப்பூர்வமான சம்பவங்கள் மட்டுமே விவரிக்கப்பட்டு நடைபெற்றால் அதில் கலந்து கொள்வதற்கு அனுமதி உள்ளதா ?

பதில் :
இதில் கலந்து கொள்வதற்கு வேறு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .
[நூல் - பதாவா ரஷீதியா ,வால்யூம் 2,பக்கம் 131]

மெளலித் சபைகள் நடத்துவது எந்த நிலையிலும் அனுமதி இல்லை
[நூல்- பதாவா ரஷீதியா ,வால்யூம் 2,பக்கம் 96]


கேள்வி :
     வலிமார்களின் 'உரூஸ்' என்னும் கந்தூரி வைபவத்தில் குர்ஆன் மட்டுமே ஓதி இனிப்பு வழங்கப்பட்டால் அதில் கலந்து கொள்வதற்கு அனுமதி உள்ளதா ?

பதில்:
         எந்த உரூஸ்,மெளலித் மஜ்லீஸ்களிலும் கலந்து கொள்வதற்கு    அனுமதியில்லை  மேலும் எல்லாவிதமான உரூஸ்,மெளலித் மஜ்லீஸ்களும் அனுமதியல்லாதவையாகும். 
[நூல்- பதாவா ரஷீதியா ,வால்யூம் 3,பக்கம் 143]

        மீலாத் ஷரீப்,மிஹ்ராஜ் ஷரீப் ,கியார்வீன் ஷரீப்,உர்ஸ் ஷரீப்,கத்தம் ஷரீப் ,சைலும்,பாதிஹா,ஈசாலே சவாப் இவை ஷரியத்திற்கு மாற்றமாகவும்,கெட்ட பித்அத்களாகும்,மேலும் இவை ஹிந்துக்களின் நடைமுறையாகும்.


 [நூல் - பதாவா ரஷீதியா,பாகம் 2 பக்கம் 144 -150,பதிப்பாளர்கள் ரஹீமியா குதுப்கானா சுநேஹ்ரி மஸ்ஜித் டில்லி ,ஹிஜ்ரி 1352,1933ம்  வருட பதிப்பு ]

[நூல் - பதாவா ரஷீதியா ,பாகம் 3 பக்கம் 93,941 ,பதிப்பாளர்கள் ரஹீமியா குதுப்கானா சுநேஹ்ரி மஸ்ஜித் டில்லி ,ஹிஜ்ரி 1351,1932ம்  வருட பதிப்பு  ]

 
இனி அல் முஹன்னதில் உள்ள தேவ்பந்தி மோசடிகள் பின்வருமாறு
தேவ்பந்திகளின் இந்த பத்வாவை வாசித்த சுன்னத் வல் ஜமாஅத் அன்பர்களே,இனி மெளலவி கலீல் அஹ்மத் அம்பேத்வி அல் முஹன்னதில் எவ்வாறு உண்மைகளை உருக்குலைத்தார் என்று பார்ப்போம் .
அல் முஹன்னதில் உள்ள கேள்விகளைக் கேட்டது அரபு அறிஞர்கள் அல்ல என்பதை வாசகர்கள் நினைவில் கொள்க !!!

மெளலவி கலீல் அஹ்மத் அம்பேத்வி தானே கேள்விகளைக் கேட்டு ,அதற்கு தேவ்பந்திகளின் நிலைப்பாடு பல்வேறு விஷயங்களில் என்ன என்பதை தமது பதிலாக எழுதியுள்ளார் .

கேள்வி எண் 21: [அல் முஹன்னத் ]


      " நீங்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் மெளலித் கொண்டாட்டங்கள் ஷரீயத்தின் படி அனுமதிக்கப்படாத ஒன்று என்றும் அது குற்றம்(கபீஹ்),பித்அத்,ஹராம் என்று  சொல்கின்றீர்களா ? அல்லது இது விஷயத்தில் வேறு ஏதாவது கூறுகின்றீர்களா ? "

இனி மெளலவி கலீல் அஹ்மத் அம்பேத்வி கடுகளவு நேர்மையுடைய ஒரு தேவ்பந்தியாக இருந்தால் என்ன சொல்லியிருக்க வேண்டும்,

 " ஆமாம்,எங்களின் ஸ்தாபகர் இஸ்மாயில் திஹ்லவி இம்மாதிரியான கொண்டாட்டங்களை முஷ்ரிக்கான நடைமுறை என்கின்றார் .எங்களின் ஷைகு ரஷீத் அஹ்மத் அனைத்து மெளலித் வைபவங்களையும் அனுமதியில்லாதது என்று தனது நூல்களிலும்,பத்வாக்களிலும் கூறியுள்ளார்.நாமும் இம்மாதிரியான மெளலித் விழாக்கள் ஹிந்துக்கள் தங்களின் கடவுள் கிருஷ்ணனை கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி விழா போன்று என்று கூறியுள்ளோம் "(பதாவா ரஷீதியா ,பராஹீனே காத்தியா )

இந்த பதிலை கலீல் அஹமத் தனது அல் முஹன்னதில் எழுதியிருந்தால் எத்துணை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்தவர்கள் அதில் கையொப்பமிடுவார்கள் !!

ஆனால்,கலீல் அஹ்மத், வஹ்ஹாபி பித்னா எவ்வாறு அரபுலகில் வேகமாக பரவி வந்ததையும், அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்த சத்திய உலமாக்கள் அதை எதிர்த்து வந்ததையும் அறியும் அளவுக்கு அறிவு பெற்றிருந்தார் .

கலீல் அஹ்மத் அல் முஹன்னதில் என்ன எழுதினார் என்று அறியும் முன் தேவ்பந்திகளின் மற்றொரு அறிஞரான அன்வர் ஷாஹ் காஷ்மீரி(இறப்பு 1933) மெளலித் பற்றி என்ன எழுதினார் என்று பார்ப்போம்
Anwar Shah Kashmiri

وأحدثه صوفي في عهد سلطان إربل سنة ( 600 ) ، ولم يكن له أصل من الشريعة الغراء
العرف الشذي شرح سنن الترمذي - (2 / 82 مؤسسة ضحى للنشر والتوزيع)
"அது சுல்தான் இப்ரில் காலத்தைச் சார்ந்த ஸூபி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது மேலும் இதற்கு நமது தூய்மையான ஷரீயத்தில் எந்த ஆதாரமும் இல்லை " 

இனி,மெளலானா கலீல் அஹமதுவின் பதில் அல் முஹன்னதில் என்ன என்பதைப் பார்ப்போம் .


"எந்த ஒரு முஸ்லீமுக்கும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பிறப்பை கொண்டாடுவதிலோ,பேசுவதிலோ எந்த பிரச்சனையும் இல்லை. இன்னும் யாரும் பெருமானார் அவர்களின் செருப்பைப் பற்றியோ அல்லது அவர்கள் பிரயாணம் செய்த பிரயாணியைப் பற்றி பேசுவதையோ கூட பித்அத் என்று சொல்ல முடியாது.பெருமானார் அவர்களுடன் தொடர்புடைய எல்லா சம்பவங்களையும் பற்றியும் மனிதர்களைப் பற்றியும் பேசுவது அழகான ஒரு செயலாகும் இன்னும் எங்களிடத்தில் அது 'முஸ்தகப் '.அது பெருமானார் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி பேசியோ அல்லது அன்னாரின் கனவுகளைப் பற்றி பேசி பிறப்பைக் கொண்டாடுவது எங்களிடத்தில் பரிந்துரைக்கப்படுகின்ற ஒரு செயலாகும்" .

ஆக கலீல் அஹ்மத் அரபுலகை சார்ந்த அஹ்லுஸ் ஸுன்னாஹ் அறிஞர்களை திருப்திபடுத்தும் பொருட்டு இந்த பதிலை அல் முஹன்னதில் எழுதினார் என்பது திண்ணம் .

மேலும் சில வரிகளுக்கு பின் அவர் எழுதுகிறார் ,

"நாம் பெருமானாரின் மெளலித் பற்றி பேசுவதற்கு எதிரானவர்கள் அல்லர் ,ஆனால் அதில் கலந்து விட்ட தவறான விஷயங்களுக்கு எதிர்ர்பாக உள்ளோம் .உதாரணமாக நீங்கள் இந்தியாவில் உள்ள மெளலித் மஜ்லிஸ்களில் ஜோடிக்கப்பட்ட விஷயங்கள் (மவ்து ) பேசப்படுகின்றன ,ஆண்கள் மற்றும் பெண்கள் அந்த சபைகளில் ஒன்றாக கலந்து கொள்கின்றனர் , மின்விளக்குகளும் தேவையற்ற வீண் விரயங்களும் நடைபெறுகின்றன,இதில் கலந்து கொள்வது  'வாஜிப்' என்று சொல்கின்றனர் ,கலந்து கொள்ளாதவர்களை விமர்சிக்கின்றனர் .இதுவெல்லாம் போக இன்னும் பல ஷரீயத்திற்கு மாற்றமான பல்வேறு விஷயங்கள் எல்லா மெளலித் மஜ்லீஸிலும் நீக்கமற நிறைந்துள்ளன ".

இது அல் முஹன்னதில் உள்ள  பொய்களின் முதல் ஆரம்பம் !

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்த எந்த மார்க்க அறிஞரும் மெளலித் மஜ்லிஸை 'வாஜிப்'
என்று கூறியதும்  கிடையாது,அதில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக கலந்து இருப்பதும் கிடையாது .இப்பொழுதும் இன்றைய நவீன யுகத்தில் பெருவாரியான மீலாத் விழாக்கள்  இரவில் நடைபெறும் பொழுது ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர் .காலையில் நடைபெறும் விழாக்களில் பல்வேறு உலமாப் பெருமக்களின் பயான்கள் நடைபெறுவதையும் கண்கூடாகப் பார்க்கின்றோம் .

அப்படியானால் சில நூறு ஆண்டுகள் முன் கலீல் அஹ்மத் கூறியது போல் ஆண்களும் பெண்களும் ஒன்றாக கலந்து இருப்பதை யோசித்துப் பாருங்கள் ???

இனி தேவ்பந்தின் ஒரு பத்வாவைக் காண்போம் .


Deoband on Milad

கேள்வி :

      " நீங்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மெளலித் கொண்டாட்டங்கள் ஷரீயத்தின் படி கண்டிக்கத்தக்க(முஸ்தக்பாஹ்)  ஒன்று என்றும் அது தீய தடை செய்யப்பட்ட பித்அத்(அல் பித்அத் அல் ஸய்யியாஹ் அல் முஹர்ரமாஹ் ) என்று  சொல்கின்றீர்களா ? அல்லது இது விஷயத்தில் வேறு ஏதாவது கூறுகின்றீர்களா ? "

[இது விஷயமாக ரஷீத் அஹ்மத் கங்கொகியும் ,அன்வர் ஷாஹ் கஷ்மீரியும் கூறியதை நினைவில் கொள்க ]

பதில் :

     "எந்த ஒரு முஸ்லீமும் கூறாத ஒன்றை நாங்கள் ஒரு போதும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பிறப்பை கொண்டாடுவதிலோ,பேசுவதிலோ மட்டுமல்ல ,இன்னும் பெருமானார் அவர்களின் புனித செருப்பில் கிளம்பும் தூசியோ  பற்றியோ அல்லது அவர்கள் பிரயாணம் செய்த பிரயாணியின் சிறுநீரையோ  பற்றி பேசுவதையோ கூட ஷரீயத்தின் படி கண்டிக்கத்தக்க  ஒன்று என்றும் அது தீய தடை செய்யப்பட்ட பித்அத் என்று சொல்ல முடியாது.பெருமானார் அவர்களுடன் குறைந்த அளவு தொடர்புடைய சம்பவங்களை பற்றி பேசுவது மிகவும் விரும்பத்தக்க பரிந்துரைக்கப்பட்ட செயல்(அஹப் அல் மன்துபத் ) இன்னும் அது மிகப் பெரும் விரும்பத்தக்க செயலாகும்(அலா அல் முஸ்தஹப்பத் ).

இன்னும் எங்களிடத்தில் பெருமானார் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி நினைவு கூறுவதோ அல்லது அன்னாரின் புனித திருமுகத்தையோ,நடப்பது,நிற்பது,உட்காருவது,உறங்குவது அல்லது  அன்னாரின் புனித சிறுநீரைப் பற்றியோ  நினைவு கூறுவது என்பதானது எங்களின் தெளிவான ஆய்வு நூலான 'பராஹீனெ காத்தியா'வில் கூறியது  போன்றும் மற்றும் எங்களது பல்வேறு மஷாயிகுமார்களின் பத்வாக்களில் உள்ளது போன்றும் ,உதாரணத்திற்கு மவ்லானா அஹ்மத் அலி அல் முஹத்தித் அல் சஹாரான்பூரி ஷாஹ் முஹம்மது இஷாக் திஹ்லவியின் மாணவர் மற்றும் முஹாஜிர் மக்கி அவர்களது பத்வாவை நாம் எங்கு குறிப்பிடுகின்றோம் ,இதன் மூலம் இவை இது விஷயமாக உள்ள எங்களது பிற பத்வாகளுக்கு ஒரு முன்னுதாரணம் ஆகும் .

அவர்களிடத்தில் மீலாத் விழாவைக் குறித்து கேட்கப்பட்டது  ,இது எந்த முறையில் அனுமதிக்கப் பட்டது எந்த முறையில் அனுமதி  இல்லை  என்று ?

அவர்கள் பின்வருமாறு பதில் உரைத்தார்கள் ,
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித பிறப்பை வலுவான ஆதாரங்களைக் கொண்டும் ,கடமையான வழிபாடுகள் அல்லாத 
காலங்களிலும்,ஸஹாபிகளின் வழிமுறைக்கு மாற்றமில்லாத்தும் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட மூன்று தலைமுறைகளைச் சார்ந்த ஸலபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறைக்கு மாற்றமில்லாத்தும்,ஷிர்க் பித்அத் போன்றவற்றை விட்டு அகன்றதும்,  பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் கூற்றான "நானும் என் தோழர்களும் உள்ளது போல்" என்பதற்கு ஆதரமாக விளங்கிய ஸஹாபிகளின் நடைமுறைகளுக்கு எதிராகவும் இல்லாமல் ,ஷரீயத்திற்கு மாற்றமான அறுவறுப்பான செயல்களை விட்டும் விலகிய 
மஜ்லிஸில்  நினைவு  கூறுவது,  நன்மைகளும் பரக்கதுகளும்  அடைய ஒரு காரணமாகும்.

மேலும் இதை நடத்த உள்ள ஓர் நிபந்தனை இந்த மஜ்லிஸை தூய எண்ணத்துடனும் ,நேர்மையுடனும்    மேலும் இவை முழுமையான நல்ல நினைவுகூர்தலில் உள்ளடக்கியது என்று நம்பிக்கை கொள்ளுதல் 
(ஜும்லாத் அல்  அத்கர் அல் ஹஸனஹ் அல் மந்தூபஹ் ), மேலும் குறிப்பிட்ட கால அளவைக் கொண்டு தடையில்லாமல் இருத்தல் .இவ்வாறு இருக்கும் பொழுது இத்தகைய ஒரு மெளலித் மஜ்லீஸை சட்டவிரோதம் (கைர் மஷ்ரூ ) என்றோ பித் அத் என்றோ எந்த முஸ்லிமும் கூற முடியாது .

பத்வா முடிவுற்றது .

இதைக் கொண்டு நாங்கள் மீலாத் விழாவை பகிரங்கமாகக் கண்டிக்கவில்லை ,மாறாக இத்தகைய மெளலித் மஜ்லீஸுகளில் நடைபெறும் அருவருப்பான செயல்களையே,நீங்கள் இந்தியாவில் காண்பது போல் ,ழயீபான அல்லது மோசடியான நிகழ்ச்சிகளைக் பயான்களில்  கூறுவது ,
ஆண்பெண் இருபாலாரும் மறைவின்றி கலத்தல் ,ஆடம்பரமாக விளக்குகளைக் 
கொண்டு அலங்கரித்தல் ,இவை கடமையானது என்று நம்பிக்கை கொள்ளுதல் ,இத்தகைய மஜ்லிஸில் கலந்து கொள்ளாதவர்களை இழிவுபடுத்துதல் ,அவமதித்தல் ,பெரும்பாலும் ஷரீயத்திற்கு மாற்றமான அறுவறுப்பான செயல்களை விட்டும் விலகியிருக்காத  மஜ்லிஸ்   ஆகியவற்றையே   நாம் பகிரங்கமாகக் கண்டிக்கின்றோம் .

அவற்றிக்கு மற்றாக ஷரீயத்திற்கு மாற்றமான அறுவறுப்பான செயல்களை விட்டும் விலகிய
மஜ்லிஸில் நினைவு கூறுவதை நாம் அருவருப்பு என்றோ  பித்அத் என்றோ கூறவில்லை .
எப்படி இந்த அசிங்கமான நம்பிக்கையை  ஒரு முஸ்லீமைக்  கொண்டு சந்தேகிக்கப்படும் ?எனவே இந்த பண்புகளை எங்களிடத்தில் சாற்றியவர்கள் ஏமாற்றும் பொய் சிந்தனையாளர்களின் கண்டுபிடிப்புகள்  ( அல்லாஹ் உயர்வான அந்த ரப்பு அவர்களை இழிவுபடுத்துவானாக,இன்னும் கடலிலும் நிலத்திலும் ,மென்மையான மற்றும் கடினமான நிலத்தில் அவர்களை சபிப்பானாக )

[ நூல் - அல் முஹன்னத் அலா அல்  முபன்னத் யானி அகாயிதே உலமாயே அஹ்லுஸ் ஸுன்னாஹ் தேவ்பந்த் ,பக்கம் 60-63 ]

மெளலிதுக்கு எதிரானவர்கள் ,அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்த முஸ்லிம்களை அறியாமையில் இருப்பதாக
பிதற்றுகிறார்கள் .
செளத் ஆப்ரிக்காவில் உள்ள வஹாபிகள் வெளியிட்ட ஒரு பிரசுரத்தில் பின்வருமாறு கூறியுள்ளனர் ,இந்தியாவில் மெளலித் மஜ்லீஸ் நடைபெறும் பொழுது திரைக்கு பின்னால் ஒரு பெண்,தன் மடியில்  குழந்தையுடன் அமர்ந்திருப்பால் ,சிறிது நேரத்தில் குழந்தையைக் கிள்ளும் போது அதன் அழுகுரலைக் கேட்டு மக்கள் கியாமில் எழுந்து நிற்பர் .அதாவது பெருமானாரின் பிறப்பை குறிப்பதாக எண்ணிக் கொண்டு .

வாசகர்களே இது ஒரு கடைத்தெடுந்த பொய் ,இந்த கூற்றைக் கூறியவர் நாளை மறுமையில் கேள்வி கேட்கப்படுவது நிதர்சனம் .
இந்த வஹாபிகள் சுன்னத் வல் ஜமாத்தினரை எந்த அளவு வெறுக்கின்றனர் என்றால் தமது விருப்பத்தை நிறைவேற்ற இந்த அளவுக்கு பொய் புரட்டுகளை புனைவர் .

இது அல் முஹன்னதில் உள்ள ஒரு கேள்விக்கான பதில் தான் ( கேள்வி எண் 21).

ஏனைய பிற கெள்வி பதில்களும் இம்மாதிரியான பொய் புரட்டுகளால் நிரம்பியது தான் .

அல் முஹன்னதின் மூல பிரதியை வாங்கி படியுங்கள் ,அப்பொழுது தெரியும் இவர்களின் கொள்கைகளுக்கும் அல் முஹன்னதிலும் உள்ள வேறுபாடுகள் !!!



Related Posts Plugin for WordPress, Blogger...