Showing posts with label Taqwiyathul Imaan tamil. Show all posts
Showing posts with label Taqwiyathul Imaan tamil. Show all posts

Saturday, 6 October 2018

காஸிம் நாணோத்வியின் தவஜ்ஜு

மவ்லானா முனாஜிர் ஹஸன் ஓர் ஆச்சரியமான சம்பவத்தை விவரிக்கிறார் . ஒரு சிலர் சட்டா மஸ்ஜிதில்(தேவ்பந்த் )  குழுமியிருந்தனர் . மவ்லானா யாகூப் (தேவ்பந்த் மத்ரஸாவின் பொறுப்பாளர் ) அந்த கூட்டத்தில் இருந்தார் . மவ்லானா யாகூப் கூறினார்கள் 

" இன்று காலை தொழுது கொண்டிருக்கும் பொழுது எனது உயிர் மாண்டு விடும் நிலையில் இருந்தது . மக்கள் அவரிடம் என்ன காரணம் என்று வினவினர் ? . அவர் கூறினார் சூரா முஸம்மில் ஓதிய பொழுது ,எனது இதயம் ஓர் விந்தையான சக்தியின் காரணமாக திடீரென இறுகி ,எனது ரூஹ் எனது உடலை விட்டும் வெளியேற இருந்தது . ஆனால் எப்படியோ இந்த நிலை சிறிது நேரத்தில் மாறியது .

தொடர்ந்து அவர் கூறினார் ,தொழுகை முடிவுற்றவுடன் இந்த விஷயம் குறித்து ஆழ்ந்து சிந்தித்தேன் . என்னிடம்  சொல்லப்பட்டது அந்த சம்பவம் நடந்த பொழுது மவ்லானா காஸிம் நாணோத்வி மேராத் என்னும் ஊரில் இருந்து என்னை நோக்கி தவஜ்ஜு செய்தார்கள் . இதன் காரணமாக எனது ரூஹ் எனது உடலை விட்டும் வெளியேறும் நிலைக்கு சென்று எனக்கு சங்கடம் ஏற்பட்டது .

மேலும் தொடர்ந்து

" எல்லாவற்றையும் அலசி ஆராயும் புத்தி உடையோர் இதனை எங்கனம் புரிந்து கொள்வர்  . தேவ்பந்திற்கும் ,மேராத் நகரங்களுக்கும் இடையே அதிக தொலைவு இருந்தாலும் , இந்த தூரம் தடை ஏற்படுவதற்கு ஓர் காரணமல்ல " . 

சவானெஹ் காசிமி


[ நூல் - சவானெஹ் காசிமி , பாகம்  1, பக்கம் 345 ]

ஆய்வு :  

இந்த விந்தையான சம்பவத்தை எங்கனம் புரிந்து கொள்வது ? இல்யாஸி தப்லீகி தேவ்பந்திகள் விளக்கம் அளிப்பார்கள் என்று எண்ணுகின்றேன் . மவ்லானா யாகூப் மிகவும் உயர்ந்த தரஜா உடையவர் போலும் . தொழுகை முடிந்து ,நடந்த சம்பவம் பற்றி ஆழ்ந்து யோசித்த நொடிப் பொழுதில் ,எல்லாமே அவருக்கு காண்பிக்கப்பட்டது .

சில மாதங்களோ ,சில மணி நேரங்களோ  அல்ல சில வினாடிகளில் வேறு ஓர் ஊரில் இருக்கும் மவுலானா காஸிம் நாணோத்வி தான் இதை செய்தார் என்று அறிந்தார் .

சிறிதேனும் வெட்கம் இருந்தால் தேவ்பந்திகள் தங்களது  தலையை தொங்கிக் கொள்ளட்டும் . இதுதான் தங்கள் பிர்காவின் உலமாக்களை பற்றிய அவர்களின் நம்பிக்கை .

ஆனால் ஈருலக இரட்சகர் கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் பற்றிய அவர்களது நம்பிக்கை பின் வருமாறு 

" பல விஷயங்களில் ,நபிகள் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்கள் தவஜ்ஜு செய்தார்கள் ,அவர்கள் கவலையுற்றார்கள் ,அமைதி காத்தார்கள் . இப்க் உடைய சம்பவம் நிகழந்த பொழுது (உம்முல் மூஃமீனின் அன்னை ஆயிஷா رضي الله عنها அவர்கள் மோதிரம் தொலைத்ததும் ,இஸ்லாத்தின் எதிரிகள் அவதூறு பேசியதும் )   ,நாயகம் தவஜ்ஜு செய்தார்கள் எனினும் எதையும் அறிய முடியவில்லை . ஒரு மாதம் கழித்து வஹீ மூலமே அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது " 

[ நூல் - ஹிப்ளுள் ஈமான் , பக்கம் 7,அஷ்ரப் அலி தான்வி  ] 

உங்களது பிர்காவின் உலமாக்களை பெருமை பிதற்ற எத்துணை கதைகளை உங்கள் நூற்களில் எழுதியுள்ளீர்கள் . நொடிப்பொழுதில் தவஜ்ஜு செய்யும் உங்களது உலமாக்கள் ???


இல்யாஸி தப்லீகி தேவ்பந்தி வஹாபிகளே ,இன்னும் எத்துணை எத்துணை ஆதாரம் அளித்தால் ,உங்கள் முன்னோடிகள்  கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள்  மீது அவமரியாதை செய்தனர் என்றும்  ,அவர்களின் சங்கையையும் ,கண்ணியத்தையும் குறைத்தனர் என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் ???

மூஃமீன்களே ,நடுநிலை வேஷம் போட்டு உலக ஆதாயம் தேடும் உலமாக்களே , உண்மையில் நாம் நாளை கியாமத் வேளையில் உச்சந் தலையில் சூரியன் அனல் கக்கும் வேளையில் ,இப்பாவிகளுக்கு மன்றாடும் ஷபீயுல் முதனீபீன் தாஹா ரஸூல்   
صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின் ஷபாஅத்தை  யாசிப்பீர்களேயானால் , கண்மணி நாயகத்தை அவமரியாதை செய்யும் முனாஃபிக்களை நேசிப்பதை விட்டும் விலகுங்கள் .

இத்துடன் இஸ்மாயில் திஹ்லவி "தக்வியத்துல்  ஈமான் " நூலில் எழுதியுள்ளதையும் காண்க 

" அல்லாஹ்வையன்றி வேறு யாராகிலும்  மறைவான ஞானம்  உடையவர் என்று நினைத்தாலோ , அல்லது வேறு இடத்தில நடப்பவற்றை அறிகின்றார் என்று நினைத்தாலோ , அவர்கள் சுயமாக அறிந்தார்கள் என்றோ , அல்லது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து அறிவிக்கப் பட்டது என்று நம்பிக்கை கொண்டாலும் ,எல்லா நிலையிலும் அது ஷிர்க் "

[நூல் - தக்வியத்துள் ஈமான் , பக்கம் 10 ] 
Related Posts Plugin for WordPress, Blogger...

Thursday, 13 August 2015

தக்வியத்துல் ஈமான் மீது தேவ்பந்திகளின் கேள்வி



அல்லாமா அமீன் ஒகார்வி (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் தமது நூலில், இஸ்மாயில் தெஹ்லவி எழுதிய தக்வியத்துல் ஈமான் நூலில் உள்ள வாக்கியத்தை குறிப்புகளுடன் எழுதியுள்ளார்கள் ,

"எல்லா படைப்புகளும் ,அது மிக உயர்ந்த (நபிமார்கள்) அல்லது மிக சிறிய (நபி அல்லாதவை ) படைப்பாயினும், அல்லாஹ்வின் திருமுன் அவை செருப்பு தைக்கும் செம்மானை விட தரம் தாழ்ந்தவை " .

தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரின் கேள்வி :

நீங்கள் அடைப்புக்குறியில் உள்ள சொற்றொடர் மூல நூலில் எங்கு உள்ளது என்று தெரிவிக்க இயலுமா ?

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினரின் பதில் :

பக்கம் 20,தக்வியத்துல் ஈமான்

Taqwiyathul Iman,Pg 20
"ஹர் மக்லூக் படா ஹோ யா சோடா வோ அல்லாஹ் கீ ஷான் கே ஆகே சமர் ஸே பீ ஜலீல் ஹை "

மொழிபெயர்ப்பு :
 "எல்லா படைப்புகளும் ,அது மிக உயர்ந்த அல்லது மிக சிறிய  படைப்பாயினும், அல்லாஹ்வின் திருமுன் அவை செருப்பு தைக்கும் செம்மானை விட தரம் தாழ்ந்தவை " .

இனி தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் கேள்வி யாதெனில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் உயரிய படைப்பு என்பதற்கு நபிமார்கள் என்று அடைப்புக்குறிக்குள் எவ்வாறு விளக்கம் அளிக்கின்றார்கள் ???

தக்வியத்துல் ஈமானின் நூலின் ஆசிரியர் இஸ்மாயில் தெஹ்லவி வஹ்ஹாபி
தமது அதே நூலில் சில பக்கங்கள் கழித்து தாமே 'உயரிய படைப்பு '  என்பதற்கு விளக்கம் அளிக்கின்றார் .

Taqwiyathul Iman,Pg 80


" யானி இன்சான் ஆபஸ் மே சப் பாய் ஹை . ஜோ படா புஜுர்க் ஹை வொஹ் படா பாய் ஹை ,தோ உஸ்கி படே பாய் கே ஹி தசீம் கீஜியே அவ்ர் மாலிக் சப் கா அல்லாஹ் ஹை பண்தகீ உஸ்கோ சாகியே .இஸ் ஹதீஸ் சே மாலும் குஆ கி அவ்லியா வ அன்பியா ,இமாம் வ இமாம் சாடே, பீர் வ ஷஹீத் யானி ஜிதானே அல்லாஹ் கே முகர்ரிப் பந்தே ஹை ,வ சப் இன்சான் ஹி ஹை அவ்ர் பந்தே ஆஜிஷ் அவ்ர் ஹமாரே பாய் ஹை . மகர் அல்லாஹ் நே இன்கோ பதாயி தி ,வோ படே பாய் ஹுயே . ஹம் கோ இன்கீ பர்மபர்தாரீ கா ஹுக்ம் கியா ஹை . ஹம் இன்சே சோடே ஹை ,தோ இன்கே தஜ்நீம் இன்சானோன் கி சீ கர்னீ ஹை ". 

மொழிபெயர்ப்பு : 
         அதன் பொருள் எல்லா மனிதர்களும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் . அவர்களில் உயர்ந்த அந்தஸ்து உள்ளவர் மூத்த சகோதரனைப் போன்றவர் .
அதனால் அவருக்கு மூத்த சகோதரர் அளவுக்கே மரியாதை செய்ய வேண்டும் ,அல்லாஹ் தான் எல்லா படைப்புகளின் உரிமையாளன் ,இன்னும் அவனையே நாம் வணங்க வேண்டும் . இந்த ஹதீதின் மூலம் நாம் அறிகின்றோம் அவ்லியாக்களும் ,நபிமார்களும் ,இமாம்களும் அவர்களின் மக்களும் ,ஷைகுமார்களும் ஷுஹதாக்களும் ,அதாவது அல்லாஹ்வின் புறம் நெருக்கமானவர்கள் எல்லோரும் மனிதர்கள் ,சக்தியற்றவர்கள் இன்னும் நமது சகோதரர்கள் .ஆனால் அல்லாஹ் அவர்களை உயர்ந்த படைப்பாக படைத்துள்ளான் /அவர்களின் அந்தஸ்தை உயர்த்தியுள்ளான் ,அவர்கள் நமது மூத்த சகோதரரைப் போன்றவர்கள் . நாம் அவர்களுக்கு கீழ்படியுமாறு கட்டளை இடப்படுள்ளோம் . நாம் அவர்களை விட குறைவான அந்தஸ்த்தில் உள்ளோம் , எனவே இவர்களுக்கு  மனிதர்களைப் போன்றே மரியாதை செலுத்த வேண்டும் .

இதன் மூலம் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்துடைய உலமாக்கள் 'உயரிய படைப்பு ' என்பதற்கு நபிமார்கள் என்று பொருள் கொள்வது தக்வியத்துல் ஈமான் ஆசிரியரின் சொந்த வார்ததைகளில் இருந்தே எடுத்துக் கொண்டுள்ளனர் என்பது தெளிவாக விளங்கும் .

நமது சத்திய உலமாக்கள் எந்த மோசடியும் செய்யவில்லை .தவறான மொழிபெயர்ப்பும் செய்யவில்லை .அவர்கள் அதே புத்தகத்தில் இருந்த விளக்கத்தை இங்கு தெளிவுபடுத்தியுள்ளனர் .

நாம் இங்கு ஒரு ஆதாரம் தான் காட்டியுள்ளோம் . தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தின் முன்னோடி இஸ்மாயில் தெஹ்லவி தமது நூலான தக்வியதுல் ஈமானின் பல இடங்களில் உயரிய படைப்பு என்பதற்கு நபிமார்கள் ,வலிமார்கள் என்று விளக்கம் தருகின்றார் .

மேலும் இங்கு 'சமார் '  என்ற வார்த்தையின் அர்த்தம் செருப்பு தைப்பவரைக் குறிக்கும் . எனினும் உர்து மொழியை அறிந்த மக்கள் ஒரு சொல்லை எங்கு ,எவ்வாறு பயன்படுத்துகின்றோமோ அதைப் பொறுத்து பொருள் வேறுபடும் என்று அறிவர் . பொதுவாக சமார் என்ற வார்த்தை ஒருவரை அவமரியாதை /இழிவுபடுத்த மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது . நீங்கள் உங்கள் நண்பரை நோக்கி ஏன் இவ்வாறு செருப்பு தைக்கும் செம்மானைப் போல் அழுக்காக உள்ளாய் என்று வினவினால் ? உங்கள் பகுதியில் உள்ள செருப்பு தைப்பவர் எவ்வளவு செல்வந்தராய் இருந்தாலும் உங்கள் நண்பர் நீங்கள் அவரை இழிவுபடுத்தவே இவ்வாறு சொன்னீர்கள் என்பார் .

"எல்லா படைப்புகளும் ,அது மிக உயர்ந்த (நபிமார்கள்) அல்லது மிக சிறிய (நபி அல்லாதவை ) படைப்பாயினும், அல்லாஹ்வின் திருமுன் அவை செருப்பு தைக்கும் செம்மானை விட தரம் தாழ்ந்தவை " .

தக்வியத்துல் ஈமான் நூலை வாசித்தறியாத தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத் வஹாபிகள் வேண்டுமானால் இப்படி கேள்விகள் கேட்கலாம் ;
ஆனால் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் தக்வியத்துல் ஈமானை வாசித்து உள்ளார்கள் என்பதோடு ,எங்கே எப்படி சொற்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் அறிந்தே வைத்துள்ளனர் .






Related Posts Plugin for WordPress, Blogger...

Saturday, 9 May 2015

மரணித்த பின் கபுரில் இருந்து மீண்டு வந்த தேவ்பந்தி தப்லீக் மவ்லவி !

தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் கொள்கையாகிறது எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்து மண்ணோடு மண்ணாகி விட்டார்கள் (மஆதல்லாஹ் !!!) .


இது அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாகும் .


 "பெருமானார் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறைந்த பிறகு மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள்." (அஸ்தக்பிருல்லாஹ் )



[நூல் - தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 59, இஸ்மாயில் தெஹ்லவி ]


தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 59


இதே  தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் தங்களது நூலில் மரணித்த பின் ஓர் தேவ்பந்தி  மவ்லவி கபுரில் இருந்து வெளிவருகிறார் என்றும் ,அவர் தேவ்பந்த் தாருல் உலூம் மதரசாவிற்கு வருகை தருகிறார் என்றும் எழுதி வைத்துள்ளனர் . என்னே ! இந்த வஹாபிகளின் ஈனத்தனம் !


ஒரு ஸுன்னி முஸ்லிம் குரான் ,ஹதீஸ் கூறியபடி எம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹயாத்துன் நபியாக உள்ளார்கள் என்று கூறினால் அவர் மீது ஷிர்க் ,குப்ர் பட்டம் கட்டி அவரை இஸ்லாத்தை விட்டும் நீக்கி விடுகின்றனர் .


 
وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا ۚ بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ


(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்து) வெட்டப்பட்டோரை இறந்துவிட்டவர்களென நீங்கள் ஒருபோதும் எண்ண வேண்டாம். அவர்கள் தம் இறைவனிடத்தில் நிச்சயமாக உயிரோடு இருக்கின்றார்கள். (அன்றி) அவர்களுக்கு உணவும் அளிக்கப்படுகிறது.


[அல் குரான் - 3:169.]


‏عن ‏ ‏أبي الدرداء‏ ‏قال ‏قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏أكثروا الصلاة علي يوم الجمعة فإنه مشهود تشهده الملائكة وإن أحدا لن يصلي علي إلا عرضت علي صلاته حتى يفرغ منها قال قلت وبعد الموت قال وبعد الموت إن الله حرم على الأرض
أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق


[அறிவிப்பாளர் : அபூதர்தா ரலியல்லாஹு அன்ஹு ,இப்னு மாஜா ,பாகம் 1,எண் 1626]



இனி இவர்களின் தேவ்பந்தி மவ்லவி அதே குரான் ,ஹதீஸுக்கு மாற்றமான வஹாபிய கொள்கையின் அடிப்படையில் ஷிர்க் செய்து முஷ்ரிக்காகி போய் விட்டாரா இல்லையா என்று தெளிவுபடுத்துவார்களா  ?????














இத்தகைய வழிகேடர்களை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பானாக !!!
Related Posts Plugin for WordPress, Blogger...

Thursday, 29 May 2014

இஸ்மாயில் திஹ்லவியின் மீது வழங்கப்பட்ட பத்வா



            மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் எழுதுகிறார்கள் ,

"             மௌலானா முஹம்மத் இஸ்மாயில் தெஹ்லவி ஷஹீத் , மௌலானா முனவ்வருத்தீனின் வகுப்புத் தோழர். ஷாஹ் அப்துல் அஜீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மறைவுக்குப் பின்,அவர் (இஸ்மாயில் திஹ்லவி ) தக்வியதுள் ஈமான் ,ஜிலா உல் அய்னய்ன் ஆகிய நூல்களை எழுதிய போதும் , அவரது கொள்கைகள் நாடெங்கும் பரவிய போது, எல்லா மார்க்க அறிஞர்களும் அதற்கு எதிராக ஒன்று திரண்டனர். அவர்களில் இந்த நூற்களை வெகுவாக எதிர்த்து,இதற்கு எதிராக பல நூற்களை எழுதியவர்கள் மௌலானா முனவ்வருத்தீன் அவர்கள்.
ஹிஜ்ரி 1240ல் தில்லி ஜாமியா மஸ்ஜிதில் பிரசித்தி பெற்ற அந்த விவாதம் நடைபெற்றது. இந்த நூற்களின் மீது இந்தியாவில் உள்ள அனைத்து உலமாக் களிடமும் பத்வா கேட்கப்பட்டு , பின்னர் ஹரம் ஷரீபில் இருந்தும் ஒன்று கேட்கப்பட்டது.

                  மௌலானா முனவ்வருத்தீன் ஆரம்ப காலத்தில் இஸ்மாயில் திஹ்லவியையும் அவரது மருமகன் மௌலானா அப்துல் ஹை மற்றும் அவர்களை பின்பற்றுவோரை சமாதானப்படுத்த முயன்றார் ,மேலும் அவர்களை சம்மதிக்க வைக்க அனைத்து வழிமுறைகளையும் முயற்சி செய்தார் என்பது அவரது எழுத்துகளில் புலனாகிறது.எனினும் , அவரது அனைத்து முயற்சிகளும் எந்த  பலனளிக்கவில்லை என்ற போது, மௌலானா முனவ்வருத்தீன் விவாதிக்கவும்,மறுப்பு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருந்தார். தில்லி ஜாமியா மஸ்ஜிதில் அந்த பிரசித்தி பெற்ற விவாதம் எற்பாடு செய்யப்பட்டது, ஒரு பக்கம் இஸ்மாயில் திஹ்லவியும் மௌலானா அப்துல் ஹையும் , மற்றொரு பக்கம் மௌலானா முனவ்வருத்தீனும் தில்லியைச் சார்ந்த அணைத்து உலமாக்களும். "

 [ நூல் - ஆசாத் கி கஹானி ,பக்கம் 48,மக்தபா கலீல் ,உர்து பஜார்,லாகூர்,மௌலானா அப்துர் ரஜ்ஜாக் மலீஹ் ஆபாதி ]

மவ்லானா மக்சூஸ் உல்லாஹ் பின் ஷாஹ் ரபியுத்தீன் திஹ்லவி,மவ்லானா முஹம்மது மூசா பின் ஷாஹ் ரபியுத்தீன் திஹ்லவி,மவ்லானா பஜ்லே ஹக் கைராபாதி(ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவியின் மாணவர்), முப்தி சத்ருத்தீன் ஆசுர்தாஹ்(ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவியின் மாணவர்),மவ்லானா பஜ்லே ரசூல் உத்மானி பதாயுனீ,மவ்லானா அஹ்மத் சய்யத் நக்ஷபந்தி திஹ்லவி,மவ்லானா ரஷீத்துத்தீன் திஹ்லவி,மவ்லானா கைருத்தீன் திஹ்லவி,ஹகீம் சாதிக் அலி கான் திஹ்லவி(மசீஹ் உல் முல்க் ஹகீம் அஜ்மல் கான் னின் பாட்டனார்),மவ்லானா சய்யத் அஷ்ரப் அலி குல்ஷன் ஆபாதி,மவ்லானா முக்லிசுர்ரஹ்மான் சத்காமி,மவ்லானா கலந்தர் அலி ஜுபைரி பானிபட்டி இன்னும் எண்ணற்ற அஹ்லுஸ் சுன்னத் வால் ஜமாத்தின் உலமாக்கள் இந்த புதிய வஹாபிய நம்பிக்கைகள் மற்றும் கோட்பாடுகளை தங்கள் பேச்சிலும், எழுத்திலும் எதிர்த்தார்கள்.

அவர்கள்  அஹ்லுஸ் சுன்னத் வால் ஜமாத்தின் சத்திய கொள்கைகளைப் பாதுகாக்க தங்களின் அறிவின் மூலமும் ,நடவடிக்கைகளின் மூலமும் இந்த உன்னத ஜிஹாதில் பங்கேற்றனர்.

தக்வியதுள் ஈமான் கிதாபைப் பற்றி மவ்லானா ஷாஹ் மக்சூஸ் உல்லாஹ் பின் ஷாஹ் ரபியுத்தீன் திஹ்லவி பின் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி அவர்களிடத்தில் மவ்லானா பஜ்லே ரசூல் உத்மானி பதாயுனீ அவர்கள் ஏழு கேள்விகள் கேட்டார்கள். இந்த கேள்வி விடை தொகுப்பு தஹ்கீக் அல் ஹகீகா என்று பெயரில் பம்பாயில் இருந்து 1267 ஹிஜ்ரியில் வெளிவந்துள்ளது . அதில் உள்ள மூன்று விடைகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

 மவ்லானா ஷாஹ் மக்சூஸ் உல்லாஹ் திஹ்லவி அவர்கள் எழுதுகிறார்கள்,

"   தக்வியதுள் ஈமான் பற்றிய முதல் கேள்விக்கான விடையாவது, நான் அதை தப்வியதுள் ஈமான் என்று அழைக்கிறேன்,நான் அதை மறுத்து
முஈதுல் இமான்ப் என்று ஒரு தனிக்கட்டுரை எழுதியுள்ளேன். இஸ்மாயிலின் புத்தகம் நமது குடும்ப மரபுகளுக்கு எதிரான மட்டுமின்றி நபிமார்கள்,ரசூல்மார்கள் கூறிய தவ்ஹீதுக்கும் எதிராக இருக்கிறது.ஏனெனில் நபிமார்கள் மற்றும் ரசூல்மார்கள் அனுப்பப்பட்டது மக்களுக்கு கற்பித்து அவர்களை தவ்ஹீதின் வழியில் நடத்தவே.எனினும் இந்த புத்தகத்தில் தவ்ஹீதோ அல்லது நபிமார்களின் சுன்னத்தை கூறும் எந்த அடையாளமும் இல்லை.எந்த விஷயங்களை எல்லாம் இவர்கள் ஷிர்க், பித்அத் என்று கூறி மக்களுக்கு கற்பிக்கிறார்களோ அவற்றை எல்லாம் நபிமார்களோ அல்லது அவர்களை பின்பற்றியவர்களோ அவ்வாறு கூறவில்லை.இல்லை ,அவர்களிடத்தில் ஆதாரம் இருந்தால் , அவரை பின்பற்றுவோரை நம்மிடம் சமர்ப்பிக்க சொல்லுங்கள்.

நான்காம் கேள்விக்கான விடையாவது, வஹாபியின்(இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி)  புத்தகம் உரையாகவும், தக்வியதுள் ஈமான் அதன் வர்ணனை போன்றும் உள்ளது. ஐந்தாம் கேள்வியின் விடையாதெனில் ,ஷாஹ் அப்துல் அஜீஸ் அவர்கள் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் .இந்த புத்தகத்தை பற்றி அவர்கள் கேள்வி பட்ட பொது,அவர்கள் கூறினார்கள் தாம் மட்டும் நோய்வாய்படவில்லையாயின் , இந்த புத்தகத்திற்கு துப்னா இத்னா அஷரியா போன்று ஒரு மறுப்பு எழுதியிருப்பேன் என்றார்கள்.

அல்லாஹ்வின் அருளைக் கொண்டு நான் (ஷாஹ் மக்சூஸ் உல்லாஹ் திஹ்லவி) நான் தக்வியதுள் ஈமான் என்ற வர்ணனைக்கு எழுதிய மறுப்பு ,அதன் உரை நூலான (கிதாபுத்  தவ்ஹீத்) க்கும் மறுப்பாக அமைந்தது.எனது தந்தை ஷாஹ் ரபியுத்தீன் அவர்கள் இந்த நூலை(தக்வியதுள் ஈமான்) பார்க்கவில்லை எனினும் ஷாஹ் அப்துல் அஜீஸ் அவர்கள் அதைக் கண்டு , நிரகரித்தபொழுது நான் இதற்கு மறுப்பு எழுத ஆரம்பித்தேன்  "

[ நூல் - அன்வர் ஏ அப்தாப் ஏ சதாகத் ,பக்கம் 617-620,கரீம் பிரஸ் ,லாகூர்,முஹம்மத் காதி பஜ்லே அஹ்மத் லுத்யான்வி ]

இமாம் பஜ்லே ஹக் கைராபாதி ரஹ்மாதுள்ளஹி அலைஹி அவர்கள் இஸ்மாயில் திஹ்லவியின் வழிகெட்ட வஹாபிய கொள்கைகளை எதிர்த்து தஹ்கீக் அல் பத்வா பி இப்தல் அல் தக்வா என்ற நூலை எழுதினார்கள் .இஸ்மாயில் திஹ்லவியின் மீதும் அவரது நூலான தக்வியதுள் ஈமான் மீதும் குப்ர் பத்வா வெளியிடப்பட்டது. அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்த 17 முண்ணனி உலமாக்களால் கையெழுத்திடப்பட்டது .

அதன் ஸ்கேன் கீழே உள்ளது.

Fatwa on Ismail Dihlawi
Tahqeeq al-Fatwa fi Ibtal al-Taghwa
Tahqeeq al-Fatwa fi Ibtal al-Taghwa


Tahqeeq al-Fatwa fi Ibtal al-Taghwa
 
 

                         
 
  
Related Posts Plugin for WordPress, Blogger...