Showing posts with label aabe hayath qasim nanothvi. Show all posts
Showing posts with label aabe hayath qasim nanothvi. Show all posts

Thursday, 21 March 2019

மவ்லவி காஸிம் நானோத்வியும் ,தக்தீருன் நாஸ் நூலும் - 1


கத்மே நுபுவ்வத் குறித்து தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் கொள்கைகள் என்ன ?
இது விஷயமாக தேவ்பந்திகள் இயற்றிய நூற்கள் கூறுவது என்ன ?


    
மவ்லவி காசிம் நாணோத்வி தேவ்பந்தி தப்லீகி பிர்காவின் முன்னோடிகளில் ஒருவர் . தாருல் உலூம் தேவ்பந்தின் ஸ்தாபகர்களில் ஒருவர் . இவர் "தக்தீருன் நாஸ் " என்னும் நூலில் எழுதிய குப்ரியத்தான கொள்கைகளால் மக்கா ,மதீனா  ஷரீஃபை சார்ந்த 30க்கும் மேற்பட்ட அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களாலும் ,இந்தியாவைச் சார்ந்த 268 உலமாக்களாலும் காபிர் என்று தீர்ப்பளிக்கப்பட்டார் .


அந்த நூலில் மவ்லவி காஸிம் நானோத்வி எழுதுகிறார் : -

பொதுவான பாமர மக்களின் சிந்தனை காத்தமுன் நபி என்பதன் அர்த்தம் ,நபிகள் நாயகம் அவர்களின் காலம் முன் சென்ற நபிமார்களின் காலத்திற்கு பின்னால் என்பதும் ,அவர்கள் தான் இறுதி நபி என்பதும் என்று எண்ணுகின்றனர் . எனினும் மதிநுட்பமுடைய அறிஞர்களின் கருத்து என்னவென்றால் முந்தியோ ,பிந்தியோ இருப்பதில் எந்த சிறப்பும் இல்லை .

ஒருவேளை நாயகம் அவர்களுக்குப் பின் ஒரு நபி பிறந்தாலும் , அதைக் கொண்டு காத்தமுன் நபி என்று இருப்பதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது . எனவே நபிகள் நாயகம் அவர்களது காலத்தில் வேறு கிரகத்திலோ அல்லது இதே கிரகத்திலோ  ஒரு நபி இருந்தாலோ அது எந்த வேறுபாட்டையும் உண்டாக்காது .

மவ்லானா முஹம்மத் பாஸில் என்பாருக்கு எழுதிய ஓர் கடிதத்தில் ,காஸிம் நாணோத்வி எழுதுகிறார் : -

காத்தமுன் நபி என்பதன் அர்த்தம் ,நேர்கோட்டில் பொருள் கொள்பவர்களுக்கு நபிகள் நாயகம் அவர்களின் காலம் எல்லா நபிமார்களின் காலத்திற்கு தூதுத்துவத்திற்குப் பிந்தியது என்றும் அவர்களுக்கு பின்னர் வேறு யாரும் நபியாக வர முடியாது என்பதாம் . எனினும் நீங்கள் அறிவீர்கள் இதைக் கொண்டு தனிப்பட்ட புகழோ ,தீங்கோ ஏதுமில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள் .

பின்வரும் பதிவுகளை வாசிக்கும் முன்னர் காஸிம் நோனோத்வியின்    இந்த 
கூற்றை உங்கள் சிந்தையில் ஏற்றுங்கள் .

காசிம் நானோத்வியின் கப்ரை பற்றி :   

" தாருல் உலூம் தேவ்பந்தின் முன்னாள் பொறுப்புதாரி மவுலானா ரஃபீயுத்தீன் சாஹிப் அவர்களின் கஷ்ப் ஆகிறது , தேவ்பந்த் மதர்ஸாவின் நிறுவனர்  மவுலானா காஸிம் நாணோத்வியின் கப்ர் ஒரு நபியின் கப்ரினுள் அமைந்துள்ளது என்பதாம் ." 

[முபஷ்ஷிராத் , பக்கம் 36,  தாருல் உலூம் தேவ்பந்த் வெளியீடு ]     


ஸவானெஹ் காஸிமி என்பது தேவ்பந்தின் புகழ்பெற்ற அறிஞர் , மவ்லானா முனாஜிர் ஹசன் கீலானி என்பரால் எழுதப்பட்ட நூல் காசிம் நாணோத்வியின் சுயசரிதை நூல் . தேவ்பந்தால் வெளியிடப்பட்டது . 

அதில் கூறப்பட்டுள்ளது , 

" ஒரு முறை மவ்லானா காஸிம் நாணோத்வி தம்முடைய ஞானாசிரியர் ஹாஜி இம்தாதுல்லாஹ் அவர்களிடம் , நான் தஸ்பீஹ் செய்ய உட்காரும் போதெல்லாம் மிகுந்த சிரமத்தை உணருகின்றேன் . உன்னுடைய இதயத்திலும் ,நாவிலும் நூறு டன் எடையுள்ள கற்களை யாரோ சுமத்தியது போன்றும் ,சர்வமும் முடங்கியது போன்றும்  உணருகின்றேன் . 

அதற்கு ஹாஜி சாஹிப் அவர்கள் கூறினார்கள் :

இது வஹீ அருளப்படும் போது நபிகள் நாயகம் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை போன்ற ஓர் நுபுவ்வத்தின் ஆசீர்வாதங்களில் ஒன்று . அல்லாஹ் உம்மை நபிமார்களின் வேலைக்கு தேர்வு செய்துள்ளான் " 

[நூல் - ஸவானெஹ் காஸிமி , பாகம்  1, பக்கம் 259 ]

அதன் உர்து ஆக்கம் , 

"யே நுபுவ்வத் கா ஆப் கா கல்ப் பர் பைஜான் ஹோதா ஹை ,அவ்ர் யே வஹ்  சிக்ள் ஹை ஜோ ஹுஜுர் ஸல்லாஹு அலைஹி வஸல்லம் கோ வஹி கி வக்த் மௌஸூஸ் ஹோதா தா , தும் சே ஹக் தஆலா ஒ காம் லேனா ஹை ஜோ நபியோ சே லியா ஜாதா ஹை " .



அர்வாஹெ ஸலாசா என்னும் நூல் ,புகழ்பெற்ற தேவ்பந்த் உலமாக்களின்  கூற்றுகளையும் , சம்பவங்களையும் கையாள்கிறது . அதை எழுதியவர்கள் அமீர் ஷாஹ் கான் மற்றும் மவ்லானா ஜாஹிர் ஹசன் கசூரி . மவ்லவி அஷ்ரப் அலி தான்வி அதற்கு ஹாஷியா எழுதியுள்ளார் . அது தேவ்பந்திகளிடம் வரலாறு மற்றும் படிப்பினை பெறுவதற்கு என்று புகழ்பெற்ற நூல் . அதனை ஹகாயாதே அவ்லியா , அஸ்லாபே தேவ்பந்த் , ஷஹான் தில்லி என்றும் வேறு பெயர்களில் வெளிவந்துள்ளது .

அதில் எழுதப்படுள்ளது ,

'ஹழ்ரத் ரஷீத் அஹமத் கங்கோஹி தமது மாணவர் மவ்லானா முஹம்மது யஹ்யா காந்தள்வியிடம் ஷாமி நூலில் ஓர் பத்வாவை பார்வையிட சொன்னார்கள் . மவ்லானா முஹம்மது யஹ்யா  காந்தள்வி அந்த குறிப்பிட்ட பத்வா நூலில் இல்லை என்று பதில் அளித்தார்கள் . மவ்லானா  ரஷீத் அஹமத் கூறினார்கள் இது எவ்வாறு சாத்தியம் ? நூலை என்னிடம் கொண்டு வாருங்கள் என்றார்கள் . அந்த நூல் ரஷீத் அஹ்மத் சாஹிப் அவர்களின் முன் கொண்டு வரப்பட்டது . 

அது சமயத்தில் ஹழ்ரத் ரஷீத் அஹ்மத் அவர்கள் தமது பார்வையை கிட்டத்தட்ட இழந்து விட்டார்கள் . அவர்கள் அந்த நூலை எடுத்து , மூன்றில் இரண்டு பங்கு பக்கங்களை வலதுபுறமும் , ஒரு பங்கு பக்கங்களை இடப்புறமும் திருப்பி ,ஒரு பக்கத்தை எடுத்தார்கள் . இடப்பக்கதத்தின் அடியில் பார்க்குமாறு கூறினார்கள் .அந்த பத்வா அங்கு காணப்பட்டது . எல்லோரும் வியந்து போனார்கள் . ரஷீத் அஹ்மத் கங்கோஹி அவர்கள் ,' என் நாவில் இருந்து தவறான ஒரு சொல்லும் வராது  என்று அல்லாஹ் எனக்கு வாக்குறுதி கொடுத்துள்ளான் '  என்று கூறினார்கள் 

[ நூல் - அர்வாஹெ ஸலாசா ,பக்கம் 292 ]
   
இது முடிவல்ல . இதன் விளக்கவுரையில் மவ்லவி அஷ்ரப் அலி தான்வி பின்வருமாறு எழுதியுள்ளதை காணுங்கள் ,

' இது தற்செயலாக நிகழ்ந்த ஒரு சம்பவமாக இருக்கலாம் ,ஆனால் விஷயம் அவ்வாறல்ல . அது மவ்லானா ரஷீத் அஹ்மத் அவர்களுடைய கஷ்ப் , இல்லையெனில் குறிப்பிட்ட பக்கத்தை சுட்டிக்காட்டி வலியுறுத்தி இருக்க மாட்டர்கள் .


உங்களுக்கு நினைவூட்டுகின்றேன் ,

" நபிகள் நாயகம் அவர்கள் மறைவான ஞானம் உள்ளது என்று நம்பிக்கை கொள்வது தெளிவான ஷிர்க் "

[ நூல் - பத்வா ரஷீதிய்யா ,ரஷீத் அஹ்மத் கங்கோஹி ]

இன்னுமொரு சுவாரஸ்யமான சம்பவம் ,

" ஒரு நாள் மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி அவர்கள் மிகுந்த உற்சாகத்தில் (ஜோஷ் ) காணப்பட்டார்கள் . தஸவ்வுரே ஷெய்கு என்பது பற்றி பேச்சு நடந்து கொண்டிருந்தது . அவர்கள்  ,'நான் பேசட்டுமா ? ' என்று மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி கேட்டார்கள். மக்கள் ,ஆம் என்றனர் .

'நான் பேசட்டுமா ? ' என்று மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி மீண்டும் கேட்டார்கள். மக்கள் ,ஆம் என்றனர் . 
 
'நான் பேசட்டுமா ? ' என்று மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி மீண்டும் கேட்டார்கள். மக்கள் ,ஆம் என்றனர் .

அப்போது ரஷீத் அஹ்மத் கங்கோஹி கூறினார் , ' மூன்றாண்டு காலமாக ஹாஜி இம்தாதுல்லாஹ் அவர்களின் முகம் எனது கல்பிலே இருந்தது ,அவர்களின் அனுமதியில்லாமல் நான் எந்த காரியத்தையும் செய்ததில்லை ' .

அதன் பின்னர் ரஷீத் அஹ்மத் கங்கோஹி  மிகுந்த உற்சாகத்துடன் , 'நான் பேசட்டுமா ? ' என்று கேட்டார்கள். மக்கள் ,ஆம் என்றனர் .

ரஷீத் அஹ்மத் கங்கோஹி கூறினார் , ' பல்லாண்டுகளாக நபிகள் நாயகம் என்னுடை கல்பிலே இருந்தார்கள் , அவர்களின் அனுமதியில்லாமல் நான் எந்த காரியத்தையும் செய்ததில்லை ' . (அடிக்குறிப்பு : கான் சாஹிப் எத்தனை ஆண்டுகள் என்று கூறியது நினைவில்லை ) .

அதன் பின்னர் ரஷீத் அஹ்மத் கங்கோஹி இன்னும்   மிகுந்த உற்சாகத்துடன் , 'நான் பேசட்டுமா ? ' என்று கேட்டார்கள். மக்கள் ,ஆம் என்றனர் .

ஆனால் அவர் அமைதியாக இருந்தார் .மக்கள் கேட்ட பொழுது , அதை விட்டு விடுங்கள் என்றார் .
[ நூல் - அர்வாஹெ ஸலாசா ,பக்கம் 292 ]

ரஷீத் அஹ்மத் கங்கோஹி  என்ன சொல்ல விரும்பவில்லை என்பது விளங்குகின்றதல்லவா !

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் , ரஷீத் அஹ்மத் கங்கோஹி தமது கல்பில் நபிகள் நாயகம் அவர்களே  நிறைந்திருந்ததாக கூறினார் . நாயகத்தின் நூர் அல்லது திருமுகம் என்று கூறவில்லை .  அப்படியானால் நாயகம் அவர்களின் சங்கைமிகு ரவ்ளா ஷரீப் காலியாக இருந்ததா ?

ஏனெனில் அஷ்ரப் அலி தான்வி எழுப்பியுள்ள கேள்வி தான் அது

' மவ்லித் மஜ்லிஸ்கள் பல இடங்களில் ஒரே சமயத்தில் நடைபெற்றால் , நாயகம் அவர்கள் எங்கு செல்ல வேண்டும் ,எங்கு செல்ல வேண்டாம் என்று எவ்வாறு முடிவு செய்வார்கள் '.
[ நூல் - பத்வா இம்தாதியா , பாகம் 4, பக்கம் 58 ] 


ஆஷிக் இலாஹி மீரடி தேவ்பந்தி சிந்தனைப் பள்ளியின் நபர் . அவர் எழுதிய நூல் தான்  'தஸ்கிரதுர் ரஷீத்' .   அது 2 பாகங்களாக வெளிவந்த ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் சரிதையை கூறும் நூல் . தேவ்பந்தால் வெளியிடப்பட்டது .

மவ்லானா ஆஷிக் இலாஹி மீரடி  ,பல முறை ரஷீத் அஹ்மத் கங்கோஹி கூறியதைக் கூறியுள்ளதாக எழுதுகிறார் ,

' கேளுங்கள் ! சத்தியம் என்பது ரஷீத் அஹ்மத்தின் நாவில் இருந்து வருவது தான் . நான் இக்காலத்தின் வழிகாட்டியும் , இரட்சிப்பும் (ஹிதாயத் வ நஜாத் )  என்னை பின்தொடர்வதை(இத்திபா )  அன்றி இல்லை என்று சாட்சியமளிக்கின்றேன் . '

[நூல் - தஸ்கிரதுர் ரஷீத் , பாகம் 2,பக்கம்  17 ]


 இன்னுமொரு சுவாரஸ்யமான சம்பவம் ,

ஆஷிக் இலாஹி மீரடி , ஆக்ராவைச் சேர்ந்த முன்ஷி முனீர் அஹ்மத்தின்   கனவை  விவரிக்கின்றார் .

' கங்கோஹ் நகரில் ஓர் ஷியா இருந்தான் . அவன் இறந்த பின் ,அவனை நான் கனவில் கண்டேன்,அவனது கட்டைவிரலை பற்றிக் கொண்டேன்  . அவன் பயந்து நடுங்கி , என்ன வேண்டும் உனக்கு என்றான் . நான் மரணித்திற்குப் பின் உன்னுடைய நிலை என்ன ? என்று கேட்டேன் . அவன் மிகக் கடுமையான வேதனையில் உள்ளதாகவும் , தாம் ஒரு முறை நோய்வாய் பட்டு இருக்கையில் , மவ்லானா ரஷீத் அஹ்மத் தன்னை காண வந்ததாகவும் , தமது உடலின் எந்த பாகத்தையெல்லாம் மவ்லானா தொட்டார்களோ ,அவை எல்லாம் வேதனையை விட்டும் பாதுகாப்பாக உள்ளதாக கூறினார் . அதன் பின்னர் நான் விழித்தெழுந்து விட்டேன் . '


[நூல் - தஸ்கிரதுர் ரஷீத் , பாகம் 2,பக்கம்  324  ] 

இது போன்று மற்றோரு சம்பவமும் அதே நூலில் கூறப்படுள்ளது ,

' மவ்லானா இஸ்மாயிலின் ஒரு பணியாள் இருந்தான் . அவன் இறந்த பின் ,அவனை யாரோ ஒருவர் கனவில் கண்டார் . அவனது முழு உடலும் தீயில் வெந்து கொண்டிருந்தது , உள்ளங்கையைத் தவிர . அவனை கனவில் கண்ட நபர் மரணித்திற்குப் பின்  உன்னுடைய நிலை என்ன ? என்று கேட்டார் .அவர் கூறினார் தாம் செய்த கெட்ட அமல்களுக்காக தண்டனை அனுபவிப்பதாகவும் , தமது உள்ளங்கையைத் தவிர தமது முழு உடலும் தீயில் வெந்து போவதாகவும் கூறினார் . தமது உள்ளங்கையைக் கொண்டு மவ்லானா இஸ்மாயிலின் பாதங்களைத் தொட்டதால் இந்த விலக்கு அளிக்கப்படுவதாகவும் , 'நாம் அந்த உள்ளங்கையை எரிப்பதைக் கொண்டும் வெட்கப்படுகின்றோம் ' என்று சொல்லப்பட்டதாகவும் கூறினார் '.

இவ்விரு சம்பவங்களை மீண்டுமொருமுறை வாசித்து , ஸஹீஹ் புஹாரியில் உள்ள ,தமது அடிமை துவைபாயை உரிமையிட்ட அபூலஹபின் ஹதீதை   நினைவில் கொள்க !

தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் இத்தகைய நம்பிக்கைகளை கொண்டிருப்பது அவர்களின் சுய முடிவு .

ஆனால் இதே கூட்டத்தினர் , நமது ஈருலக இரட்சகர் கண்மணி நாயகம் முஸ்தபா صلى الله عليه و سلم அவர்கள் பற்றி தமது நூற்களில் எழுதியுள்ளவற்றை சீர்தூக்கி ஆய்வு செய்து பாருங்கள் ! 

 


Related Posts Plugin for WordPress, Blogger...

Tuesday, 1 May 2018

நிலைகுலையும் தேவ்பந்தின் அஸ்திவாரம்

நாம் இங்கு காணவிருப்பது தேவ்பந்தின் ஸ்தாபகர்  மவ்லவி காஸிம் நாணோத்வியின் வரலாற்றைக் கூறும்  'ஸவானெஹ் காஸிமி' என்னும்   நூலில் உள்ள ஓர் சம்பவத்தை . இந்த நூலை எழுதியவர் தேவ்பந்தி வஹாபி பிர்காவின் ஆகப் பெரிய அறிஞர் மவ்லானா முனாஸிர் அஹ்ஸன் கீலானி .

தமது ஸ்தாபகருக்கு செய்யும் மரியாதையாக   தாருல் உலூம் தேவ்பந்தின் மூலமே இந்த நூல் வெளியிடப்பட்டது .தேவ்பந்தின் முதல்வரும் ,காஸிம் நாணோத்வியின் பேரருமான  காரி தைய்யப் தமது பெயர் , இந்த நூலில் பதிப்பகத்தார் என்று வருவதை தமது பெரும் பேறாக கருதினார் .

ஸவானெஹ் காஸிமி


     மவ்லானா முனாஸிர் அஹ்ஸன் கீலானி,மற்றோரு தேவபந்த் அறிஞர் மவ்லானா   மஹ்மூதுல் ஹசன் அவர்களின்   மூலமாக ஒரு நிகழ்வை விவரிக்கிறார் ,

" மவ்லானா   மஹ்மூதுல் ஹசன் தேவ்பந்தில் ஓதி கல்வி பயின்று பஞ்சாப் மாகாணம் நோக்கி பயணித்த ஒரு இளம் மவ்லானாவைப் பற்றி சொல்கிறார்

அந்த சிறிய ஊரின் மக்கள் தங்கள் மஸ்ஜிதின் இமாமாக இளம் மவ்லானாவை நியமித்தனர் . அவ்வூர் வாசிகள் வெகு விரைவில் இளம் மவ்லனாவிடம் நன்கு பழகினர் . சில மாதங்கள் கழித்து அவ்வூருக்கு  மற்றோரு மவ்லானா  வந்து ,மார்க்க கல்வி விளக்கம் கொடுத்து ,பயான்கள் செய்ய ஆரம்பித்தார் . அவ்வூர் மக்கள் சிலர் புதிய மவ்லானாவின் பயான்களால் ஈர்க்கப்பட்டனர் . புதிய மவ்லானா அவ்வூர் பள்ளியின் இமாம் பற்றி விசாரிக்க ,அவரிடம் தேவ்பந்த்தில் இருந்து வந்த    இளம் மவ்லானா பற்றி சொல்லப்பட்டது .

தேவ்பந்த் மதரஸா பேரைக் கேட்டதுமே ,புதிதாக வந்த மவ்லானா மிகவும் கோபம் அடைந்தவராக ,இவ்வளவு காலம் தேவ்பந்தி  இமாமின் பின் நின்று தொழுத தொழுகை செல்லாது என்று பத்வா வழங்கினார் .

அவ்வூர்வாசிகள் தாங்கள் இவ்வளவு காலம் தேவ்பந்தின் இமாமிற்கு வீணாக சம்பளமும் வழங்கி தங்கள் தொழுகையையும் வீணாக்கி விட்டோமே என்ற மன சஞ்சலம் உண்டானது .அவர்களில் ஒரு மனிதர் தேவ்பந்தின் இளம் மவ்லானாவை அணுகி 'ஒன்று நீங்கள் இந்த புதிய மவ்லானாவிற்கு மறுப்புரை வழங்குகள் அல்லது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்யுங்கள் ' என்றார் .

இளம் தேவ்பந்தி மவ்லானா மிக பதற்றமடைந்தார் . தமது குறைவான அறிவின் காரணமாக ,புதிய மவ்லானா தம்மிடம் கலாம் ,தஸவ்வுப் பற்றி நீண்ட பயான்கள் மூலம் விளக்கம் அளித்தால் ,  தமது இந்த இமாமத் வேலை போய் விடும் என்று எண்ணினார் .இதையெல்லாம் எண்ணி பயந்தாலும் விவாதத்திற்கு ஒப்புக் கொண்டார் .

விவாதத்திற்கான இடம் ,நாள் ,நேரம் குறிக்கப்பட்டது . குறிப்பிட்ட நாளில் புதிய மவ்லானா கம்பீரமாக தலைப்பாகை அணிந்தவராக எண்ணற்ற நூற்களுடனும் ,தமது ஆதரவாளர்களுடனும் வந்தார் . ஆனால் இந்த பாவப்பட்ட தேவ்பந்தி மவ்லனாவோ  சோர்வான முகத்துடன் ,நடுங்கிய குரலில் ,மிகவும் பயத்துடன் அல்லாஹ் அல்லாஹ் என்றவாறு வந்தார் .

அந்த இளம் தேவ்பந்தி மவ்லானா , விவாதம் ஆரம்பமாகும் முன் ,முன்பின் அறியாத ஒரு நபர் அவர் அருகில் வந்து அமர்ந்து ,'ஆம் ,உரையைத் துவக்குங்கள் .பயப்படத் தேவையில்லை ' என்றார் . இந்த உத்தரவாதம் வந்தவுடன் தேவ்பந்தி மவ்லவி சற்று ஆறுதலும் ,மன வலிமையையும் பெற்றார் .

இளம் தேவ்பந்தி மவ்லானா அதன் பின் நாவில் இருந்து வந்த சொற்கள் என்னவென்றே தாம் அறியவில்லை என்கிறார் . ஆரம்பத்தில் புதிய மவுலானா சில பதில் அளிக்க முற்பட்டாலும் ,இளம் தேவ்பந்தி மவ்லானா அவரைப் பார்த்த பொழுது ,அந்த புதிய மவ்லானா எழுந்து நின்று அவர் காலடியில் தலையை வைத்து ,தலைப்பாகை சிதறி ,'நீங்கள் இவ்வளவு பெரிய மேதை என்று அறியாமல் பொய் விட்டது . அல்லாஹ்வுக்காக என்னை மன்னித்து விடுங்கள் .நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை .நான் தவறான வழியில் இருந்தேன் ' என்று அழுது புலம்பினார் .

அங்கு நடைபெற்ற அந்த காட்சி விவாதம் ஆரம்பிக்கும் முன் நடந்தவற்றிக்கு முற்றிலும் நேர்மாறானது . இளம் தேவ்பந்தி உலமா தமக்கு உதவ வந்த நபர் அதன்பின் காணாமல் மறைந்து விட்டார் என்கிறார் ."

[நூல் - ஸவானெஹ் காஸிமி ,பாகம் 1, பக்கம் 330-331 ]   

இந்த கதையை விவரித்த பின் மவ்லானா முனாஸிர் அஹ்ஸன் கீலானி அந்த திடீர் நபர் பற்றிய பரம இரகசியத்தை உடைக்கிறார் .அவர் வேறு யாருமல்ல மண்ணோடு மண்ணாக மரணித்து மக்கிப் போன தேவ்பந்தின் ஸ்தாபகர் மவ்லவி காஸிம் நாணோத்வி .

மேற்கூறிய சம்பவத்தின் ஆய்வு :-

     முதலாவதாக , தேவ்பந்தியாக்கள் எத்துணை முழுமனதுடன் மவ்லவி காஸிம் நாணோத்வியின் இல்முல் கைப் (மறைவான ஞானம் ) பற்றி ஒப்புக்கொள்கின்றனர் என்பதைப் பாருங்கள் . எந்தளவுக்கு என்றால் குறிப்பிட்ட இளம் தேவ்பந்தி மவ்லானா தடுமாறுகிறார் ,அவருக்கு இந்த இடத்தில், இன்ன நேரத்தில் உதவி தேவைப்படுகின்றது என்ற அளவுக்கு  மறைவான ஞானம் . உடன் காஸிம் நாணோத்வி அவரை நோக்கி ஓடோடி உதவ செல்கின்றார் .

இரண்டாவதாக , காஸிம் நாணோத்வி தனது கபூரை விட்டு வெளியேறவும் ,விரும்பும் இடத்திற்கு செல்லவும் முடியும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது .

மூன்றாவதாக , தேவ்பந்தி உலமாக்கள் தமது மரணத்திற்குப் பின் வந்து தமது ஆதரவாளர்களுக்கு உதவ இயலும் ,எனினும் நபிமார்கள் மற்றும் வலிமார்களை பொறுத்த மட்டில் அவ்வாறு ஒப்புக்கொள்ள இயலாது .

இந்த சம்பவத்தை விவரித்த பின் மவ்லானா  முனாஸிர் அஹ்ஸன் கீலானிக்கு திடீரென வந்த ஞானோதயம் ,தேவ்பந்தியாக்களின் வஹாபிய கொள்கைப் படி ,இவ்வாறான நம்பிக்கையை ஏற்றுக் கொள்வது கிடையாது . மாறாக இத்தகைய கொள்கையை 'முஷ்ரிக்கான கொள்கை ' என்று கூறித்தான் பழக்கம் . ஆக இந்த கதையை எவ்வாறு மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஜோடிப்பது ? என்பதுதான் .

எனவே இத்தகைய கற்பனைக் கதையை தன்னிடம் கூறிய மவுலானா மஹ்முதுல் ஹசனின் கூற்றை ஒதுக்கித் தள்ளாமல் , தமது முன்னோடியின் அற்புத சக்தியை நிரூபணம் செய்ய தமது தேவ்பந்தி கொள்கையை  குழி தோண்டி புதைத்து விட்டார் .

இஸ்லாமிய பல்வேறு பிரிவுகளின் வரலாற்றையும் ஆராய்வோமானால் ,தேவ்பந்திகளைப் போல் தமது கொள்கையையே காவு  கொடுத்த ஒரு வெட்கம் கேட்ட பிர்கா இருக்காது . இந்த அற்புத சம்பவத்தை கூறிய பின்னர் மவ்லானா  முனாஸிர் அஹ்ஸன் கீலானி  அதற்கு ஒரு விளக்கவுரையும் எழுதியுள்ளார் . உங்களில் ஒரு சிலர் அதை படித்து அதிர்ச்சியும் அடையக் கூடும் !

விளக்கவுரை மொழிபெயர்ப்பு :

            மரணித்த நல் அடியார்களின் ரூஹ் மூலம் உதவி உதவி தேடுதல் (இம்தாத் ) விஷயமாக தேவ்பந்தின் உலமாக்களுடைய நம்பிக்கையானது ,அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் நம்பிக்கை போன்றதே . இன்னும் ,அல்லாஹ்வே தன்னுடைய திருமறையில் வானவர்கள் மனிதர்களுக்கு உதவுவதாகக் கூறியுள்ளான் . பல ஸஹீஹ் ஹதீதுகளில் மிஃராஜ் சம்பவம் குறித்த  அறிவிப்புகளில் நாயகம் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களுக்கு ஹழ்ரத் மூஸா عَلَيْهَا ٱلسَّلامُ அவர்கள் தொழுகையின் எண்ணிக்கை குறித்த விஷயங்களில் உதவியதாகவும் ,   நாயகம்  صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள் ஏனைய நபிமார்கள் பலரை சந்தித்ததாகவும்  , நன்மாராயம் பெற்றதாகவும் உள்ளது . எனவே இத்தகைய புண்ணிய ஆத்மாக்கள் அல்லாஹ்வால்  துயரில் இருக்கும் முஸ்லிகளுக்கு உதவ  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதென்றால் ,இதனை குரானின் எந்த ஆயத் அல்லது ஹதீத் மறுக்கின்றது ?

[நூல்-  ஸவானெஹ் காஸிமி ,பாகம் 1, பக்கம் 332,சிவப்பு அடிக்கோடு ]

ஸுப்ஹானல்லாஹ் ! இது தானே சத்தியம் ! மரணித்த நல்லடியார்களின் ஆன்மாவைக் கொண்டு உதவி தேடுதல் சம்பந்தமாக அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினர் எத்தகைய கேள்விகளைக் கேட்டோமோ ,அதையே தேவ்பந்தியாக்கள் தங்களை நோக்கிக் கேட்கின்றனர் . இதை குப்ர் ,ஷிர்க் என்று இவ்வளவு காலம் பிதற்றி வந்த தேவ்பந்தியாக்கள் பதில் அளிக்க வேண்டும் . இந்த விளக்கவுரையில்      மவ்லானா  முனாஸிர் அஹ்ஸன் கீலானி இது தான்   அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கை என்று ஒப்புக் கொள்கிறார் .

ஆனால் அந்தோ பரிதாபம்  மவ்லானா முனாஸிர் ,தமது முன்னோடி அஷ்ரப் அலி தான்வி ,தமது நூல் ஹிப்ளுள் ஈமான் ,பக்கம் 7ல் “பெருமானார் முஹம்மது صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ   அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து அளிக்கப்பட்ட மறைவான ஞானம் விலங்குகள், பைத்தியக்காரர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் உள்ளது போன்றே மேலும் அதற்கு சமமானதே “  என்று எழுதியுள்ளதை மறந்து விட்டார் .

இன்னும் மவ்லவி ரஷீத் அஹ்மத் "எவரொருவர் நாயகம் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ   அவர்களுக்கு மறைவான ஞானம் அளிக்கப்பட்டது என்று கூறுவாரோ அவர் முஷ்ரிக் " என்று பத்வா வழங்கியதையும் மறந்து விட்டார் .

இனி அந்த கதைக்கு வருவோம் .

தொடர்ந்து அளிக்கும் விளக்கத்தில் ,

" இன்னும் தெளிவான உண்மை என்னவென்றால் , உலகில் எந்த வகையிலும் உதவி பெறும் ஒரு மனிதன் , அல்லாஹுதாலா தான் இந்த உதவியை தனது படைப்புகள்  மூலம் அளிக்கின்றான் . உதாரணமாக வெளிச்சம் அளிக்கும் சூரியன் , பால் வழங்கும் பசு ,எருது போன்றவை . இது தான் சத்தியமான விளக்கம் ,இதை எவ்வாறு ஒருவர் மறுக்க இயலும் ? " 

இன்னும் தமது இறுதியான விளக்கம் அளிக்கும் நோக்கில் ,மவ்லானா முனாஸிர் எழுதுகிறார் ,


"நாங்கள் இறந்த நல்லடியார்களின் ஆன்மாக்களிடத்தில் உதவி தேடுவதை மறுப்பவர்கள் அல்ல " 

உர்து : புசுற்கோ கீ அர்வாஹ் சே மதத் லேனே கே ஹம் முன்கிர் நஹீ ஹைன் 

[நூல்- ஸவானெஹ் காஸிமி ,பாகம் 1, பக்கம் 332,பச்சை அடிக்கோடு ]

மவ்லானா முனாஸிர் அஹ்மத் தமது முன்னோடி கலீல் அஹ்மத் அம்பேட்வி எழுதிய 'பராஹீனே காத்தியா ' நூலை தமது ஆயுளில் படித்ததே இல்லை போலும் . அதில் கலீல் அஹ்மத் " மலக்குல் மவ்த்தும் ,ஷைத்தானுக்கு உள்ள இல்முல் கைப் குர்ஆன் ,ஹதீத் கொண்டு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது ,  எனினும் நாயகம் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ   அவர்களுக்கு அவ்விதமான ஆதாரங்கள் இல்லை என்றும் ,யாராகிலும் நாயகம் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ   அவர்களுக்கு இல்முல் கைப் உண்டென்று நம்பினால் அவன் ஷிர்க்கில் உள்ளான் " என்று கூறியுள்ளதை பார்க்க வில்லை போலும் . 

உங்கள் கண்களுக்கு புலனாகின்றதா ? மவ்லவி காஸிம் நாணோத்வியின் அமானுஷ்ய சக்தி கேள்விக்கு உள்ளாக்கப்படும் பொழுது ,குர்ஆன் ஹதீத் உடைய எல்லா ஆதாரங்களும் கொண்டு வரப்படுகின்றது .  காசிம் நாணோத்வி மனித அற்புதர் என்று நிரூபணம் செய்ய , எல்லாவிதமான தர்க்கங்களும் ,உதாரணங்களும் உபயோகப்படுத்தப்படுகின்றன , மவ்லவி காசிம் நாணோத்வியின் உயர் அந்தஸ்தை நிரூபிக்க !

ஆனால் ,கைசேதம் ! படைப்பினங்களில் சிறந்த ,அல்லாஹ்வின் ஹபீப் , கத்மே நுபுவ்வத் நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம்
صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள் நிந்தனை செய்யப்படும் பொழுது இவர்கள் ஒருவரும் முன்வரவில்லை !


உங்களின் முன்னோடிகள் தொழுகையில் பெருமானார் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களின் நினைவு வருவது எருமை  ,கழுதையின் நினைவில் மூழ்குவதை விட மோசமானது என்று எழுதிய போது எங்கே போனது குர்ஆனு,ஹதீத் உடைய  இந்த வசனங்கள் ,உதாரணங்கள் ???

உங்களுடைய முன்னோடிகள் கண்மணி நாயகம் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களின் இல்முல் கைபை விலங்கினங்களுக்கும் , பைத்தியக்காரர்களுக்கும் ஒப்பிட்ட பொழுது எங்கே சென்றது மிஹ்ராஜ் உடைய ஹதீத் ??? 

அப்பொழுது ஏன் உங்களில் ஒருவரும் 
நாயகம் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களின் இல்முல் கைப் அல்லாஹ்வினால் வழங்கப்பட்டது , அல்லாஹ் தனது ஹபீப் முஸ்தபா  صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களுக்கு தனது நாட்டத்தினால் மறைவான ஞானங்களை அளிக்கிறான் என்று ஏன் கூறவில்லை ???

இதன் பதில் வெட்ட வெளிச்சமானது . நாம் யாரை நேசிக்கின்றோமோ  ,எதை உண்மை என்று நம்புகின்றோமோ அதற்கு ஆதரவளிப்போம் . மவ்லவி காசிம் நாணோத்வியின் அந்தஸ்து கேள்விக்குறி ஆகும் பொழுது , காசிம் நாணோத்வி தனது மண்ணறையில் இருந்து வெளிவந்து ,நடந்து ,தமது விருப்பத்தின் பேரில் அமர்ந்து எல்லாம் எப்படி ? என்ற கேள்வி எழும் போது "அல்லாஹ் தான் நாடிய ஆன்மாக்களுக்கு பிறருக்கு உதவும் ஆற்றல் அளித்தான் " என்று சொல்லப்பட்டது . 

தமது மாணவர் கஷ்டத்தில் இருப்பது கபூரில் இருக்கும் காசிம் நாணோத்விக்கு எவ்வாறு தெரியும் என்பதற்கு "அல்லாஹ் இந்த ஞானத்தை வழங்கினான் " என்று சொல்லப்பட்டது .


ஆனால் மனவருத்தம் அளிக்கும் விடயம் என்னவென்றால் , சிலர் கண்மணி நாயகம் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களை நிந்தனை செய்த ,செய்கின்றவர்களை மறுப்பதே இல்லை . எந்த தேவ்பந்தி தப்லீகியிடமும் என்று நாயகம்   صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டா ? என்று கேளுங்கள் , உங்களிடம் வழங்கப்படும் பதில் ' நாயகம்   صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள் படைப்பினங்களிலேயே அதிக ஞானம் வழங்கப்பட்டவர்கள் ' என்று .
கண்மணி நாயகம்  صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள்  அல்லாஹ்வினால் மறைவான ஞானம் வழங்கப்படடவர்கள் என்ற பதில் வராது .

அவர்கள் இன்று வரை இல்முல் கைப் விடயமாக குர்ஆனின் தெளிவான விளக்கங்களை ஏற்பதில்லை  ,  ஆனால் , 'அல்லாஹ் காசிம் நானோத்வியிடம் ,நீர் இந்த கிராமத்திற்குச் சென்று உங்களது மாணவருக்கு உதவுங்கள் ' என்று கூறப்பட்டுள்ளதை மனமுவந்து ஏற்பார்கள் .

தேவ்பந்தி தப்லீகி வஹாபிகளின் முத்த முதல் முன்னோடி இஸ்மாயில் திஹ்லெவி தனது நூல் 'தக்வியத்துள் ஈமானில் ' எழுதியுள்ளதை இங்கு எடுத்துக் காட்டுவது சாலத் தகும் .

  கருமங்களை பூர்த்தியாக்குவது ,சிரமங்களை நீக்குவது, ஆபத்து நேரங்களில் உதவி வழங்குவது,இவை  அனைத்தும் அல்லாஹ்வுக்கே மட்டுமே உரியன, மேலும் எந்த நபியும்,வலியும் ,ஷைகுமார்களும்,ஷஹீதும்,ஜின்னும்,மலக்கும் எந்தவிதமான உதவியும் செய்ய இயலாது. யாரேனும் ஒருவர் அவர்களின் மீது சபதம் செய்தாலோ அல்லது ஆபத்து நேரங்களிலும் அவர்களை  நினைவில் கொண்டாலோ, அவர் ஒரு முஷ்ரிக் ஆவார்.அவர்களது நம்பிக்கை எதுவாக இருந்தாலும்,இவர்கள் சூயமாக சக்தியுடையவர்கள் என்றாலும் சரி,அல்லது இவர்கள் அல்லாஹ்வினால் சக்தி வழங்கப்பட்டு உதவுகிறார்கள் என்றாலும் ,எந்த நிலையிலும் இது ஷிர்க் “
[தக்வியதுல் ஈமான்,பக்கம் 10 ,தில்லி பதிப்பு ]   

தேவ்பந்தி தப்லீகி வஹாபிகள் இனி இஸ்மாயில் திஹ்லவியின் நம்பிக்கை தவறென்று அதிகாரப்பூர்வமாக சொல்ல வேண்டும் ,இல்லை என்றால் காசிம் நாணோத்வியின் சம்பவம் ஷிர்க் என்று தீர்ப்பளிக்க வேண்டும் ! உண்மையை உரைப்பார்களா அல்லது வழக்கம் போல் தங்களது முனாபிக் தனத்தை வெளிக்காட்டுவார்களா ???

   



















Related Posts Plugin for WordPress, Blogger...

Monday, 1 June 2015

மரணித்த பின் மீண்டு வந்து உதவும் தேவ்பந்தி மவ்லவி !

அர்வாஹே ஸலாசா ,பக்கம் 242 நூலில் (தேவ்பந்த் அறிஞர்களின் வாழ்க்கையை விவரிக்கும் நூல் ) உள்ள ஒரு சிறு சம்பவம் !

Arwahe Salasa,Page 242


மவ்லவி காஸிம் நானோத்வி அல் தேவ்பந்தி மரணித்த பின்பு தமது பூத உடலுடன் மீண்டு வந்து தமது அபிப்பிராயத்தைத் தெரிவிக்கிறார் .

" ஒரு நாள் பஜ்ர் தொழுகைக்கு பின் மவ்லவி ரபியுத்தீன் சாஹிப் தமது அறைக்கு (தேவபந்த் மதரசாவிற்கு உள் ) மவ்லவி மஹ்மூதுல் ஹசன்  சாஹிப் அவர்களை வருமாறு அழைப்பு விடுத்தார் . மவ்லானா  மஹ்மூதுல் ஹசன் சாஹிப் அவ்வழைப்பை ஏற்று ,கதவை திறந்து உள்ளே நுழைந்தார் . அது ஒரு கடுமையான பனிக் காலம் .

மவ்லானா ரபீயுத்தீன் சாஹிப் தமது மேலங்கியை ஆய்வு செய்யுமாறு கூறினார் . மஹ்மூதுல் ஹசன் சாஹிப் அதை ஆராய்ந்த பொழுது அவரது மேலங்கி நனைந்திருக்க கண்டார் . மவ்லவி ரபியூத்தீன் சாஹிப் தற்பொழுது தான் மவ்லானா காசிம் நானோத்வி தமது பூத உடலுடன் (ஜசதே உன்சரீ ) தம்மை வந்து சந்தித்ததாகவும் ,அதைக் கண்டு தாம் பயந்து நடுங்கியதால் தமது மேலங்கி நனைந்து விட்டதாகவும் கூறினார் . மவ்லவி காசிம் நானோத்வி ,மவ்லானா மஹ்மூதுல் ஹசன் அவர்களுக்கு தாருல் உலூம் தேவ்பந்தின் ஆசிரியர்களுக்கு இடையில் நடைபெறும் உட் பூசல்களில் தலையிட வேண்டாம் என்று கட்டளையிட்டார்கள் . மவ்லவி மக்மூதுல் ஹசன் கூறினார் ,'ஹசரத் நான் உங்கள் கரம் பற்றி தவ்பா செய்கின்றேன் ,இனி இது விஷயத்தில் நான் எதுவும் பேச மாட்டேன் '. "

மேற்கூறிய சம்பவத்தில் தேவ்பந்த் தப்லீக் ஜமாஅத் வஹாபிகளின் உஸ்தாதான மவ்லவி காஸிம் நானோத்வி மரணித்து விட்ட பின்பும் மீண்டு வர இயலும் ,அதுவும் தனது பூத உடலுடன் ,தேவ்பந்தின் ஓர் உட்பூசலைத் தீர்க்க வேண்டி !!!!


எனினும் அகிலத்தாருக்கு அருட்கொடையான நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது புனித ரவ்ழா ஷரீபை விட்டு அகல இயலாது என்று பத்வா கொடுத்துள்ளனர் இந்த தப்லீக் ஜமாஅத் வஹாபிகள் !

குறிப்பாக மவ்லித் மஜ்லிஸ்களில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பை குறிக்கும்  பைத் ஓதும் பொழுது எழுந்து நின்று (கியாமில்  ) சங்கை செய்வது அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தின் நடைமுறை ,ஏனெனில் உயிரினும் மேலான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த சபையில்  ஹாழிர் ஆகின்றார்கள் என்பதினால் . இது அநேக வலிமார்களின் அனுபவத்தில் நிகழ்ந்துள்ளதாக வரலாற்று நூல்களில் பதிவாகி உள்ளது .

ஆனால் இந்த தேவ்பந்தி தப்லீக் ஜமாத் வஹாபிகள் இவையெல்லாம் இயலாது என்று மறுக்கின்றனர் .

இது பற்றிய தேவ்பந்தின் பத்வா பின்வருமாறு ,

Darul Uloom Deoband Fatwa



கோடிட்ட பகுதியில் பின்வருமாறு உள்ளது ,

' பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மண்ணறை வாழ்வானது ,ஹயாதே பர்ஜக் , இந்த வாழ்க்கையில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் பயணிக்க இயலாது (ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ) '




Related Posts Plugin for WordPress, Blogger...

Thursday, 22 May 2014

மௌலவி காசிம் நானூத்வியின் வஹாபிய வழிகேடு


         தாருல் உலூம் தேவ்பந்த் மௌலவி காசிம் நானூத்வியால் 1866/68 ல் ஸ்தாபிதம்   செய்யப்பட்டது .

காசிம் நானூத்வி எழுதுகிறார் ,

"நபிமார்கள் அப்பட்டமான பொய்கள் உரைப்பதை விட்டும் தூய்மையானவர்களாகவும் ,பாவங்களை விட்டும் அப்பாவியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை" (மஆதல்லாஹ்)
[ நூல் - தஸ்பியத் உல் அகாயித் ,பக்கம் 25,பதிப்பாளர்கள் சையத் மாலிக் குதுப்கானா அஜீஸியா தேவ்பந்த் ]
"மார்க்கம் அறியாத பாமர மக்களுக்கு “காத்தமுன் நபீயீன்” என்பது இறுதி நபி என்று அர்த்தம் கொள்வர்.எனினும் விஷயம் அறிந்தவர்களுக்கு இது சரியான விளக்கமன்று. அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னர் ஒரு நபி பிறந்தாலும் அது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இறுதியானவர்கள் என்பதில் எந்த விளைவையும் உண்டாக்காது "
[ நூல் -தக்தீருன் நாஸ் ,பக்கம் 3,25 ]


Tahzeerun naas

Tahzeerun naas Pg 2- 3

Tahzeerun naas Pg  3

காசிம் நானூத்வி எழுதுகிறார் ,
"வெளிப்படையான அமல்கள் மூலம் ஒரு சராசரி முஸ்லிம் நபியை விட உயர்ந்த அந்தஸ்துக்கு செல்ல  முடியும். "
 [ நூல் -தக்தீருன்னாஸ் ,பக்கம் 5]
"மார்க்கம் அறியாத பாமர மக்களுக்கு “காத்தமுன் நபீயீன்” என்பது இறுதி நபி என்று அர்த்தம் கொள்வர்.எனினும் விஷயம் அறிந்தவர்களுக்கு இது சரியான விளக்கமன்று."
[ நூல் -தக்தீருன் நாஸ் ,பக்கம் 3 ,பதிப்பாளர்கள் குதுப்கானா காசிமி தேவ்பந்த் ]

காசிம் நானூத்வி எழுதுகிறார் ,
"அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழும் காலத்தில் ஒரு நபி வந்தால் அல்லது அவர்களுக்கு பின்னர் ஒரு நபி பிறந்தாலும் என்று அனுமானம் செய்தாலும் அது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இறுதியானவர்கள் என்பதில் எந்த விளைவையும் உண்டாக்காது "[நூல் -தக்தீருன் நாஸ் ,பக்கம் 25 ,பதிப்பாளர்கள் குதுப்கானா காசிமி தேவ்பந்த் ] 


Tahzeerun naas Pg 25

"உம்மத்துகள் தங்களது நபியை அமல்களில் முந்திவிடுவர்"
[ நூல் -தக்தீருன் நாஸ் ,பக்கம் 5 ,பதிப்பாளர்கள் குதுப்கானா காசிமி தேவ்பந்த் ]

காசிம் நானூத்வி எழுதுகிறார் ,
"நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தஜ்ஜாலும் வாழ்வைக் கொண்டு நன்மாரயம் பெற்றவர்கள்.எந்த பண்புகள் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குணநலன்களாக உள்ளதோ  அவை தஜ்ஜாலிடமும் உள்ளன."
[ நூல் - ஆபே ஹயாத் ,பக்கம் 169, பதிப்பாளர்கள் குதுப்கானா காசிமி தில்லி 1355 ஹிஜ்ரி,1936 ]

காசிம் நானூத்வி எழுதுகிறார் ,
"நபிமார்கள் தனது உம்மத்தை விட அறிவில் மட்டுமே மேலானவர்கள்,ஆனால் அமல்களில் ,சில சமயம் உம்மத்துகள் நபிமார்களுக்கு சமமானவர்களாகவும் ,மேலும் எப்போதாவது  அமல்களில் முந்தியவர்களாகவும் காணப்படுகின்றனர்"
 [ நூல் -தக்தீருன் நாஸ் ,பக்கம் 5 ,பதிப்பாளர்கள் மக்தபா பைஸ் நசத் ஜாமி மஸ்ஜித் ,தேவ்பந்த் மற்றும் குதுப்கானா காசிமி தேவ்பந்த் ]

தக்தீருன் நாஸ் நூலில் உள்ள மேலும் சில வழிகெட்ட கொள்கைகள்


Tahzeern Naas Pg 13



Tahzeern Naas Pg 24




                                                  அஸ்தக்பிருல்லாஹ் !!!





 
Related Posts Plugin for WordPress, Blogger...